மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Friday, July 20, 2012

இன்றைய மன்னா


நான், பவுல் கூறினது போன்று, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன். கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன். அதாவது உங்களை கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள்! என்னை ஏமாற்றிவிடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.

“அதை நான் எவ்விதம் செய்வேன், சகோ.பிரான்ஹாமே?” வார்த்தையில் நிலைத்திருங்கள்: சுத்தமாகவும் தூய்மையாகவும் வாழுங்கள்; உலகத்தின் காரியங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதிருங்கள். உலகத்தின் மேல் அன்பு உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், “ஓ, இயேசுவே, அதை என்னிடமிருந்து விலக்கி விடுவீராக. நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை” என்று கூறுங்கள்.

ஏதோ இதை வெறுமனே கூறுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நீங்கள் உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும் என்றே நான் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்காக ஒவ்வொரு நாளும் வாழுங்கள். எந்த பொல்லாப்பையும் செய்யாதிருங்கள்.

செய்தி:- கேள்விகளும்,பதில்களும் 64-0823 மாலை.

No comments:

Post a Comment