மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Friday, July 20, 2012

இன்றைய மன்னா


இப்பொழுது, அது பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல. பாருங்கள்? அதை நீங்கள் நம்ப முடியாது. ஆவியின் கனியையும் நீங்கள் நம்ப முடியாது, ஏனெனில் ஆவியின் முதற்கனி அன்பு. ‘கிறிஸ்தவ விஞ்ஞானிகள்’ என்று அழைக்கப்படுகிறவர்கள் எனக்குத் தெரிந்த வரையில், மற்றெல்லாரைக் காட்டிலும் அதிக அன்பு செலுத்துகின்றனர், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கின்றனர். பாருங்கள்? என்னைப் பொறுத்த வரையில், பரிசுத்த ஆவியின் ஒரே அத்தாட்சி இந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையின் உண்மையான விசுவாசம் கொண்டிருத்தலே.

இப்பொழுது, அந்த யூதர்கள் வருகின்ற்றனர்; அவர்களுக்கு சீஷர்களைக் காட்டிலும் அதிக மதப்பற்று இருந்தது. அவர்கள் சீஷர்களைக் காட்டிலும் வேதத்தில் அதிகம் பயிற்சிப் பெற்ற மக்களாயிருந்தனர், ஏனெனில் சீஷர்கள் மீன் பிடிக்கிறவர்களும், சுங்கவரி வசூலிப்பவர்களும், இத்தகைய தொழில்களைச் செய்தவர்களாயிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளில் உண்மையான விசுவாசம் இருந்தது. இப்பொழுது, இதைக் கூர்ந்து கவனியுங்கள்; இதைக் காணத்தவறாதீர்கள். பாருங்கள்? தயவு,சாந்தம் என்பது போன்ற ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசு கிறிஸ்துவை விட அதிகம் பிரகாசிக்காதவர்கள் அந்த ஆசாரியர்களில் ஒருஒரும் கூட இல்லையென்று நினைக்கிறேன். இயேசு தேவாலயத்துக்கு பின்னின கயிறுடன் சென்று, அவர்களைக் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய மேசைகளைக் கவிழ்த்துப் போட்டு, அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியே துரத்தினார். அது சரியா? அவர்களைக் கோபத்துடன் பார்த்ததாக வேதம் அவ்வாறு உரைக்கிறது. அது முற்றிலும் உண்மை.

தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வீர்களானால், அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ, அதைப் பற்றி ஒன்றுமில்லை. தேவன் இப்பொழுது உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதே முக்கியம். அதுதான் அத்தாட்சி.

செய்தி:- கேள்விகளும்,பதில்களும் 64-0823 மாலை.

No comments:

Post a Comment