மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, July 4, 2012

மணவாட்டி அங்கத்தினர்களே!


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர்களே, அநேகர் எங்களுக்கு காணிக்கை அனுப்புவதற்கு தொடர்பு கொள்கிறீர்கள். நிச்சயமாக உங்களை தேவன்  ஆசிர்வதிப்பாராக. ஆனால் மணவாட்டி ஊழியத்தை பொறுத்தவரை காணிக்கை என்பது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இது ஒரு குடும்பம் போன்ற ஊழியமாகும். புத்தகம் அச்சிட்டு வெளியிட விரும்புகிறவர்கள், காணிக்கை அனுப்புவதை தவிர்த்து. உங்கள் பிள்ளைகளுக்கு அல்லது உங்கள் பிறந்த நாள், திருமணம், திருமண நாள், சபை கட்டுதல், விலையுர்ந்த புது துணி எடுத்தல், வீட்டுக்கு தேவையான சாமான்கள் அதாவது ஏசி, பிரிட்ச், வாஷிங்மிஷன், ஸ்கூட்டர், கார், ஆட்டோ, மற்றும் தொழில் முனைதல் இன்னும் அநேக காரியங்களுக்கு தேவன் கொடுத்த பணத்தை எப்படி தாராளமாக சாதாரணமாக செலவு செய்கிறீர்களோ, அதே போன்று ஒரு புத்தகம் அச்சடிக்க போதிய மனம் இருந்தால் மேலே கொடுக்கபட்டிருக்கும் அச்சகத்தை தொடர்பு கொண்டால் உங்களுக்கு மிக குறைந்த செலவில் புத்தகங்களை அச்சடித்து தருவார்கள். தமிழில் மொழி பெயர்த்து வெளிவர இன்னும் ஏறக்குறைய 800 புத்தகங்கள்தான் உள்ளது. இதற்கு ஏன் வெளிநாட்டவரிடம் கையேந்த வேண்டும், சபைகளில் காணிக்கை பெட்டிகளை தொங்க விடவேண்டும், புத்தக ஊழியத்திற்காக காணிக்கை கொடுங்கள் என்று சபைகளில் பிரசங்கிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள காரியங்களுக்காக நாம் எப்பேற்பட்டாவது நம் தேவைகளுக்காக உழைத்து செய்வது போல், ஆவிக்குரிய ஆகாரத்திற்காக, நித்தியத்திற்காக உழைக்காமல், சுயதேவைகளையே சந்திப்பது நியாயமாகுமா?. தமிழ் புத்தகங்கள் அச்சிட 800 பேர் மட்டுமே தேவையே தவிற பத்தாயிரம் விசுவாசிளிடம் பறிக்கப்படும் காணிக்கையல்ல. யாரெல்லாம் எப்பொழுது எடுத்துக்கொள்ளப்படுதல் நடந்தாலும் நான் அங்கிருப்பேன் என்று உறுதியாக இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயம் தன் சுயதேவைகளை தவிர்த்து அந்த பணத்தில் புத்தகங்கள் வெளியிட முன்வந்தால் நிச்சயம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!.

No comments:

Post a Comment