மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Saturday, August 13, 2011

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்




                         என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
                                                                                                              (My Redeemer Liveth)
                                                       ஏப்ரல் 10, 1955

1. இன்று காலையில் உங்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள். இன்றைக்கு இந்த ஜெப கூடாரத்தில் இந்த மகத்தான ஈஸ்டரின் நினைவு கூறுதலின்  நேரத்தில் இங்கு இருப்பது மிக்க சந்தோஷம். இந்த ஆராதனைக்காக கர்த்தர் நமக்கு ஒரு அழகான நாளை கொடுத்திருக்கிறார். இந்த உலகத்தில் நடந்தான ஒரு மகத்தான சம்பவமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுவின்  உயிர்த்தெழுதலின் கொண்டாடுதலில் இன்று காலையில் நாமிங்கே  இருக்கிறோம். அவருடைய மரணத்தில் அவர் மகத்தானவராய் இருந்தார். மனிதர்களால் மரிக்க முடியும். ஆனால் அவரை தவிர மரணத்திலிருந்து எழும்பி வந்த வேறெரு மனிதனும்   இருந்ததில்லை. இன்று காலையில் நம்முடைய நம்பிக்கை அதன் பேரில் தான் இருக்கிறது. நம்முடைய கர்த்தரின் உயிர்த்தெழுதலில் தான் இருக்கிறது.

2. இன்று காலையில் நான் உள்ளே வந்து கொண்டிருக்கையில் திட்டுகளின் ஊடாக நடந்து வந்து கொண்டிருக்கையில்                                                                                                                                       நான் ஓரு நொடி அங்கு பார்க்கும்படியாக நின்றேன். நான்       அப்படியே  வந்துள்ளவர்களை  ஒரு  சுற்று  சுற்றி பார்த்தேன். அந்த விடியர்க்காலையில்  எதிர்ப்பார்க்குதலோடு  ஜனங்கள்  வார்த்தை வாசிக்கப்படுவதையும் பாடல்கள் பாடப்படுவதையும் கேட்க வெளியே வருகிறார்களென்றால் இன்றைக்கு நம்முடைய ஜீவன்களை கரத்தில் வைத்துக் கொண்டிருக்கிற அந்த ஒருவரின் நினைவு கூறுதலாய் அது இருக்கிறதென்று  கருதினேன். வருங்களுக்கு முன்னர் விடியர்க்காலையில்    வழக்கமாக காணும்  முகங்களை  குறித்து  நான் சிந்தித்தேன்.  இங்கு சுற்றிலும் உள்ள கல்லரைகளில் அவர்கள் கடந்து அவர்களுடைய உயிர்த்தெழுதலின் சம்பவத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

3. அதை குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் ஏன் அது நம்மை இன்றைக்கு நாமிங்கே இருக்கிறோமென்ற இந்த கருத்துக்கு கொண்டு வருகிறது. இந்த காலையில் அவர்கள் கிடக்கின்ற அந்த இடத்திற்கு போகும்படி நாம் எந்த நேரத்தில் அழைக்கப்படப்போகிறோம் என்பதை நாம் அறியாதவர்களாயிருக்கிறோம். அப்படியானால் அதை கருத்தில் கொண்டவர்களாய் எந்த விதமானதொரு ஜனங்களாய் நாம் இருக்கவேண்டும்.   இன்றைய இந்த உயிர்த்தெழுதலை நாம் எப்படி அணுகவேண்டும்.

4. யோபின் புஸ்தகம் 19 ஆம் அதிகாரம் 25 ஆம் வசனம் இந்த சில வார்த்தைகள்.
என்   மீட்பர்   உயிரோடிருக்கிறாறென்றும்   நான்
அறிந்திருக்கிறேன்.

5. இன்றைக்கு நாம் ஆராதித்துக் கொண்டிருக்கிறோமே.       உயிர்த்தெழுதலில் நாம் ஆராதிக்கிறோமே. இதை கண்ட  பின்னரா  யோபின் தீர்க்கதரிசனமும் அவனுடைய வார்த்தையும் வந்தது.

6. உலகத்தின் பாகங்களை சுற்றிலுமாய் கடந்தவனும் வித்தியாச விதங்களான மார்க்கங்களையும் ஆராதனையின் வித்தியாசமான ஆராதனை கட்டங்களையும் கண்ட நான் இந்த உலகத்தின் மதங் களின் வித்தியாசமான அபூர்வங்களை எடுத்து உங்களுக்கு அதை விளக்கி கூற முயற்ச்சித்தால் அது நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்ளும். 

 7. ஆனால் இன்றைக்கு நமக்கு முன்பாக ஒரு மகத்தான நாள்    இருக்கிறது என்பதை அறிந்தவர்களாய் இன்று காலையில் இங்கே நாம் இந்த ஒரு சில நிமிட விடியற்க்கால ஆராதனைக்காக கூடி வந்திருக்கிறோம். அதன் பின்னர் நாம் நம்முடைய வீடுகளுக்கு திரும்பிப் போய் இன்றைக்கு இருக்குமென நாம் நம்புகிற ஒரு    சுகமளிக்கும் ஆராதனைக்காக மீண்டுமாய் திரும்பி வருவோம்.

8. கூட்டங்கள் நமக்கு இருந்தது முதற்கொண்டு ஒரு             இரண்டல்லது மூன்று முறைகள் தவிர நமக்கு அது இருந்ததேயில்லை. ஏனென்றால் வழக்கமாக இங்கு சுற்று  வட்டாரத்திலிருந்து இந்த ஜெபக்கூடாரத்திற்கு வருகிற ஜனங்களுக்கு பரிசுத்தாவியின் அபிஷேகமானது நேராக இங்கு வராததுபோல் காணப்படுகிறது. ஏனென்றால் இது வீடாக இருக்கிறது. ஒரு சமயம்  ஜெஃபர்ஸன் பள்ளியில் இறங்கி வந்தது. பின்னர் ஒரு  முறை  இங்கு ஜெபக்கூடாரத்தில்  வந்தது.

9. இன்று காலையில் நான் விழித்தது முதற்கொண்டு சற்று கால தாமதமாகி வந்தது போலிருந்தது. ஆனால் அது ஒரு நோக்கத்திற் காகவே. இன்று காலையில் விடிவதற்கு முன்பாகவே நான் எழும்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்.

10.      சுகமளிக்கும் ஆராதனையில் இன்று நாம் ஒரு மகத்தான ராதனையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.இப்பொழுது பையன்களிடத்தில் ஜெப அட்டைகளைக் கொடுக்கப்போகிறோம். அவர்கள் அதை காலையில் 9 மணிக்கு வருகின்ற சுகமளிக்கும்  ஆராதனைக்காக கொடுப்பார்கள். கர்த்தர் நமக்கு ஒரு மகத்தான நேரத்தை கொடுக்கப் போகிறார் என்று  நான் நம்புகிறேன்.

 11. எனவே நாம் அவரை ஜெபத்திலும் பாட்டிலும் வார்த்தையை பிரசங்கிப்பதிலும் அவரை ஆராதித்து பின்னர் இன்று காலையில் கூடுமானால் 7 மணிக்கு வெளியேற பிரயாசிப்போம். அதனால் எல்லாரும் வீடுகளுக்கு போய் திரும்பி ஆராதனைக்கு வருவதற்கு போதுமான நேரம் உண்டாயிருக்கும்.

12. சரியாக 9 மணிக்கு ஜெப அட்டைகள் கொடுக்கப்படும்.   அதனால் அது ஆராதனையின் மற்ற பாகங்களை பாதிக்காமல் இருக்கும்.

13. பின்னர் இன்றிரவு நிச்சயமாக ஞானஸ்நான ஆராதனையும் இருக்கும். நீங்கள் யாவரும் நம்முடைய வாசல்களிலிருக்கும்  அந்நியர்கள் யாவரும் அதில் பங்கு பெற வேண்டுமென்று விரும்புகிறோம். இன்று காலையில் நீங்கள் யாவரும் இங்கு  இருப்பதையும் இந்த விடியற்க்கால ஆராதனையில் இந்த ஜெபக்கூடாரம் நிறைந் திருப்பதை காணவும் நாங்கள் அவ்வளவு சந்தோமடைகிறோம்.

14. இப்பொழுது வித்யாசமான கருத்துகளின் பேரில் மார்க்க ஆராதனைகள் இன்றைக்கு இருக்கிறது. அநேக ஸ்தலங்களில்   மரித்துப்போன அவர்களுடைய மூதாதையர்களை அவர்கள் ஆராதிக்கிறார்கள். உதாரணமாக இன்று காலையில் நாம் சீனாவிற்கு போய் தேவனுடைய வார்த்தையை  பேசினால்  அல்லது ஜப்பானில் பேசினால் நீங்கள் எந்த  தேவனை குறித்து  பேசுகிறீர்கள் என்று அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஏனென்றால் மரிக்கின்ற  ஒவ்வொரு நபரும் அவர்கள் மரித்த உடனேயே ஒரு தேவனாக அவர்களுக்கு ஆகிவிடுகிறார்கள். புத்த ஆராதனைக்காரர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே போவீர்களானால் அல்லது வித்யாசமானவர்கள் முகமதியர்கள் கிறிஸ்து மரித்தோரிலிருந்து  உயிரோடெழுந்தார் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்  மரித்தார்  என்பதையும் கூட அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்  ஒரு குதிரையின் மீது ஏறி பரலோகத்திற்கு போய்விட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

15. ஆனால் இன்றைக்கோ நாம் சத்தியத்தையும் ஜீவனின் வெளிச்சத்தையும் உடையவர்களாய் இருக்கிறோம். ஒரு கிறிஸ்தவ சுவிசேபிரசங்கி என்ற முறையில் என்னுடைய சிந்தையில் அங்கே  சந்தேகமேதும்  கிடையாது.  முத்தரிக்கப்பட்ட  சத்தியத்தை யுடைய நித்தியத்தை தவிர எந்த சநதேகமுமே அங்கே என்னுடைய சிந்தையில் கிடையாது. ஒரு சந்தேகத்தின் நிழலும் கூட கிடையாது. அந்த  மற்ற மதங்கள்  ஒருவேளை சரியாக  இருக்கலாம். ஆனால்  நாமோ சத்தியத்தை உடையவர்களாய் இருக்கிறோம்.

16. நாம் கவனித்து பார்ப்போமானால் இன்றைக்கு அதாவது காலங்களை கவனியுங்கள். நிச்சயமாக  பரலோகத்தின் நித்தியமான தேவன் அவரே.  எல்லா வானங்களையும் பூமியையும் உண்டாக்கின    வர். அவருடைய சிந்தை ஓடிக்கொண்டிருக்கிற விதத்தை உங்களால் காணமுடிந்தால் அவர் எப்படியாய் இலையுதிர் காலத்தையும்   மரணத்தையும்  வசந்த  காலத்தையும்  உயிர்த்தெழு தலையும்  உடையவராய் இருக்கிறார். ஒழுங்கின்படி  உங்களுக்கு ஒரு உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும் படியாய் நீங்கள் மரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்.

17. அது மரணத்தின் மூலமாகத்தான் எப்பொழுதும் ஜீவனை   கொண்டு வருகிறது. நீங்கள் மரணத்தின் மூலமாகத்தான்      ஜீவிக்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதாவது சற்று  நிதானித்து மனித இனம் மரணத்தின் மூலமாக ஜீவிக்கிறது என்பதை சிந்தித்து பார்த்ததுண்டா. ஏதாவது  காரியம்  மரிக்க வேண்டும். தனால் உங்களால் ஜீவிக்க முடியும். ஆகாரம்  தாவர  ஜீவன் மிருக ஜீவன் எல்லாம் மரிக்கிறது. ந்த மரணத்தின் மூலமாக நாம் ஆகாரத்தை புசிக்கிறோம். நாம் புசிக்கின்றதான ஆகாரமானது ஏதோ காரியத்தின் மரித்துபோன காரியமானது நம்முடைய ஜீவியத்துக் குள்ளாக வருகிற  ஜீவ அணுக்களை செல்களை  அது  உண்டு பண்ணுகிறது.எனவே நாம்  ஒரு  ஜீவனைக் கொண்டு மாத்திரமே  ஜீவிக்கிறோம் வளருகிறோம் சுவாசிக்கிறோம்  புசிக்கிறோம்  மரணத்தின் மூலமாக.ப்படியானால்  ஜீவனை  உண்டுபண்ணும்  பொருட்டாக நமக்கு மரணம் உண்டாயிருக்க வேண்டிய தாயிருக்கிறது.

18. இப்பொழுது நமக்கு இந்த காலையில் வாசிக்கப்பட்டதான    இந்த செய்தி நாம் மகத்தான கட்டளை என்று அழைக்கலாம். ஏனென்றால்  கர்த்தர் அவருடைய  சீர்களுக்கு கொடுத்த கடைசி கட்டளையாய்  இருக்கிறது.  நீங்கள் உலகமெங்கும்  போய் இந்த மகிமையான நற்செய்தியை எல்லா உலகத்துக்கும் ஒரு சாட்சியாய் பிரசங்கியுங்கள். தன் பின்னரே அவர் திரும்பி வருவார். பிரசங்கிக்க வேண்டிய இந்த செய்தியை அற்புதங்களும் அடையாளங்களும் தொடரும்.

19. இன்றைக்கு தேசங்களில் கிறிஸ்தவ மார்க்கத்தின் கீழும் கூட நாம் காண்கிறோம். மெரிக்காவிலுள்ள ஜனங்களில் அவர்களில் அநேகரிலும் எல்லா நல்ல உரிய மரியாதையுடனும் நாம் பெரிய சபைகளையும் பிரதான ஆலயங்களையும் மகத்தான எல்லா   நிகழ்சிகளிலும் நாம் காண முயற்ச்சிக்கிறோம். ஈஸ்டர் தினத்தன்று      இன்றைக்கு  மகத்தான சபைகளும் சிலுவைகளும் இந்த ஈஸ்டர் ஆராதனைக்காக மெருகேற்றபடுகிறது. இன்றைக்கு பார்க்கப் போனால் பல்லாயிரக்கணக்கான கோடிக்கணக்கான டாலர்கள் ஈஸ்டர் மலர்கள் பீடத்தின்மேல் ஏற்றுவதற்கும்  இன்றைக்கு நமக்கு இருக்கின்ற இந்த மகத்தான சபைகளை பிரதான ஆலயங்களை அலங்காரம் செய்வதற்கும் செலவழிக்கப்படுகிறது.

20. ரோமாபுரியில் கத்தோலிக்க சபையின் தலைவன் அங்கே உள்ள அந்த பரி.பேதுருவின் கல்லரைக்கூடம் அங்கே ஜனங்கள் அடக்கம் பண்ணப்படுகிறார்கள். இங்கே நாங்கள் அடக்கம் பண்ணுகிறோம். ஏனென்றால்  எங்களுக்கு  இங்கே  பரி.பேதுருவின் சரீரம்   கிடத்தப் பட்டிருக்கிறது. எங்களிடத்தில் பல வித்தியாசமான அப்போஸ் தலர்கள் சீர்கள் மகத்தான மனிதர்களுடைய சரீரங்கள் இருக்கின்றன. அவர்களுடைய சரீரங்கள் இங்கே அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறது என்று கத்தோலிக்க சபையில் அவர்கள் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். தேவன் அவர்களோடு கூட இருக்கிறார் என்கிற அவர்களுடைய மார்க்க ரீதியின் மிகவும் மகத்துவமான ரூபகாரப்படுத்தலாக அது இருக்கிறது போன்று  அவர்கள்  அதை நோக்குகிறார்கள்.
21.ஆனால் நண்பர்களே அந்த காரியங்களெல்லாம் ஒன்றுமில்லை என்பதே என்னுடைய எப்பொழுதுமான வாதமாய் இருந்து வந்திருக்கிறது. அது அப்படியாயல்ல. எந்த மனிதனும் மரித்து  இந்த பூமியில் கிடக்கலாம். ஆனால் அதிலிருந்து என்ன எழும்பினதோ அதை தான் நாம் இன்றைக்கு ஆராதிக்கிறோம். அது ஒரு ஜீவிக்கின்ற உயிர்த்தெழுந்த உலகத்திற்கு ஏறி சென்று இன்றைக்கு ஜீவித்துக் கொண்டிருக்கின்ற கர்த்தராகிய இயேசுவாய்  இருக்கிறது.  அநேக மனிதர் மரிக்கலாம்.
22. கடந்த வெள்ளி ஜனங்கள் வாடிகன் படிகளில் தங்கள்         முட்டிகளால் நகர்ந்து சென்றனர். அநேக ஜனங்கள் உள்ளே சென்று மரணத்தை கொண்டாடினர். அது  கிறிஸ்துக்கு சம்பவித்ததான ஒரு மகத்தானதும்  துக்ககரமான காரியமுமாயிருக்கிறது. ஆனால் அவர் கிறிஸ்து என்று நிரூபிக்க அவர் அதை செய்ய வேண்டியதாய் இருந்தது.
23. ஆனால் இன்றோ உயிர்த்தெழுதலின் நாளாய் இருக்கிறது.இது அதை என்றென்றைக்குமாக முத்தரித்தது. அப்பொழுது அவர் மரித்தவராயில்லை. அவர் ஜீவனோடு இருந்துகொண்டு இன்றைக்கு ஒவ்வொரு இருதயத்திலும் ஒவ்வொரு நபரிலும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்.
24. பழங்கால மனிதர்கள் வேதாகமத்தின் பழைய கோத்திர   பிதாக்கள் இந்த நாளை அவர்கள் எதிர்நோக்கி இருந்தனர். ஆபிர     காம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு போன்றவர்கள் பழைய கோத்திர  பிதாக்கள் கிறிஸ்து  மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும் இந்த நேர    த்தை எதிர் நோக்கி இருந்தனர்.
25. நான் யோபை நினைக்கிறேன். சில நிமிடங்களுக்கு முன்னர் நாம்  வாசித்து கொண்டிருந்ததான இந்த காலையை அவன் எதிர்  நோக்கியிருந்தான். அவன் முதிர்ந்தவனாகி அதிக வயது சென்றவனாகி அவனுடைய சரீரத்திலிருந்து புண்ணினால் மாம்சம் தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய இருதயம்  துக்கத்தினால் உடைந்து விட்டது.அவனுடைய அழிந்து போகின்ற பகுதியெல்லாம் இல்லாமலாகிக் கொண்டிருந்தது.
26. அதைப் போன்றதான ஒரு மகத்தான மனிதன் அவனுடைய நாளின் உலகத்துக்கு ஒரு மகத்தான மனிதன் என்ற கருத்தினை ஏற்படுத்தினவனாய் அவன் இருந்ததெல்லாம் மகத்தானதுமாக  எல்லாம் இருக்கும்படியாக  இருந்த  மனிதனாக இருந்தான்.அவன் கிழக்கத்திய பட்டணங்களுக்கு போகும்போது பிரபுக்கள் அவனுடைய ஞானத்தின் நிமித்தமாக அவனுக்கு முன்பாக தலை வணங்குவார்கள் என்று அவன் கூறினான்.
27. ஆனால் இதோ அவன் அவனுடைய ஞானத்தின் முடிவுக்கு வந்திருக்கிறான். பார்ப்தற்கு  எல்லா காரியங்களும் போய்விட்டது. அவனுடைய சரீரம் போய் விட்டது. அவனுடைய சொத்து போய்விட்டது. அவனுடைய பிள்ளைகள் போய் விட்டனர். அவனுக்கு உண்டாயிருந்த  எல்லாமும் போய் விட்டது.
28. பின்னர் தேவன் அவருடைய இரக்கத்திற்கு யோபினிடத்திற்கு கீழே இறங்கி, அவனுக்கு இன்னொரு புலனை கொடுத்தார். அதனால் அவனுடைய கண்கள் திறந்து அவன் பெற்று கொள்ளதக்கதாக அங்கே  ஒரு சரீரம்  இருக்கக்கூடியதான அந்த நாளை அவன் காணும்படியாய் செய்தது. அங்கே ஒருவர் வருகிறார். ஒருநீதியான ஒருவர். அவர் அவனுடைய ஸ்தானத்திலே நின்று மரித்தோரின் சரீரத்தை உயிர்ப்பிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் சொன்னான் என் மீட்ர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் என்று  பேசின அந்த நித்தியமான அந்த வார்த்தைகளை நான் விரும்புகிறேன்.
29. நான் அப்படியாய் நம்புகிறேன். அங்கு இருக்கும் என்பது போன்றதான உணர்வு இருக்கிறதாக அல்ல. அது இன்றைக்கு     அநேகருடைய நடத்தையாய் இருக்கிறது. என்றோ ஒரு நாளில் அப்பொழுது, நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.
30. ஆனால் யோபோ அதைக் காட்டிலும் அதிமாய் உடையவனாய் இருந்தான். என் மீட்ர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் என்று கூறினான்;. அதன் நித்தியமான பக்கத்தை உடையவனாய் இருந்தான். நித்தியமில்லாததினால் இதற்குமேல் கிடையாது. அது எல்லாமுமாய் நித்தியமாயிருந்தது.
31. இன்றைக்கு வெளியே காட்டும்படியாக சபைக்கு உச்சியில் நமக்கு மட்டும் ஒரு சிலுவை இருந்தால் போதும். அதெல்லாம் சரிதான். நாம் கிறிஸ்துவின் மரணத்திலும் அடக்கத்திலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசம்  உள்ளவர்களாய் இருக்கிறோம்.சில மரித்த சரீரங்களின் தூசிகள் மாத்திரம் சபையின் கீழ் கிடக்குமானால்,பரிசுத்தமான சில ஜனங்களின் உடல்கள் அங்கே புதைக்கப்பட்டிருக்குமாயின்,அந்த ஒன்றையே நாம் நம்முடைய  நம்பிக்கையாக  வைத்துக் கொண்டிருப்போமானால், அப்பொழுது நாம் எல்லா ஜனங்களுக்கும் பரிதபிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம்.
32 ஆனால் இன்றைக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். மரித்துப்போன சரீரங்கள் நம்மிடத்தில் இல்லை. ஆனால் வெற்றி  சிறந்தவராய் மறித்தோரிலிருந்து அவர்  எழும்பி வந்தார் என்பதற்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய உயித்தெழுந்த ஆவி நம்மிடத்திலிருக்கிறது.
33. அது இதற்குமேல் கிடையாதென்று நான் யூகிக்கிறேன் என்பதல்ல. நீங்கள் ஒரு சிலுவையை நோக்கி பார்த்து அப்படியென்று நான் யூகிக்கிறேன் எனலாம். பூமியில் கிடக்கின்ற  ஒரு சரீரத்தை பார்த்து  அப்படியாய் நான்  யூகிக்கிறேன் என்று சொல்லலாம். அப்படியாய் நான் நம்பிக்கையாய் இருக்கிறேன் எனலாம்.
34. ஆனால் யோபுவுக்கு அந்த தரிசனமானது உண்டான போது, இருதயத்துக்குள்ளாக பரிசுத்த ஆவி மூலமாக உயிர்த்தெழுதல் ஒரு உண்மைப்பொருளாய் ஆனபொழுது, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன் என்பதை அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்.
35. எல்லா நிழலாட்ட மானவைகளெல்லாம் மறைந்து போயிற்று.  அப்படியாய் நம்புகிறேன். அப்படியாய் ஒரு வேளை இருக்கலாம். அந்தவிதமாய் இருக்குமென்று  நாங்கள் நம்புகிறோம். அந்த பழைய  இருள் மங்கிப்போயிற்று. தங்களுடைய இருதயங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு கல்லுரையாக ஆக்கிக் கொண்ட  ஒவ்வொருவருக்கும் அது எல்லாம் மங்கிபோனதாக இருக்கிறது.
36. அவரோடு மரித்து அவரோடு அடக்கம் பண்ணப்பட்டு அவரோடுகூட எழும்பினோம். உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவோடு கூட எழும்பினோம். இந்த புதிய நம்பிக்கையை தேவன்                                     நம்முடைய இருதயத்திற்குள்ளாக இன்றைக்கு இந்த புதிய நிச்சயத்தை கொடுத்திருக்கிறார். நேரத்திற்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறவர்களுக்கு அது ஒரு நம்பிக்கையாய் இருக்கிறது. ஆனால் ஒரு மனிதனோ ஸ்திரீயோ புதிதாய் உயிர்ப்பிக்கப்    பட்டவர்களாய் இருந்தால் அது  அப்படியாய் இப்பொழுது அறிந் திருக்கிறேன் என்பதாய் இருக்கிறது. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏன்? அவர் என் உள்ளத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்.
37. எல்லா நிழல்களும் கடந்து போய்விட்டது என்பது ஒரு அதிசயமானதாய் இல்லையா. நல்லது நான் உயிர்த்தெழுதலில் வருவேன் என்று நான் நம்பிக்கையாய் இருக்கிறேன். இதற்குமேல்  நம்பிக்கை என்பதே கிடையாது. நிச்சயத்தை நாம் உடையவர்களாய் இருக்கிறோம். நாம் அவ்வளவாய் அறிந்திருக்கிறோம். இதற்கு  மேல் அப்படியாய்  நான் நம்புகிறேன் என்பது கிடையாது.
38. ஏனென்றால் ஏதோ காரியம் நம்முடைய ஜீவியத்தில்   சம்பவித்தது. நாம் இருந்ததான பாவமான நிலமையில் நமக்குள்ளாக  உயிர்த்தெழுந்த கிறிஸ்து  வந்தபோது அது நம்மிலுள்ள எல்லா  நிழல்களையும்  நீக்கிக்போட்டது. பழைய  காரியங்கள் சிலுவை  மரணத்தில் அவரோடுகூட பலிபீடத்தில் மரித்துப் போய்விட்டது. நாம் புதியதாய்  எழும்பினோம். மீண்டுமாய் அவரோடுகூட எழும்பி, அவரோடுகூட ஜீவித்து, அவரோடு கூட ஆளுகை செய்வோம்.  இப்பொழுது  கிறிஸ்துவுக்குள்ளாக உன்னதங்களிலே உட்கார்ந்து  கொண்டிருக்கிறோம். நாம் ஏற்கனவே அவரோடு எழும்பி விட்டோம். நம்மை பொருத்த மட்டில் உயிர்த்தெழுதல் என்பது  நடந்துபோன காரியமாயிருக்கிறது. ஏனென்றால் நாம் இப்பொழுது கிறிஸ்துவோடு கூட எழும்பி இருக்கிறோம். ஆமென். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே வீற்றிருக்கிறோம்.
39. இதற்குமேல் அதை குறித்து யூகம் என்பதே கிடையாது. அது  எல்லாம் முடிந்து விட்டது. ஆமென்! நான் அதை அப்படியாய்  விரும்புகிறேன். இதற்குமேல் நம்புகிறேன் என்பது கிடையாது.  இதற்குமேல் வாழ்த்துகிறது என்பது கிடையாது.இதற்குமேல்  கிடையாது. ஓ அது எல்லாமாய் முடிந்துவிட்டது.இப்பொழுது நாம் அவரோடுகூட உயிர்த்து அவரோடேகூட உன்னதங்களிலே உட்கார்ந்திருக்கிறோம்.
40. இப்பொழுது உள்ளேயும் இதற்கு மேலாயும் சபைக்கு, அப்படியானால் சகோ.பிரன்ஹாம் அதனுடைய அர்த்தம் என்னஅப்படியானால் நாம்  சுவிசேத்தை  பிரசங்கிக்க   வேண்டுமா என்று கூறலாம். அது நம்முடைய அடுத்த நம்பிக்கை யாயிருக்கிறது. அது நம்முடைய  அடுத்த காரியமாய் இருக்கிறது. நாம் அவரோடுகூட உயிர்த்த பின்னர் நமக்கு ஒரு பெரிய கட்டளை இருக்கிறது. உலமெங்கும் போய் எல்லோருக்கும் இந்த நற்செய்தியை கொண்டு வரவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
41. மகதலேனா மரியாளும், தாயாகிய மரியாளும் அந்த        விடியற் காலையிலே கல்லரையினிடத்திற்கு வந்தபோது என்ன அற்புதமான காலையாய் இருக்கவேண்டும். அந்த கல்லரை வாயிலிருந்து அந்த கல்லை யார் நமக்கு திருப்பி விடக்கூடும். அந்த கல்லரையிலிருந்து கல்லை யாரால் எடுக்கமுடியும் என்று  அவர்கள் வியந்துக்கொண்டிருந்தனர். அவர்கள் நம்பிக்கையோடு விசுவாசித்துக் கொண்டு முன்னேறி கல்லரைக்கு சென்றனர். பொழுது விடிய துவங்கினதும் ராபினும் மற்றப்பறவைகளும் அவைகளுடைய சத்தத்தை அடக்கிக் கொண்டது. முதலாவது காரியமாக விடிவெள்ளி  நட்சத்திரம் வழியை திறந்து பிரகாசித்தது. ஒரு  மகத்தான எரி நட்சத்திரம் போன்றது,பூமியின் ஊடாக பாய்ந்து  வந்து அவரை வைத்ததான கல்லரையின் மேல் தொங்கினது. அங்கே ஒரு  தூதன் நின்று அந்த கல்லை புரட்டி தள்ளினான்.
42. அவர் மரணம், நரகம், பாதாளம் இவைகளின் மேல் வெற்றி சிறந்தவராய் கல்லரையிலிருந்து எழும்பி வந்தார். இதோ நான் உங்களுடனே கூட எப்பொழுதும், உலகத்தின் முடிவு பரியந்தம் இருக்கிறேன் என்று கூறினார்.
43. இன்றைக்கு நம்முடைய ஜீவியத்தில் மிகவும் தலைசிறந்தவராக  ஜீவிக்கிறார். ஆக அங்கே இதற்கு மேல் அதை குறித்து யூகம் என்பதே கிடையாது. ஈஸ்டர் என்பது மகத்தான நேரங்களில் ஒன்றாய் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். முழு சுவிசேபெந்தேகோஸ்தே மறுபடியும் பிறந்த மறுஜென்ம ஜனங்கள் தேவனுடைய சுருதிகளை சத்தமிட வேண்டியதான ஒரு நேரம்  அங்கே இருக்கிறதென்றால் அது ஒரு ஈஸ்டர் காலையாகத்தான்  இருக்கவேண்டும். அவர்களுக்கு என்ன சம்பவித்ததோ அதன் ஒரு  நினைவு கூடுதல் அங்கே இருக்கிறதென்று அப்பொழுது அவர்கள் அறிந்து கொள்வார்கள். பாவத்திலும் அக்கிரமத்திலும் முன்னே மரித்தவர்களாயிருந்து இப்பொழுது உயிர்ப்பித்து கிறிஸ்துவுக்குள்  உன்னதங்களிலே உட்கார்ந்து நம்முடைமீட்பர் உயிரோடிருக் கிறார் என்பதை அறிந்தவர்களாய் இருக்கிறோம்.
44. பழங்கால தீர்க்கதரிசியாகிய தாவீது என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். ஏனென்றால் என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவை காண வொட்டீர் என்று  கூறினான்.  உயிர்தெழுதலை குறித்து பேசுகிறான். அதாவது வேத வாக்கியங்களின் படியாய் தேவன் கிறிஸ்துவை உயிரோடெழுப்புவார் என்பதாகும்.
45. அவரோடே கூட இன்றைக்கு உயிர்த்தவர்களாகிய நாம் அவரோடு கூட பொருத்தமாய் அமர்த்தப்பட்டிருக்கிறோம். இப்பொழுது வரப்போகிறதான எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாய் அந்த மகத்தான நேரத்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடை ஆத்துமா நம்பிக்கையோடே இளைப்பாறும். நாம் அதை அறிந்திருக்கிறோம். இன்றைக்கு  என்னுடைய  சிந்தையில் ஒரு துளி  கூட  சந்தேகம் கிடையாது. இங்கே  இருக்கின்ற எந்த மறுபடியுமாய் பிறந்த எந்த நபரின் சிந்தையிலும்  ஒரு துளி  சந்தேகம் கூட இல்லாமல் உயரே ரலோகம் இருக்கின்றது.  நித்தியத்தை  போன்று அவர்கள் அங்கே இருப்பது அவ்வளவு நிச்சயமாய் இருக்கிறது. நீங்கள் இருந்தாக  வேண்டும். ஒவ்வொரு  வாக்குதத்தமும் அதற்குள்ளாக இருக்கிறது. அவ்வளவு தான். அவரோடு கூட உயிர்த்தெழுந்தவர்களாய் இருங்கள். பின்னர் நீங்கள் அவரோடு கூட ஜீவிப்பீர்கள். அவரை  நேசிப்பீர்கள். உன்னதங்களில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அந்த மகத்தான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
46. இப்பொழுது அந்த மகத்தான கட்டளையானது போக வேண்டு மென்பதாகும். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்த பின்னர்  கொடுக்கப்பட்ட கட்டளையானது நீங்கள் உலக மெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேத்தை பிரங்கியுங்கள். ஒவ்வொரு சிருஷ்டியும் சுவிசேத்தை கேட்க வேண்டும். இந்த காலையில்  அது தான் சபையின் கட்டளை. அதாவது சர்வ சிருஷ்டியும் சுவிசேம்  கேட்கும். சர்வ சிருஷ்டியும் சுவிசேத்தை  கேட்ட பின்னர்  இயேசுவானவர் திரும்ப வருவார்.
47. இன்று காலையில் திரும்புகின்றதை பொருத்தமட்டில் நீங்கள் எப்பொழுதாவது சற்று நிதானித்து அது காக்க கூடியதாகிவிட்டது என்பதை குறித்து சிந்தித்து பார்த்ததுண்டா. அவர் ஏற்கனவே இங்கே நம்மோடே இருக்கிறார். அவருடைய சமூகம் இங்கே இன்றைக்கு இருக்கிறதை குறித்து இன்றைக்கு சற்று யூகித்து பாருங்கள். கர்த்தர்  இன்னொரு  உலகத்தில் அல்லது  இன்னொரு  பரிமாணத்தில் சரியாக இங்கே இன்றைக்கு ஆவியின் வடிவில் இருக்கிறார். அவருடைய ஆவி நம்முடைய ஆவியோடு ஒன்று சேர்கிறது. நம்முடைய கண்களால் அவரை காண முடியாது.  ஏனென்றால் அவர்கள் இன்னமும் சரீர பிரகாரமாய் இருக்கிறார்கள். நாம் தரிசனம் காணக்கூடியதாய் ஏதாவது  காரியம் சம்பவித்தாலொழிய அப்படி ஆகாது. ஆனால்  கல்லரையிடத்தில் மரியாளிடத்தில் பேசின நாளன்று அல்லது எம்மாவுக்கு போகின்ற பாதையிலே கிலியோப்பாவை அவர்  கண்டித்த நாளன்று  அவர் அவ்வளவு தத்ரூபமாயிருந்தார். அது  போன்று  அவர்  அவ்வளவு காணக் கூடியவராக இருக்கிறார்.
48. அவருடைய சமூகம் இங்கே இருக்கிறது. அதோடு அது  ஸ்பரிசிக்க கூடியதாய் இருந்தது. புதிய பிறப்பென்று அழைக்கப் படுகின்ற சரீரத்திற்குள்ளாக இருக்கின்ற உள்ளான சக்தியோடு உணரக்கூடியதாயிருந்தது. ஆத்துமாவானது அவர் பட்சமாய் தந்த ஈர்ப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஓ இது ஒரு பொழுது, உங்கள்  சிந்தையை அவர் மேல் ஊக்கமாய் செலுத்தும் பொழுது, அவரை விசுவாசிக்கும் பொழுது கொஞ்சம் கழித்து ஏதோ காரியம் ஒரு உண்மை பொருளாக உங்களுக்குள்ளாக பாய்கின்றதை உங்ளால் உணரமுடியும். அதுதான் அவருடைய உயிர்த்தெழுதலின் ரூபகார மாயிருக்கிறது.அப்படியாய் யூகிக்கிறேன் என்ற ஒன்றல்ல அது. நான் அப்படியாய் நம்புகிறேன் என்ற ஒன்றல்ல அது.
49. ஆனால் மறுபடியுமாய் பிறந்திருக்கிற ஒவ்வொரு நபருக்கும் அது அப்படியாய் அறிந்திருக்கிறேன் என்ற ஒரு காரியமாய் அது  இருக்கிறது. நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள்.  நீங்கள்  அவரோடு  தொடர்பாக ஆகும் பொழுது அது சரியாக அங்கே அது  இருக்கிறது. பரிசுத்தவான்கள் இந்தவிதமாக கூற நான் கேட்டிருக்கிறேன். ஓ உங்களால் கூடுமா? கர்த்தருடைய  சமூகம்   அருகிலிருக்கிறது. அவர்கள் ஏன் அங்கே ஏதோ இருக்கிறதென்று கூறுகிறார்கள். ஏன் நிச்சயமாக  அவர் அங்கே இருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார். அவர் உன்  பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்.
50. இப்பொழுது என்றோ ஒரு நாள் அவரோடு கூட இருக்கும்படியாய் நாம் போகும் போது, அந்த ஆவியை உணரக் கூடியதாய் இங்கே உள்ளே இருக்கின்ற இந்த ஆவிகள் அதற்குள்ளாக தங்களை அழுத்திக்கொள்ளும். பின்னர் உயிர்த்தெழும்போது அவரை காணும்படியாக அவர் தம்மை ஆக்கிக்கொள்ளும் போது, நாமும் காணும்படியாக ஆக்கப்பட்டு அவருடைய  சொந்த மகிமையைப்  போன்ற மகிமையை சரீரத்தில் உடையவர்களாய்  இருப்போம். நாம்  ஆவி உலகத்திலிருந்து வரும் பொழுது  அவரோடு  அவர் நம்மை கொண்டு வருவார். கிறிஸ்துவுக் குள்ளாக மரித்த யாவரையும் அவரோடு கூட உயிர்த்தெழுதலில் தேவன் கொண்டு வருவார். ஓ என்ன ஒரு தெளிவான காட்சி. என்ன ஒரு ஆசீர்வாதமான காரியம்;.
51. ஓ நான் இதை எடுக்கவில்லை என்றால் முழு பூமியின் மீதும் நான் ராஜாவாக ஆக்கப்பட்டு ஒரு பத்து லட்சம் வருடங்கள் ஜீவிக்கும்படியான உத்திரவாதமும் எனக்கு கொடுக்கப்பட்டால், இந்த உலகங்களின் ஐசுவரியங்களுக்காக நான் ஒரு வருட ஆராதனையையும் கடந்த வருத்தில் நான் கண்ட காரியங்களையும் தேவனை குறித்து நான் அறிந்தவைகளையும் நான் எடுத்துப்போடமாட்டேன். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை அந்த ஒரு பத்துலட்ச வருடங்கள் அல்லது அது என்னவாக  இருந்தாலும் சரி நான் உயிரோடே இருப்பதும் இல்லாமல் போய்விடும்.
53. சில காலத்திற்கு முன்னர் காக்ஸும் இப்பொழுது, அவர் கட்டிடத்தின் பின் பகுதியில் நின்றுக் கொண்டிருக்கிறார்.அவரும் நானும் உட்கார்ந்து கொண்டிருந்தோம். வண்டியானது வீட்டிற் குள்ளாக வந்தது.  நொருக்கப்பட்ட கற்பாறைகள் வீதியில் கிடந்தன. அநேக மநேகமான  வருங்களுக்கு முன்பாக ஜீவித்த ஏதோ கடல் மிருகம் அல்லது ஏதோ காரியத்தின் மீதியாக  விடப்பட்டது  அங்கே உள்ளே இருந்தது. நான் சொன்னேன். இங்கு இந்த காரியத்தை பாருங்கள் என்று.
53.அதற்கு சகோ.காக்ஸ் சகோ. பிரன்ஹாம் உண்மையாகவே அதற்கு எத்தனை வயது இருக்கும் என்று நான் வியக்கிறேன் என்றார்.
54. நான் சொன்னேன் சகோ.காக்ஸ் கடந்த கால நிகழ்ச்சியில் கால கணக்கை நிர்ணயம் செய்பவன் அல்லது லட்சக்கணக்கான வருங்கள் இந்த பூமியில் ஜனங்கள் வசிக்க துவங்கியதற்கு முன்னர் பூமி ஜலத்தால் மூடியிருந்ததற்கு முன்னர் என கணக்கிடலாம். அந்த மிருகங்கள் ஒருக்கால் அநேகமநேக லட்சக்கணக்கான  வருங்களுக்கு முன்னர் ஜீவித்திருக்கலாம்.
55. அதற்கு அவர் சகோ.பிரன்ஹாம் கவனியுங்கள். அந்த ஜீவியத்தற்கு மனுஷீக ஜீவியம் அதிக குறைவல்லவா. சுற்று  சிந்தித்து பாருங்கள். அந்த மீதமாய் விடப்பட்டவை லட்சக்கணக்கான வருங்களுக்கு பின்னரும் அப்படியே இருக்கின்றதே என்றார்.
56. நான் நினைத்து பார்த்து சகோ.காக்ஸ் அந்த விடப்பட்டவை எல்லாம் இல்லாமற் போகும்படியான ஒரு நேரம் உண்டாயிருக்கும். அதன்  ஒரு  நிழல் கூட இல்லாமற் போய்விடும். ஆனால்  அவர்  மரித்தோரிலிருந்து உயிர்த்து எழுந்தபடியினால் நானும் நீங்களும்  என்றென்றைக்குமாய் எண்ணி முடியாத காலங்களாய் ஜீவிப்போம் என்றேன்.
57. இப்படி விடப்பட்டதான எல்லா காரியங்களும் ஒழிந்து போன பின்பு எல்லா முதுமையின் நேரமும் கடந்து போன பின்னரும், நிழல்களெல்லாம் விழுந்துபோன பின்னும், நாம் தொடர்ந்து   என்றென்றைக்குமாய் ஜீவித்துக்கொண்டே போவோம்.  ஏனென்றால்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதுலை ஏற்று  கொண்டதின்  நிமித்தமாக  நாம் அழிவில்லாத ஜீவன்களாகிறோம்.  ஆவிக்குள்ளாக  தவித்துக்கொண்டு  என்றென்றைக்குமாக  ஜீவிக்க  அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட சமூகத்தில்  நாமும் கூட அவரோடு கூட இருப்போமென்று நம்முடைய விடுதலையின்  நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். என்ன  ஒரு அதிசயம். அது ஜனங்களின் இருதயத்தை சிலிர்க்க செய்ததில்              வியப்பொன்றுமில்லை. அது ஜனங்களை ஆராதனைக்கு கொண்டு வந்ததில் வியப்பொன்றுமில்லை.
58. ஜனங்கள் இன்றைக்கு அவர்களுயை முட்டிகளில் நடந்து கற்களை தொடுவதிலும், சிலுவைகளை உராசிக்கொள்வது  முதலான காரியங்களை செய்வதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் ஏதோ காரியம் அவர்களுக்கு உள்ளாக இருந்துகொண்டு  அவர்களுடைய மனுஷீக ஆத்துமாவுக்குள்ளாக இருக்கின்ற  ஏதோ  ஒரு காரியம் அவர்களால் கண்டறிய முடியாத ஏதோ  காரித்திற்காக கூக்குரலிடுகிறது. ஆழத்தை நோக்கி ஆழம் கூப்பிடுகிறது. அங்கே ஒரு ஆழமானது கூப்பிடுகிறதென்றால் அதற்கு பதிலளிக்க அங்கே ஒரு  ஆழம் இருந்தாக வேண்டும். அங்கே இருந்துதான் ஆகவேண்டும்.
59. குளிர் காலத்தின் குளுமையிலிருந்து கிழித்துக்கொண்டு சூரியன் வெளி வந்து வயல்களின் ஊடாக குளித்துக்கொண்டு வருவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அங்கு ஏதோ இருக்கவேண்டும். ஏதோ காரியத்திற்காக அந்த  சூரியன்   இங்கே   வைக்கப்பட்டிருக்கிறது.அங்கே கீழாக அடியில் மனித கண்களினால் காணமுடியாதபடி எங்கேயோ தாவரங்களும் ஜீவன்களும் இருந்து கொண்டு அவைகள் மீண்டுமாய்  ஜீவனுக்குள் வரும். ஏனென்றால்  அந்த சூரியன் அந்த அதே நோக்கதிற்காகவே அனுப்பப் பட்டிருக்கிறது.
60. மனித இருதயங்களுக்காக எவ்வளவு நிச்சயமாக தேவனுடைய குமாரன் வெளிச்சம் கொடுக்கிறதோ அவ்வளவு நிச்சயமாக ஏதோ காரியம் மனிதர்களால் விவரிக்க முடியாதது அங்கு மறைந்து கிடக்கிறது. அது அழைக்கிறது. அங்கு எங்கோ இருக்கத்தான்  வேண்டும். நான் அதை சிந்தித்து பார்ப்பேன். கிறிஸ்து உயிரோடெழுந்தார் என்ற தலைச்சிறந்த அத்தாட்சியை நாம் உடையவர்களாய் இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறதை என் இருதயத்தை சந்தோத்திற்காக குலுக்குகிறது.
61. இப்பொழுது பழைய ஏற்பாட்டின் நேரங்களை குறித்து நான் சிந்தித்தேன். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்த போது, அவர்கள் அவரை  முன் கண்டபோது அந்த சிந்தைனைகளினாலே ஆராதித்தனர். அங்கே ஏதோ காரியம் அவர்களுக்குள்ளாக  இருந்து ஒரு ஆழம் ஒரு ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறதென்று கூப்பிட்டுக்கொண்டு, ஒரு நேரத்திற்காக காத்துக்கொண்டு இயேசுவானவர் வர வேண்டியதான ஒரு நேரத்திற்காக எதிர் நோக்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இன்றைக்கு அவர் வந்தபின்னரோ!
62. அங்கே பின்னாக அதை எதிர் நோக்கிக் கொண்டிருந்த ஜனங்களிடத்தில் அப்படியாய் ஒரு காரியமே இல்லை என்று கண்டு அப்படிப்பட்டவர்களுடைய கண்களை சாத்தான் குருடாக்க முயற்ச்சித்தான். ஆனால் எந்த விதமாகவோ இன்று காலையில் நாம் கூறக்கூடியதற்கும் அப்பால் பரிசுத்த ஆவியானவர்  அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக திணித்து நீதியான ஒருவரின் வருகை இருக்கிறது என்ற பசியையும் தாகத்தையும் அவர்களுக்கு கொடுத்தார்.
63. யோபு, இப்பொழுது சந்தியுங்கள்! நாலாயிரம் வருங்களுக்கு  முன்னர் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு நாலாயிரம்  வருடங்களுக்கு  முன்னர் யோபு உயிர்த்தெழுதலை  கண்டான். அது  அப்படியாய் இருக்குமென்று அது சம்பவிப்பதற்கு நாலாயிரம்  வருடங்களுக்கு  முன்னதாக  அதை அவன்  ஒரு  தரிசனத்தினால் கண்ட போது என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர்  கடைசி நாளில் பூமியின் மீது நிற்பார் என்றும் நான்  அறிந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையை யோபு உடையவனாய்  இருந்தான். இந்த  என் தோல் முதலானவை  அழிந்து  போன பின்பு நான் என் மாம்சத்திலிருந்து  தேவனை  பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன். அந்நிய கண்களல்ல. என் கண்களே அவரை காணும். என்ற நிச்சயத்தை  யோபு  உடையவனாய்  இருந்தான். அங்கே ஒரு ஆழம் யோபுக்குள்ளாய் இருந்துக்கொண்டு ஆழத்தை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தது.
65. மரணத்தினால் அந்த நித்தியத்தை சாத்தான் அழித்துபோட முயற்சிக்கலாம். அவன் ஒருக்கால் ஆம், யோபுவே நீ  பாதாளத்திற்கு போகின்றாய். புழுக்கள் உன்சரீரத்தை அழித்து போடும் என்று கூறலாம். அது உண்மை. நாம் அதை அறிந்திருக்கிறோம். ஆனால் கடைசி நாளில் நான் அவரோடு இருப்பேன் என்று கூறினான். அவர் அங்கே இருப்பார் என்ற நிச்சயத்தை அவன் உடையவனாய் இருந்தான். ஏனென்றால் அங்கே காரியம் ஏதோ இருந்துக்கொண்டு அதை அவனுக்கு  கூறிற்று. ஆனால் சாத்தானோ அவனால் முடிந்த மட்டுமாய் மரணம் முதலான காரியங்களால் அதை அழித்து போட முயற்சித்தான். யோபுவோ அதை காணும்படியாக அதை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். விசுவாசத்தில் மரித்து ஜீவனை விட்டான். ஈஸ்டர்  காலையில் கிறிஸ்துவோடு கூட மீண்டுமாய் உயிர்த்து இன்றைக்கு மனிதர்களுக்கு மத்தியில் அழிவில்லாததாய் இருக்கின்றான். அல்லேலூயா! கவனியுங்கள்! அல்லேலூயா! தூதர்கள் பாட முடிகிறதில் வியப்பொன்றும் இல்லை. அறிந்திருக்கிறீர்களா?
66. இப்பொழுது இன்றைக்கு அங்கே ஒரு சிலர் இருக்கலாம். நாம்  சிலுவையை எடுத்து தேய்த்துக் கொள்ளலாம். மரித்துப்போனவர் களுடைய எலும்புகளை எடுத்து தேய்த்துக்கொள்ளலாம். அது  மனுஷீக இருதயம். ஏதோ காரியத்தை அழைக்கின்றதாய் இருக்கிறது. அவர்கள் அப்படி செய்கிறார்கள்.  அங்கே அவர்களுக் குள்ளாக அப்படி செய்ய வேண்டும் போன்ற ஏதோ காரியம் இருக்கிறது. மானிட ஜீவன்களாய் இருப்பதினால் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. அவர்கள் அறிந்திருக்கிற எந்த காரியத்தை காட்டிலும் மகத்தானது எங்கேயோ ஏதோ காரியம் அங்கே இருக்கிறதென்று அறிந்திருக்கிறார்கள். அதை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை தேடிக் கொண்டிருக்கிறார்கள். மரித்துப்போன எலும்புகளை ஆராதிப்பதின் மூலமாக, சிலுவைகளை தேய்த்துக்கொள்வதின் மூலமாக, மகத்தான சபைகளை கட்டுவதின் மூலமாக, அதை கண்டுபிடிக்க  முயற்சிக்கிறார்கள்.
67. ஆனால் ஓ இன்றைக்கு, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கைக்கும்,அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயத்திற்கும், அதாவது உயிர்த்தெழுதலோடு எப்பொழுதேனும் தொடர்பு கொள்ளுகிற ஒரு மனிதனும் எந்த சந்தேகத்தின் நிழலுக்கும் அப்பால் கிறிஸ்து  பாதாளத்திலிருந்து எழும்பினார் என்றும், நாம் அவரோடு கூட இன்று காலையில் எழும்பினோம் என்றும் அறிந்திருக்கிறோம்.
68. நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவினிடத்திற்கு வருகிறீர்கள்.  அது ஒரு பசியாய் இருக்கிறது. நீங்கள் பரிசுத்தாவியை பெற்று கொள்ளதற்கு  முன்பாக நீங்கள் பசியாயும் தாகமாயும் இருந்தீர்கள். நீங்கள் அசைந்தீர்கள். நீங்கள் அதை தேடினீர்கள். நீங்கள் வேதத்தை வாசித்தீர்கள். நீங்கள் அழுதீர்கள். அங்கே இருக்கக் கூடிய எல்லா காரியங்களையும் செய்தீர்கள். நீங்கள் ஒருக்கால் ஜெபமாலை சொல்லியிருப்பீர்கள். நீங்கள் திருப்பி திருப்பி ஜெபம் கூறியிருப்பீர்கள். நீங்கள் எல்லாவிதமான பயபக்திக்கான காரியங்களை செய்திருப்பீர்கள். நீஙகள் மாம்சம் புசியாமல் இருந்திருப்பீர்கள். நீங்கள் ஓய்வு நாட்களை ஆசாரித்திருப்பீர்கள். இன்றைக்கு உலகம் பேசிக்கொண்டிருக்கிற பயபக்திக்குரிய  காரியங்கள் அத்தனையும் நீங்கள் செய்திருப்பீர்கள்.
69. ஆனால் ஒரு முறை நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிலுவை மரணத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்தால் அங்கே ஒரு உயிர்த்தெழுதல் வரும். என் மீட்பர் இன்றைக்கு உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன் என்ற நிச்சயத்தை உங்களுக்கு  கொடுக்கிறது.
அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயம் இயேசு என் சொந்தம்,
ஓ தெய்வீக மகிமையின் என்ன ஒரு முன் ருசி,
இரட்சிப்பின் சுதந்திரவாளி,                                     தேவனால் கிரயத்துக்குகொள்ளப்பட்டவன்,
அவருடைய ஆவியினால் பிறந்தவன்,
அவருடைய இரத்தினால் கழுவப்பட்டவன்.          
70. அதுதான் நற்செய்திகளாய் இருக்கிறது.அதுதான் பொதுவான ஒழுங்கு முறையாய் இருக்கிறது. உலமெங்கும் போய் இந்த சுவிசேத்தை பிரசங்கியுங்கள்.அது தான் மகத்தான கட்டளையாய் இருக்கிறது. உயிர்த்தெழுதலின் வல்லமையில் அதை ஜனங்களுக்கு கொடுங்கள்.
71. இப்பொழுது காலை சேர்ந்து பேசுவதற்கு நம்முடைய நேரம் இப்பொழுது சரியாக இருக்கிறது. இன்றைக்கு திரும்பி வந்து  ஈஸ்டர் ஆராதனைக்கு பேசுவதற்கு இன்னும் ஒரு சிலமணி நேரங்கள் தான் இருக்கிறது. இப்போழுது நாம் பேச வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
72. ஆனால் இன்றைக்கு இந்த சிறிய பேசுதலில்   என்ன ஒரு அற்புதமான உணர்வு. என்ன ஒரு அற்புதமான ஒன்று  கூடி வரும்  ஐக்கியம். அவர்கள் கண்கள் காணத்தக்கதான  விதத்தில்  இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதற்கான நேரடி அத்தாட்சியை இந்த பழைய சிறிய ஜெபக்கூடாரம்  இன்று காணும்  என்று நான் என் முழு மனதுடன் விசுவாசிக்கிறேன்.  தேவன் வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறார். மகத்தான அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்கிறார். இது மகத்தான கட்டளையில் சேர்ந்துள்ளது. கல்வாரியில் செய்யப்பட்டதான  அந்த  மகத்தான பாவநிவாரணத்தில் இந்த காரியங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. என்னை பொருத்த மட்டில் அது அவருடைய உயிர்த்தெழுதலின் மாற முடியாத நிருபணங்களாக இருக்கிறது.
73. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் இந்த சுவிசேத்தை பிரசங்கியுங்கள்.  விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.
74. நீஙக்ள் எல்லா பிரதான ஆலயங்களையும், எல்லா பிரதான தேய்த்துக்கொள்ளுதலையும், விரும்புகின்ற எல்லா காரியங்களையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் இன்றைக்கு  கர்த்தராகிய இயேசுவை பள்ளத்தாக்கின் லீலியாகவும், விடிவெள்ளி நட்சத்திர மாகவும் நான் காணத்தக்கதாக உயிர்த்தெழுந்த வல்லமையை எனக்கு கொடுங்கள். அது என்னை அதற்கு முத்தரிக்கிறது. அப்படியானால் பண்டயக்கால யோபுவோடு கூட சேர்ந்து என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். என்னுடைய பாவங்களை எதனால் கழுவ முடியும் இயேசுவின் இரத்தத்தினாலன்றி வேறொன்றினாலும் அல்ல.
75. எல்லா சுகவீனத்திலிருந்தும் என்னவாயிருந்தாலும் நான் எப்பொழுதாவது இருந்த என் கட்டிலிருந்து முழுவதுமாக்கக்கூடியது என்ன? இயேசுவின் இரத்தமும் அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில்லாமல் வேறொன்றும் இல்லை. என்ன ஒரு  அற்புதமான காரியம். நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா. அவருடைய பரிசுத்த நாமம் ஆசீர்வதிக்கப் படுவதாக.
76. இப்பொழுது யோபு ஏமாற்றம் அடைந்தானா? யோபு இதை  விசுவாசித்த காரணத்தினால் அவன் விட்டுவிடப்பட்டானா?.  ஒருபோதும் இல்லை. ஒருபோதும் இல்லை. அவன் கண்டதின் பேரில், அவனுடைய வெளிப்பாட்டில் அவன் ஏமாற்றப்பட்டானா.  ஆழத்தை நோக்கி கூப்பிட்ட ஆழம் யோபை வஞ்சித்துப் போட்டதா? அவனுடைய நாளில் அநேகர் அதை நினைத் திருக்கலாம். ஆனால் ஓ முடிவில் அது எந்த விதமாக வெளியே வந்தது. யோபு  மரித்தபோது வயது சென்றவனாய் இருந்தான். தேவன் அவனது ஜீவியத்தை ஆசீர்வதித்தார்.
77. நான் உங்களுக்கு சொல்லுகிறேன். எந்த நபரை வேண்டுமானாலும் கவனித்து பாருங்கள். ஜெபக்கூடாரத்தை சேர்ந்த  நீங்கள் எங்களை சந்திக்க வந்திருக்கும் உங்களையும் தான். இதற்கு செவி கொடுங்கள். நீங்கள் எந்த விதமான ஜீவியம்  ஜீவிக்கிறீர்களோ, அந்த விதமான ஜீவியத்தைதான் நீங்கள் அறுப்பீர்கள். நீங்கள் விதைக்கிறதையே அறுப்பீர்கள். அன்றொரு நாள் எனக்கு நாற்பத்தி ஆறு வயதாயிருந்தது. நீங்கள் தவறாக இந்த செய்தியை அப்படியே தொடர்ந்து போக முடியாதென்று  தேவன் எனக்கு  பொதுமான நீண்ட காலம் ஜீவிக்கும்படி தேவன் அனுமதித்தார்.
78. நீங்கள் சரியான காரியத்தை செய்தாக வேண்டும். ஏனென்றால் கிறிஸ்து மரித்தோரின் மத்தியிலிருந்து எழுந்து அவருடைய கண்கள் சபையின் மேல் நோக்கமாயிருக்கிறது. அவர் அதை கவனித்து அதை வழி நடத்துகிறூர். பரிசுத்தாவியானவர் ஏதாவது காரியத்தை செய்ய உங்களிடத்தில் கூறினால் அவருடைய உணர்வுகளுக்கு எதிராக நீங்கள் ஒரு போதும் போகாதீர்கள். உலகம் என்ன கூறினாலும் கவலையில்லை. அவர் சொன்னதையே நீங்கள் செய்யுங்கள். அவர் எப்பொழுதுமே சத்தியத்தை ரூபகாரப்படுத்தி சத்தியம் நேராக்கப் பட்டிருப்பதை காத்துக்கொள்வார்.
79. இந்த கர்த்தருடைய மகத்தான தீர்க்கதரிசியாகிய தீர்க்கதரிசி மரித்தபோது அடக்கம் பண்ணப்பட்டான். இப்பொழுது ஒரு சிறிய ஆச்சரியம் என்னவென்றால்,
80. நான் இந்த ஆராதனையை இப்பொழுது முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறேன். அதனால் நாம் துரிதமாக நாம் வீட்டிற்கு போய் அந்த மகத்தான சுகமளிக்கும் ஆராதனைக்கு திரும்பி வரமுடியும்.
81. நான் ஒரு மத வெறியன் அல்ல. உங்களுக்கு தெரியும் நான் அப்படி அல்ல என்று. அல்லது நான் அந்த விதமாக இருந்தால் அது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய ஆழத்துக்குள்ளாக ஏதோ காரியம் என்னை தள்ளிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருக்கிறதை நான் உணருகிறேன்.இன்று காலையில் நாம் ஏதோ மகத்தான காரியத்தை தேவனுடைய மகிமைக்காக எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். என்னால் முடியாதென்று நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஓ என்னே. கிறிஸ்து இன்றைக்கு ஜீவிக்கிறார்.இந்த மகத்தான காரியத்தை அறிவதே ஆகும். ஊலகமெங்கிலும் எல்லா இடத்திலும் எல்லா மதத்திலும் அங்கே இருக்கின்ற எல்லா காரியத்திலேயும் என்னவாக இருந்தாலும் சரி முழு கூட்டமும் அதை நிராகரித்து விட்டு இருந்தாலும் சரி, இன்னமும் எனக்கு அவர் ஜீவிக்கிறார். அவர் ஜீவிக்கிறார்.அதை விசுவாசிக்கிற ஜனங்கள் கைவிடப்பட்டார்களா? என்று நாம் அப்பொழுது பார்ப்போம்.
82 யோபு அவன் மரணமடைந்த போது அங்கே இருந்த ஒரு வயல் வெளியில் அவனை அடக்கம் செய்தனர்.அவனுடைய கல்லரை பாதுகாக்கப்பட்டது.
83. பின்னர் தொடர்ந்து பண்டைய தீர்க்கதரிசிகள் வந்தார்கள். வேதாகமத்தின்  இனிய இருதயங்களாகிய ஆபிகாமும் சாராளும். சாராள் மரித்த போது யோபு அடக்கம் பண்ணப்பட்டதற்கு  அருகாமையில் ஒரு சிறிய நிலத்தை ஆபிரகாம் கிரயத்துக்கு வாங்கி சாராளை அடக்கம் செய்தான். நான் அக்கரையிலுள்ள  ஒருவன் கூட சுதந்திரவாளி என்று சொன்னான். ஓ என்னே உடன் சுதந்திரர். எனக்கு அது பிடிக்கும்.
84. அந்த விதமாக இன்றைக்கு சிலர் அவர்களில் சிலர் நல்லது சகோ. பிரன்ஹாம் பாப்டிஸ்ட் சபையை நீர் விட்டு விடுவீர் என்றா நீர் கூறுகிறீர். நீர் இதை அதை அல்லது மற்றதை செய்வீரா என்கிறார்கள்.
85. நான் இந்த பரிசுத்த உருளைகளோடு உடன் சுதந்திரனாய் இருக்கிறேன். நான் அவர்களோடு இருக்க விரும்புகிறேன்.  பண்டைய காலத்து ரூத் கூறியது போன்று உம்முடைய ஜனம் என்னுடைய ஜனமாயிருக்கிறார்கள். உம்முடைய தேவன்  என்னுடைய தேவனாய் இருக்கிறார். நீர் எங்கே மரிக்கிறீரோ அங்கே நானும் மரிப்பேன். உம்மை எங்கே அடக்கம் பண்ணுவர்களோ அங்கே நானும் அடக்கம் பண்ணுவேன் என்றாள். நான்  அவ்வளவாக என் சுயத்திற்கு மரிக்க விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நான் ஒரு புதிய நபர் ஆக ஆகும் வரைக்குமாக.
86. ஆக அவர்கள் யோபுவை அடக்கம் செய்தனர்.ஆபிரகாம் சாராளை அந்த இடத்திற்கு அருகாமையில் அடக்கம் செய்தான். ஏதோ காரியம் அவர்களுக்குள் இருந்தது.அந்த உள்ளுணர்ச்சி இருந்தது.
87. நல்லது இப்பொழுது அப்படிப்பட்டதான ஒரு காரியம் இருக்கிறதா சகோ. பிரன்ஹாம் வித்தியாசமான காரியங்களை குறித்து நீர் சொல்லிக் கொண்டே போகிறீர் அதை அவர்கள் கூட ஒரு புஸ்தகத்திலிருந்து வாசித்திருக்கிறார்கள் என்று நீங்கள்  கூறலாம். அது உண்மை  அதை  அவர்கள்  புத்தகங்களிலிருந்து வாசித்தார்கள்.
88. ஆனால் இது ஒரு புத்தகத்திலிருந்து படிப்பது அல்ல.  வெளிப்பட செய்யும்படியாய் ஆக்கப்பட்டது இந்த புஸ்தகமாய்   இருக்கிறது. இது வார்த்தையாய் இருக்கிறது.வித்தானது வளரத் துவங்கினது. அது  தான் நான் அறிவேன்  என்பதாக இருக்கிறது. நீங்கள் வெறுமனே எடுத்து வாசிப்பீர்களானால் அப்படியாய் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.அப்படியாய் இருக்கும் என்று  விசுவாசிக்கிறேன் என்று சொல்லுவீர்கள். ஆனால் வித்தானது  ஜீவனைக் கொண்டு வந்தால் அப்பொழுது நீங்கள் அப்படியாய் அறிந்திருப்பீர்கள். ஆமென். ஆமென். ஓ அது ஒரு அப்படியாய்  நான் அறிந்திருக்கிறேன்  என்பதாய் இருக்கிறது.
89. யோபு கூறினான் நான் அறிந்திருக்கிறேன் என்று.நான் அதை நம்பினேன். அதில் எனக்கு விசுவாசம் உண்டு.நான் பலிகளை செலுத்தினேன். நான் இந்த எல்லா காரியங்களையும் செய்தேன். அப்படியாய் நான் நம்பினேன் என்று. ஆனால் தரிசனம் வந்தபோதோ நான் அதை அறிந்திருக்கிறேன் என்று அவன் கூறினான். ஏதோ காரியம் சம்பவித்தது.
90. நீங்கள் சபைக்கு போகலாம். எல்லா அப்போஸ்தலர்களின்  கோட்பாடுகளையும் நீங்கள் கூறலாம். பயபக்திக்குரியதான மற்ற எல்லா காரியங்களையும் நீங்கள் செய்யலாம். நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்புகிற விதமாக நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளலாம். இந்த காரியங்களில் நீங்கள்  விரும்புகிற எந்த காரியத்தையும் செய்யலாம்.ஆனால் கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலோடு உங்கள் ஆத்துமா விழித்தெழும் வரைக்குமாய் நம்புகிறேன் என்கிற எல்லா  காரியங்களும் அப்பாலே போய் அப்படியாய் அறிந்திருக்கிறேன் என்பதே இறங்கி வந்தது. நான் அறிந்திருக்கிறேன். என்  மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன் என்று யோபு கூறினான்.
91. ஆபிரகாம் கூறினான். அதே விதமான  தரிசனம் எனக்கும்  உண்டாயிருந்தது. அங்கே மலையின் உச்சியில் இருந்தபோது   கிறிஸ்துவாகிய தேவன்  என்னை  சந்தித்தபோது  அவருடைய  மீட்பின்  நாமங்களாக  யேகோவாயீரே, யேகோவா ரஃபா அவைகள்  எல்லாவற்றையும் கொடுத்தார். மரணம் அடக்கம் பண்ணுதல்  உயிரோடெழுதலை நான் கண்டேன். அதை கண்டதினால்  என்னுடைய குட்டி ஈசாக்கை  நான் கண்டபோது நான் என் சொந்த குமாரனில் செலுத்தினேன். இவனுடைய தாயார் இங்கே மரித்துப்போன தாய் அவருடைய குமாரன். நான் அவனை மலையின்மேல் கொண்டு போனபோது அவனுக்காக விறகு  கட்டைகளை அவனே சுமந்து கொண்டு மலையின் உச்சிக்கு வரும்படிக்கு விட்டேன். ஆதியாகமம் 22 அங்கே நான் அவனை பலிபீடத்தில் கிடத்தி அவனுடைய சொந்த ஜீவனை எடுக்கப் போவதாய் இருந்தேன்.மரித்தோரிலிருந்து வந்தவனாக நான் அவனைப் பெற்றுக் கொண்டேன். அறிந்தவனாய் அவனை மறுபடியும் ஜீவனோடு எழுந்திருப்பான் என்று விசுவாசித்தேன். என்னுடைய இருதயத்தில் துடித்துக்  கொண்டிருக்கிறதான இந்த  மகத்தான நம்பிக்கையின் மூலமாக அவரிலே அவனை  உயிரோடெழுப்ப முடியும் என்று அவர்  சொன்னார் என்று  நான்  அறிவேன் என்று கூறினான். புரிகின்றதா! அது உயிர்த்தெழுதலின்  முன் காணுதலாய் இருக்கின்றது.இதே காரியத்தைதான்  யோபு உடையவனாய் இருந்தான்.
92. எனவே அவன் இப்பொழுது நான் யோபோடே உடன் சதந்திரனாய் இருக்கிறேன். எனவே என்னையும் அதே நிலத்தில்  அடக்கம் பண்ணுங்கள்  என்று  கூறினான். அது உண்மை.  எனவே  அவனை அங்கே கொண்டு போனார்கள்.சாராளை கொண்டுபோய்  அவளை அங்கே யோபுவுக்கு அருகாமையில்  அடக்கம் செய்தனர். ஆபிரகாம் அவர்களிடத்தில் வேறு  யாருக்காவது  ஒரு வேளை  ஒருக்கால் விற்றுப்போடலாம். அல்லது நீர் அதை எனக்கு கொடுத்த  காரணத்தினால் நீர் அதை எனக்கு கொடுப்பதை நான் விரும்பவில்லை. அதற்கு நான்  கிரயம் கொடுக்க  விரும்புகிறேன். நீர் அதை  எனக்கு கொடுத்திருந்த போதிலும்  நான்  அதற்கு  கிரயம் கொடுக்க விரும்புகிறேன்.
93. ஒவ்வொரு மனிதனும் அவ்விதமாகத் தான் அதாவது கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிரியைகளினாலே அல்ல. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்த்தெழுதலை நீங்கள் உங்கள் இருதயதில் பெற்றுக் கொள்ளும் போது நீங்கள் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை ஜீவிக்க  விரும்புவீர்கள். சரியானது எதுவோ அதுவே உங்கள்  இருதயத்தின்  வாஞ்சையாயிருக்கும். ஓ அதை நான் நேசிக்கிறேன். நீங்கள்  இதை  செய்வதற்கு கடமைபட்டிருக்கிறீர்கள் என்பதாக அல்ல.  ஆனால்   உங்களுக்குள் ஏதோ  காரியம் இருந்துகொண்டு  நீங்கள் அதை செய்யும்படியாய் செய்கிறது. நீங்கள் அதை செய்ய  விரும்புகிறீர்கள். அது  ஒரு கடமையாய்  இருக்கிறது  என்ற  காரணத்தினால் அதை செய்கிறதில்லை. அன்பின்  காரணத்தினால்  அதை செய்கிறீர்கள்.
94. நீங்கள் சொல்லலாம் எனக்கு தெரியும் நான் எழுந்தாக வேண்டும். இன்று காலையில் சபைக்கு பிள்ளைகள் போவதற்காக  நான் ஆயத்தப்படுத்தியாகவேண்டும். ஓ என்னவென்று புரிகின்றதா? ஓ என்னே! நீங்கள் உயிர்த்தெழுதலை தொடவேயில்லை.
95. சகோதரனே உயிர்த்தெழுதல் உங்களுக்குள்ளே வந்தபோது நீங்கள் அதை செய்ய வாஞ்சிக்கிறீர்கள். நீங்கள் அதை விட்டு விலகி இராதபடிக்கு அங்கு ஏதோ காரியம் இருக்கிறது. ஏதோ காரியம் உள்ளே இருக்கிறது.
96. யோபு அவன் அதை கண்டபொழுது ஆபிரகாம் அதை கண்டான்.  அவன் யோபின் அருகாமையில் சாராளை புதைத்தான். நிலத்தை விலைக்கு வாங்கினான். அவனுடைய பணத்தைக் கொண்டு வாங்கினான்.அதனால் அது நிச்சயிக்கப்பட்டதாக  அது  இருக்கும். அடக்கம் பண்ணும் இடமாக அவன் அதை  வாங்கினான் என்பது நிச்சயமாயிருக்கும்படி அவன் அதற்கு முன்பாக சாட்சிகளை வைத்தான். பின்னர் ஆபிரகாம் தானே  அவன் மரித்தபோது அவனும் கூட அவர்களோடே கூட அதே நிலத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.
97. ஆபிரகாம் ஈசாக்கை பெற்றான். ஈசாக்கு மரித்தபோது  அவன்  ஆபிரகாமோடே அடக்கம் பண்ணப்பட்டான். அதே தரிசனத்தின் கீழ் அதே கருத்தின் கீழ் அதே ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறதின்  கீழ் அதே  என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் என்பதன் கீழ் அடக்கம் பண்ணப்பட்டான். அதே காரியம். அதே அத்தாட்சி.
98. பின்னர் ஈசாக்கு யாக்கோபை பெற்றான். யாக்கோபபு தேசத்தை விட்டு எங்கோ எகிப்திலே மரித்தான்.
99. அவன் பாதிக்கப்பட்டவனாய் இருந்தான். அவன் வழக்கமாக நடந்து கொண்டிருந்ததற்கு மாறாக வித்தியாசமாய் நடந்தான். ஒரு  இரவு ஒரு தேவனுடைய தூதனோடு தொடர்பு கொண்டான்.  கர்த்தர் அவனுடைய இடுப்பை  தொட்டு அவனை  வித்தியாசமாக  நடக்கும்படி செய்தர். அவன் தேவனை ஒரே இருகலாக பிடித்துக் கொண்டான் என்பதற்கு அவன் ஒரு  அத்தாட்சியாய்  இருந்தான்.  தேவன் அவனை ஒரே இருகலாக  பிடித்துக் கொண்டார். அந்த அத்தாட்சியை உடையவனாய் இருந்தபோது அவன் அங்கே அந்த விதமாய் நடந்துக்கொண்டிருந்த அந்த பழைய பாதிக்கப்பட்ட இடுப்பு நேராகும் படியாக செய்தது. அதுதான் வழியாய் இருந்தது.
100. ஒரு பக்கம் ஒரு மகத்தான பெருமைக்காரன். அவன் உண்மையாகவே எப்படி அழைக்கப் பட்டான் என்றால் அவன் ஒரு வஞ்சிக்கிறவனாக இருந்தான். அது வஞ்சிக்கிறவன் என்று அழைக்கப்பட்டது. யாக்கோபு என்ற வார்த்தைக்கே எத்தன் என்று அர்த்தம். அவன் இந்த பக்கமாய் இருந்தபோது ஒரு  எத்தனாக ஒரு  ஆரோக்கியமான பெலசாலியான  எத்தனாய் இருந்தான்.
101. அடுத்த பக்கத்திலோ தேவனோடு இருந்ததான்.ஒரு நொண்டியாய் தாங்கி நடக்கிறவனாய் இருந்தான். தேடப்பட்ட வனாய் ஒரு வித்தியாசமானவனாய் அவனுக்குள்ளாக ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையை உடையவனாய் இருந்தான். அவன் வித்தியாசமாய் நடந்தான். அவன் வித்தியாசமாய் செயல்பட்டான். அவன் வித்தியாசமாய் ஜீவித்தான்.
102. எங்கேயோ எகிப்திலே அவன் மரிப்பதற்கு ஆயத்துப்படுத்திக் கொண்டிருந்தான். அதை இப்பொழுது சிந்தித்து பாருங்கள். அந்த உள்ளுணர்வு உயிர்தெழுதலுக்கு முன்பாக அதுவும்  ஒரு குறிப்பிட்ட  அளவில் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. உயிர்தெழுதலுக்கு முன்பாக கொடுக்கப்பட்டிருந்தது.அவன் அங்கே  எகிப்திலே ஏதோ  காரியம் நடக்கப்போகிறது. ஆனால் அங்கே வாக்குதத்தம்  பண்ணப்பட்ட தேசத்திலே இந்நாட்களில்  ஒன்றில் சம்பவிக்க  போகிறது. எனவே அந்த குறிப்பிட்ட ஸ்தலத்தின் மேல் உள்ளுணர்வு  உண்டாகி என் மகன் யோசேப்பே இங்கே வா என்றான். அவன்  ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தான். இங்கே வந்து உன் கரத்தை நான் போராடின  ஆபத்தின்  மேல் வைத்து என்னை இங்கே அடக்கம் பண்ண மாட்டேன் என்று  பரலோகத்தின் தேவனில் ஆணையிட்டு கொடு. என்னை இங்கே அடக்கம் பண்ணமாட்டேன் என்று ஆணையிட்டு  கொடு  என்று அவன்  கூறினான். ஏனென்றால்   அவனுடைய ஜனத்தோடு சேர்க்கப்படுவது அவ்வளவு தவிர்க்      கப்பட முடியாதது என்று அவன் அறிந்திருந்தான்.
103. அந்த காரணத்தினால் தான் நாம் அது குறை கூறப்பட்டாலும் அது பரிகாசம் பண்ணப்பட்டாலும் நான் ஒரு மகத்தான புகழ் பெற்ற நபராக இருந்தாலும் சரி. தேவனுடைய  நிந்திக்கப்பட்ட சிலருடைய  வழியையே நான் எடுத்துக்கொள்வேன் என்னும் பாடலை நாம்  அந்த கரடு முரடான சிலுவையின் மேல் கரத்தை  வைக்கும்போது  பாட விரும்புகிறோம்.
104. அதை போன்று ஒரு நாள் அப்பொழுது இருந்தது,போன்று  ஒரு சிறு பண்டைய பையனான ஒருவன் பட்டணத்தை சுற்றி ஓடினான். வாலிபர்கள்  மத்தியில்  ஒரு விதமான புகழ் பெற்றவனாக இருந்தான். ஆனால் ஒரு நாள் ஏதோ காரியத்தை இங்கே வர நான் கண்டேன். அந்த பக்கத்தில் அந்த தாங்கி தாங்கி நடக்கும்  பக்கத்தை  எடுத்துக் கொண்டேன்  என்றான்.
105. நீங்கள் அங்கே உங்கள் ஸ்தானத்தை எடுத்துகொண்டதன் நிமித்தமாக நீங்கள் சந்தோமாய் இல்லையா. ஏனென்றால் உங்களுக்குள்ளே அங்கே ஏதோ காரியம் இருக்கிறது.  (கூட்டத்தார் ஆமென் என்று சொல்லுகிறார்கள்).
106. நான் ஒரு வாலிப பிரசங்கியாய் இருந்தபோது இங்கே எங்கேயோ ஒரு இடத்தில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்.  நான் வாலிப அம்மாவை ஒரு நாள் சபைக்கு அழைத்துச்  சென்றேன். அவள்  என்னிடத்தில் சபை முடிந்த பிறகு பில் நாம் படத்திற்கு போகலாமா என்றாள். அதற்கு நான் படங்களுக்கு போவதில்லை என்றேன்.
107. அவள் அதற்கு நடக்க இருக்கின்ற ஒரு நடனத்திற்கு ஒரு நாளை அல்லது ஒரு தேதியை நாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யலாமா என்றாள். அந்த பெண் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை.
108. நான் கூடாது என்றேன்.அவளுடைய சகோதரன் ஊழியக் காரனாய் இருந்தான். அவன் அதிக தூரத்தில் அல்ல. சமீபத்தில்  குடியிருந்தான். அவன் நாம் ஒரு நடனத்திற்கு போவோமா என்றாள். நான் நடனம் ஆடுவதில்லை என்று கூறினேன்.
109. அதற்கு அவள் உமக்கு நடனம் ஆடத்தெரியாதா? நீர் எங்கே  போய் உல்லாசமாய் இருப்பீர் என்றாள்.சபைக்கு வா நான்  உனக்கு  காண்பிக்கிறேன்  என்றேன்.ஆமென்.
110. நான் உங்களுக்கு சொல்லுகிறேன். சகோதரர்களே  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அந்த உயிர்த்தெழும் அந்த  மறுரூபமாகும் வல்லமை ஒரு மனுஷீக சரீரத்தின் ஊடாக  சுற்றிக் கொண்டிருக்கிறதை நான் உணரும் போது எல்லா  உலகப்பிரகார சந்தோங்கள்  கொடுக்கக்கூடியதை  காட்டிலும்  அதிகமானதை ஐந்தே நிமிடங்களில் கொடுக்கிறது என்ற  அந்த  பரிபூரண நம்பிக்கையை அது எனக்கு கொடுக்கிறது. அந்த உயிர்த்தெழுந்த வல்லமை.
111. அந்த இரவு பாவிகள் பீடத்தண்டை வந்தனர்.அவள் அங்கே பின்னாக உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.  நான்  சொன்னேன். சகோதரியே இப்பொழுது பாரும் என் சந்தோம் எங்கே இருக்கிறதென்று. உலகத்தில் நீ கொடுக்கக்கூடிய எல்லா  காரியங்களை காட்டிலும் நான் அதிக சந்தோமாயிருக்கிறேன். உலகமும்  அதின் எல்லாவல்லமையும் இதனுடைய ஸ்தானத்தை ஒரு போதும் எடுக்கவே முடியாதென்றேன். ஆத்துமாக்கள் வருகின்றதை பாருங்கள். அங்கே உள்ளே ஏதோ காரியம் இருக்கின்றது.அது என்ன அது உன்னுடைய காரியம் அல்ல எனலாம்.
112. , ஆம் அதிலும் கூட ஏதோ காரியம் இருக்கிறது. கிறிஸ்தர்களை தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் வரும்படி செய்வது, தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு ஆணுடைய பெண்ணுடைய வேலையாய் இருக்கிறது. அது உன்னுடைய கடமையாய் இருக்கிறது. அது உன்னுடைய வேலையாய் இருக்கிறது. அது  எல்லாம் சம்பவிக்கும் போது என்ன ஒரு  சந்தோமாயிருக்கிறது. என்ன ஒரு சமாதானம் என்று நீங்கள் பாருங்கள்.
113. இப்பொழுது உன்னுடைய கரத்தை இங்கே வைத்து என்னை இங்கே அடக்கம் பண்ணமாட்டேன்  என்று ஆணையிட்டு கொடு  என்று யாக்கோபு கூறினான். எனவே அவர்கள் அவனை கொண்டு போய் மற்றவர்களோடு அடக்கம் செய்தார்கள்.
114. அதன் பின்பு யோசேப்பு, அது ஒரு விதமாக யாக்கோபிலிருந்து யோசேப்புக்கு வந்தது.  யோசேப்பு எகிப்திலே மரித்தபோது அவன்  அவர்களிடத்தில்  இப்பொழுது இங்கே பாருங்கள், நீங்கள்  என்னை இங்கே அடக்கம் செய்யாதேயுங்கள். ஏனென்றால் எனக்கு தெரியும்  என்றோ ஒரு நாள் இந்த இடத்தை விட்டு நாம்  போகப்போகிறோம். எனவே என்னுடைய எலும்புகளை  பூமிக்கு  வெளியே  வையுங்கள். ஓ என்னே. எனக்கு அதில் விசுவாசம் உண்டென்பதற்காக என்னால் முடிந்த எல்லா சாட்சிகளையும் கூற விரும்புகிறேன். அது உண்மை.  நான் மரித்துபோன  பின்னர்  என்னுடைய எலும்புகளை அங்கே  ஒரு சாட்சியாக வையுங்கள் என்று  கூறினான். என் மீட்பர்  உயிரோடிருக்கிறார் என்று நான்  அறிந்திருக்கிறேன் என்று யோபு கூறினது போன்று அவன் கூறியிருக்கலாம். ஏனென்றால் அந்த  முழு காரியமும் நாடகம் போன்று நடிக்கப்பட்டது. அவன் கண்டான். யோபைப்போன்று அவன் கண்டான்.
115. யோபு அதை ஒரு தரிசனத்தில் கண்டான். ஆபிரகாம்  அதை ஈசாக்கில்  கண்டான்.  ஈசாக்கு யாக்கோபில் கண்டான். யாக்கோபு அதை போராட்டத்தில் கண்டான்.
116. இப்பொழுதே யோசேப்பு அதை அவனுடைய ஜீவியத்தில் கண்டான். அவன் ஒரு வினோதமான பையனாக அதாவது  அவன்  ஒரு ஞானதிருஷ்டிகார பையனாக பிறந்ததை அவன் கண்டான்.  அவனை  குறித்து  அங்கே  ஏதோ காரியம்  இருந்தது. அவனால் தரிசனங்களை காண முடிந்தது.அவனால் அதை புரிந்துக்கொள்ள  முடியவில்லை. அவன் அதை  அப்படியே தன்னுடைய தாயிடமும்   தகப்பனிடமும் கூறினான். அந்த கதிர்  முதலானவைகள் வளைந்து அவனை வணங்கினதாக கூறினபொழுது அவர்கள் அவனை திருத்த முயற்சித்தனர். அவனால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அதற்குபின் அடுத்த காரியம் அவனுடைய சகோதரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டான் என்பதை அவன் கண்டறிந்தான். நான்  இங்கே எதை எடுத்து  காட்டுகிறேன். இங்கே நான் பெற்றுகொள்ளும் முன்னறிவு என்ன என்று கூறினான். தன்னுடைய சொந்த ஜீவியத்தை அவன் கவனித்தான்.
117. எந்த மனிதனும் அவனுடைய சொந்த ஜீவியத்தையும் காரியங்களையும் கவனித்து நீ யார் என்பதை கூற முடியும். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்த்து நீங்கள் உண்மையிலேயே ஒரு  கிறிஸ்தவனா அல்லது இல்லையா என்று பாருங்கள். நீங்கள் செய்யும் காரியங்களை நீங்கள் கூறும் காரியங்களை உங்கள் கூட்டாளிகள் முதலானவர்களை கவிழ்த்து பாருங்கள். நீங்கள் உண்மையாகவே ஏதாவது காரியத்தை உடையவர்களாய் அங்கே இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை கண்டறிவீர்கள்.
118. அதை அப்படியே தொடர்ந்து போக அவனுடைய ஜீவியத்தை அவன் கண்டான்.  உங்களுக்கு தெரியும் அடுத்த காரியம். அவன் ஒரு குழிக்குள்ளாக போடப்பட்டிருந்ததை அவர்கள்  கண்டார்கள்.  சகோதரர்களால் ஏமாற்றப்பட்டு கொன்று போட்டதற்கு   ஒப்பனையாய் அவனை ஒரு குழிக்குள்ளாக போட்டு பின்னர்  மீண்டுமாய் உயரே எடுக்கப்பட்டான். யோசேப்பு அதை  முன்பதாகவே கண்டான். அவன்  தன்னை  சிறையில் இருக்கக் கண்டான். அவன் தன்னை இருட்டரையில் இருக்கக்கண்டான்.  அப்படியிருந்தும் அவன் செய்த எல்லாவற்றிலும் தேவன்  அவனோடிருப்பதை அவன் கண்டான். அவன் செழிப்பின்  குமாரனாய் இருந்தான். உலகம் செழித்தது. யோசேப்பு இருந்த   இடங்களிலெல்லாம் அங்கே செழிப்பு இருந்தது. ஏனென்றால் அவன் செழிப்பின் குமாரனாய் இருந்தான். அவன் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாய் இருந்தான்.
119. கிறிஸ்து எங்கெல்லாம் இருக்கின்றாரோ அங்கெல்லாம் செழிப்பு இருக்கின்றது. கிறிஸ்து பூமிக்கு திரும்பி வரும்பொழுது             இந்நாட்களிலொன்றில் பூமியின் சாபங்களெல்லாம் எடுத்துப்  போடப்படும். பழைய வனாந்திரமானது ஒரு ரோஜாவைப்போன்று  பூ பூக்கும். கடினமான ஸ்தலங்களெல்லாம் மிருதுவாக்கப்படும். அவர் மிகுதியாய் கொண்டு வருவார். ஏனென்றால் அவர் என்ன வாயிருந்தாலும் அவர் செழிப்பின் ராஜகுமாரனாயிருக்கிறார். அல்லேலூயா. செழிப்பின் ராஜகுமாரன்.
120. இந்த காரியத்திலேயே நாம் இப்பொழுதே எப்படியாய், ஒரு மணி நேரம் தரித்திருக்கலாம். ஆனால் இப்பொழுதோ துரிதப்பட  வேண்டியதாயிருக்கிறது. நாம்  துரிப்பட்டாக வேண்டும்.
121. இப்பொழுது யோசேப்பை நோக்கி பாருங்கள். அவன்  செய்த  எல்லா காரியத்தையும் அவன் அறிந்தவனாய் அப்பொழுது அவன்  அதை காண்கிறான். அவனை மறுதலித்த அந்த அவனுடைய  சகோதரர்கள் அவன் யாரென்று அறியாதவர்களாய் முடிவிலே அவனிடத்தில் வந்து பயபக்தியாய் அவன் முன் தலைவணங்கி நிற்கிறதை அவன் காண்கிறான். அவரை சிலுவையில்  அறைந்தவர்களை அது இருந்தது போன்று அவனை குழிக்குள்ளாக போட்டவர்கள் அவனை எகிப்தியரிடத்தில் விற்றுப்போட்டவர்கள் அவனை தகாததாய் நடத்தினவர்கள் அவனுக்கு முன்பாக நின்றனர்.அந்த மகத்தான ராஜகுமாரனுக்கு முன்பாக அவர்கள் நடுநடுங்கினர். அவர்கள் நடுங்கின காரணத்தினால் எங்களுடைய சகோதரனை நாங்கள் கொன்று போட்டோம் என்றனர். அதை  குறித்த எல்லாவற்றையும் எப்படியாய்  அது  ஒரு  முன் நிழலாய்  இருக்க  வேண்டியதாய் இருந்தது.
122. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையின் போது நிகழ்வுகள் அவ்விதமாக இருக்கும் என்பதை யோசேப்பு அறிந்திருந்தான். எனவே அவனுடைய  எலும்புகளை குறித்து குறிப்பிட்டான்.அவன் என்னை இங்கே அடக்கம் பண்ணவேண்டாம்.  ஆனால்  அதே ஆவியின் உணர்வை கொண்டவர்கள் எங்கே  போயிருக் கிறார்களோ அங்கே  ஒரு உயிர்தெழுதல் என்றோ ஒரு நாள் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதற்கு  என்னால்  முடிந்த  எல்லா சாட்சிகளையும் நான் விட்டு போக விரும்புகிறேன் என்று கூறினான்.
123. இன்று காலையில் சபை அந்த விதமாக கூற முடியும்.  மதவெறியர்கள் என்று நம்மை அழைக்க விரும்பினாலும்  உயர்த்தெழுந்த வல்லமையில் நாம் விசுவாசம் வைக்கின்ற  காரணமாயிருந்தாலும், தெய்வீகசுகத்திலும் கிறிஸ்து வாக்களித்த  எல்லா இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களிலும் நாம் விசுவாசம் வைக்கின்றவர்களாய் இருந்தாலும், நாம் படிப்பறியா தவர்கள் அல்லது மத வெறியர்கள் முதலானவற்றின் சார்பை  எடுத்துக்கொள்ள வேண்டியவர்காய் இருக்கிறோம். நம்முடைய  மீட்பர் உயிரோடிருக்கிறார் என்பதை அறிந்தும் அதன்  அத்தாட்சியை  நம்முடைய இருதயங்களிலே கொண்டு வந்து அவர் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார் என்பதை அறிந்திருக்கிற  மட்டில் நாம் என்ன எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது.
124. என்னால் முடிந்த எல்லா சாட்சியையும் சாத்தானுக்கு விரோதமாய் நான் செய்ய வேண்டுமென்று யோசேப்பு கூறினான்.
125. எனவே அவன் அவனுடைய எலும்புகளை வெளியே வைத்தான். அவைகள் அங்கே நானூறு வருடங்கள் கிடந்தன. ஆமென். ஏனென்றால் அது அதற்கும் அப்பால் காணப்பட்டது. என்ன ஒரு மத வெறியர்கள் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். அப்போது அது பார்ப்பதற்கு ஒரு வெறியன்போல் இருந்தது. ஆனால் அது  சத்தியம் என்பதாய் நிரூபிக்கப்பட்டது.ஆமென்.
126. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். என்னவாய் இருந்தாலும் அக்கரை இல்லை. நான் அதை அறிந்திருக்கிறேன் என்ற இக்காலையின் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின் பேசும் பொருளை உடைய ஒவ்வொருவரிடமும் அதே விதமாகவே இருக்கும்.
127. ஓ நாங்கள் இங்கே செழித்து கொண்டிருக்கிறோம்.நாங்கள் இங்கே இருந்தபொழுது முழு எகிப்தும் செழித்தது.இந்த காரியங்களெல்லாம் அவர்கள் கூறுகிறார்கள்.
128. ஆனால் அது ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ண வில்லை. உலகம் நிச்சயமாய் இருப்பது போன்றே அவர்கள் அங்கிருந்து  வெளியே போகிறார்கள் என்பது அவ்வளவு நிச்சயமாக  இருந்தது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இப்பொழுது  என்னுடைய எலும்புகளை இங்கே மேலே கொண்டு வந்து வாக்குத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இங்கே அடக்கம் பண்ணுங்கள். எகிப்திலிருந்து  வெளியே கொண்டு வந்து கானான் தேசத்துக்குள் அடக்கம  பண்ணுங்கள் என்று அவன் கூறினான். மோசே உள்ளே வந்தான். அவன் இன்னொரு ஆவியின் ஏவுதல்  பெற்ற தீர்க்கதரிசி. அவன் யோசேப்பினுடைய எலும்புகளை  எல்லாம் கொண்டு  சென்றான். அவைகளை கொண்டு  போய்  மற்ற  யாவரும்  அடக்கம் பண்ணியிருந்தான். அதே  ஸ்தலத்தில்  அதே  நிலத்தில் அவைகளை அடக்கம் பண்ணினான். மற்றவர்ளோடு கூட  அவனுடைய வழியை அவன் எடுத்து கொண்டான். ஏன்  அவனுக்குள்ளாக ஏதோ காரியம் இருந்தது. ஏதோ காரியம்  அவனுக்குள்  இருந்தது. கவலை இல்லை.
129. அங்கே இருந்ததான மற்ற ஜனங்கள் அதை குறித்து கூறினதாக நீங்கள் கேள்விபடவில்லை. நல்லது, எங்கே இருந்தாலும் அது பரவாயில்லை. எங்கே கூடுமோ அங்கே அவர்கள் விழுவார்கள்.
130. ஆனால் அங்கே அவனுக்குள்ளாக யோபுக்கு உண்டான அதே தரிசனம் மற்றவர்கள் உடையதாயிருந்த அதே தரிசனம் போன்றதான ஏதோ காரியம் இருந்தது. மிஞ்சியுள்ள உலகம் என்ன கருதினாலும் கவலை இல்லை. என்ன செய்தாலும் கவலை இல்லை. அதற்கு  யோசேப்போடு ஏதும் செய்வதற்கில்லை.அதற்கு ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் அவர்கள்  மற்ற எவர்களுக்கும் ஏதும் செய்வதற்கில்லை. ஏதோ காரியம் அவர்களை வாக்களித்த தேசத்திற்கு அடித்துக்கொண்டு சென்றது. மத வெறியர்கள் போல் காணப்பட்டது. ஆனால் அது அவர்களுக்கு தேவையாய் இருந்தது. ஏனென்றால் அவர்களுக்குள்ளே  ஏதோ  காரியம்  இருந்தது.ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது.
131. இன்றைக்கும் அது அந்தவிதமாகதான் ஒவ்வொரு விசுவாசியிடமும் இருக்கிறது. அவர்களுக்குள்ளாக ஏதோ காரியம்  இருக்கிறது. அது அதற்குள்ளாக அழுத்துகின்றது. கவலையில்லை,  நீங்கள் அதை இதை  மற்றதை முயற்சிக்கலாம். ஆனால்  அங்கே ஏதோ காரியம் அழுத்துகின்றது. ஒரு சந்தேக நிழலுக்கப்பால்  அங்கே ஒரு பட்டணம் இருக்கிறது.தேவன் தாமே அதை கட்டி உண்டாக்கினவர் என்று உங்களுக்கு தெரியும். அங்கே ஏதோ  இருக்கிறதென்று உங்களுக்கு தெரியும். எனவே நீங்கள் அதற்கு முன்னேறுகிறீர்கள்.
132. இப்பொழுது அவர்கள் அவனை அந்த எலும்புகளை எல்லாம் அங்கே அடக்கம் பண்ணினார்கள். நூற்றுகணக்கான வருடங்கள் கடந்தன.
133. முடிவிலே ஒரு நாள் நமக்கு ஒரு பாலகன் பிறந் தார். நமக்கு  ஒரு  குமாரன்  கொடுக்கப்பட்டார். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர், வல்லமையுள்ள தேவன், சமாதான பிரபு,  நித்தியபிதா எனப்படும்.. அவர் பூமிக்கு வந்தார். அவர் தரம்  குறைந்தவராகவும் ஏழையாகவும் மாட்டு கொட்டிலின் வழியாக வந்தார்.
134. ஆனால் அவருக்குள் ஏதோ காரியம் அதை அறிந்திருந்தது. வேதத்திலிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசனத்தோடு அவர் அங்கே நின்றார். அவர் இந்த சரீரத்தை நீங்கள் அழித்து போடுங்கள். மூன்று நாளுக்குள்ளே நான் அதை திரும்ப எழுப்புவேன் என்று கூறினார்.
135. அதை சொல்லக்கூடிய ஒரே மனிதன் அவர் தான். அப்படி ஒரு சொற்றொடறை கூறக்கூடியவர் அல்லது இனி அதை கூறக் கூடியவரும் அவர் தான். என்னுடைய சரீரத்தை கீழே கிடத்த எனக்கு அதிகாரமுண்டு. அதை மீண்டுமாய் எடுக்கவும் எனக்கு  அதிகாரமுண்டு.  அது உண்மை. அவர் தாமே இம்மானுவேல்.
136. பின்னர் மரித்தபோது அவர் மரணத்தின் நாளன்று அவரை சிலுவையிலிருந்து கீழே இறக்கி அவரை கல்லரையில் வைத்தார்கள்.  அங்கே  வெள்ளி பிற்பகல்  தோன்றி ஞாயிறு காலை மட்டுமாய் கிடத்தப்பட்டிருந்தார். அந்த அற்புதமான ஈஸ்டர்  காலையில் அவர் உயிர்த்தெழுந்தார். அங்கே அக்கரையிலுள்ள  நரகத்தின் சிறைகளிலிருந்து அவருடைய ஆத்துமா அவிழ்த்து  விடப்பட்டது. அவர் ஒரு பாவியாக உனக்காகவும்  எனக்காகவும்  நம்முடைய பாவங்களை சுமந்து கொண்டு  நமக்கு  ஒரு  பரிபூரண  நிச்சயத்தை   கொடுக்கும்படி அங்கே சென்றார்.
137. அவர் அதை செய்த காரணத்தினால் அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குள் தள்ளப்பட்டது. ஏனென்றால் அவர் தள்ளப்பட்ட வராயிருந்தார்.  அவர் பழைய  ஏற்பாடின் போக்காடாய் இருந்தார்.  அதன் மேல் அவர்கள்  ஜனங்களின் பாவத்தை சுமத்தி அதை  வனாந்திரத்தில் கொண்டு போய் மரிக்கும்படியாய் விட்டு விடுவார்கள். இயேசு  தாமே அந்த போக்காடாய் இருந்தார். அவர்  ஜனங்களின் பாவங்களை தம்மேல் உடையவராய்  இருந்தார். அவர்  தள்ளப்பட்டு சித்திரவதையை அனுபவிக்கும்படி பாதாளத்துக்கு  சென்றார். நம்முடைய உயிர்த்தெழுதலின் கிரயத்தை  செலுத்தும் படியாக  அவருடைய  சரீரம் கல்லரைக்கு சென்றது. ஓ என்னே.
138. பின்னர் ஈஸ்டர் காலையின் போது அவர் பாதாளத்திலிருந்து அவர் மேலே வந்த போது அங்கே மரணத்தின் உபாதையாலும், பாதாளத்தினாலும் அவரை வைத்துக்கொள்ள கூடாமற்போயிற்று. அவர் ஈஸ்டர் காலையில் மீண்டுமாய் உயிர்த்து  வந்தபோது  அவர்  எழும்பினது மட்டுமல்லாமல், ஆனால் அதேவிதமாக யோபும், யாக்கோபும், ஆபிரகாமும்,ஈசாக்கும்  வந்தனர். மற்ற  யாவரும் கூட உயிர்த்தெழுதலில் வந்தார்கள். மத்தேயு 27-ல் சுற்றிலுமாக  வீதிகளிலும் அநேகருக்கு காணப்பட்டார்கள்.  அது அவர்களுடைய சாட்சியின் முத்திரையாக  நடந்தது. ஏனென்றால் அவர்களுக்குள் ஏதோ காரியம் இருந்து என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன் என்று கூறினர். ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் அறிந்திருந்தர்கள்.
139. வர இருக்கின்ற நாட்களில் வேதசாஸ்திரிகள் இந்த வேதாகமத்தை பற்றி கொள்வார்கள் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். சாமார்த்தியமான  மனிதர்கள்  அதை பற்றி கொண்டு அவர்களுடைய  சொந்த  வழிபாட்டை அதற்கு கொடுத்து  ஓ இதனுடைய அர்த்தம் இப்படியல்ல. இதனுடைய அர்த்தம்  அப்படியல்ல என்று அவர்கள் கூறுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
140. எனவே அதை நிச்சயப்படுத்திக் கொள்ள அதாவது வர இருக்கின்ற காலங்களிலுள்ள அவருடைய மகத்தான திட்டங்கள் நிறைவேறும். இப்பொழுது ஆராதனையை முடிக்கயிலே கூர்ந்து  கவனியுங்கள். வருகின்ற காலங்களில் அவருடைய திட்டம்  நிறைவேறும் என்பதற்கு தேவன் அதற்கு ஒரு நிச்சயமான சாட்சியை கொடுத்தார்.
141. நாம் அதை வாசித்து நான் அதை விசுவாசிக்கிறேன் என்று கூறலாம். அதுவோ மனோ சக்தியாய் இருக்கிறது. அதுவோ அறிவு சக்தியினால் ஆன விசுவாசமாயிருக்கிறது. அது மனோ சக்தியினாலான வேத சாஸ்திரமாய் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அப்பாற் பட்டதாய் ஏதோ காரியம் இருக்கிறது.அது உண்மை.
142. அவர் பாதாளத்திலிருந்து எழும்பி வந்தது மட்டுமல்ல.அவர் உலகத்திற்கு ஏறி பரிசுத்த ஆவியை திருப்பி அனுப்பினார். அவர் உலகத்திற்கு ஏறி மனுர்களுக்கு வரங்களை அளித்தார். சிறை பட்டவர்களை சிறையாக்கி மனுர்களுக்கு வரங்களை அளித்தார்.
143. இந்த வேதாகமத்தை வேத சாஸ்திரிகள் கையாண்ட பிறகு, சபை ஸ்தாபனங்கள் அமைத்த பிறகு இன்றைக்கு அவர்கள் கூறுகிறார்கள் இது தான் நமக்கு தேவையானது. சில ஜனங்கள் சபைக்கு கீழாக அடக்கம் பண்ணப்பட்டார்கள். அவர்களில் சிலர்  பரிசுத்தவான்கள். நாம் அவர்களுடைய எலும்புகளை தோண்டி  எடுத்து இங்கே கொண்டு  வருவோமென்று.அவர்களில் சிலர் அந்த  கல்லரையின் மேல் ஒரு சபையை கட்டுவோம்.  அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் அல்லது அவரை அடக்கம்  பண்ணப்பட்ட இடத்தில் அதன் மேல் நாம்  ஒரு  சபையை  கட்டுவோம்  என்று  கூறினர். ஜனங்கள் பொருட்களை  கொண்டு  பொருள்  சம்பந்தமாக காரியங்களை செய்ய  முயற்சிக் கிறார்கள். ஆனால் அதுவோ  அவ்வளவு தேவையற்றதாக  இருக்கிறது.  அதற்கு ஒரு  காரியமும் இல்லை. அது எல்லாம் அர்த்தமற்றதாய்  இருக்கிறது. அதற்கு ஒன்றுமே இல்லை.
144. ஆனால் அவரோடுகூட மரித்து மறுபடியுமாய் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்மையான உயிர்த்தெழுதலாய் அது ருக்கிறது. அவர்கள் அப்படியாய் அறிந்திருக்கிறேன் என்ற விசுவாசம்   கொண்டவர்களாய் இருக்கிறார்கள். என் மீட்பர் உயிரோடிருக்கிறார்  என்று அறிந்திருக்கிறேன். தேவன் அந்த ஜனங்களோடு அடையாளங்களோடும், அற்புதங்களோடும் கிரியை செய்கிறார். இந்த மகத்தான கட்டளையானது ஏன் மரித்தோரிலிருந்து  எழுந்தார் என்பதை காட்டுகிறது. காணக்கூடிய அடையாளங் களையும், அற்புதங்களையும் காட்டுகிறது.
145. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா?.
146. இப்பொழுது நாம் வேகமாய் வீட்டுக்கு திரும்புவோம் நீங்கள் காலை ஆகாரம் புசித்துவிட்டு மீண்டுமாய் 9 மணிக்குவாருங்கள்.  நாங்கள் பையன்களை வெளியே அனுப்பி ஜெபஅட்டைகளை 9 மணிக்கு கொடுக்க போகின்றோம்.
147. நான் திரும்பி வரும் வரைக்கும் இன்று காலை செய்தியிலுள்ள கடைசி வார்த்தை மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்தவரான அதே கர்த்தராகிய இயேசு இன்றைக்கு ஜீவனோடு இருக்கிறார்.  அவர் வாக்களித்தபடியாய் அதே காரியங்களை செய்யக்கூடியவராக  இருக்கிறார். இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களை  நான்  மீண்டும் வரும் வரைக்குமாய் பின் தொடரும். நீங்கள் புறம்பாக்கப் பட்டாலும் மத வெறியர்கள் என் நீங்கள் அழைக்கப்பட்டாலும், இருந்தாலும் அவருடைய எல்லா வல்லமையோடும்  அவர்  இங்கே இருக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஜீவிக்குமட்டாய் அதை ஒரு போதும் மறவாதபடியாய் தேவன் உங்களுக்குள் இன்றைக்கு ஈஸ்டரை தரும்படியாய் நான் ஜெபிக்கிறேன்.
148. இப்பொழுது நீங்கள் சொல்லலாம், நீர் என்ன ஆலயங்களுக்கு போகின்ற ஜனங்கள் பெரிய சிலுவைகளுக்கு எதிராக இருக்கின்றீர்களா? என்று. இல்லை ஐயா என் சகோதரனே.அந்த காரியங்கள் அவைகள் இருக்கின்றபடி நன்மையாய் இருக்கலாம்.  அந்த  பெரிய  ஆலயங்களை குறித்து  நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்.
149. நீங்கள் சொல்லாம். ஓ  நிச்சயமாக கர்த்தர் நமக்கு ஒரு  பெரிய இடத்தை  கொடுப்பாரானால் நான் அதை பாராட்டுவேனென்று.
150. ஆனால் அதை ஆராய்ந்து பார்த்ததில் என்னுடைய கணிப்பு இது தான். ஒரு மகத்தான  பிரயாணிகள் செல்லும் இரயில் வண்டி  அழகான இருக்கைகளோடும் அலங்காரமாய் மெருகேற்றப்பட்ட, மேல் மட்டத்தில் ஒரு பெரிய ஊதலோடும்,இழுக்க நீராவி சக்தி இல்லாமல் இயந்திர சக்தியை உள்ளடக்கி உள்ளவைகளை  உண்டு பண்ணுகின்ற  இங்கே உள்ள உருக்காலைகளுக்கும், தொழிற்சாலை களுக்கும் போக நீங்கள் எப்பொழுதாவது நினைத்ததுண்டா. புரிகின்றதா. அது ஒரு சிறு நன்மையும் செய்யாது. அதை உடையாதாய் இருப்பதை காட்டிலும் சற்று நீராவியை  கொண்டுள்ள ஒரு கை வாகனத்தையே நான் விரும்புவேன்.  நீங்கள் விரும்பமாட்டீர்களா. ஏனென்றால் நீங்கள் எங்கேயோ போகப்  போகிறீர்கள். அது  உண்மை.எனவே இப்பொழுது வெறுமனே அந்த உண்மையான உயிர்த்தெழுதல் ஒரு உண்மையான காரியம்.  அதை நினைவில் வையுங்கள்.
151. நீங்கள் சொல்லலாம் அந்த காரியம் தன்னில்தானே அங்கே அக்கரையில் ஓடுமென்று. அது எப்படி ஓடும். அதை எனக்கு நிரூபியுங்கள்.
152. நாம் அதை தான் செய்தோம். நாம் இருந்தவைகளை ஆடம்பரமாக்கினோம். நாம் ஊதலுக்கு மெருகேற்றினோம். மகத்தான வேத சாஸ்திரத்தோடு போதிக்கும்படியும், மகத்தான பெரிய வார்த்தைகளை உபயோகிக்கவும் நாம் பண்டிதர்களை மெருகேற்றினோம். அடுத்த நாள்  காலையில் மகத்தான பெருத்த  வார்த்தைகளை பிரசங்கத்தில் கொண்டுவர அவர்கள் இரவெல்லாம் அர்த்த அகராதியை ஆராய்கிறார்கள். ஆனால் சகோதரனே எல்லாம் எனக்கு அர்த்தமற்றதாய் இருக்கிறது.
153. எனக்கு கிறிஸ்துவை கொடுங்கள். எனக்கு உயிர்த்தெழுதலை  கொடுங்கள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் என்ற அத்தாட்சியை என் இருதயத்தில் எனக்கு கொடுங்கள். அது காரியத்தை எனக்கு தீர்க்கிறது. ஆமென்.
154. பண்டைய பவுலோடு சேர்ந்து நான் கூறும்படியாய் எனக்கு எதாவது காரியத்தை கொடுங்கள். அந்த மகத்தான இருட்டறை ஒரு அழிந்து போகுபவனாய் எனக்கு முன்பாக உட்கார்ந்து  கொண்டிருக்கிறது. நான் இனி ஒரு குழந்தை அல்ல என்பதை  என்னுடைய இருதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும்  அறிந்திருக்கிறேன். மரணம் என்று அழைக்கப்படுகிற அந்த  மகத்தான அந்த இருண்ட அறையை நோக்கி நான் போய்   கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அப்படியாய் இருக்கிறது. ஒரு நாள்  அது அதனுடைய கடைசி துடிப்பை எடுக்க போகிறது ஒவ்வொரு அழிவுள்ளவர்களோடும் நான் அந்த மரணமாகிய  அந்த அறைக்குள்ளாக பிரவேசித்து தான் ஆக வேண்டும்.
155. ஆனால் அந்த மகத்தான அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து அவன் கூறினது போன்று அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று நானும் கூற விரும்புகிறேன். அதாவது மரித்தோர் மத்தியிலிருந்து அவர் அழைக்கும் போது நான்  அவரோடு  கூட  அந்த நேரத்தில் வெளியே வருவேன்.அது தான் எனக்கு  வேண்டும். அன்று காலையில் அவரை அறிந்திருக்க வேண்டும். அதற்காக  தான் நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.   அவருடைய  உயிர்த்தெழுதலின் வல்லமையில்  நிச்சயமாய்  நான்  அறிந்திருக்கிறேன். அதாவது என் மீட்பர் உயிரோடிருக்கிறார்  என்று நான் அறிந்திருக்கிறேன்.
156. ஒரு சமயம் இந்த குருடாய் இருந்த இந்த குருடான         கண்கள் திறக்கப்பட்டது.  இந்த சிறிய நலிந்த பழைய சரீரம் சுமார்  ஒரு 150 பவுண்ட் எடையுள்ளது. இங்கே சுற்றி தள்ளாடிக் கொண்டிருந்தது.  அதன் மேல்  மாம்சம் வந்துவிட்டது. ஒரு சமயம்  பாவத்தோடு கருத்திருந்ததான இந்த இருதயம் வெண்மையாக் கப்பட்டது. உலகத்தின் காரியங்களை நேசிக்கிற இந்த  வாஞ்சைகள் 22 வருடங்களுக்கு முன்பாக மரித்து இப்பொழுது மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டது.
157. நான் நோக்கி பார்க்கும் இந்த அழிவுள்ள இந்த கண்கள் தேவனுடைய கிருபையாலே முடவர் நடக்கிறதையும்,குருடர்  காண்கிறதையும் ஓ மகத்தான அடையாளங்களையும், அற்புதங் களையும்  தேவனுடைய வல்லமைகளையும் காணுவதற்கு நான் சிலாக்கியம் பெற்றவனாய் இருக்கிறேன். என் மீட்பர்  உயிரோடிருக் கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். எந்த ஒரு  சந்தேகத்திற்கும் அப்பால் நான் அதை அறிந்திருக்கிறேன். நான் அதை  அறிந்திருக்கிறேன். நான் அதை அறிந்திருக்கிறேன்.  நான் அதை அறிந்திருக்கிறேன். என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.ஆமென். தொடர்ந்து எல்லா நேரத்திலும் ஜீவித்து கொண்டிருக்கிறார்.  என் உள்ளந்திரியங்கள் எனக்குள்  சோர்ந்து போனாலும், என் நாட்கள் என் உதடுகளோடு ஒட்டிக்கொண்டாலும், தோல்  கிருமிகளால்  என் சரீரம் தின்று போடப்பட்டாலும் ஒரு சமாதி கூண்டு எழுப்பப்பட்டாலும், இருந்தாலும்  என் மீட்பர்  உயிரோடிருக்கிறார்  என்று  நான் அறிந்திருக்கிறேன். ஆமென். ஜெபம் செய்வோமாக.
158. பரலோக பிதாவே இந்த உயிர்த்தெழுதலுக்காக இன்று  காலையில்  நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ தேவனே, ஒரு சமயத்தில் நான் பாவியாக பாவ சங்கிலியினால்  கட்டப்பட்டவனாய் இருந்தேன். ஒரு  சமயம் சூழ்நிலைகளினால்  சிறைச்சாலையிலும், இறுமாப்பாய் பிசாசு பயம் கொண்டவனாய் மரணத்திற்கு பயந்தவனாய், உம்மை சந்திக்க பயந்தவனாய் இருந்தேன். ஆனால் ஒரு மகிமையான நாளன்று அதிலிருந்து  ஒரு உயித்தெழுதல் வந்தது. கிறிஸ்து உள்ளத்தில் இருந்தார். இன்றைக்கோ மகத்தான்  நிச்சயம்  நமக்கு இருக்கிறது.  இன்றைக்கு அவர் பிரதானமானவராய் நமக்குள் ஜீவிக்கிறார். அதற்காக  நாங்கள் உமக்கு நன்றியை தெரிவித்து கொள்ளுகிறோம்.
159. பிதாவே இப்பொழுது கூடி வந்திருக்கிற இக்கூட்டத்தாரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள்  ஒவ்வொருவர் மீதும் பரிசுத்த ஆவியானவர் தங்கி இருப்பாராக. இந்த கூட்டம்  முழுவதுமாய்  நீர்  எங்களோடு  இரும்  கர்த்தாவே. இந்த காலையில் பரிசுத்தாவியானவர் எங்கள் மத்தியில் வந்து, இந்த கட்டடத்திற்குள் வியாதியாயிருக்கின்ற ஒவ்வொருவரையும்  சுகப்படுத்துவாராக. இதை அளியும் கர்த்தாவே. ஜனங்கள் இங்கிருந்து திரும்பி போகும்போது இந்த ஈஸ்டரை என்றென் றைக்கும் நினைவு கூறும்படியாய் செய்யும். இதை அளியும்  கர்த்தாவே. ஈஸ்டர் காலை அந்த  கல்லை  புரட்டி தள்ளின  அந்த மகத்தான தூதர்கள்,அந்த மகத்தான  வல்லமைகள்  இன்று  இங்கே அவர்கள் பிரசங்கமாய் இருந்து ஒவ்வொரு சந்தேகத்தின்  கல்லையும் எல்லா பயத்தையும் முரணான யாவற்றையும் புரட்டி தள்ளுவாராக.ஜனங்களுடைய இருதயத்திலிருந்து அவைகளை எடுத்துப்போடுவாராக. இதை அளியும் கர்த்தாவே. பரிசுத்த  ஆவியானவர் தாமே மகத்தான வல்லமையோடு கீழே இறங்கி வந்து ஒவ்வொருவரோடும் தொடர்பு கொள்வாராக. இதை அளியும் .இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
160. நாம் எழுந்து நிற்போம்.
                                        (பாட்டு)
161. நீங்கள் அவரை நேசிக்கிறதில்லையா. நாம் அந்த சிறிய  பாடலை பாடுகிறோம். ஏனென்றால் பரிசுத்தாவின் சுவிசேம்  இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது என்று நாம்  விசுவாசிக்கிறதினால். அது உபத்திரவத்தின் ஒரு வழியாய்  இருக்கிறது. தவராக புரிந்து கொள்வதின் ஒரு வழியாய் அது  இருக்கிறது. அது  உண்மை. உலகமோ அதை அறியாதிருக்கிறது.  உலகம் அதை ஒரு போதும் அதை அறிந்ததில்லை. உலகம்  உங்களை பகைக்கும். திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்.அவர்கள் அதை புரிந்து கொள்ளுகிறதில்லை. சிலுவையின் உபதேசம் கெட்டுபோகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது. ஆனால் அங்கே விசுவாசியின் இருதயத்தின் அடியில் ஏதோ காரியம் இருந்து கொண்டு என் மீட்பர்  உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்,எந்த ஒரு சந்தேகமுமின்றி அதை நான் அறிந்திருக்கிறேன் என கூறுகிறது.
162. எல்லாரும் நன்மையாய் உணருகிறீர்களா. ஆமென் என்று  கூறுங்கள். உங்கள் அருகில் நின்று கொண்டிருக்கின்ற           யாரிடத்திலாவது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்  என்று கூறுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது அருமையாய் இருக்கின்றது. அது அருமையாய் இருக்கின்றது.
163. இன்று காலையில் உங்கள் ஸ்தானத்தை கிறிஸ்துவோடு வைத்துக் கொள்ளுங்கள். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக் கிறார். கர்த்தருடைய அசட்டை செய்யப்பட்ட ஒரு சிலரோடு உங்கள் வழியை தெரிந்து கொள்ளுங்கள். சரி, இப்பொழுது நாம் ஒரு நிமிம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
164. மீண்டுமாக ஒரு சில நிமிடங்கள் ஆராதனையை நினைவில் வையுங்கள். நாம் மீண்டுமாய் ஜெப அட்டைகளை வெளியே  கொடுப்போம். 10-மணிக்கு கர்த்தருக்கு சித்தமானால் முன்னேற் பாடுகள் துவங்கும். சரியாக அந்த நேரத்தில் பிரசங்கம்  துவங்கும். சுமார் 10 மணியளவில்  என்று  நான் நினைக்கின்றேன். ஜெப அட்டைகளை பெற்று கொள்ளும்படி நீங்கள் காலை இங்கு  சீக்கிரமாக 9 மணிக்கு  வாருங்கள். இன்று  காலையில்  9 மணிக்கு  பையன்கள் இங்கே ஜெப அட்டைகளை கொடுத்து கொண்டிருப்பார்கள்.
165. சரி இப்பொழுது வீட்டிற்கு துரிதப்படுங்கள். நீங்கள் சாப்பிட வேண்டியதாய்  இருந்தால் போய் கொண்டே இருங்கள்.இல்லை  என்றால் காலை ஆகாரம் இல்லாமல் திரும்பி வாருங்கள்.என்னே  எப்படி இருந்தாலும் நாம் அதிகமாய் சாப்பிடுகிறோம். அப்படியானால் உபவாசமாய் சந்தோமாய் திரும்பி வாருங்கள். உங்களுடைய  இருதயம் சரியாய் இருக்க விடுங்கள்.
166. அதை உங்கள் சிந்தையில் இருக்க விடுங்கள். என் மீட்பர்  உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். அவர்  உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். சந்தோஷ  மணிகள் என் இருதயத்தில் ஒலித்து கொண்டிருக்கின்றன.  அவர்கள் எழுந்திருந்த  காரணத்தினால் நானும்  கூட எழும்புவேன். ஏனென்றால் நான் ஆயத்தமாய் தற்காலிகமாக அவரோடு இப்பொழுது ஸ்தானத்துடன் எழுப்பப்பட்டிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவோடு  உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
167. இந்த கட்டடத்தில் உள்ள எல்லா இடத்திலும் உள்ள யாவருமாய் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. போதகர்களில் ஒருவரான சகோ. பீலர்.
168. சகோ.டாம் மெரிடித் அவர்களையும் நான் பின்னாக பார்த்தேன்.ஆராதனையில் அவரை பிற்பாடு உபயோகித்துக் கொள்வோம்.
169. சகோ.பீலர் இப்பொழுது எல்லாருடைய தலைகளும் வணங்கியவாறு இருக்கையில் அவர் முன்னதாக வந்து ஜெபம் செய்து நம்மை அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்வோம். சரி சகோ. பீலர் உமக்கு விருப்பமானால் வாரும்.
அட்டவணை:-
  1.    ஜெபவரிசை
  2.    என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
அடுத்த வெளியீடுகள்:-
  1.    ஐக்கியம்
  2.    தனிப்பட்ட பேட்டி
  3.    திடீரென்று இரகசியமாக சபை மறைந்து போதல்
  4.    ஆவியை பகுத்தறிதல்

நம்முடைய தீர்க்கதரிசி. வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்கள் மூலம் தேவன் அளித்த செய்திகள் ஒலிநாடா வடிவில் இதுவரையில் பெறாமலிருந்தால் தயை கூர்ந்து எங்களிடம் காணிக்கையின்றி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கிடைக்கும் மொழிகள், தமிழ், ஆங்கிலம். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகள்.
தொடர்புக்கு; - 9884595250, 9791163520.

1 comment: