மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, July 4, 2012

அக்கினி ஸ்தம்பம் தோன்றுகிறது





“தேவன் திரைநீக்கப்படுதல்” இந்த செய்தியில் பிரசங்கித்திருக்கிறார் ஜூன்-14, 1964:

பிதாவே, திரைக்குள் பிரவேசிக்காத இவர்களுக்காக, கர்த்தாவே, இன்று ஜெபிக்கிறோம். அவர்கள் இஸ்ரவேலரைப் போல் வெளியே நின்றுக்கொண்டு கவனித்துக் கொண்டிருக் கின்றனர். அவர்கள் விசுவாசிக்கின்றனர், இருப்பினும் அவர்கள் அந்த மகத்தான ஷெகினா ஒளியைக்காண உள்ளே பிரவேசிக்கவில்லை ஆவிக்குரிய பிரகாரமாகவும், மாம்ச பிரகாரமாகவும். ஆகையால் தான் புகைப்பட கருவியின் இயந்திர கண் அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அது மறுபடியும் அதை படம் எடுத்தது. (மேலே குறிப்பிடுவது டெல்லாஸ்,டெக்ஸாஸ்). கர்த்தாவே, நீர் உம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர். வல்லமையுள்ள தேவன் அவிசுவாசிக்கு திரைமறைக்கப்பட்டிருக்கிறார், விசுவாசிக்கோ திரை நீக்கப்பட்டிருக்கிறார். கர்த்தாவே, இன்று அவர்கள் உள்ளே பிரவேசித்து, அவருடைய பிரகாசத்தையும், மகிமையையும் காண்பார்களாக.
“உறுதிக்கொள்ளுதல் அதன்பிறகு அக்கறை கொள்ளுதல்” இந்த செய்தியில் பிரசங்கித்திருக்கிறார் ஜூன் 10, 1962:
 என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன்-எனக்கு வயதாகிவிட்டது என்பதனால் அல்ல. நான் இருபது வயது இளைஞனாயிருந்தபோதே இதை பிரசங்கித்திருக்கிறேன். அவர் என்னை ந்தியில் சந்தித்த அன்று முதற்கே நான் உறுதி கொண்டிருக்கிறேன். இந்த அக்கினி ஸ்தம்பம் … வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்களோடு இருந்த அதே அக்கினி ஸ்தம்பம் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! மகிமை! அது உண்மையென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்!.
அதற்காக என் ஜீவனையும் கொடுப்பேன். அதற்காக என் வீட்டையும் மற்றெல்லாவற்றையும் நான் விட்டேன்; அதற்காக எல்லாவற்றையும் நான் கொடுப்பேன்! இது சத்தியமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்!
அவர் இங்குள்ளார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! இங்குள்ள ஆவி பரிசுத்த ஆவியென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். இப்பொழுது அவருடைய ஆவிக்குள் நாம் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அது உண்மையென்று நான்றிவேன். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் முழுவதுமாக உறுதி கொண்டிருக்கிறேன்.
தூதன் என்னை அங்கு சந்தித்து அவர் என்ன செய்தாரென்று என்னிடம் கூறினார். நான் பல்லாயிரக்கணக்கான அஞ்ஞானிகளுக்கு முன்பாக நின்றேன். “உங்களுக்கு பயமில்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, ஐயா! அது தேவனிடத்திலிருந்து வந்தது என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அது வேதப்பூர்வமானது என்பதால் நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அது கர்த்தருடைய தூதன் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்: அதை என் இருதயப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். நாம் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவெதுவோ, அவர் அதை நமக்குத் தந்தருளுவார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அவர் இங்கிருக்கிறார். பயப்படாதிருங்கள். அவர் இங்கிருக்கிறார்.
நமக்குள் அசைவாடுவதாக நீங்கள் உணரும் அந்த ஆவி பரிசுத்த ஆவியே என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அது கிறிஸ்து என்று நான் உறுதி கொண்டிருக்கிறேஃ. ஆமென்.
இப்பொழுது நான் காணும் எனக்கு முன்னால் உள்ள அந்த வட்டவடிவமான ஒளி பரிசுத்த ஆவி என்று உறுதி கொண்டிருக்கிறேன்! அந்த தரிசனம் என் கண்களுக்கு முன்னால் உள்ளதென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அது உள்ளதென்று நான்றிவேன். ஆமென்! இந்த நேரத்தில் உலகிலுள்ள எல்லா பிசாசுகளுக்கும் நான் சவால் விடுகிறேன். அவர் தேவன். கிறிஸ்து தீர்க்கதரிசி மாத்திரமல்ல, அவர் தேவன். அவர் தேவனேயன்றி வேறல்ல.
இப்பொழுது சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்று நான் முழுவதுமாக உறுதி கொண்டிருக்கிறேன்.
ஏதோ ஒன்று நிகழ்ந்தது. தேவன் இங்கிருக்கிறார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்.
அவன் ஜெப அட்டைகளை விநியோகம் செய்தானா? ஜெப அட்டைகள் ஏதாகிலும் உண்டா? இல்லை. அவை நமக்கு அவசியமில்லை. அவர் இங்கிருக்கிறார் என்று நான் உறுதிக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் முழுவதுமாக உறுதி கொண்டிருந்தால், “இயேசுவே, என் பலவீனத்தோடு உம்மைத் தொடுகிறேன். சகோ.பிரான்ஹாம் சத்தியத்தை எடுத்துரைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் ஒரு மனிதன் மாத்திரமே, நீரோ தேவன், அது வார்த்தையாயிருப்பதால் அவர் சத்தியத்தை எடுத்துரைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, அது நிகழட்டும். அவர் என்னிடம் பேசி, என்னிடமுள்ள கோளாறு என்னவென்று கூறட்டும். நான் உறுதி கொள்ளும்படி செய்யும்” என்று கூறுங்கள்.
அவர் ஏற்கனவே கூட்டத்தில் இருக்கிறார். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ நரம்பு கோளாறுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் கூட உள்ள சிறுமிக்கு மூளைவளர்ச்சிக் குறைவு உள்ளது. நீ விசுவாசிக்கிறாயா? வீட்டில் வியாதியாயுள்ள தாய். சந்தேகப்பட்டாமல் விசுவாசி! நீ கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்வாய்.
மனித உருவில் வந்து, தன் முதுகை கூடாரப் பக்கம் திருப்பி, ஆபிரகாமுடன் பேசின அதே தூதன் தான் இன்றிரவு இங்கிருக்கிறாரென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அது நிகழுமென்று அவர் வாக்களித்துள்ளார், அதே தூதன் நம்மை அபிஷேகிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர் தேவன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
சரி, சாராளே, இங்கு நீ எங்கோ இருக்கிறாய். நீ தேவனிடம் பேசு. சகோதரனே, சகோதரியே, இது சத்தியமென்று நான் உறுதிக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அது சத்தியம்.
எனக்குப் பின்னால் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு இருதயக்கோளாறு உள்ளது. அவளை எனக்குத் தெரியாது. அவள் எனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் நடுத்தர வயதுள்ளவள். அவள் இந்த இடத்தை சேர்ந்தவள் அல்ல. அவள் விர்ஜீனியாவிலிருந்து வந்திருக்கிறாள். திருமதி. ஸ்டாக்ஸ, இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். அவள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அது…இது அவளுடையது வலது பாகம். விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால் எல்லாம் கூடும்.
ஸ்திரீயே, இதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீயும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர் அல்லவா? நான் அவருடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறாயா? உனக்கு தலையில் கோளாறு உள்ளது. அது உண்மை. உன் பெயர் திருமதி மூர். அது உண்மையானால், உன் கையையுயர்த்து. சுகமடைந்து வீட்டுக்குச் செல்.
நீ விசுவாசிக்கிறாயா? யாரோ ஒருத்தி எனக்கு முன்னால் இங்கு தோன்றினால். இதோ அது. அது ஒரு ஸ்திரீ. அவளுக்கு மார்பகத்தில் புற்றுநோய். திருமதி ரோட்ஸ், கர்த்தராகிய இயேசுவை விசுவாசி. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. தேவன் அவளை அறிவார். நீ விசுவாசித்தால், எல்லாம் கூடும். அது உண்மை.
அது கட்டிடத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. கட்டிடம் முழுவதும்-முழு இடமும்-அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இங்குள்ள ஒவ்வொருவரையும் சுகமாக்குமென்று நான் உறுதிகொண்டிருக்கிறேன். நீங்களும் அவ்வாறே உறுதிகொண்டிருக்கிறீர்களா? தேவன் அதை உங்களுக்கு உறுதிப்படுத்தி தந்திருக்கிறாரா? அப்படியானால் நீங்கள் எழுந்து நின்று உங்கள் சுகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன். நீங்கள் உறுதி கொண்டால், உங்கள் கைகளை அவரிடம் உயர்த்தி அவருக்குத் துதி செலுத்துங்கள்.

No comments:

Post a Comment