மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Tuesday, August 9, 2011

ஜெபவரிசை

ஜெபவரிசை

நவம்பர் 27 1953


1. உங்களுக்கு நன்றி.  மாலை  வணக்கம்  நண்பர்களே நீங்கள் விரும்பினால் உட்காரலாம். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்)
2. ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்னர் 1946 மே 7ல் இந்தியானாவிலுள்ள கிரீன்ஸ் மில் அருகே நான் இருந்த அறையில் ஒரு தூதன் வந்தார். ஒரு மனிதர் நடந்து கொண்டிருந்தார். அவர் செட்டைகளை கொண்டிருக்கவில்லை. அவர் அப்படியே ஒரு பெரிய மனிதனாக இருந்தார். ஒரு வெண் வஸ்திரத்தை தன்னுடைய பாதம் வரை கொண்டிருந்தார். மேலும் வியாதியுள்ள ஜனங்களுக்கு ஜெபிக்கும்படி நான் பிறந்தேன் என்று அவர் கூறினார். நான் கல்வி அறிவு இல்லாதவன். எழுத படிக்க தெரியாதவன் என்றும், நான் செல்ல இயலாது என்றும் நான் அவரிடம் கூறினேன். நான் இராஜாக்களுக்காகவும், பேரரசர்களுக்காகவும் ஜெபித்து கொண்டிருந்தேனென்றும், உலகத்தை சுற்றிலும் செய்தி பரப்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை சமீபமாய் கொண்டுவரும் ஒரு செய்தி. நான் அதை செய்ய இயலாதென்று அவரிடம் கூறினேன். என்னுடைய கரங்களை ஜனங்களின் மீது வைக்கும்படியும் கோளாறு என்னவென்று அது கூறும் என்றும் அவர் என்னிடம் கூறினார். நீ உத்தமமாய் இருந்தால் அவ்விதமாக சம்பவிக்கும். அப்பொழுது அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை கூட அறிந்து கொள்வாய் என்றார். இதன் மூலம் அவர்கள் விசுவாசிப்பார்கள் என்றார்.
3. நான் நல்லது அதை குறித்து தான் நான் ஜெபித்து கொண்டிருந்தேன். நான் அதை புரிந்து கொள்ளவில்லை என்றேன். பிலிப்பு வந்து ஜெபவரிசையை அடைவதற்கு முன்னமே பிலிப்பு என்ன செய்தார் என்று இயேசு அறிந்து கொள்வதை பற்றிய வேத வசனத்தை அவர் குறிப்பிட்டார். இயேசு அவனிடம் கூறினார். நீ ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு விசுவாசி என்று கூறினார்.
4. நான் ஒரு விசுவாசி என்றும், கபடற்ற ஒரு மனிதன் என்றும் நீர் எப்படி அறிவீர் என்றான்.
5. அவர் பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே உன்னை அறிவேன் என்றார்.
6. அதற்கு பிலிப்பு நீர் தேவனுடைய குமாரன் என்றான்.
7. அதை செய்யும்படி அவர் என்னை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?  நீஙகள் செய்வீர்களா?  உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் செய்வீர்களா? அப்பொழுது நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும். ஏனெனில், எதற்காக உங்களுக்கு உதவுகிறேன்.?  இயேசுவை விசுவாசிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்கிறேன். ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்து, பிறகு உத்தமமாக இருந்து நீ ஜெபிக்கும்போது, உன்னுடைய ஜெபத்திற்கு முன்னால் எதுவும் நிற்கபோவதில்லை என்றார். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?  இப்பொழுது இந்த வழியே பாருங்கள். அங்கே அது உள்ளது.
8. இப்பொழுது கூட்டத்தினரே இங்கே அவர் இருக்கிறார். அந்த படத்தை பார்த்திருக்கிற நீஙகள் நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் சந்திக்கும்போது அந்த தூதனானவர், நான் சரியாக இப்பொழுது நின்றுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடியில் நின்று கொண்டிருக்கிறார் என்று. அது சரியே.
9. இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த அறையிலுள்ள ஒவ்வொரு ஆவியின் மீதாகவும் சட்டபடியான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுகிறேன். தம்முடைய குமாரனை மேலே எழுப்பின சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும்படி தம்முடைய ஆவியை திரும்ப தம்முடைய தீர்க்கதரிசிக்குள் அனுப்புவாராக. இன்றிரவு அது வெளிபடுத்தப்பட்டதை அவர் காண்பாராக.
10. ஸ்திரீயானவள் என்னிடமிருந்து அப்பால் போய் கொண்டிருப்பதாக காணப்படுகிறாள். அவள் பெற்றுக் கொண்டாள். இல்லை அவள் இருக்கிறாள். அவள் ஒரு மருத்துவமனை அல்லது ஒரு  மருத்துவரின் அலுவலகம் அல்லது ஒரு மருத்துவரின் அறை அல்லது ஏதோ ஒன்றினுள் இருக்கிறாள். அவள் பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள். மேலும் அவர்கள் அவளுடைய பக்கவாட்டில் அழுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது அவளுடைய இடது புறத்தில். மேலும் அங்கே ஒரு நடுத்தர வயது மனிதர் இருக்கிறார். மேலும் அது ஒரு கட்டியாக இருக்கிறது. அது ஸ்திரீயின் இடது புறத்தில் உள்ளது. அங்கே இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்கள். மேலும் அது அறுவை சிகிச்சை பண்ண வேண்டியதாய் உள்ளது என்று ஒருவர் கூறுகிறார். இன்னொருவர் அது இயலாது என்று கூறுகிறார். உண்மையா? அந்த விளக்கம் மிக சரியாக இருந்ததா? ஏதோ ஒன்று அசைந்து கொண்டிருப்பதை நான் அப்படியே பார்க்கிறேன். நீர் முன்னர் ஒரு விசேஷித்த கூட்டத்தில் ஜெபித்திருக்கிறாய். ஒரு சுவிசேகூட்டம். நல்ல கருநிறமான முடியுடனிருந்த ஒரு மனிதர் அங்கே இருக்கிறார். மெலிந்த சரீரத்தோடு. அது நானாக இருந்தேன். நான் உனக்காக ஜெபித்தேன். நீ மூளையில் கட்டியை கொண்டிருந்தாய். மேலும் நீ சுகமானாய். உன்னை சுற்றிலும் ஒரு ஒளி வெளிச்சத்தை காண்கிறேன். மூளையில் கட்டியுடன் இருந்த நீ சுகமானாய். மேலும் நீ இந்த பட்டினத்திலிருந்து வரவில்லை. நீ இல்லினாய்ஸ் பட்டணத்திலிருந்து வந்திருக்கிறாய். அது சரியா?  சில மாதிரியான பனை மரங்கள் அல்லது ஒரு மகத்தான பெரிய சமுத்திரம்…. சுற்றிலும் ஒரு ஏரி அல்லது அதை போன்ற மற்ற ஏதோ ஒன்று இருந்த இடத்தில் உனக்காக ஜெபிக்கப்பட்டது. நீ சுகமான இடத்தை சுற்றிலும் பனை மரங்கள் அது சரியா? இங்கே வாருங்கள்.
11. யெகோவா, அந்த யெகோவா ரஃப்பா ஒரு வெண்கல சர்ப்பம் மீது தோன்றி, சிலுவை மீது தோன்றி, இப்பொழுது இந்த கடைசி நாட்களில் வியாதியையும், பாவத்தையும் அப்பால் எடுத்து செல்லும்படி மனிதனாய் தோன்றிய சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், இந்த ஸ்திரீயை கட்டி வைத்திருக்கிற சாத்தானை நான் கடிந்து கொள்ளுகிறேன். அது அவளை விட்டு வெளியே வருவதாக. மேலும் அவள் வெளியே சென்று இயல்பாக இருப்பாளாக. தேவனுடைய மகிமைக்காக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதை கேட்கிறேன். ஆமேன்.
12. நீ சுகமடைய போகிறாயென்று நீ விசுவாசிக்கிறாயா? பார், இப்பொழுது நீ அவருடன் நெருங்கி நடக்கும்படி நான் விரும்புகிறேன். எப்படியாயினும் சமீபகாலமாக நீ அதை செய்யும்படி முயற்சித்து கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய எல்லா ஜீவியத்தினூடாகவும் மேடு  பள்ளங்களை  கொண்டிருக்கிறாய். உனக்கு  பின்னால் ஒரு நீண்ட கருப்பு கோட்டையை நான் கவனித்தேன். நீ மேடு பள்ளங்களை கொண்டிருந்தாய். முயற்சித்தாய், தேடினாய், ஜெபித்தாய். மேலும் தேடினாய், முயற்சித்தாய். இப்பொழுதே சென்று கொண்டேயிரு. தேவனுடைய நன்மையினாலும், வல்லமையினாலும் இப்பொழுது நிறப்பப்பட போகிறாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
13. எப்படி இருக்கிறீர்கள். நான் அவருடைய ஊழியக்காரனாய் இருப்பதாக உங்கள் முழு இருதயத்துடனும் என்னை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவ்விதம் விசுவாசிப்பீர்களா?  இப்பொழுது அது உங்களிலிருந்து துரிதமாக அந்த குழந்தையிடம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது குழந்தையை தகர்த்து கொண்டிருக்கிறது. உங்களை குறித்தும் ஏதோ ஒன்று இருக்கிறது. இயேசு கிறிஸ்து உங்களுடைய இரட்சகராக உங்களுக்கு தேவை. குழந்தையின் தகப்பனுக்கும் அதுவே தேவை. அது சரியா? உங்களிருவருக்குமே கிறிஸ்தவர்களாய் இருப்பது அவசியமாயுள்ளது. உங்களுடைய குழந்தையை தேவன் சுகமடைய செய்வாரானால் தேவனை சேவிப்பீர்களென்று நீங்கள் வாக்குபண்ணுவீர்களா? உங்கள் முழு இருதயத்துடனும், அவர் அதை சுகமடைய செய்வாரென்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? குழந்தையின் மீது உங்கள் கரத்தை வைத்து கொண்டிருங்கள். எல்லா இடத்திலிருந்தும் உங்கள் தலைகளை வணங்கியவாறு இருங்கள்.
14. கர்த்தராகிய இயேசுவே இந்த குழந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஆசீர்வதிக்கிறேன். அதனுடைய சிறிய சரீரம் சுகமடைவதாக. அன்பார்ந்தவர்கள் இந்த இரவு கிறிஸ்தவர்கள்  ஆவார்களாக. அவர்களுடைய முழு இருதயத்துடனும் அவர்கள் உம்மை சேவிப்பர்களாக. இந்த ஆசீர்வாதத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் போகலாம். குழந்தை சரியாகிவிடும்.
15. வாருங்கள், ஸ்திரீயை கொண்டு வாருங்கள். இப்பொழுது துரிதமாக இராதேயுங்கள். ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் அமைதியாகவும், பயபக்தியுடனும் அப்படியே இருங்கள்.  கடிகாரத்தை கவனிக்காதீர்கள். ஒரு நிமிடம் வெறுமனே அப்படியே அமைதியாயிருப்போம்.
16. சரி ஸ்திரீயே, அப்படியே சிறிது நேரம் உன்னுடன் பேச விரும்புகிறேன். நீ என்னை தேவனுடைய ஊழியக்காரனென்று விசுவாசிக்கிறாயா? அது ஒரு உண்மையான இருதயத்திலிருந்து வருகிறதென்று விசுவாசிக்கிறேன். சரி நீ நரம்பு சம்பந்தமான கோளாரினால் அவதிபட்டு கொண்டிருக்கிறாய். மேலும் நீ ஒரு அசுத்த ஆவியால் உபாதைபட்டாய். சரியாக அங்கே தொங்கி கொண்டிருக்கிறது. அவர் பார்ப்பதற்கு கருப்பாக அலையலையாக இருக்கிறார். ஆனால் அவருடைய நேரம் வந்திருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார். ஊ…. இப்பொழுது நீ மேலும் ஏதோ ஒன்றுடனும் அவதிபட்டுக் கொண்டிருக்கிறாய். இல்லை ஏதோ ஒன்று எனக்கு முன்பாக திறப்பதை நான் காண்கிறேன். சிறிது நேரம் ஒரு மருத்துவமனையை அல்லது சில மாதிரியான அறுவை சிகிச்சையை காண்கிறேன். மேலும் அவர்கள் அவளுடைய பித்தப்பையை அகற்றி கொண்டிருக்கின்றனர். அது காலத்தினூடாக முன்னால் இருந்திருக்கத்தான் வேண்டும். நீ அதிக வாலிபமாக காணப்படுகிறாய். ஆனபோதிலும் அது இன்னும் உனக்கு உபத்திரவத்தை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. அந்த காரியம் உண்மையா? மேலும் இதுவும் உண்மையே. என்னை பார். அது உன்னிலிருந்து போய்விட்டது. குதூகலத்துடனும்இ மகிழ்ச்சியுடனும் மேடையை விட்டு போ. நீ சரியாக அங்கு நின்று கொண்டிருந்தபோதே அந்த அசுத்த ஆவி உன்னை  விட்டு போய்விட்டது. தேவனே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்….?
17. விசுவாசம் கொண்டிருங்கள். இப்பொழுது சிறிது நேரம், அது அவளை பின் தொடர்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே குதூகலத்துடன் செல்வதற்கு அது தான் வழி..
18. சிறிது நேரத்திற்கு முன்னால் என்னை பார்த்து கொண்டிருந்த நரைத்த தலைமுடி கொண்ட ஒரு ஸ்திரீ மீது அது நிற்கிறது. அதாவது இருதய கோளாரும், ஸ்திரீகளுக்குள்ள கோளாரும் உள்ளவள். சரியாக அங்கே முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமடைய செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  பெருங் குடல் கோளாரை பெற்றுள்ள உங்களின் பக்கத்தில் அமர்ந் திருக்கும் ஒருவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய சுகத்தை ஏற்று கொள்ளுங்கள். சுகமடைந்தவர்களாய் இருங்கள். நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார்.
 19. சிறிது நேரம், அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். அங்கே                   பின்னால் உட்கார்ந்திருப்பவரே, நீங்கள் அந்த எலும்பு முறிவை மேற்கொள்ள வீரும்புகிறீர்களா ஐயா?  உள்ளே உட்கார்ந்திருக்கும் இரண்டாவது நபர். தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? சரி நீங்கள் விசுவாசித்தால் உங்களுடைய காலில் எழுந்து நின்று உங்களுடைய சுகத்தை ஏற்று கொள்ளுங்கள். அங்கே நின்று கொண்டிருக்கும் மனிதரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை செய்வதற்கான வழி அதுதான். சுகமானவர்களாய் இருங்கள்.
20. அங்கே ஏதோ ஒன்று திடீரென்று பளிச்சிடுகிறது. எழுந்து  நிற்கும் ஒரு ஸ்திரீ. கர்த்தருடைய தூதன் மூலையில் இருக்கிறார். நீங்கள் அதை காணமுடியவில்லையா?  இங்கே பாருங்கள் நண்பர்களே. உங்களில் ஒவ்வொருவரும் பாருங்கள். இங்கே சரியாக மேலாக இந்த பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அந்த மஞசள் நிற ஒளி கீற்றை உங்ளால் அங்கே உங்களால் காணமுடியவில்லையா? இப்பொழுது காத்திருங்கள். அது வெளியே நகர்ந்து கொண்டிருக்கிறது. நான் ஏதோ ஒன்றை காண்கிறேன். ஒரு பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு ஊழியக்காரராய் அது இருக்கிறது. அவர் இருதய கோளாரும்,  இரத்த அழுத்தமும் உள்ள ஒருவர். சற்று பொறுங்கள். அங்கே அவர் இருக்கிறார். அவர் தன்னுடைய கரத்தை உயர்த்தியவாறு இருக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா நீர் சுவிசேத்தின் ஊழியக்காரராய் இருக்கிறீரா. அதிக இரத்த அழுத்தமும்,  இருதய கோளாறும் உங்களுக்கு இருக்கிறதல்லவா?  உங்ளை முழுமை அடையச் செய்ய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். நீங்கள் அதை ஏற்று கொள்வீர்களா?
21. சிறிது நேரம் உங்களுக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சிறு பையன் உங்களுக்கு கொஞ்சம் உறவினர் இல்லையா? சங்கை ஐயா தேவனுடைய தீர்க்கதரிசியென்று என்னை நீர் விசுவாசிக்கிறீரா?  அந்த சிறு பையன் தன்னுடைய தொண்டையில் ஏதோ ஒரு கோளாறை கொண்டிருக்கிறான் இல்லையா?  அது சரியா? அந்த பகுதியின் மீது உங்கள் கரத்தை வையுங்கள்.
22. தேவனே. இயேசுவின் நாமத்தில் அவனுடைய சுகத்திற்காக பையனை ஆசீர்வதிக்கிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
23. உமக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் அந்த ஸ்திரீ உம்முடைய மனைவியாய் இருக்கிறார். அதே வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள் நான் என்பதை காண்கிறேன். அந்த சிறு பையனிடம் அழவேண்டாம் என்று கூறுங்கள். அவன் சுகமாகிவிட்டான். அவன் சரியாகி விடுவான்.
24. அந்த ஸ்திரீ ஏதோ ஒன்றை அவள் மீது கொண்டிருந்தாள். இங்கே அவளுடைய தலைக்கு பின்னால், அது அவளுடைய தலையின் மீதும்,  அவளுடைய பக்க உறுப்பின் மீதும் உள்ளது. அது புற்றுநோய். அவள் உங்களுடைய மனைவி. அவள் மீது உங்கள் கரங்களை வையுங்கள். தேவனே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை சுகமாக்கும்.
25. அவளுக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் ஒரு ஸ்திரீயின் மீதாக அங்கே அது போகிறது. ஸ்திரீகளுக்கான கோளாறும், இருதய கோளாறும் உள்ளவள். அது சரியா சகோதரியே? ஆனால் இந்த மற்ற ஜனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த ஜனங்கள் இங்கிருந்து அப்பாலிருந்து வருகிறார்கள். அவர்கள் இல்லினாய்ஸிலிருந்து என்று நான் நம்புகிறேன். உங்களுடைய இருதய கோளாறும், ஸ்திரீகளுக்கான கோளாறும், அங்கே உங்ளுக்கு அடுத்து உட்கார்ந்;திருக்கும் ஸ்திரீ,  சிறுசீரக கோளாறு உள்ளவள். அது சரியா ஸ்திரீயே?  ஒருவர் மற்றவர் மீது உங்கள் கரங்களை வையுங்கள். ஓ இயேசுவே தேவனுடைய குமாரனே உம்முடைய மகத்தான ஆவியானது அந்த மூலையில் அசைவாடி கொண்டிருக்கிற நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். இதை அருளும் பிதாவே. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அதை கேட்கிறேன். தேவனுடைய மகிமை வெளிப்படட்டும். ஆமேன்.
26. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். சந்தேகப்பட வேண்டாம். தேவன் அதை நடப்பிக்கப்பண்ணுவார் என்று உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள். ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய பிரசன்னம் சமீபமாய் உள்ளது. மேலும் ஆசீர்வதிக்கக்கூடும்.
27. எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே. இப்பொழுது சிறிது நேரம் உங்களிடம் பேச விரும்புகிறேன்.. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் ஒரு நிமிடம் இந்த வழியாக என்னை பார்ப்பீர்களா?  உங்களிடம் ஏதோ ஒன்று தவறாக உள்ளது. நீங்கள் தேவனுடன் இணைப்பில் இல்லை. நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு வெளியில் இருக்கிறீர்கள். அது மிக சரியானதாகும். நீங்கள் ஒரு போதகர் அல்லது ஏதோ ஒன்றாக பயன்படுத்தப்பட்டீர்களா? மேலும் நீங்கள் பின்மாற்றம் அடைந்துள்ளீர்கள். சிகரெட்டுகள்  புகைப்பதற்கும் மற்ற ஒவ்வொன்றிற்காகவும் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். மேலும் தேவனுக்கு உங்கள் முதுகை திருப்பினீர்கள். அது சரியா?  ஆனால் தேவனுடன் சரியாவதற்கு இன்றிரவு நீங்கள் இங்கே வந்திருக்கறீர்கள். நல்லது அவர் உம்மை நேசிக்கிறார். ஒவ்வொரு பாவத்தையும் உங்களுக்கு அவர் மன்னித்து மீண்டும் அவருடைய அலுவலில் திரும்ப உங்களை வைப்பார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் அதை ஏற்று கொள்ள விரும்பி உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா?
28. சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த ஸ்திரீயின் ஜீவியத்தைக் கட்டி வைத்திருக்கும் அந்த சாத்தான் சபிக்கப்படட்டும். சாத்தானே இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. தேவனுடைய ஊழியக்காரனாக உனக்கு கட்டளையிடுகிறேன். அவளை விட்டு விலகு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா. சரி ஸ்திரீயே உன் வழியே போ. உன்னுடைய பாவங்கள் இப்பொழுதே உனக்கு மன்னிக்கப்பட்டது. திரும்பி சென்று தேவனை உன்னுடைய முழு இருதயத்தோடும் சேவி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
29. ஆமேன் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று கூறுவோம். அங்கே வெளியில் இருக்கும் உங்களில் சிலர் ஏன் விசுவாசிக்கவில்லை?  தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். அங்கே பின்னால் இருப்பவர்கள், நீங்கள் எங்கிருந்தாலும் இந்த வழியாக பார்க்கும்படியும், விசுவாசிக்கும்படியும், விசுவாசம் கொண்டிருக்கும்படியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சவால் விடுகிறேன். தேவன் உங்களை சுகமாக்குவார்.
30. வாருங்கள் ஸ்திரீயே எப்படியிருக்கிறீர்கள். உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாவிகளை           பாவத்திலிருந்து விடுவிக்கவும்,  சுகவீனத்திலிருந்து நோயை        சுகப்படுத்துவதற்கும் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  உங்களுடைய கோளாறு உங்கள் தலையிலுள்ளது. அது மூக்கடைப்பு. முழு அடைப்பு. முகரும் புலனை நீங்கள் கொண்டிருக்கவில்லை.அவர் உங்களை சுகமாக்கிவிட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?   சென்று கொண்டே இருங்கள். இப்பொழுது உங்களால் முகர முடியும். அப்படியே  சென்று சுகமாயிருங்கள். தலைவலியும் மற்ற காரியங்களும் உங்களை விட்டு போய்விடும்.
31. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். ஆமேன். அசையாதீர்கள். அங்கே அவர் போகிறார். அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ,  ஊதா நிற தொப்பியுடன் கூடிய ஒரு ஸ்திரீயின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் தன்னுடைய கண்ணீரை துடைத்து கொண்டிருக்கிறாள். ஆம்,  நீங்கள் உங்களுடைய தொண்டையில் ஏதோ ஒரு கோளாறை கொண்டிருந்தீர்கள். அது மார்ச்சளி பிரச்சனை, மார்ச்சளி. உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்று கொள்ளுகிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் உங்களுடைய சுகத்தை ஏற்ற கொண்டீர்களென்று தேவனுக்கு தெரியப்படுத்த,  அவ்விதமாக உங்கள் கரத்தை அசையுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்கு சென்று சுகத்தை பெற்றிடுங்கள்.
32. உங்களை பற்றி என்ன ஸ்திரீயே?  உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் ஒரு நல்ல உத்தமமான ஒருவர் என்று நம்புகிறேன். நான் அதை என் முழு இருதயத்தொடும் விசுவாசிக்கிறேன். மேலும் உங்களுக்கு பின்னால் அங்கே ஒரு ஆழமான நீண்ட துக்கம் உள்ளதென்று நான் அறிவேன். நீங்கள் ஒரு வாலிப ஸ்திரீயாய் இருப்பினும்,  சம்பவித்திட்ட அநேக காரியங்கள் அங்கே இருந்து கொண்டிருக்கின்றன. உங்களில் மிகவும் கருமை மற்றும் இருளின் ஒரு தடத்தை நான் காண்கிறேன். நீங்கள் இன்றிரவு இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் இந்த குழந்தையைக் கொண்டு வந்துள்ளீர்கள். மேலும் இந்த குழந்தை ஒரு எலும்பு முறிவை கொண்டுள்ளது. குழந்தையை தேவனுக்கு பிரதிஷ்டை செய்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். அது உண்மை இல்லையா?  கூறுங்கள். ஏதோ ஒன்று தவறாயுள்ளதை நான் காண்கிறேன். அது ஒரு மனிதன். மேலும் அவர் மிகவும் வியாதிக்குள்ளாயிருக்கிறார். மனரீதியாக நோயுற்றிருக்கிறார். அது உன்னுடைய புருன். மேலும் வெடித்தல் அல்லது யுத்தம் அல்லது ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு குண்டு வீசப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட மன அதிர்ச்சி. இல்லையா?  தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இருவருமே சுகமடைய போகிறீர்கள். தேவனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சகோதரி சுகமடைய செய்யும். பிதாவே அவளுடைய சுகத்திற்காக இதை அருளும் கர்த்தாவே. உம்முடைய ஆவியானது இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் வழியாக சுகமாக்குவதற்கு இங்கிருப்பதாக. சென்று கொண்டேயிருங்கள் சகோதரியே.
33. ஏதோ ஒன்று இப்பொழுது தான் சம்பவித்தது. ஏதோ ஒன்று திடீரென்று தோன்றினது,  அல்லது கடந்து போனதை நான் கண்டேன். உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  அங்கே பின்னால் அந்த வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மூன்றாவது நபர், அப்படியே உங்கள் தலையை திருப்பினீர்கள். அந்த சிறிய ஸ்திரீ ஸைனஸ் பிரச்சனையுடன் காணப்படுகிறார்கள். சகோதரியே ஸைனஸ் பிரச்சனையிலிருந்து சுகமடைந்தவர்களாயிருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?  தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கறீர்களா?  சரி உங்கள் காலில் எழுந்து நின்று ஸைனஸிலிருந்து உங்களுடைய சுகத்தை ஏற்று கொள்ளுங்கள். தேவன் இப்பொழுது உங்களை சுகமாக்குகிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனித்தில் விசுவாசம் கொண்டிருங்கள். சந்தேகப்படாதீர்கள். அப்படியே உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள்.
34. ஸ்திரீயை கொண்டு வாருங்கள். இந்த வழியாக பாருங்கள் சகோதரியே. நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? சென்று நீங்கள் விரும்புவதை புசியுங்கள். உங்களுடைய வயிற்று கோளாறு உங்களை விட்டு போய் விட்டது.
35. வாருங்கள் சகோதரியே. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் சமீபமாயுள்ளது. சிறுநீரக பிரச்சனையை மேற்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? ஸ்திரீயே நீங்கள் சிறுநீரக கோளாறினால் அவதிப்படுகிறீர்கள். மேடையை விட்டு இறங்கி செல்லுங்கள். அவர் உங்களை சுகமாக்குகிறார். சென்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து கொண்டிருங்கள். ஆம் ஐயா. தேவனை ஸ்தோத்தரியுங்கள்.
36. வாருங்கள். அங்கே பின்னால் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவரே. உங்கள் காலில் ஏதோ பிரச்சனை உள்ளது. இல்லையா ஐயா? தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள்  விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் அப்படியாய் விசுவாசிப்பீர்களா?  சரி. உங்கள் காலில் எழுந்து நின்று உங்கள் சுகத்தை ஏற்ற கொள்ளுங்கள். நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு ஜெபித்து கொண்டிருந்தீர்கள். தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. நினைத்திருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாகவும்,  மிக அதிகமாகவும்,  நிறைவாகவும்,  அபரிதமாகவும் உங்களுக்கு தந்தருளுவாராக. இன்னும் அந்த பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள்.
37. சகோதரர் போஸ்வர்த் இங்கே உள்ளே வருவதை நான் கண்டேன். அவர் ஒரு சிறு பையன் அல்லது ஒரு வாலிபனுக்காக அவர் ஜெபித்து கொண்டிருந்தார். அந்த வாலிபன் ஒரு கண்ணை மாத்திரமே உடையவராயிருந்தார். குருடாயிருக்கும் ஒரு கண்ணுடன் கூடிய ஓரு வாலிபனுக்காக ஜெபித்து கொண்டிருந்தார். ஆம். அந்த வாலிபன் தன்னுடைய கரத்தை உயர்த்தியிருக்கிறார். வாலிபனுக்கு அடுத்து உட்கார்ந்திருப்பவர் அவருடைய தந்தை. ஒரு பையன் அல்லது பேரனுடன் அங்கு ஏதோ தவறாக உள்ளது. அது ஒரு சிறு பெண். அது பிறவியிலேயே கால் ஊனம் அல்லது ஏதோ ஒன்று. தகப்பன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேடிக்கொண்டிருக்கிறார். சில பழக்க வழக்கங்களை விட்டுவிடும்படிக்கு சில பிரச்சனைகளை அவர் பெற்றுள்ளார். சகோதரனே நீங்கள் அதை செய்வீர்களானால்,  தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு கொடுப்பார். மேலும் அந்த பிள்ளைகளை சுகமாக்குவார். தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள்.
38. நான்சற்று பொறுங்கள். நான் சகோதரர் போஸ்வர்த்திடம் பேசிக்கொண்டிருந்தேனென்று நான் நினைத்தேன்.
39. நான் அவருடைய தீர்க்கதரிசியாய் இருக்கிறேன் என்பதை விசுவாசிக்கிறாயா?  உன்னுடைய முழு இரதயத்தோடும் அப்படி நீர் விசுவாசிப்பீரா?  மனதிலுள்ளவைகளை படிப்பவராக இருப்பதாக நீர் என்னை விசுவாசிப்பதில்லை. அப்படிதானே. நான் தேவனுடைய ஊழியக்காரனாய் இருப்பதாக நீர் என்னை விசுவாசிக்கிறீரா?   நீர் சில  மாதிரியானஅதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுடனும் அவதிபட்டுக் கொண்டிருக்கிறீர். மேலும் நீர் ஒரு போதகர். நீர் ஒரு பெந்தேகோஸ்தே போதகர். மேலும் நீர் வலிப்பு அல்லது ஏதோ ஒன்றை கொண்டிருக்கிறீர். நீர் வாலிபராக இருந்த போதே வருடா வருடங்களாக பிரசங்கித்தீர். நீர் சில வருடங்களுக்கு முன் முழுவதும்                 ஊக்குவிக்கப்பட்டு, ஒரு பிரசங்க பீடத்தில் பிரசங்கித்து கொண்டிருக்கிற உங்களை நான் காண்கிறேன். நீங்கள் வலிப்பினால் பாதிக்கப்பட்டு,  அது உங்களை கீழே தள்ளியது. இங்கே வாருங்கள் என் சகோதரனே. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கவார். 
40. என்னுடைய சகோதரனை கட்டி வைத்திருக்கும் பிசாசே. அவரை விட்டு வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த மனிதரை விட்டு விலகு. பொல்லாங்கனே இப்பொழுதே அவரை விட்டு வெளியே போ. சத்தயத்திற்கு கட்டுபட்டு அவரிடமிருந்து போகும்படி தேவனுடைய குமாரனாகிய இயேசுவினால் உன்னை ஏவுகிறேன். சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய பிரசங்க பீடத்திற்கு சென்று திரும்ப பிரசங்கித்து கொண்டிருங்கள். தேவன் உங்களை                         ஆசீர்வதிப்பாராக.
41. வாருங்கள் ஸ்திரீயே, அந்த முதுகு பிரச்சனையிலிருந்து விடுபடும்படிக்கு நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் சத்தமிட்டு கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து கொண்டு மேடையை விட்டு செல்லுங்கள். அது உங்களிலிருந்து போய்விட்டது.

42. சரி வாருங்கள் ஸ்திரீயே. நீங்கள் வந்து கொண்டிருக்கும்போது  இதை உங்களுடைய முழு இருதயத்துடனும் நீங்கள் இதை  விசுவாசிக்கிறீர்களா? அப்படியே ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். இப்பொழுது உங்களை பிடித்து வைத்திருக்கும் சாத்தான்,  இங்கே உள்ள அநேகரை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் முழுவதுமாக சுற்றிலும் இழுத்துக் கொண்டிருக்கிறான். தேவன் உனக்கு உதவி செய்யவில்லையென்றால் சிறிது காலம் மாத்திரமே நீ ஜீவிக்கக் கூடும் என்பதை நீ புரிந்து வைத்திருக்கிறாய்.

No comments:

Post a Comment