மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, July 7, 2011

சகேயு (ZACCHAEUS) மே 17 1958



1.    மிகவும் நன்றி, சகோதரன் வேயில். மேலும், ஜனங்கள் சில  நேரங்களில் ஒரு சிறிதளவுநீங்கள் பக்கவாட்டில் திரும்புகிறதை நான் கவனித்தேன்.(நான் - ஆசிரியர்) வலதுபுறம் சுற்றிலும்  திரும்ப நீங்கள் விரும்பினால், நான் அப்படியே அதைச் செய்வேன். உங்கள் இருக்கைகளை அப்படியே வலதுபுறம் சுற்றி நகர்த்துங்கள், அப்போது நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் காணமுடியும். அது ஓரு.?
2.     சகோதரர் தற்பொழுது சொன்னபடியே, நான் ஒரு சங்கத்தைச் சேர்ந்தவன், கிறிஸ்தவ வியாபாரிகளின் சங்கம். நான் என்னுடைய ஐக்கியத்தின் அட்டையை அவரிடம் காட்ட நேர்ந்தது, எனவே கிறிஸ்தவ வியாபாரிகளைப் பற்றி நான் எப்படியாக எண்ணுகிறேன் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். நான் சார்ந்திருக்கும் ஒரே சங்கம் இது தான், ஏனெனில் நாமெல்லாரும் பொதுவாகக் கொண்டிருக்கும் ஏதொவொன்றை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், அது கிறிஸ்து.
3.     இந்தக் காலையில் இங்கே இருக்கும் அருமையான ஜனக் கூட்டத்தாராகிய உங்களை வாழ்த்துவதற்கு நான் விரும்புகிறேன். சென்ற இரவுக்கு முன்பு, உங்களுடைய தலைவராகிய டீமாஸ் சகரியான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அவர் உலகத்தைச் சுற்றிலும் உள்ள சங்கங்களிலிருந்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் விசேஷமான வாழ்த்துக்களை அனுப்புகிறார். மேலும் ஆப்பிரிக்காவிலிருந்து, இப்பொழுது அவர்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிற ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட்டுக்கு (stuttgart) நாம் அவர்களுடைய இரவு பேச்சாளராக இருக்கக்கூடுமானால், எவ்வளவு துரிதமாக நான் வரமுடியுமோ அவ்வளவு துரிதமாய் வரும்படி அவர் என்னை அழைத்தார்;. மேலும் பிலதெல்பியாவில் ஜூன் முப்பதாம் தேதி துவங்கி, அதுதான் என்று நான் நம்புகிறேன், ஜூலை நான்கு வரை பிலதெல்பியாவில் நடைபெறவிருக்கும் ஆராதனைக்காக ஜனங்களாகிய உங்கள் அனைவருக்கும் ஒரு  விசேஷமான அழைப்பை அவர் அனுப்புகிறார். மேலும் அங்கே, கர்த்தருக்கு சித்தமானால், பிலதெல்பியா ஹாலில், அதுதான் என்று நான் நம்புகிறேன், நடைபெறும் இந்த மகத்தான கன்வென்ஷனில் மீண்டும் அவர்களுக்காக நான் பேசவிருக்கிறேன். நான் நிச்சயமுடையவனாயில்லை. ஆனால் நீங்களெல்லாரும் வருவதற்கு அழைக்கப்படுகிறீர்கள்.
4.     மேலும் இப்பொழுது, இம்மாதிரியான ஒரு அன்பான ஜனக்கூட்டத்தாரின் முன்னால் நிற்பது இப்படியாக ஒரு சிலாக்கியமாக உள்ளது. மேலும் அதுஇந்த காலையில், இதைப் போன்ற ஒரு காலை சிற்றுண்டியில் என்ன சம்பவிக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. உலகத்தைச் சுற்றிலும் நான் கிறிஸ்தவ வர்த்தகர்களுக்காக பேசினதுண்டு. லாஸ் ஏஞ்சல்ஸில், அநேக நேரங்களில் நான் பேசுவதற்கு சிலாக்கியம் பெற்றிருந்த காலை சிற்றுண்டியில் சில சமயங்களில் சுமார் ஆயிரம் பேர்களை நாங்கள் கொண்டிருக்கிறோம். குருடர் தங்களுடைய பார்வையுடன் எழுந்து நின்றதையும், முடவர்கள் நடந்து போகிறதையும்@ மேலும் நூற்றுக்கணக்கான ஜனங்கள், வியாபாரிகள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், குறைகூறுபவர்கள் (Critics)  உள்ளே வந்து, சரியாக தேவனுடைய வல்லமையின் கீழ் விழுந்ததையும் நான் கண்டிருக்கிறேன்;. மேலும் ஒருகனவான்களே, நீங்கள் ஏதோ ஒன்றை பெற்றுள்ளீர்கள்.
5.       இப்பொழுது, இந்தவொரு காரியத்தை நீங்கள் நினைவில் வையுங்கள் நாமனைவரும் இந்தக்காலையில் இங்கே ஓரே விசுவாசம் உடையவர்களாய் இருக்கிறோம். நாம் பெற்றுள்ளது இங்கே உள்ளது. நாம் ஏதோவொன்றை பொதுவாக பெற்றுள்ளோம். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவதென்று நாம் அறிந்திருக்க வேண்டும். பாருங்கள்? இது வேட்டையாடுவதற்கான நல்ல துப்பாக்கி குண்டுகளைப் போன்றது ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவதென்று நீங்கள் அறிந்து இருக்கவேண்டும். எனவே சவிசேஷமும் அதே வழியில் தான் உள்ளது. ஆக, ராஜ்யத்துக்குள் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிற நாம், ஒவ்வொரு ஆத்துமாவையும் அந்த ராஜ்யத்தில் ஆதாயப்படுத்த, அதை தேவனுடைய மகிமைக்காக உபயோகப்படுத்துவோமாக!
6.     மேலும் இப்பொழுது, தேவன் இங்கே கூடியிருக்கும் இச்சிறு கூட்டத்தை ஆசீர்வதிப்பாராக! இந்தக் காலை சிற்றுண்டிகளைக் கொண்டிருங்கள், மேலும் எல்லாவற்றிக்கும் மேலாக அதை ஆவிக்குரியதாய் வைத்திருங்கள். அந்த ஆவி ஒருபோதும் மரித்துப்போக விடாதீர்கள். அந்தப் பழையப் பாணியிலான பாடல்களைப் பாடி, உங்களுடைய கரங்களைத் தட்டி, கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். அந்த வழியாகத் தான் நீங்கள் அதை காத்துக் கொள்ளவேண்டும்
7.     நான் ஒரு தெற்கத்தியன் - நான் உணர்ச்சிவசப்படுபவன். உணர்ச்சியற்ற எதுவும் மரித்ததாயிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும். மேலும் உங்களுடைய மார்க்கம் அதில் சிறிதளவும் உணர்ச்சியைப் பெற்றிருக்க வில்லையென்றால், அது மரித்ததாய் இருக்கிறது. அதை நீங்கள் புதைத்து விட்டு, அதைக் கொண்டிருக்கும் ஒன்றை பெற்றுக்கொள்வதே சிறந்தது. எனவே நாம் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கவேண்டும், இயேசு அவர்கள்  அமைதியாய் இருந்தால், உடனடியாக கல்லுகளே சத்தமிடும் என்றார்.
8.     ஒரு காரியம், ஜீவனும் மரணமும் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. கிறிஸ்து எங்கே வருகிறாரோ, அவர் ஒரு போதும் தன்னுடைய முழு ஜீவியத்திலும் ஒரு அடக்க ஆராதனையையும் பிரசங்கித்ததில்லை, ஏனெனில் எங்கே ஜீவன் உள்ளதோ, அதை சுற்றி மரணத்தால் நிற்க முடியாது. அவர்கள் மரணத்திலிருந்து எழுந்தார்கள். அவர் ஒரு ஜனக்கூட்டத்திற்குள் வரும்போது, ஜீவன் வருகிறது, ஏனெனில் அவர் ஜீவனாய் இருக்கிறார். மேலும், நாம் இந்த காலையில், பிரதானமாக நம்முடைய முழு இருதயத்துடன் அவரை நேசிக்கிறோம், நாம் அவரை உண்மையாக நேசித்து, நம்முடைய இருதயங்களின் சாஷ்டாங்கமான ஒட்டு மொத்த தொழுகையையே இந்த சிறிய கூட்டங்களில் அவருக்கு செலுத்துகிறோம். மேலும் அது இதைப் போன்ற சிறு கூட்டங்கள்
9.       என்னை பொறுத்துகொள்வீர்களா? (அப்பால் கட்டி இழுப்பதற்குள்ள ஒரு காரை குறித்த ஓர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது - ஆசிரியர்.) நான் அதை தெளிவுபடுத்துவேனாக.  ஆனால் அது இங்கேயுள்ள நம்முடைய கூட்டத்தினரில் இருக்க முடியாது, அது பார்ப்பதற்காகவோ அல்லது ஏதாவது ஒன்றிற்காகவோ மேல்மாடிக்கு வந்த யாரோ ஒருவராக இருக்ககூடும், அப்படியே உள்ளே தங்களுடைய காரை ஓட்டி இருக்கிறார்கள். எனவே அவர்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, எவரும் அசௌகரியத்திற்கு உள்ளாகாதபடிக்கு எப்படியாயினும் இதை செய்து கொண்டிருக்கும் சகோதரர்களை நாம் பாராட்டுகிறோம்.
10.    இங்கே தான் என்னுடைய சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறேன், ஒரு கூட்டத்தைப் பெற்றுக்கொண்டுஒரே சிறகுடைய ஓரினப் பறவைகள் ஒன்றாயிருக்குமல்லவா? என்ற பழைய தெற்கத்தியனின் பழமொழியை நீங்கள் அறிவீர்கள். இங்கே இந்தக் காலையில் இந்தப் பறவைகள் இதை போன்ற ஒரே சிறகுகளைக் கொண்டிருப்பதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அங்கே ஏதோவொன்று இருக்கிறது
11.    இது - இது ஏதோ  சுகமளிக்கும் ஆராதனை அல்ல. சுகமளிக்கும் ஆராதனையில், பிற்பகலில் நான் அறைக்குள் சென்று அங்கே தேவனுடன் தனிமையில் தங்கிவிட்டு வெளியே வருகிறதான அந்த என்னுடைய பெரு முயற்சிகள், மற்றும் அபிஷேகத்தின் கீழும் நீங்கள் இருக்கிறீர்கள். பிறகு நீங்கள் கவனிக்கவேண்டும்;, ஏனெனில், சாத்தான் ஒரு நிஜமான, சத்துருவாக இருக்கிறான். அவன் எந்த நேரமும் குழப்புவதற்கு இருந்து கொண்டிருக்கிறான், மேலும் இப்போது நான் எளிதாக குழப்பமடைய கூடிய விதத்தில், அவ்வளவு களைப்பாக இருக்கிறேன். ஆனால் அவர் (இயேசு) இந்த வழியாக வரும்போது, கிரியை செய்வதற்கு தேவையான ஐம்பது மைல் அளவு அறையை நீங்கள் பெற்றிருப்பது போல நீங்கள் உணர முடியும். நீங்கள் சுற்றிலும் உட்கார்ந்திருந்து, ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய எல்லா முகங்களையும் நோக்கி, புன்சிரிப்புகளையும் சந்தோஷத்தையும், கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் பாருங்கள். நல்லது, அது அப்படியே ஒரு உண்மையான ஆவிக்குரிய சுவையான பதார்த்தங்களை விரும்பி புசிக்கிற ஜூபிலி…?... அப்படியே அதை கேட்பதற்கு நாம் ஒன்றிணைகிறோம்.
12.    மேலும் அந்தப் பாடுதலை நீங்கள் கேட்கிறீர்கள், நான் அந்த நல்ல பழைய பாணியிலான பாடுதலை நேசிக்கிறேன். நான் எதையாவது நேசிப்பேனென்றால், அது பாடுதலை தான். மேலும் நான்அங்கே எதையாவது வெறுக்கிறேனென்றால், அது அதிகமாக பயிற்றுவிக்கப்பட்ட குரலைத் தான்  நீங்கள் அறிந்தபடி, அவர்களில் ஒரு வகையினர் முகத்தில் நீல நிறத்தைப் பெறுவது வரை அவர்கள் மூச்சை பிடித்து வைத்திருப்பார்கள், பாருங்கள் எவ்வளவு நேரம் நீங்கள் உங்களுடைய மூச்சைப் பிடித்து வைத்திருந்து, திரும்ப விடமுடியும். அவர்கள் தேவனுடைய மகிமைக்காகப் பாடுவதில்லை; அவர்கள் தங்களுடைய மூச்சை எவ்வளவு நேரம் பிடித்து வைத்திருக்க முடியும் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள்.
13.    நல்ல பழைய பாணியிலான பெந்தேகோஸ்தே பாடுதலை விட இன்னும் அழகானது எதுவுமில்லையென்று நான் எண்ணுகிறேன், அப்படியே சுவிசேஷத்தில் பாடுதல்அது சரியே. ஒரு நிலக்கரி வாளியில் ஒரு சுருதியை நீங்கள் கொண்டு வர முடியாது என்றாலும், எப்படியாயினும் அப்படியே பாடுங்கள். கர்த்தருக்கு ஒரு மகிழ்ச்சியான ஆரவார சத்தமிடுங்கள். இதைப்பற்றி அங்கே சம்பிரதாயம்  ஏதுமில்லை, தேவனுக்கு ரூபமில்லை . அவ்விதமாகத் தான் வேதாகமம்  கூறுகிறது. எனவே அவர் ஒரு சம்பிரதாயமுள்ள (கழசஅயட) ஜனங்களைக் கொண்டிருக்கவில்லை, அவர் ஒரு சம்பிரதாயமற்ற  ஜனங்களை கொண்டிருக்கிறார். எல்லா இடங்களிலும் ஆவியானவர் எதையாகிலும் செய்துக் கொண்டிருக்கிறார், எனவே நாம் அதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம்.
14.    மேலும் இப்பொழுது, இந்த வருகின்ற ஆராதனைகளில், நான் நம்பிக்கையாயிருக்கிறேன்இதை நான் முழு உத்தமத்துடனும் சொல்ல விரும்புகிறேன், ஏனெனில் வெவ்வேறான இடங்களிலிருந்து வந்த ஜனங்கள் இங்கே உள்ளனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்பட்டணத்தில் முதல் தடவை, முதல் ஆராதனையில்இதுவரையில் சந்தித்திராத ஓர் இரவில் நான் கொண்டிருந்த, சரியாக எங்களைச் சந்தித்த அந்த விசுவாசத்தை நான் நியூயார்க்கை விட்டபோது, ஒருபோதும் கொண்டிருக்கவில்லை.  ஜெபமானது இங்கு எங்கேயோ ஓரிடத்தில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது, அது எங்கே செய்யப்படுகிறது என்று நான் அறியேன், ஆனால் யாரோ ஒருவர் கர்த்தருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
15.    ஒரு சாட்சியைக் கொடுத்துக்கொண்டு, இந்தக் காலையில், ஜெபத்தில் வழிநடத்தின அங்கேயுள்ள சிறிய சகோதரனை நான் பாராட்டினேன். அந்த நபர் உடனடியாக எழும்பி, கர்த்தருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, நான் முன்னரே அவர் அவருடன் பேசியுள்ளார் என்று கூறினேன். ஏனெனில் அவர் யாருடன் பேசிக்கொண்டிருந்தார் என்பதை அவர் அறிவார். மேலும் அது நல்ல ஆத்தும ஆதாயம் பெறுதலாக உள்ளது, மகத்தான காரியம்.  மேலும் சகோதரர்களே, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நாம் - நாம்; இங்கே சாலையின்; முடிவில் இருக்கிறோம் நீங்கள்நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள், நீங்கள் பரலோகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என நான் விசுவாசிக்கிறேன், அது உண்மை, ஆனால் நீங்கள் சரியாக இப்பொழுது பெற்றுள்ளதைப் போன்ற ஒரு வாய்ப்பை நீங்கள் ஒருக்காலும் கொண்டிருக்கமாட்டீர்கள். மேலும்  வருகின்ற நித்தியத்தில், அவர் எவ்வளவு நேசமுள்ளவர் என்பதை புரிந்து கொண்டு அவருடைய சமூகத்திலிருந்து மறுபடியும் இந்த சாவுக்கேதுவான சரீரத்தோடு திரும்ப வந்து சில சாட்சிகளை சொல்லும்படியான தருணம் கிடைக்கும் என்பதை அறிந்தால் எப்படி இருக்கும். அப்பொழுது அது மிகவும் கால தாமதமாயிருக்கும். நாம் தருணம் கொண்டிருக்கின்ற  இப்போழுதே அதை செய்வோமாக! இரவும் பகலுமாக அதை செய்வோமாக!
16.    சில காலங்களுக்கு முன்னால் கீழே தென்பகுதியில், ஒரு வயதான நீக்ரோ இருந்தார். ஒரு இரவு ஒரு பழைய பண்ணைக் கூட்டத்தில், அங்கே அவர்கள் தங்களுடைய மாலை உணவை (ளுரிpநச) அருந்திக் கொண்டிருந்தார்கள்…  இப்பொழுது, இங்கேயுள்ள உங்களெல்லாருக்கும் அது இரவுணவாகவே உள்ளது என நிச்சயமாகவே நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்?
17.      நீங்கள் இரவில் உங்களுடைய இரவுணவை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்படியே கொண்டிருந்துஅப்படியானால் நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் அந்த இரவு உணவைக் குறித்து பேசும்போது, ஒரு சாப்பாட்டை நான் தவறவிட்டதைப் போன்று நான்; உணருகிறேன்…?... நாம் காலை சிற்றுண்டியையும், இரவு உணவையும், மாலை உணவையும் கொண்டிருக்கிறோம். நான்இரவுணவு தான் என்னுடைய மாலை உணவாகயிருந்தால், பிறகு எப்போது என்னுடைய இரவு உணவை நான் பெறுவேன்? எனவே நான்மேலும் நீங்கள் அறிவீர்கள், நாம் சரியாக அந்த கூட்டத்தில்  இருக்கிறோம். நாம் நிச்சயமாய் இருக்கிறோம், ஏனெனில் அது கர்த்தருடைய மாலை உணவாக இருந்தது, அவருடைய இரவு உணவாக (னுinநெச) அல்ல, எனவே நீங்கள் அறிவீர்கள்நாம் நிச்சயமாக சரியாய் இருக்கிறோம்.
18.      அப்படியானால் அங்கே கீழே பழைய பண்ணையில் ஒரு மாலை உணவை அவர்கள் கொண்டிருந்தனர், அங்கே கர்த்தராகிய இயேசுவுக்கு தன்னுடைய ஜீவியத்தை ஒப்பு  கொடுத்த ஒரு  பழைய நீக்ரோ இருந்தான்.
19.    அதன்; பிறகு, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் அந்த  பழைய மாதிரியான பாடல்களை இப்படிப்பட்ட ஒரு இனிமையாக பாடும் போது, அதைக் கேட்பதற்கு அருமையாக உள்ளது. இது அவ்விதமாகவே
       நான் எழும்பி, இயேசுவிடம் போவேன்,
 அவர் தன்னுடைய மார்போடே என்னை அணைப்பார். (சகோதரன் பிரான்ஹாம் பாடுகிறார் ஆசிரியர்.)
20.    அதைப் போன்ற ஒரு இனிமையை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? நல்லது, அந்த வழியில் தான் அவர்கள் அதைப் பாடுகின்றனர். ஆனால், , என்னே, ஆவியானவர் அங்கே இருக்கிறார். ஆம், ஐயா, அது அவர்களுடைய இருதயத்திலிருந்து வருகிறது.
21.    இப்படிப்பட்ட ஒரு இடத்தில், இந்த வயதான நீக்ரோ இரட்சிக்கப்பட்டான். அடுத்த நாள் காலையில், அவன் தான் இரட்சிக்கப்பட்டு விட்டதாகவும் தான்  விடுதலையாகி விட்டதாகவும் வெளியே ஜனங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுது, இது அடிமைத்தனத்தின் நாட்களில் நடந்தது. மேலும் அவன் சொன்னான்அது பண்ணை முதலாளியின் காதுகளுக்குச் சென்றது, எனவே அவர் வெளியே அவனிடம் சென்று, அவர், மோஸ், நான் கேள்விப்படுகிற இது என்ன, இந்தக் காலையில் நீ விடுதலையானாய் என்று அடிமைகளிடையே நீ சொல்லிக் கொண்டிருக்கிறாயா? என்றார்.
   ஆம், எஜமானனே என்றான். நான் இந்தக் காலையில் விடுதலையாயிருக்கிறேன் என்றான்.
22.    எஜமானன், மோஸ், மேலே அலுவலகத்திற்கு வா என்றார். அவன் அலுவலகத்திற்குச் சென்றான்@ அவர், உட்கார் என்றார். அவர் மோஸ், நீ என்னவாக இருந்தாயென்று நீ சொன்னாய்;? என்றார்.
23.    அவன், எஜமானனே என்றான், நான் இன்னும் உம்முடைய அடிமையாகத் தான் இருக்கிறேன், ஆனால் என்றான், நான் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறேன். நேற்றிரவு ஒரு பண்டைய சிறு கூட்டத்தில், கிறிஸ்து என்னை விடு;தலை ஆக்கினார் என்றான்.
       எஜமான், மோஸ், நீ அதை உண்மையாகவா சொல்கிறாய்? என்றார்.
       ஆம், எஜமானே, அப்படிதான் என்றான்.
24.    எஜமான், நல்லது, மோஸ், நான் இந்தக் காலையில் உன்னுடைய விடுதலை பத்திரத்தில் கையெழுத்திடப் போகிறேன், நான் உன்னை அடிமையாயிருப்பதிலிருந்து விடுதலை பண்ணப்போகிறேன், உன்னுடைய சகோதரர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கி என்றார்.  அவர், நானும் ஒரு கிறிஸ்தவன் என்றார்.  நீ உன்னுடைய சகோதரர்களுக்கிடையில் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கி என்றார்.
25.    பல வருட சேவைக்கு பிறகு, வயதான நீக்ரோ (மோஸ்) தன்னுடைய மரணத்தருவாய்க்கு வந்தான். அவனுடைய அநேக வெள்ளை சகோதரர்கள் அவரைப் பார்ப்பதற்கும்  கடைசி நேரத்தில் அவருடைய கரங்களைக் குலுக்குவதற்கும் கூடியிருந்தனர். மேலும் அவர் கோமா  நிலையில் படுத்திருந்தார். அவர் விழித்தெழுந்து சிறிது நேரத்திற்கு பிறகு, சுற்றிலும் நோக்கிப் பார்த்து, அவர், , நான் மீண்டும் பூமிக்கா திரும்பி இருக்கிறேன் என்றார்.
       அவர்கள், மோஸ், நீ எங்கேயிருந்தாய்? என்றார்கள்.
26.    அவன், , நான் அப்படியே வாசலுக்குள்; சென்;றேன். என்றான். மேலும், நான் நோக்கிப் பார்த்து நான் அவரைக் கண்டேன் என்றான். மேலும் அவன், இந்த வயதான கறுப்பனின் இருதயம் மிகவும் சிலிர்த்தது, நான் இந்த வழியே திரும்பவும் வருவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என்றான். மேலும் அவன், நான் அங்கே நின்றுகொண்டிருந்த போது, அங்கே ஒரு தூதன் என்னிடம் நடந்து வந்து, மோஸ், இங்கே வா, உன்னுடைய அங்கியையும், உன்னுடைய கிரீடத்தையும் உன்னிடம் தர நான் விரும்புகிறேன் என்று சொன்னான்.
   அவன்;, அங்கியையும்;, கிரீடத்தையும் குறித்து என்னிடம் பேச வேண்டாம். நான் எந்த அங்கியையோ, கிரீடத்தையோ விரும்பவில்லை என்றான்.
     அப்படியானால், அந்த நீண்ட ஜீவியத்தில் நீ செய்த சேவைக்காக நீ என்ன விரும்புகிறாய், மோஸ் என்றான்.
     ஓர் ஆயிரம்; வருடங்கள் அப்படியே நான் அவரை பார்த்துக் கொண்டே இருக்கட்டும் என்றான்.
27.    நம்மனைவருடைய உணர்வுகளும் அவ்விதமாகத்தான் இருக்கிறதென்று நான் எண்ணுகிறேன். அது நம்முடைய பணத்தின் மேலோ, நம்முடைய வியாபாரத்தின்; மேலோ, அல்லது நாம் என்ன செய்கிறோம் என்பதிலோ அல்லது நீங்கள் கொடுக்கும் சாட்சிகளிலோ நாட்டமுடையதாய்; இல்லை, ஐயா, அவரையே நோக்கி நான் பார்க்கட்டும்;. அவருடைய பாதத்தண்டை தவழ்ந்து சென்று, எனக்காக தழும்புகள் ஏற்ற அந்த விலையேறப்பெற்ற பாதங்களை முத்தமிட்டு, சிறிது நேரம் அவரையே நோக்கி பார்க்கட்டும். அதைத் தான் ஏதோ ஒரு நாளில் நான்; செய்யும்படி எதிர்பார்க்கிறேன்.
   நான் மாளிகையை விரும்பவில்லை, அப்படியே எங்கோ   மூலையில், சகோதரர்களாகிய உங்களுடன் நான் ஐக்கியம் கொள்ள விரும்புகிறேன்.
28.    இந்தக் காலையில் இங்கே உட்கார்ந்து பார்க்கும்போது, இந்த வாலிப ஜனங்களின் ஊடாக நோக்கி நான் பார்த்துக்கொண்டிருந்தேன், அது அருமையானதுஇங்கே இப்போதுதான் சமீபத்தில் விவாகமான ஒரு இளம் ஜோடியை குறித்து நான் கேட்டேன், அவர்கள் தேவனுக்காக அனலாய் இருக்கிறார்கள் என்று சகோதரன் ஸ்வீட் என்னிடம் கூறினார்.
29.    ஒரு வயதான மனிதரை நான் கவனித்தேன், நரைத்த தலையையுடைய உங்களில் சிலர், உண்மையாகவே என்னை விட வயதானவர்கள், நான் ஒரு பையனாக இருந்தபோதே சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தவர்கள்;. நான் சாப்பிட்டுக்கொண்டே வௌ;வேறானவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு, எனக்குள்ளாக இப்படி சிந்தித்தேன். இந்த பூமியின் மேலாக இவ்விதமாக சந்திப்பது இது தான் கடைசி நேரமாயிருந்தால், ஆச்சரியம்தான் அப்படியும் இருக்ககூடும், நீங்கள் அறிவீர்கள். ஆனால் இது நமது கடைசி சந்திப்பு அல்ல!
30.    நான் நினைக்கிறேன் இங்கே மனிதர்களாகிய உங்களில் சிலர் மூலையில் நின்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஒரு பழைய கிட்டாரை வாசித்து, சிறையில் தள்ளப்பட்டு, பட்டணத்திற்கு வெளியே ஓடி, அந்த குறிக்கோளுக்காகவே, நான் மிருதுவாக  ஓடுவதற்கு சாலையை செவ்வைப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். கனப்படுத்தப்பட வேண்டிய மனிதர்கள் நீங்களே@ கனப்படுத்தப்பட வேண்டிய ஸ்திரீகள் நீங்களே. நீங்கள் தான் இங்கே மேலே இருக்க வேண்டும், நானல்ல. நான் ஒரு பாவியான பையனாய் இருந்தபோது, அதோ அங்கே வெளியே ஒரு குதிரையின் மீது கால்பரப்பி அமர்ந்து, ஒரு ஆண்குதிரையில் யார் அதிக தூரம் பயணம் செய்வார்கள், அல்லது கன்றுக்குட்டிகளை கயிற்றால் கட்டுதல் அல்லது ஏதோவொன்றுக்காய் முயற்சித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
       நீங்கள் மூலையில் இருந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, கொண்டிருந்தீர்கள் நான் குதிரை பந்தயங்களை நடத்திக் கொண்டிருந்தேன்.
31.    கனத்திற்கு உரிய மனிதர்களும்; ஸ்திரீகளும் நீங்களே@ நீங்கள் தான் இங்கே நிற்க வேண்டும். ஆனால் நான் பின்னால் வருவதற்கு, நீங்கள் தான் ஒரு பாதையை உண்டாக்கி கொண்டிருந்தீர்கள்;. சகோதர சகோதரிகளே, நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். அது வேறொரு காலை சிற்றுண்டியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதோ அந்த வானத்தின் ஊடாக பரவப்போகிற அந்த மகத்தான கலியாண விருந்துக்கான ஒரு நேரம் அங்கே இருக்கும். மேலும் நாம் அங்கே அடையும் போது,   வித்தியாசமாக இருப்போம்;.
32.    நான் மேசையின் ஊடாக மனிதர்களும் ஸ்திரீகளுமாகிய உங்களை நோக்கிப் பார்க்கும்போதுநாம் ஒருவரை ஒருவர் கரத்தை குலுக்குகையில் நம்முடைய கன்னங்களின் வழியாக சிறிது ஆனந்த கண்ணீர் துளித்துளியாய் வடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆம், சகோதரன் பிரான்ஹாம், நான் பாங்கேர்  கூட்டத்தில் அந்தக் காலையில் இருந்தேன்.
33.    , நான் உங்களை நினைவு கூறுகிறேன், , இன்னார் - இன்னார் இங்கே இருக்கிறார். நாம் அங்கே உட்கார்ந்து அழுதுகொண்டிருப்போம்ராஜா தம்முடைய மகிமையிலே தோன்றி, வரிசை நெடுகிலும் நடந்து, உங்களுடைய கண்களின் கண்ணீர்ரையெல்லாம் துடைத்து, அழாதேயுங்கள், பிள்ளைகளே, இப்பொழுது எல்லாம் முடிந்து விட்டது. நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். உலகத்துக்கு அஸ்திரபாரம் போடப்பட்டதிலிருந்து உங்களுக்காக ஆயத்தம்பண்ணபட்டிருக்கிற கர்த்தருடைய சந்தோஷத்தில் பிரவேசியுங்கள் என்று கூறுவதை நான் அப்படியே காண முடிகிறது.  நான்  எதிர்நோக்கி  பார்க்கும் நாள் அது தான்.
34.    நான் உங்களுடைய சகோதரன். நான்
உங்களுக்கு உதவுவதற்கே இங்கிருக்கிறேன், பாதையை செவ்வைப்படுத்துவதற்காக நீங்கள் சாலையின் ஊடாக உருட்டுகிற சக்கரத்தில் சுமையை தள்ளுவதற்கு என்னுடைய தோள்களை கொடுக்கிறேன். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இப்பொழுது ஜெபத்திற்காக சிறிது நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
35.    இரக்கமுள்ள தேவனே, ஐக்கியமும், வரமும், தேவனுடைய பரிசுத்த ஆவியிhனவரின் அசைவாடுதல்களும் அவருடைய நேசபிள்ளைகள் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கும்  இந்த தெய்வீக பிரசன்னத்திற்குள்ளும் உம்மிடத்திற்கும் வருவது அப்பேற்பட்ட ஒரு சிலாக்கியமாய் இருக்கிறது. இங்கே இருக்கிற நாங்கள் இன்று, ஒருவேளை  ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் அமர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் அந்நியர்களல்ல@ நாங்கள் ராஜ்ஜியத்தின் உடன் பிரஜைகளாயிருக்கிறோம். நாங்கள் பூமிக்கு பரிசுத்த யாத்திரிகர்களும் அந்நியர்களுமாயிருக்கிறோம், ஆனால் நாங்களோ உம்முடைய ராஜ்ஜியத்தின் பிரஜைகளாய் இருக்கிறோம்.
36.    முதல்; தடவை கூட்டம், ஆனால் கர்த்தரில் நேசமுடையவர்கள் கூட்டம். நீர் எங்களை ஒருமித்து ஆசீர்வதிக்கும்படியாய் நாங்கள் கேட்கிறோம். கர்த்தாவே, இந்த ஆவி தொடர்ந்திருக்கட்டும். அது ஒருபோதும் ஜனங்களிலிருந்து மரித்து போகாதிருப்பதாக. ஓவ்வொரு ஊழியக்காரரும் மேலும் ஒவ்வொரு உதவிக்காரரும்;, எப்போதும் சாதாரண அங்கத்தினரும் ஆசீர்வதிக்கப்படுவார்களாக! ஆத்துமாக்கள் பிறப்பார்களாக. பிதாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்முடைய விலையேறபெற்ற நாமத்தையும் மீட்கப்பட்டவர்களுடைய அந்த பழைய பாடல்களையும் கேட்கும் போது, எங்களுடைய இருதயங்கள் அப்படியே கொழுந்துவிட்டு  எரிகிறது.
37.    பட்டணத்தில் எங்களுடைய சிறு முயற்சியை நீர் ஆசீர்வதிக்கும்படி இப்பொழுது நாங்கள் கேட்கிறோம். ஓ, தேவனே, ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு இருதயத்திலும் அந்த பண்டையகால எழுப்புதல் அக்கினியை ஆரம்பியும். கர்த்தாவே, குளம் உள்ள அறைகள் (பொழுதுபோக்கு ஸ்தலம்) மற்றும் சூதாட்ட மறைவிடங்களிலிருந்தும் ஒழுக்கங்கெட்ட இடங்கள் மற்றும் தெருக்களிலிருந்தும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ராஜ்யத்திற்குள் அழைத்தருளும்.  அவதியுறும் உம்முடைய ஏழை பிள்ளைகளை சுகப்படுத்தும், கர்த்தாவே. அவர்களுக்கு உம்முடைய பிரசன்னத்தையும் அன்பையும் அறியப்படுத்தும்.
38.    இப்பொழுது நாங்கள் வாசிக்கபோகும் வார்த்தைகளை ஆசீர்வதியும், வாசிக்கப்படுகிற வார்த்தையை சுற்றி நாங்கள் ஐக்கியம் கொள்வோமாக. இதை எங்களுடைய இரட்சகரான, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென்.
39.    ஒரு சிறு பாடத்திற்காக, நாம் அதிக நேரம் தரித்திருக்க முடியாது என்பதை நான் அறிவேன், ஆனால் ஒரு சிறு பாடம் அல்லது நாடகத்தின் மீது அப்படியே உங்களிடம் பேசுவதற்கு நான் விரும்புகிறேன், (உங்களுடைய கவனத்தை நான் சிறிது நேரம் கொண்டிருக்க முடியுமானால்.) அதை லூக்காவின் புத்தகம் 19-ம் அதிகாரம் 4-வது வசனத்தில் காணலாம்.
 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். (லூக்கா.19:4)
40.    அந்த குள்ள மனிதனுக்கு அது ஒரு பயங்கரமான இரவாகத்தான் இருந்து இருக்கவேண்டும் அவனால் இளைப்பாற முடியவில்லை. படுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு உருண்டு புரண்டு கொண்டிருந்திருப்பான், ஏனெனில் அவன் - அவன் ஒரு விசித்திர வினோதமான நாளில் ஜீவிக்க நேர்ந்தது. ஏனெனில்  அவன் சென்று கொண்டிருந்த சபையும் செய்தியும் ஒன்றுக்கொன்று முடிவில் இருந்தன.
41.    நீங்கள் பாருங்கள், அவன் ஓரு கண்டிப்பான ஆச்சாரமிக்க , யூத விசுவாசியாய் இருந்தான். ஒரு தச்சனாகிய, யோசேப்பின் குமாரன் என் உரிமைகோரப்பட்ட நாசரேத்தூரானாகிய இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு நசரேய தீர்க்கதரிசி அங்கே உண்டு என்ற ஒரு  வதந்தி அந்த நாளில் அங்கே வந்தது.
42.    அந்த ஒரு மனிதன், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஊழியத்தோடு வந்தார். அது யூத விசுவாசத்திற்கு முற்றிலும் முரண்பாடாய் இருந்தது, மேலும் அது எவ்வளவாய் அந்த நாட்களின் மக்களுடைய உணர்வுக்கு மிகவும் விநோதமாய் இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு காரியத்தை அவர்கள் விசுவாசிக்வில்லை. பல வருடங்களுக்கு முன்னமே இந்த காரியங்களின் நாட்கள் மோசேயோடே கடந்து போய் விட்டது என அவர்கள் நினைத்தார்கள். தேவன் மாறாதவராய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் அளவிற்கு ஆவிக்குரிய சிந்தையுடையவர்களாயில்லை. மேலும், அவர்கள் காலத்தின் சந்திப்பில் இருந்தார்கள்.
43.    எனவே அது மிகவும் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவனுக்கு என்ன பிரசங்கிக்கப்பட்டதோ, அதையே அவன் விசுவாசித்தான், இந்த தீர்க்கதரிசி நடத்தின அத்தகைய எந்தக் கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு சபையால் தடைசெய்யப்பட்டான். அங்கே இந்த தீர்க்கதரிசியைக் குறித்து எல்லா விதமான பேச்சுகளும் இருந்தன. எனவே, அவன் ஒரு இளைப்பாறுதலற்ற இரவைக் கொண்டிருந்தான், அவனுடைய மனைவியாகிய ரெபேக்காள், அவள் இந்தத் தீர்க்க தரிசியினுடைய ஒரு விசுவாசியாக இருந்தாள். அவள் கூட்டங்களில் கலந்துக் கொண்டாள், சம்பவித்த அநேக விநோதமான காரியங்களை அவள் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
44.    அவன் தன்னுடைய ஆசாரியனிடம் ஆலோசனைக்காக பேசி, இப்பொழுது, அது முட்டாள் தனமானது. ரெபேக்காளே, அதைப்போன்ற காரியங்களை அப்படியே விசுவாசிக்கத் தேவையில்லை. நாம் அங்கே தேசத்திலேயே அருமையான சபைகளில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். நம்முடைய ஜெப ஆலயம் மகத்தானது. நான் இந்தப் பட்டணத்தினுடைய  ஒரு வியாபாரியாக இங்கே இருக்கிறேன், என்னுடைய பெயர் சகேயு. இந்த  பட்டணத்திலேயே மிகப்பெரிய உணவு விடுதிக்கு நான் சொந்தக்காரன்.  நான் மிகப்பெரிய வியாபாரத்தைக் கொண்டவன், மேலும் நாம் மதிப்பிற்குரிய ஜனங்கள். எனவே நீ அவரை அழைக்கிற விதமாய் சென்றுகொண்டிருக்கும் அந்த ஒரு விதமான மத வெறி பிடித்த தீர்க்கதரிசியைப் போன்ற ஒரு கூட்டத்திற்குள்ளாக நான் என்னை முழ்கடித்து என்னுடைய அந்தஸ்தை குறைத்துக் கொள்வது எனக்கு ஒழுங்காய் இராது. எந்த ஒரு ஆசாரியனோ அல்லது ரபி மார்களோ அதனோடு ஏதோ ஒன்றை செய்வதற்கில்லை.  இப்படிப்பட்ட ஒரு காரியத்துடன் நான் தொடர்பு கொண்டிருந்தால் ஒரு வியாபாரி என்ற என்னுடைய அந்தஸ்தில்; அது என்னுடைய வியாபாரத்தைப் பாதிக்கும். ரெபேக்காளே, தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிற இவனை பின்பற்றுவதை நீ தொடராதிருந்தால், அது உனக்கு நலமாய் இருக்கும் என்றான்.
45.    இதை ரெபாக்காளின் இருதயம் புரிந்துகொண்டது, எனவே நீங்கள் பாருங்கள், அவள் சகேயுவுக்காக ஜெபிக்கத் துவங்கினாள். அவன் ஒரு வியாபாரியாகவும் உலகத்திலும் சபை சங்கத்திலும் மிகவும் ஈடுபாடு உடையவனாய் இருந்த போதிலும், இன்னுமாக அவள் சிந்தித்து, இந்தத் தீர்க்கதரிசியானவர், தான் என்னவாக இருக்கிறேன் என்று அவர் சொன்னபடியே (தேவனுடைய குமாரன்) இருந்தால்  தன்னுடைய கணவனும் அவரை விசுவாசிக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள். அது தான் ஒரு உண்மையான சரியான மனைவி. ஒவ்வொரு வியாபாரியும் தனக்காக ஜெபிக்கும் அப்படிப்பட்ட மனைவியைக் கொண்டிருக்க வேண்டும். அவனைக் குறை கூறாதீர்கள்;@ அப்படியே அவனுக்காக ஜெபியுங்கள். அவனைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்கு அது தான் மிக சிறந்த வழி.
46.    அதைப் பற்றி ஏதோ காரியம் உண்டென்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் யாரோ ஒருவருக்காக உண்மையாகவே உத்தமமாக ஜெபிக்கும் போது, நீங்கள் அறிவீர்கள், அது   அவர்களை ஒருவித இளைப்பாறுதல் அற்றவர்களாக்குகிறது. அதைப்பற்றிய அனுபவம் உங்களுக்கு எப்பொழுதாவது உண்டாயிருந்ததா, அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கும்படி அசையத் தொடங்குகிறார். சில நேரங்களில் புருஷன் எப்போதையும் விட அதிக எரிச்சலூட்டுகிறவனாக ஆகிறான், ஆனால் அப்படியே நினைவில் கொள்ளுங்கள், தேவன் ஜெபத்திற்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறார்;. அதை எப்படிச் செய்வதென்று அவருக்குத் தெரியும்.
47.    மனிதன் தன்னுடைய கயிற்றின் முடிவுக்கு வந்தாக வேண்டும. சில நேரங்களில், தன்னை இனம் கண்டு கொள்வதற்கு முன்போஅல்லது அவன் மேலே நோக்கிப்பார்க்குமட்டுமாக  ஒருவேளை, தேவன் அவனை வியாதியுடனும், பாதிப்பபுடனும் படுக்கையிலே கிடத்துவார். ஆனால் தேவன் காரியங்களை செய்வதற்கு வினோதமான வழிகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் எப்போதுமே அவருடைய வழிகள் சரியாக இருக்கும்.
48.    எனவே ரெபேக்காள் தன்னுடைய அன்பார்ந்த புருஷன், சகேயுவுக்காக  ஜெபித்துக் கொண்டேயிருந்தாள். மேலும் முழு இரவு நேரமும் அவன் புரண்டுகொண்டும் உருண்டுகொண்டும் தட்டு தடுமாறிக் கொண்டும் இருந்தான். பாருங்கள்? தேவன் ரெபேக்காளுடைய  ஜெபத்திற்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். தங்களுடைய வியாபாரி புருஷனுக்காக எப்போதும் ஜெபித்துக் கொண்டிருக்கும் ஏதாவது ரெபாக்காள்கள் இங்கே இருக்கிறார்களா? என்று நான் வியக்கிறேன்?
49.    அப்போதுகாலை நெருங்கிக் கொண்டிருந்தது, அப்போது ரெபேக்காள் அரை தூக்கத்தில் இருந்தாள், ஆனால் முழு இரவு நேரமும், அவளுடைய இருதயத்தில், அவள், நன்றி, கர்த்தாவே, நீர் அவருடன் கிரியை செய்து கொண்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
   நான் அப்படியே சொல்லமுடியும், அவர் சொன்னார்சகேயுவே, என்ன விஷயம், என்று அவள் இரவினூடாக அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தாள்;.
50.    , எனக்குத் தெரியாது@ அது என் வியாபாரத்தை குறித்த சிந்தைதான் பாருங்கள், அவன் அப்படியே சிறிது தப்பித்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான், அவ்வளவு தான். அது தேவன் அவனுடன் இடைபடுதலாய் இருந்தது.
51.    எனவே அவ்விதமாக இரவு கடந்தது, அதிகாலையில், ரெபேக்காள் ஒருவிதமாக அரை தூக்கத்தில் படுத்திருந்தாள். அதிகாலையில், சகேயு எழுந்துஅவனாகவே தன்னை உடுத்திக் கொண்டு ஆயத்தமாவதை அவள் கண்டாள். அவன் வஸ்திரத்துக்கு அல்லது இன்னும் சரியாக சொன்னால் நீண்ட அங்கிகளை வைப்பதற்கான அலமாரிக்குச் சென்று, அவனுக்கு கிடைத்த சிறந்த அங்கியை அவன் எடுத்து அதை அணிந்தான். நீங்கள் பாருங்கள், அந்த நாளில் பட்டணத்தில் சிறப்பான நிகழ்ச்சி இருக்கப் போவதாக இருந்தது. அந்தத் தீர்க்கதரிசி அந்த நாளில், அப்பட்டணத்தை பார்க்கப் போவதாகவும் அவர் அங்கே இருக்கும் போது, சாப்பிடப் போவதாகவும்  பரவலாக செய்தி பரவிக்கொண்டிருந்தது.
52.    மேலும் அவர் (இயேசு) திருவாளர் லெவின்ஸ்கியின் உணவு விடுதிக்கு போக இருந்தபடியினால், சகேயு நிலை குலைந்து இருந்தான். நல்லது நிச்சயமாக என்னுடைய உணவு விடுதி மிகவும் சிறந்தது. மேலும், என்னுடைய  மனைவி இப்படிப்பட்ட ஒரு ஆளை பின்பற்றும் ஒருத்தியாக இருக்கிறபடியால் ஏன் அவர் (இயேசு) அந்த வியாபாரத்தை என் வழியில் கொண்டு வரக்கூடாது. நீங்கள் பாருங்கள், அவன் ய+தன், அவன் வியாபாரத்தை விரும்பினான். மேலும் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட இவர் அநேகரின் கவனத்தை கவரக் கூடியவர் என்று அவன் அறிந்திருந்தான். அந்த வியாபாரம் அவன் வழியில் வர வேண்டும்என்பதை அறிந்திருந்தான். மேலும் அவன் பட்டணத்தின் மகத்தான வியாபாரிகளில் ஒருவனாய் இருந்தான், எனவே இந்தத் தீர்க்கதரிசி ஏன் இந்த வழியாக வரவோ அல்லது அவனுடைய வழியை கடந்து செல்லவோ கூடாது?
53.    எனவே அவன்அந்த இரவு, தொல்லைபடுத்துகிற அனேக சொப்பனங்கள் மற்றும் காரியங்கள் இருந்த ஒரு  இளைப்பாறுதலற்ற இரவுக்குப் பிறகு அடுத்த நாள் காலை அவன் தன்னைத் தானே உண்மையாகவே அருமையாக உடுத்திக்கொண்டான். ரெபேக்காள் தன்னுடைய தலையை போர்வையின் கீழிருந்து வெளியே இழுத்து, சகேயுவே, அன்பே, இவ்வளவு சீக்கிரமாய் நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்றாள்.
54.    , நான் வெளியே போய் கொஞ்சம் நல்ல காற்று வாங்கலாம் என்று நான் நினைத்தேன்உங்கள்  குற்றம் தெரிய வரும் போது, நீங்கள் அனேக சாக்குப்போக்குகளை கண்டுபிடிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாமெல்லாரும் அதை அறிவோம். நான் அப்படியே சிறிது நல்ல காற்றுக்காக வெளியே போய்க்கொண்டிருக்கிறேன். மேலும் அவன் கொஞ்சம் வாசனை திரவியம்; ப+சினான், அவனுடைய மயிரை படியும்படி வாரினான், , அவன் அப்படியே எல்லாவிதத்திலும் நேர்த்தியாக உடுத்திக் கொண்டான். மேலும் வெளியே தெருவில் அவன் நடக்கிறான். ரெபேக்காள் எழுந்து உட்கார்ந்து, ஜன்னல் திரையை  மேலே உயர்த்தி, வெளியே பார்க்கிறாள். சகேயு நிமர்ந்த தோற்றத்துடன், நீங்கள் அறிவீர்கள், ஒரு உண்மையான நல்ல வியாபாரியைப் போன்று, தன்னுடைய சிறந்த வஸ்திரங்களுடன் தெருவில் நடந்துகொண்டிருக்கிறதை அவள் பார்க்கிறாள், நீங்கள் அறிவீர்கள்.
55.    அவள் தன்னுடைய முழங்காலில் நின்று அன்புள்ள தேவனே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், ஏனெனில் என்னுடைய கணவருடன்; ;ன்று நீர் இடைப்பட்டுக் கொண்டிருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் இப்பொழுது, நாங்கள் உம்முடைய நேச குமாரனை அறிவோம், ஜனங்கள் மத்தியில் ஒரு மதவெறியர் என்றும் சில அசுத்த ஆவிகள் அவரை பீடித்திருக்கின்றதென்ற மோசமான பெயருடன் இருந்த போதிலும்,   உம்முடைய நேச குமாரன் என்று இன்னுமாக நான் அவரை விசுவாசிக்கிறேன். அன்புள்ள தேவனே, ஏதோ ஒரு வகையில் நீர் அவருடைய பிரசன்னத்தில் என்னுடைய கணவரை கொண்டிரும் என்றுஉம்மிடம் நான் ஜெபிக்கிறேன். (ஜெபிப்பதற்கான வழி அதுவே) மேலும் குற்றம் பிடிக்கிறவராக இராமல் உம்முடைய நேச குமாரன் அப்படியே ஏதாவது ஒன்றை செய்து  அதனால், அவர் தான் மேசியா என்று என் கணவர் அறிந்து கொள்ளும் படி செய்யும் என்றாள். அதற்காக அவள் தேவனுக்கு நன்றி செலுத்தி விட்டு, தன்னுடைய வேலையைச் செய்ய சென்றாள்.
56.    ஒரு சில நிமிடங்கள் நாம் சகேயுவைப் பின்தொடருவோமாக. தெருவில் நடந்து கொண்டிருக்கிறான். அது விடியற்காலம். வெளியே அநேக ஜனங்கள் இல்லை, ஆனால் அவன், நீங்கள் அறிவீர்கள், அந்த குறிப்பிட்ட ஆளாக இருந்தால்நான் அவரை இன்று சந்திக்கப் போகிறேன், மேலும் நான் என்னுடைய மனதின் யோசனையை அவரிடம் சொல்லப் போகிறேன் என்றான். சில சமயங்களில் குற்ற உணர்ச்சி அந்த வழியில்  கிரியை செய்கிறதை நீங்கள் அறிவீர்கள்.
57.    மேலும் அவன், நான் அவரை நிறுத்தும்படி சொல்லப்போகிறேன்;. மேலும், என் மனைவியை அவளுடைய சபையிலிருந்து விலகும்படி செய்தார்;. ஏன், நான் பிரஸ்பிட்டேரியன்களில் ஒருவன். எனவே நான் உமக்கு சொல்லுகிறேன், அவரை நான் பார்க்கும் போது இதைப்பற்றியெல்லாம் அவரிடம் சொல்லப் போகிறேன். கொஞ்சம் பொறுங்கள், நான் அவரிடம் சொல்லுவேன் என்று கூறினான். அவன் தெருவில் நடக்கும் போது, நீங்கள் அறிவீர்கள், நேர்த்தியாய் உடுத்தியிருந்தான். நான் அங்கே நின்று கொண்டிருக்கும் போது அங்கே சுற்றிலும் என்னுடைய அநேக வியாபார நண்பர்களும் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கருகில் ரபி நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அப்போது நான் எங்கே நிற்கிறேன் என்பதை அவர் காண முடியும். அவ்விதமான எந்த மதவெறித்தனத்தையும் நான் விசுவாசிக்கவில்லை என்று அவர்கள் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன், எனவே நான் போகிறேன்…. அவர் நிச்சயமாக தெற்கு வாசலிலிருந்து நுழைவார், ஏனெனில் அவர் கலிலேயாவில் இருக்கிறார், அவர் இந்த வழியாக வந்துகொண்டிருப்பார். எனவே நான் வாசலுக்குச் சென்று அவரைச் சந்திப்பேன். நான் அங்கே அடையும் போது அவர் அங்கே சரியாக வாசலில் நுழையும்போது, என்னுடைய மனதின் யோசனையை அவரிடம் சொல்லப் போகிறேன் என்றான். ரெபேக்காள் அவை எல்லாவற்றையும் ஜெபித்தினால் மூடி விட்டாள் என்பதை அவன் அறியாதவனாய் இருந்தான். நீங்கள் பாருங்கள்?
58.    எனவே அவன் கீழே வந்த போது, அவன் ஒரு இரைச்சலைக் கேட்கத் துவங்குகிறான், அவன் சிறிது அருகில் வர முயற்சிக்கிறான். அவன் அப்படி செய்தபோது, வாசலை சுற்றியிருந்த எல்லோரையும் அவன் காண்கிறான், ஜனங்கள் சுற்று சுவர்கள் மீதும் மதில்கள் மீதும் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏன், அவன் - அவன் ஒருபோதும் அருகில் நெருங்கவே முடியவில்லை.  மேலும் அப்போது யாவரும்; கூட்டமாய் திரண்டிருந்தனர், போலீஸார், ஜனங்களைப் பின்னால் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்இங்கே என்ன விஷயம்?
59.    எனவே அவன், நல்லது, இங்கே இருப்பது நான் ஒருவன் மட்டுமல்ல என்று நான் யூகிக்கிறேன். ஆனபோதிலும் இங்கே நின்றுக்கொண்டிருக்கிற இந்த மாதிரியான ஜனங்களை அப்படியே பாருங்கள். இந்த ஜனங்கள் ஏழை ஜனங்களாய் உள்ளனர். அப்படியே நான் ஒரு வியாபாரியென்று நிச்சயமாகவே நீங்கள் அறிவீர்கள், எனவே நான் இப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது, ஆனால் எது எப்படியாயினும் நானே இங்கே மூலைக்குச் செல்வேன் என்றான்.
       நல்லது வந்து அறிந்துகொள்ளுங்கள்;, அவன் சிறிய, அப்படியே ஒரு  குள்ள மனிதனாய் இருந்தான். எனவே அங்கே அனேகர் இருந்தனர், அவர்களுடைய தலைகளுக்கு மேலாக நோக்கிபார்க்க அவனால் முடியவில்லை.
60.    மேலும் அவன் தன் கைகளினால் விலக்கி வழியை உண்டாக்கி வழி விட்டு விலகு, நான்  சகேயு! என்றான். ஜனங்கள் சிலசமயம் தங்களுடைய தலையில் அந்தக் கருத்தை பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் யாரோ ஒருவராய் இருக்கிறீர்கள்.  எது எப்படியாயினும் நீங்கள் யார்? பூமியின் ஆறு அடிதான். நீங்கள் மரிக்கும் போது, நீங்கள் ஒரு ஆத்துமாவைப் பெற்றுள்ளீர்கள். அந்த ஆத்துமா  மேலேயோ அல்லது கீழேயோ ஒரு வழியில் பயணம் செய்யப் போகிறது. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட வழியின் மூலமே அது தீர்மானிக்கப்படப் போகிறது. அவரை தள்ளிப் போட்டால், நீங்கள் கீழே போகிறீர்கள்; அவரை ஏற்றுக் கொண்டால், நீங்கள் அவருடன் செல்லுகிறீர்கள் ஆனால் எது எப்படியாயினும் நீங்கள் மிகவும் பெரியவர்களல்ல, நம்மில் யாருமேயில்லை.
61.    சில நாட்களுக்கு முன்னால் நான் இங்கே ஒரு சிறிய அருங்காட்சியகத்தில் நின்று கொண்டிருந்தேன், நூற்று ஐம்பது பவுண்டுகள் உள்ள ஒரு மனிதனுடைய உண்மையான எடையும் அந்த எடையின் மதிப்பும் என்று குறிக்கப்பட்ட ஒரு சிறு அட்டையை நோக்கி கொண்டு அதை கொடுத்து கொண்டிருந்த இரண்டு பையன்களை பார்த்து கொண்டிருந்தேன்.
62.    நீங்கள் நூற்று ஐம்பது பவுண்டுகள் எடையுள்ளவராகயிருந்தால் உங்கள் மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? அது ஆணை குறித்து.
நீங்கள் எண்பத்து நான்கு செண்டுகள் (அமெரிக்கா நாட்டின்  பைசா ஆசிரியர்) விலைமதிப்புடையவர்கள். அது சரியே. நீங்கள் அப்படியே ஒரு கோழிக் கூட்டுக்கு கொஞ்சம் தெளிக்கிற அளவு போதுமான பொட்டாஷ் மற்றும் கால்சியத்தை உங்களில் பெற்றுள்ளீர்கள்மேலும் எண்பத்து நான்கு சென்ட்கள், அதன் மேல் ஒரு ஐநூறு டாலர் விலை மதிப்புமிக்க மிங்க் (ஆமென்) கோட்டு (மிங்க் என்கிற பாலூட்டி வகை மிருகத்தின் தோலாலான கோட் - ஆசிரியர்)  ஒரு தொப்பி, ஒரு நூறு டாலர் சூட் போட்டு உங்களுடைய மூக்கை மேலே உயர்த்துகிறீர்கள். மழை வருமானால் நீங்கள் மூழ்கிவிடுவீர்கள், பிறகு உங்களை யாரோ ஒருவராக நினைக்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? உங்கள் மதிப்பு எண்பத்து நான்கு சென்ட்டுகளே.
63.    நீங்கள் ஒரு உணவகத்திற்குச் சென்று, நீங்கள் ஒரு சூப்பு கிண்ணத்தை எடுக்கிறீர்கள். அதில் ஒரு ஈ கிடக்கிறது, நீங்கள் உடனடியாக அதைத் திரும்பக் கொடுத்து விடுகிறீர்கள். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.) ஆம் ஐயா, நான் அதனுடன் எதையும் செய்யமாட்டேன். நல்லதுஇது செய்தி தாளுக்கு தெரிந்து, வணிகத்துறைக்கு போனால் இந்த உணவு விடுதியின் தலைவர், உரிமையாளரையும் குறித்து என்ன?  என்ன அது? பாருங்கள், அந்த எண்பத்து நான்கு சென்ட்டை (சரீரம்) கவனியுங்கள்;. அதற்குள் எந்த ஒரு விஷத்தையும் வைக்கமாட்டீர்கள், ஆனால் நித்தியமான ஆத்துமாவில் சாத்தான் அவன் விரும்புகிற எதையும் அந்த ஆத்துமாவில் திணிக்க அனுமதிக்கிறீர்கள். அது சரியே!
64.    ஒரு சில ஜெபங்களை சொல்வது, ஜெபமாலை உருமணிகளை உருட்டுவது, அல்லது ஏதோவொரு காரியத்தை ஏதோவொரு வழியில் செய்வது, ஏதோவொரு உறுதிமொழி செய்வது போன்றவைகளை செய்ய விரும்புகிறீர்கள். அப்படியே ஏதோ ஒரு சிறிய கோட்பாடு. பாருங்கள் அது எப்படி இருக்கிறது? ஓ  ஹே ஹே . நீங்கள் எப்போதும் செய்யபோவதை காட்டிலும் சாத்தான் ஒரு சிறந்த வியாபாரியாய் இருக்கிறான். அது சரியே.
65.    ஆனால் நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அப்போது நீங்கள் - நாம் ஒன்றுமில்லாமல் இருக்கும்போதே, நாம் யாரோ ஒருவர் என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். எனவே, நாம்அவன் அங்கே நின்ற போது, அவன் தாழ்வு மனப்பான்மையைக் கொள்ளத்தொடங்கினான். அவன், நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். அவர் லெவன்ஸ்க்கி உணவு விடுதிக்கு போய்க் கொண்டிருக்கிறபடியால்அவர் எங்கே கடந்து செல்லப் போகிறார் என்று நான் அறிவேன். அவர் அல்லேலூயா அவென்யூவை கடந்த பிறகுநான் நேர் தெருவில்  வந்திருக்க வேண்டும். எனவே நான் நேர் என்றழைக்கப்படும் தெருவுக்கு சென்று அங்கே அவருக்காக நான் காத்திருப்பேன். ஏனெனில் அவர் அந்த  வழியாக தான் கடந்து போயாக வேண்டும். அவர் கடந்து செல்லும்போது அங்கே நான் அவரிடம் சொல்லுவேன் என்றான்.
66.    அவன் ஒரு வியாபாரியாக மதிக்கப்படாததினால் இந்த குள்ள மனிதன், தன்னுடைய முகம் சிவந்தவனாய், நெஞ்சை நிமிர்த்தி வீராப்புடன் தெருவில் சென்றான். எனவே அவன் தெருவில் நடந்து அங்கே நேர் தெருவை அவன் அடைந்து ஒரு முலையில் சென்று நன்கு அலங்கரித்தவனாய் நின்று காத்து கொண்டிருந்தான். அல்லேலூயா அவன்யூவின் மூலைக்கு அவர் திரும்பும் வரை அப்படியே காத்திருந்து, அவர் கடந்து போகும் போது, நான் அவரிடம் சொல்லுவேன்.
67.    அவன் அங்கே நின்று, அவன்  நினைவு கூற நேர்ந்தது, வாசலில் சந்தித்த அந்த அதே மக்கள் கூட்டம் இங்கு அடையும் போது இரண்டு மடங்கு ஆகிவிடும். நான் அங்கே இருந்த போது அப்படி குள்ளமாய் இருந்தேனோ அப்படியே  இங்கேயும் இருக்கிறேன். எனவே நான் அவரைக் காண முடியாது. அவர்கள் உன் மேலாக நிரம்பி வழிவார்கள். பாருங்கள், காரியங்களைச் செய்வதற்கு தேவன் ஒரு வழியைக் கொண்டிருக்கிறார். அவர் அந்த நோக்கத்துக்காவே அவனை குள்ளமாக உண்டாக்கினார். பாருங்கள்?
68.    ஆனால்  அவன், நல்லது எது எப்படியாயினும், நீங்கள் அறிவீர்கள், நான் அப்படியே ஒரு நல்ல யோசனையைக் கொண்டிருக்கிறேன்;. என்றான். அவன் நின்று கொண்டே நோக்குகிறான், அங்கே ஒரு காட்டத்தி மரம் இருந்தது. இப்பொழுது, அது என்னுடைய சொந்த இடமாகிய இந்தியானாவில் வளர்கிற மரம், ஆனால் அவர்களுடைய நாட்களில்அது ஒரு ஒலிவ மரம் அல்லது ஏதோவொன்று என்று அது அழைக்கப்பட்டது, அது தான் அதற்கான சரியான பெயர் என்று நான் நினைக்கிறேன்.
69.    எனவே அவன், நீங்கள் அறிவீர்கள், கிளைகள் நல்ல உயரமுடையதாக இருக்கிறது. ஆனால் நான் அங்கே அந்த மரத்தில்  ஏறுவேனென்றால், அங்கே மேலே என்மீது யாரும் ஏற மாட்டார்கள். பின்பு அவர் கடந்து போகும் போது நான் அவரை பார்ப்பேன். மேலும் நான் அவர் மேல் கண்களை வைத்தவுடனே அவர்  என்னவாக இருக்கிறார் என்பதை என் சிந்தையில் சரியாக அறிந்து கொள்வேன், பாருங்கள், ரெபேக்காள் இன்னுமாக ஜெபித்துக் கொண்டிருந்தாள். கவனியுங்கள்?
70.    எனவே சகேயு, ஆனால் முதல் கிளையை அடைவதற்கு நான் மிகவும் குள்ளமாய் இருக்கிறேன் என்று சிந்திக்க நேர்ந்தது.  நம்மில் அநேகருடைய சிந்தையும் அவ்வழியாகத்தான் இருக்கிறது …?.... முதல் கிளைக்கு நான் மிகவும் குள்ளமாயிருக்கிறேன். எனவே நல்லது...
71.    நீங்கள் அவரைக் காண விரும்பினால், தேவன் அவரைக் காண்பதற்கு உங்களுக்காக ஒரு வழியை உண்டாக்குவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு வேளை கேலிக்குரியதாய்  இருக்கலாம். ஆனால் தேவன் அவரை காண்பதற்கு ஒரு வழியை உங்களுக்காக உண்டாக்குவார். மேலும் நீங்கள் அறிவீர்கள், அது ஏதோ ஒரு காலையில் நீங்கள் ஒரு முழு சுவிசேஷ வர்த்தகரின் கூட்டத்துக்கு வருவதே உங்களது கௌரவத்துக்கு மிகவும் கேலிக்குரியதாய் இருந்திருக்கும், ஆனால் நீங்கள் அவரைக் காண விரும்பினால், தேவன் தம்மைக் காண உங்களுக்காக ஒரு வழியை உண்டாக்குவார்.
72.    நீங்கள், அங்கே அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன், ஓ என்னேஅவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள்;;;…  நான் அப்படியே உள்ளே போகிறேன், ஏனெனில் நான் உண்மையாகவே அதை நம்பவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் அப்படியே சென்று இந்த காலை சிற்றுண்டிகளில் ஒன்றில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் பார்ப்பேன்  என்று கூறுகிறீர்கள். நீங்கள் கவனியுங்கள்? தேவன் அதைக் காண உங்களுக்காக ஒரு வழியை உண்டாக்குவார், சரியே.
73.    மேலும் அப்போது குள்ள சகேயுக்கு ஒரு யோசனை கிடைத்தது. என்னை பொறுத்துக்கொள்ளுங்கள், நான் இங்கே உங்களை ஏறக்குறைய செவிடாக்கிக் கொண்டிருக்கிறேன்;. நான் திறந்த வெளி அரங்கங்களில்; மற்றும் அவ்விதமானவைகளில் நான் பிரசங்கித்து இருக்கிறேன். எனவே உங்களிடம் கூச்சலிட நான்  எண்ணங்; கொள்ளவில்லை, நண்பர்களே. ஆனால் சகேயுக்கு ஒரு யோசனை கிடைத்தது, அந்த முதலாவது கிளைக்கு அவன் செல்ல முடியுமானால், அந்த உயரத்திற்கு அங்கே யாருமில்லை. எனவே இயேசு தெருவில் வரும் போது, அவர் எப்படி இருக்கிறார் என்பதை அவன் பார்ப்பான், மேலும் அப்போது அவர் என்னவாயிருந்தார் என்ற தன்னுடைய யோசனையை அவன் வெளிக்கொண்டு வந்திருப்பான்;. அப்போது, அவனுக்கு அவரை பிடிக்கவில்லையெனில், மரத்தில் இருந்தபடியே அவரை நிற்கும்படி சொல்லியிருப்பான்.
74.    அதன்பின்  இப்பொழுது இந்த மரத்தின் மேல் எப்படி அவன் ஏறப்போகிறான் என்பதுதான் அடுத்த காரியம். இந்நிலையில் குப்பை சேகரிப்பவன் இன்னுமாக வரவில்லை அங்கே மூலையில் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. 
75.    நல்லது, அவன், அது கேலித்தனமாக இருக்கும், ஆனால் முதல் கிளையை தொடுவதற்கு அது ஏறத்தாழ சிறந்த வழியாக இருக்கிறது என்று நினைத்தான். எனவே அவன் சுற்றிலும் ஒருவருமில்லை என்பதை நிச்சயப்படுத்த சுற்றியெங்கும் நோக்கினான். அவன் குப்பைத் தொட்டியண்டைக்குச் சென்று, அதை மேலே தூக்க முயற்சித்தான். குப்பை சேரிப்பவன்  இன்னும் வந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், எனவே அது நிரப்பப்பட்டு இருந்தது. ஆனால் அது ஒன்று தான் அவன் பார்வையில்பட்டது. எனவே அவன் அதை  தான் பயன்படுத்தி ஆக வேண்டும். நல்லது, அவன் தன்னுடைய சிறந்த வஸ்திரத்தை அணிந்திருந்தான். இப்பொழுது, அவன் என்ன செய்ய போகிறான்?
76.    நல்லது, நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அவரை காண தேவன்  தீர்மானித்து இருப்பாராகில்;, எப்படியாயினும் நீங்கள் அவரைக் காண்பீர்கள், நீங்கள் எதினூடாகப் போகவேண்டும் என்பது காரியமல்ல. அங்கே இழுப்;பதற்கு ஏதோ ஒன்று இருக்குமானால், நீங்கள் ஒரு வேளை புத்தி சாதுர்யமுள்ளவர்களாயிருந்து தலையில் ஒரு காரியத்தை சிந்தித்துக் கொண்டிருக்க கூடும், ஆனால் தேவன் இங்கே கீழே உங்கள் இருதயத்தில் கிரியை செய்துகொண்டிருக்கிறார்.  ரெபேக்காள் ஜெபித்திருந்தாள். அதுதான் நேற்றிரவு அந்த  விசுவாசத்தை உண்டாக்கினது (பாருங்கள்?), ஜெபித்துக் கொண்டிருத்தல்.
77.    எனவே அவன், நல்லது செய்வதற்கு ஒரே காரியம் உள்ளது, அது இந்த குப்பைத் தொட்டியை என்னுடைய கரங்களால் தூக்குவது தான் என்று நினத்தான். மேலும் அவன் காரியத்தில் இறங்கினான். (வியாபாரி), குப்பைத் தொட்டியைப் பிடித்துக்கொண்டே, இங்கே அவன் வருகிறான். அவன் சுற்றிலும் நோக்குகிறான், அங்கே லெவின்ஸ்கி மாத்திரமல்ல, அவனோடு அநேகரும் அவனை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அப்படியே காலை சிற்றுண்டிக்குச் சென்றது போல, அங்கே ஜோன்ஸ் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாரா என அவன் தேடிப் பார்க்க நேர்ந்தது. என்னே! ஒரு மனிதனுக்காக அவனுடைய மனைவி  ஜெபிக்கும் போது அல்லது மனைவிக்காக அவளுடைய கணவன் ஜெபிக்கும் போது தேவன் அவன்ஃஅவள் மீது எப்படியாக அசைவாடக்கூடும்!. அவன் ஒருவேளை பட்டணத்தில் ஒரு பெரும் புள்ளியாக இருக்கலாம், ஆனால் அவனை எப்படி ஒரு சிறும் புள்ளி ஆக்குவது என்று தேவன் அறிவார். ஜெபம் அதைச் செய்கிறது.
78.    எனவே அவன் குப்பைத் தொட்டியை எடுத்து, அவன் நோக்குகிறான், அவனுடைய சிறிய முகம் சிவந்தது, அவன் இந்த வழியாகப் பார்க்கிறான், இங்கு காலணி விற்கும் மனிதன் இருக்கிறான், ஆடை விற்கும் மனிதன் இங்கே இருக்கிறான், மேலும் அவன்ஓ என்னே, இப்பொழுது அவன் பிடிக்கப்பட்டான், எனவே அவன் எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவாய் அப்படியே முன்னுக்கு செல்கிறான்.
79.    எனவே அவர்களில் சிலர், பண்பாளர்களே, நீங்கள் இந்தக் காலையில், கவனித்தீர்களா?, சகேயு அங்கே அந்த காலை சிற்றுண்டியில், நான் கருதுகிறேன். தன்னுடைய கரத்தில் குப்பைத் தொட்டியுடன் இருந்தான் என்று?...
80.    இங்கே அவன் செல்லுகிறான், அவன் அந்த மரத்தின் கீழே வந்தடைகிறான்;, அவனுடைய முகம் சிவந்துள்ளது. அவன் ஏற்கனவே செயலில் பிடிக்கப்பட்டுள்ளான், எனவே இப்பொழுது எழுந்து வெளியே போகவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய செய்கை அறியப்பட்டாயிற்று. நீ இங்கே இருக்கிறாய். நீ ஒரு கூட்டத்திற்குள் சென்று, நீ எழுந்திருந்தால், அது அப்படியே நீ ஏற்கனவே அங்கே இருந்துள்ளாய் என்பதை காட்டுகிறது. எனவே அங்கே ஏதோவொன்று அசைகிறது.
81.      எனவே அவன் தொட்டியை மேலே உயர்த்தின படி ஓடிச்சென்று, அதை கீழே வைக்கிறான், அவனுடைய அழகான உடையை இப்பொழுது பாருங்கள், முழுவதும் குப்பைக் கூளம் - பட்டணத்தின் வியாபாரி, தனிச்சிறப்பு வாய்ந்த வியாபாரி. நல்லது, பிறகு அவன் செய்கிற முதலாவது காரியம் அவைகளின் மேலே ஏறுவது தான். லெவின்ஸ்கியும் மற்றவர்களும்; தெருவில் ஊடாக போய் கொண்N;, சொல்கிறார்கள், உங்களுக்கு தெரியுமா, இங்கேயுள்ள நம்முடைய சினேகிதன் சகேயு அங்கே கிரௌச் அவென்யூவில் பிரபலமான உணவு விடுதியை நடத்திக்கொண்டிருக்கிறான். (பாருங்கள்?) மேலும் அவன் சேகரிப்பவனாக ஆகியிருக்கிறான். அவன் பட்டணத்தின்  குப்பைகளை அகற்றுபவனாக இருக்கிறான்.  , அவனுடைய சிறிய முகம் எரிச்சலடைந்து கொண்டிருந்தது. , என்னே, அவனுடைய நியாயமான கடுங்கோபம் எழுந்திருந்தது.
82.    அவன் இப்படியிருக்கிறான் என்று ரபியிடமும் நாம் சொல்ல வேண்டும்…?... (நீங்கள் அறிவீர்கள், அவர் பிஎச்.டிபட்டம் பெற்ற சங்கை டாக்டராக இருக்கிறார்.) அவருடைய  சபை அங்கத்தினர்களில் (அவன் போகிற பெரிய பகட்டான சபையில்)  ஒருவன் ஒரு குப்பை சேகரிப்பவனாக ஆகியிருக்கிறான். பாருங்கள்?
83.    எனவே, அவர்கள் கடந்து சென்ற பிறகு, குள்ளமான சகேயு குப்பைத் தொட்டியின் மீது ஏறுகிறான். இன்னுமாக அவனால் கிளையை அடைய முடியவில்லை. இப்பொழுது, அவன் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறான், எனவே  அவன் அப்படியே தாவி மரத்தின் மேல் ஏறினான். நல்லது, மரத்தில் தாவி தாவி ஏறுவது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அது தெற்கத்திய வழக்கப் பேச்சு. கஷ்டப்பட்டு ஏறுவது  அதை பற்றி பிடித்து கொண்டு  தாவி தாவி ஏறுவது.
84.    எனவே அவன் முதலாவது கிளையை அடைகிறான், அவன் இங்கே  பார்த்துகொண்டே, அங்கே அவன் உட்காருகிறான்.  வந்துகொண்டிருக்கிற ஒரு பரிசுத்த உருளை பிரசங்கியாரை பார்க்கும் படிக்கு, ஒரு - ஒரு  மனிதன்பட்டணத்தின்  வியாபாரி, தன் ஆடை முழுவதும் குப்பை கூளங்களும், கரங்கள் முழுவதும் மர துண்டுகளின் சிராய்ப்புகளுடன், ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து இருக்கிறது நல்ல தோற்றமாய்  இருக்காதல்லவா! எவ்வகையானவர் என்று உங்களால் கற்பனை செய்ய முடியும், ஆம் அவ்விதமாகதான் அவர் எண்ணப்பட்டார். சிலர் அவரை ஒரு பிசாசு என்றும் ஒரு பெயல்செப+ல் (பேய்களுக்கு அதிபதி) என்றும், ஒரு கலிலேயன் என்றும் ஆரம்ப முதற்கொண்டே அவப்பெயருடன் ஒரு முறைக்கேடாக பிறந்த பிள்ளை என்றும் அவர்கள் எண்ணினார்கள். பாருங்கள், உலகம் அவரை ஒருபோதும் அறிவதில்லை, சகோதரர்களேஅவர்கள் அதை இன்னுமாக அறியவில்லை. நம்மை பைத்தியம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் அப்படியே  அவரை இன்னுமாக சந்திக்கவில்லைஅவ்வளவு தான்.
85.    எனவே அவன் இந்தக் கிளையின் மேலே குறுக்காக கால்களை போட்டு முன்னும் பின்னும் அசைந்தபடி அமர்ந்து கொண்டு இருக்கிறான்இப்பொழுது அது ஒரு அழகான காட்சியாக இருக்காதல்லவா?, அந்த பட்டணத்தின் நல்ல நிலையில் உள்ள ஒரு மனிதன்குப்பைத் தொட்டி, அதை சுற்றிலும் ஈக்கள். இப்போது சகேயுவின் மேலும் ஈக்கள். முழுவதும் குப்பை கூளத்துடனும்  நாற்றத்துடனும் அவனுடைய கரங்களில் சிராய்ப்புகளுடனும் அங்கே அவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். இவை எல்லாம் ஒரு தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட ஏதோ ஒரு மதவெறிபிடித்த கலிலேய தீர்க்கதரிசியை பார்ப்பதற்காகவே, அவனுடைய சொந்த சபையே அதற்கு விரோதமாயிருக்கிறது. அனால், நீங்கள் பாருங்கள், ரெபேக்காள் இன்னுமாக ஜெபித்து கொண்டிருந்தான். அது தான் அதை செய்கிறது.
86.    எனவே அவன் இப்பொழுது பொறுங்கள் நான் இங்கு உட்கார்ந்து  இருந்தால் அவர் என்னைப் பார்க்கக்கூடும். என்னவென்று உங்களக்கு தெரியுமா? அந்த மனிதன் மனதின் எண்ணங்களை பகுத்தறிய கூடியவர் என்று ரெபேக்காள் என்னிடம் கூறினதை நான் அப்படியே நினைவு கூறுகிறேன்.  என்னவென்று உங்களுக்கு தெரியுமா? நான் அவரிடமிருந்து என்னை மறைத்துக் கொள்வேன். ஆகவே அவன் அப்படியே மரத்தில் சற்று உயரத்தில் செல்கிறான். இரண்டு கிளைகள் சந்திக்கும் இடத்தை அவன் காண்கிறான். அது உட்காருவதற்கு ஒரு நல்ல இடத்தை உண்டாக்குகிறது. உங்களுடைய வழியும், தேவனுடைய வழியும் ஆகிய இரு வழிகள் சந்திக்குமிடத்தில் உட்காருவது நம்மனைவருக்கும் ஒரு சிறந்த இடமாய் இருக்கிறது. அங்கே தான் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.
87.    எனவே அவன் இந்தக் கிளையின் மீது அமர்ந்து. அவன், இப்பொழுது  ஒரு நிமிடம் பொறு இந்த கலிலேய தீர்க்கதரிசி. இப்போது நான் திரும்பி வீட்டிற்கு செல்லும் போது, ரெபேக்காள், ‘அவர் பிலிப்புவுக்கு செய்தது போல அல்லது அவர் பேதுருவுக்கு செய்தது போல அல்லது மீதமுள்ள மற்றும் சிலருக்கு அவர் செய்தது போல செய்ததை நீங்கள் அவரிடம் பார்த்தீர்களா? எவ்வாறு அவர் கூடியுள்ள ஜனங்களைப் பார்த்து அவர்களுடைய செய்கைகளை அல்லது அவர்களுடைய நினைவுகளை பகுத்தறிய முடிகிறது என்று கேட்பாள். எனவே நிச்சயமாக அவருக்கு முன்பாக சரியாக நான் உட்கார்ந்து இருக்கிறேன்@ உண்மையாகவே அவர் மேலே நோக்கிப் பார்க்க கூடும். இந்த ஒலிவ மரம் மிகவும் உயரமானது அல்ல, இங்கே மேலே உட்கார்ந்திருக்கிற என்னை அவர் பார்க்க நேர்ந்தால் என்னாவது? நல்லது, நிச்சயமாகவே அவர் என்னைப் பார்த்து விடுவார். ஆனால் - அப்போது மீண்டும், லெவின்ஸ்கி  இங்கே மேலேயிருக்கிற என்னை பார்க்க நேர்ந்தால் என்னவாகும்? அப்படியானால் அவர்கள் அனைவரும் மரத்தை சுற்றி நின்று என்னையே தங்களது விரல்களால் சுட்டிக் காட்டுவார்கள் அல்லவா? இப்பொழுது, ஏதொவொன்றாய் இருக்கவில்லையா? எனவே நான் செய்வதற்கான சிறந்த காரியம் என்னையே மறைத்துக் கொள்வது தான்! என்று கூறினான்.
88.    எனவே அவன் கிளைகளைப் பற்றி, அவையெல்லாவற்றையும் அவனைச் சுற்றிலும் இழுத்து, தன்னை ஒருவரும் காணக்கூடாத வண்ணம் இலைகளோடு இலையாக தன்னை மூடி மறைத்து கொள்கிறான். (பச்சோந்திபோல - ஆசிரியர் ) யாருமே அவனைக் காண இயலாது. ஒரு சிறிய இலையை மாத்திரமே அவன் விட்டு வைத்தான், எனவே அவன் இதைப் போன்று அதை மேலே உயர்த்தி, வெளியே பார்க்க முடியும். மேலும் அந்த சிறு இலை, நீங்கள்அங்கே அவனை யாரும் காணமுடியாது. மரத்தின் கிளைகள் எல்லாம்; அவனைச் சுற்றிலும் இழுக்கப்பட்டிருந்தது. மேலும்  அவன் ஒரு சிறிய குள்ள மனிதனாய் இருந்தபடியால், இந்த மரத்தின் தண்டின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவனாய் கிளைகள் யாவும் அவனை சுற்றியிருக்க, இலைகள் யாவும் அவனை சுற்றியிருக்க, ஒரு சிறு இலை மாத்திரம் அவன் மேலே உயர்த்தி பார்க்க முடிகிற வகையில் இருந்தது. அவன் இப்பொழுது, அவர்கள் அறியப்போவதில்லை. இங்கே யாரும் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. நான் நிஜமாகவே மறைந்திருக்கிறேன் என்றான். நீ கவலைப்படாதே! நீ எங்கே இருக்கிறாய் என்பதை யாரோ ஒருவர் அறிந்திருக்கிறார்.
89.    அவன் அங்கே ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவனாய் உட்கார்ந்து இருக்கையில், மறுபடியும் ஈக்கள் அவனை மொய்த்து கொண்டிருக்கிறது, மேலும் ஒரு இரைச்சலை அவன் கேட்க நேர்ந்தது. அவன் அவர் வந்து கொண்டிருக்க தான் வேண்டும் என்றான். நீங்கள் அறிந்துள்ளபடி, வழக்கமாக அவரை சுற்றிலும் ஒரு இரைச்சல் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் கேட்கலாம்....?
90.    நீங்கள் அறிவீர்கள், பழைய ஆலயத்தில், ஆசாரியன் அபிஷேகம் பண்ணப்பட்டு ஆலயத்தினுள் சென்ற போது, அவன் மீது… (ஆரோன்), ஒரு விசேஷமாக செய்யப்பட்ட மேலங்கியாகிய அவனுடைய ஆடையின் மீது, அங்கே ஒரு மணியும் ஒரு மாதுளம் பழமும் இருந்தது, ஒரு குறிப்பிட்ட மாதிரியான நடை  அவசியமாயிருந்தது. அவன் நடந்த போது, இந்த மேலங்கிகளும், மணிகளும் மாதுளம்பழங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம் என்று அவன் நடக்கும் போது இசைத்தன.  அந்த சத்தம் மாத்திரமே.அவன் இன்னும் உயிரோடிருக்கிறான் என்று கூடியுள்ள சபையார் அறிவதற்கான ஒரே வழி. நான் சிலசமயங்களில் வியக்கிறேன்.
91.    யாரோ ஒருவர் இங்கே சுற்றிலும் ஜீவிக்கிறார் என்பதை பாங்கேர் கட்டாயமாக அறிந்தாக வேண்டும். (Bangor - என்பது இப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கிற பட்டணத்தின் பெயர்- ஆசி.) நீங்கள் நடக்கிற நடக்கையின் மூலமே அது அறியப்படும்: கர்த்தருக்குப் பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம். அந்த சத்தம் துதியையும் மகிமையையும் கொடுக்கிறது. நாம் அவருடைய நாமத்துக்கு நம்முடைய உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரங்களை செலுத்தி, ஆவிக்குரிய பலியை ஏறெடுக்கும் பிரதான ஆசாரியர்களாய் நாம் இருக்கிறோம். அவ்விதமாகத்தான் நாம் இருக்கிறோம். நம் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரத்தை அவருடைய நாமத்துக்குச் செலுத்துகிறோம்.
92.    அப்போது அவர் மூலையை சுற்றி வந்து கொண்டிருந்த  போது, அங்கே பெரிய இரைச்சல் இருந்தது. மேலும் அவன்  பார்க்கும்படி அவனுடைய சிறிய இலையை மேலே உயர்த்துகிறான். அவன், இங்கே என்னை யாரும் ஒருபோதும்  காணமாட்டார்கள் என்றான்.
93.    எனவே மூலையைச் சுற்றிலும் நோக்கி மேலும் அவன்  கவனித்தான், மூலையைச் சுற்றிலும் தள்ளிக் கொண்டு வரும் ஒரு மகத்தான பெரிய மனிதன் அவர்களை, தள்ளிக் கொண்டு…?... அது நான் வருந்துகிறேன், நீங்கள் வழியில் இருந்து ஒதுங்கித்தான் ஆக வேண்டும்.
94.    அவனுக்குப் பின்னால் இரண்டு அல்லது மூன்று மனிதர்கள், நான் வருந்துகிறேன், இந்தக் காலையில் காலை சிற்றுண்டிக்காக எஜமான் அவருடைய பாதையில் வந்து கொண்டிருக்கிறார். நாங்கள் குறுக்கீடு செய்ய முடியாது, வருந்துகிறோம், பின்னால் நில்லுங்கள் என்றனர்.
95.    அவன், அது பேதுரு எனப்பட்ட நபராகத்தான் இருக்கவேண்டும். அந்த மனிதன் யார் என்றும் அவனுடைய தகப்பனார் யார் என்றும் அவர் (இயேசு) சொன்னார். மக்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நடந்து வருகிற அது அவனாக (பேதுருவாக) தான் இருக்கவேண்டும்.
96.    மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு குள்ள சகேயு வெளிப்புறமாக தேடிப்பார்க்கிறான்;. அங்கே  - தன்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவன் ஏன், அவர்கள் இந்தக் காலையில் இங்கே அந்தப் பிள்ளையை வெளியே கொண்டு வந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னால், மருத்துவர்கள் அந்த பிள்ளை மரித்துக் கொண்டிருந்தது என்று சொன்னதை நான் அறிந்திருக்கிறேன். இந்த அதிகாலை காற்றில் அவர்கள் அந்த பிள்ளையை கொண்டு வந்தால்;, அது மரித்து விடும். அவர்கள் அதைச் செய்ய கூடாது. எவ்வளவு மதவெறி பிடித்த ஜனங்கள். அங்கே தகப்பனும் தாயும் இந்த காய்ச்சல் கொண்டுள்ள பிள்ளையை ஒரு கம்பளத்தில் சுற்றினவர்களாய் நின்று கொண்டிருக்கின்றார்கள், மேலும் மற்றொரு நாளில் என்னுடைய உணவகத்தில், அந்த பிள்ளையைப் பற்றி நான் மருத்துவர்களிடம் கேட்ட போது, அது மரித்துக் கொண்டிருக்கிறது. அது அப்படியே ஒரு சிறு காற்று பட்டாலும்  உடனடியாக  அதைக் கொன்றுபோடும் ஆபத்தான ஒரு வியாதி என்று கூறினார்கள். இந்த மதவெறி போதகருடைய இழுப்பினால்; இங்கே அந்த தகப்பனும் தாயும் மருத்துவரின் விதிமுறைக்கு மாறாக அவர்கள் குழந்தையை தெருவில் கொண்டுவந்துள்ளனர் என்றான்.
97.    இப்பொழுது பாருங்கள், அவர்கள் பின்னால் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவருடன் உள்ள பன்னிரண்டு மனிதர்களில் ஒருவன் அவரை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி பாதுகாக்கிறான். அப்படி தான் ரெபேக்காள் சொன்னாள். நல்லது, அந்தப் பிள்ளையை வெளியே கொண்டு வந்ததற்காக அந்த மனிதன் கட்டாயம் சிறையில் போடப்படவேண்டும் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன்.
98.    எல்லாம் ஒரே சமயத்தில், விசுவாசமுள்ள சிறு தகப்பன் அந்த குழந்தையை கரங்களில் சுமந்து வர அந்த நேசமுள்ள சிறிய தாய் தன் முழங்கால்கள் ஏறத்தாழ விழத்தக்கதாத தெருவிற்கு வருகிறாள்.
    இந்த பெரிய மனிதன் பேதுரு, மென்மையாக, அன்பான சகோதரியே, நாங்கள் மிகவும் வருந்துகிறோம், எங்களுடைய எஜமானால் மாத்திரம் இப்படி அதிகமாக நிற்க முடியும் என்கிறான்.
99.    ஆனால் ஓ, அன்பான ஐயா! என்னுடைய குழந்தை மரித்துக்கொண்டிருக்கிறது. அது இன்னும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே  ஜீவிக்கும்உம்முடைய எஜமானர் இடத்தில் இருந்து வரும் ஒரு வார்த்தை முழு போக்கையே மாற்றிவிடும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
100.   சகேயு இலையை இன்னும் சிறிது மேலே உயர்த்திஎன்ன அது?;. வெறும்  ஒரு வார்த்தையா?, என்றான். அதைப்பற்றி அவர் அறிந்திருக்கிறார். ஒரு சிட்டுக்குருவி கூட தெருவில் விழ முடியாது. அவர் அதை அறிவார். இந்தக் கூட்டத்துக்காக உங்களுடைய ஜெபத்தை அவர் அறிந்திருக்கிறார். கடந்து போன எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அன்பானவர்;, இரக்கமுள்ளவர், இனிமையானவர்; ஆக இருக்கிறார், மேலும்
101.   சில மணி நேரத்துக்கு பின்பு அப்படியே, வாசலுக்கு வெளியே பர்த்திமேயு குருடனுக்கு அவர் செய்தது போல அவர் நின்றார். அங்கே அநேக ஜனங்கள் அலறிக்கொண்டும் காரியங்களை செய்து கொண்டும் இருந்ததால், பர்த்திமேயுவின் கூக்குரலை அவரால் கேட்க முடியவில்லை. அவனுடைய (பர்த்திமேயுவின்) விசுவாசம் அவரைத் தொட்டது.
102.   அவர் நின்று பின்னால் திரும்பிப்பார்த்து, மேலும் அவர் மகளே, உன் குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிப்போ, உன் விசுவாசம் உன் குழந்தையை இரட்சித்தது என்றார்.
        இப்பொழுது, நான் சகேயுவை பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட  ஒரு மதவெறியை நீங்கள் எப்போதாவது கேள்விப் பட்டதுண்டா?
103.   மேலும் அந்த நேரத்தில் அந்த தகப்பனும் கூட தன் கரங்களை உயர்த்தி அவன், ஜீவனுள்ள தேவனுக்கு துதி உண்டாவதாக! என் குழந்தையின் சுகத்தை நான் சரியாக இப்பொழுதே  விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறேன் என்றான். குழந்தையின் மேல் சுற்றியிருந்த போர்வையை விலக்கி அவளை தெருவிலே விட்டான், மேலும் ஆறு அல்லது எட்டு வயது உடைய அந்த சிறுமி தெருவில் கயிற்றினால் தாண்டி குதித்து விளையாடத் துவங்கினாள். அது தான் இயேசு.
104.     சகேயு, அது ஆச்சரியம் என்ன தெரியுமா?;, என்னுடைய பெரிய வாயை நான் மூடுவது தான் சிறந்தது என்று நான் அப்படியே தீர்மானித்திருக்கிறேன். ஒரு வேளை நான் தவறாக இருந்து கொண்டிருக்கலாம். நிச்சயமாக, அவர் என்னை காண்பதை  நான் விரும்பவில்லை என்றான். எனவே மீண்டும் தன்னுடைய சிறு இலையை மேலே எடுத்துவிட்டு, அவர் நெருங்கினால் வியப்படைவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன் கீழே பார்க்கிறான். இங்கே சரியாக மரத்துக்கு கீழே வந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் நின்றார். சகேயு, அவர் என்னைக் காண முடியாததற்காக நான் எவ்வளவாய் மகிழ்ச்சியடைகிறேன் என்றான்.
105.   அவர் நின்று மரத்தின் மேலே நோக்கி, சகேயுவே, அங்கிருந்து வெளியே வா,கீழே இறங்கி வா. நான் இன்று சாப்பிடும்படி உன்னுடன் உன் வீட்டிற்குப் போகப் போகிறேன் என்றார். அவன் அங்கே மேலே இருந்ததை மாத்திரம் அவர் அறிந்திருக்கவில்லை அவன் யாரென்பதையும் அவர் அறிந்திருந்தார்.
106.   இயேசு கடந்து சென்ற அந்த இடத்திற்கு அவன் சென்றதற்காக தன்னுடைய ஜீவிய நாட்களெல்லாம் மகிழ்ச்சியடைந்திருப்பான் என நான் யூகிக்கிறேன். எரிகோவின் முழு சுவிசேஷ வர்த்தகரின் சங்கத்தில் அவன் ஒரு அங்கத்தினன் ஆனான். அதில் நானும் ஒரு அங்கத்தினனாக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
107.   அதற்குப் பிறகு ஒருபோதும் அதே ஆளாக அவன் இருக்கவில்லை. ரெபேக்காள் தன்னுடைய ஜெபத்திற்கான பலனைபெற்றாள். அந்த நாளில் அவளுடைய புருஷன் இரட்சிக்கப்பட்டான், மேலும் இயேசு அவளுடைய வீட்டில் உணவு அருந்தினார். அவர் இன்று வீட்டிக்கு உன்னுடன் நான் செல்ல வேண்டும் என்று  கூறினார்.
108.   நண்பர்களே, உங்களோடும் கூட அவர் வீட்டிற்குச் செல்ல முடியும். ஒருவேளை இங்கே ஒரு சகேயு உட்கார்ந்து கொண்டிருக்கலாம், எனக்குத் தெரியாது. அவர் அறிவார். உங்களுடைய உண்மையான  அறிக்கை செய்வதிலிருந்தும் பரிசுத்த ஆவியானவராகிய கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்வதிலிருந்தும், உங்களை விலக்கி ஏதோ வொன்றின் பின்னால் நீங்கள் மறைத்துக் கொள்ள முயற்சித்தால், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை சரியாக அவர் அறிகிறார்சரியாக இப்பொழுதே அவர் உங்களிடம் பேசுகிறார்.சற்றே நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோம்.
109.   அன்புள்ள தேவனே, வழக்கத்துக்கு மாறான ஏதோவொன்று அந்த நேரத்தில் என்னைத் தடுத்தது. நான் உணர்ந்தேன்.அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியேன் கர்த்தாவே, அதை இங்கே இருக்கிற இந்த மக்களுக்கு அதை வெளிப்படுத்தி சொல்லவில்லையென்றால், நான் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன்@ ஆனால் என்னுடைய கதையை நான் முடிக்கவில்லை. இதுவே அந்த நேரமாக இருப்பது போல் காணப்படுகிறது. இங்கே ஒருவேளை  நீர் அப்படியே இன்று  உன்னுடனும் கூட  உன் வீட்டிற்கு செல்ல நான் விரும்புகிறேன் என்று அவர்களுடைய இருதயங்களில்  நீர் சரியாக பேசின சில மனிதர்களும் சில ஸ்தீரிகளுமாகிய  ஒரு சகேயு இங்கே இருக்கக்கூடும்.
110.   இங்கே மேசையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவர்களை நீர் கண்டுபிடித்தீர்;.  இந்தக் காலையில் இந்த வழியாக நீர் கடந்து போக இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டு அவர்கள்  அமர்ந்துள்ளனர். ஓ  தேவனாகிய கர்த்தாவே, அவர்கள் சகேயுவைப் போல, மரத்திலிருந்து இறங்கி, தேவனாகிய கர்த்தாவே, நான் ஏதாவது தவறு செய்திருந்தால், நான் அதைச் சரிசெய்வேன் என்று கூறுவார்களாக. அவர்கள் சபையை உதாசீனப்படுத்தியிருந்தால் அவர்கள் தங்களுடைய ஜெபத்தை உதாசீனப்படுத்தியிருந்தால், ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு விசுவாசி அல்லது ஒரு சபை அங்கத்தினர் என்ற அவர்களுடைய கடமையை  அவர்கள் உதாசீனப்படுத்தியிருந்தால்உம்மை வரவேற்கிறதான பரிசுத்தஆவியை பெற்று கொள்ளுதலை அவர்கள் உதாசீனப்படுத்தியிருந்தால், இந்த காலை வேளையில் அவர்களுடைய இருதயத்தை நீர்  தட்டிக் கொண்டிருக்கிறீர்.
111.   அந்த சிறிய சூழ்நிலைக்கேற்றபடி தன்னை மாற்றி மறைத்துக் கொள்கிற, (பச்சோந்திப் போல் - ஆசிரியர்) அவ்விதமான ஒரு நபர் நழுவி சரியாக வெளியே வந்து வெளிப்படையாக, கர்த்தாவே இன்று என் வீட்டிற்கு வந்து என்னோடு தங்கியிரும். இப்பொழுது நான் உம்மை கொண்டுசெல்ல விரும்புகிறேன்…?... ஒருவேளை ஜெபிக்கிற என் மனைவியினுடைய ஜெபம் அல்லது ஜெபிக்கிற என் கணவருடைய ஜெபம், அல்லது தாயினுடைய ஜெபம், பதிலளிக்கப்பட்டிருக்கலாம். ஜெபங்கள் பதிலளிக்கபட்டது, கர்த்தாவே. சரியாக இங்கே இந்த மேசையில் நீர் என்னை கண்டுபிடித்தீர். அது நீர் தான் என்று நான் இனம் கண்டு கொண்டபடியால் நான் உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன், கர்த்தாவே! நான் என் கரத்தை உம்மிடம் உயர்த்தி, இரக்கத்திற்காக வேண்டிக்கொள்ளுகிறேன். என்று சொல்லும்படியாக அதை சரியாக இப்பொழுதே அருளும் கர்த்தாவே!.
112.   மேலும்  நாங்கள் எங்களுடைய தலைகளை வணங்கி, ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொண்டிருக்கிறபோது, சரியாக உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் இப்பொழுது நீங்கள் உத்தமமாய் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்களுடைய சகோதரனாக நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டால், ஒவ்வொரு இருதயத்தின் நினைவுகளையும் அறிகிற அதே பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது இங்கே இருக்கிறார். அவர் உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார், மேலும் என்னுடைய செய்தியில் ஏதோவென்று, இதுவே அந்த மணி நேரம் என்று சொல்லி என்னை நிறுத்தியது. அவர் யாரோ ஒருவரிடம் பேசியிருக்கிறார். இங்கே ஒருவரும் தங்களுடைய தலைகளை நிமிராதிருக்கும் நேரத்தில், இசைப்பதற்கு நாம் ஒரு சிறு சகோதரியைக் கொண்டுள்ளோம்.
113.   ஆனால் அவர் உங்களுடைய இருதயத்தில் இடைப்பட்டுக் கொண்டிருந்தால்இங்கே இருக்கிற நீங்கள் தேவன் உங்கள் இருதயத்தை அவர் தட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தால் உங்கள் ஜீவியத்தை அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன். (ஏதோ ஒரு காரியம்) ஒருவேளை  அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களானால், உங்கள் கரங்களை உயர்த்தி காட்டுவீர்களா?. அது நான், கர்த்தாவே என்று சொல்லுங்கள். தேவனோடு உத்தமமாக இருங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. வேறு யாராவது? கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. வேறு யாராவது? எல்லாம் சரியே, அவர் தட்டிக் கொண்டிருக்கிறார்
114.   அவருடன் நீங்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்களா? உங்களுடன் அவரை வீட்டிற்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? நல்லது, நாங்கள் அவரை கண்டு கொண்டோம் என்று இன்னுமாக சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களாஆனால் நீங்கள் மரத்தை விட்டு கீழே இறங்கி வர மறுக்கிறீர்கள். நீங்கள் - அதை செய்வீர்களா? அவர் உங்களோடு உங்கள் வீட்டிற்கு போக நீங்கள் விரும்பவில்லையா?
115.   உங்கள் மரணபடுக்கையில் அவர் வர நீங்கள் விரும்புவீர்கள். இந்தக் காலை நீங்கள் அவரை மறுக்கலாம். அங்கே உங்கள் மரணப்படுக்கையில் அவர் இருக்கமாட்டார். தேவனுடைய ஆவியை நீங்கள் துக்கப்படுத்தக் கூடும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்! இப்பொழுது வேறு யாராவது?
116.   நீங்கள், நான் என்னுடைய கரத்தை மேலே உயர்த்தினால், அது என்ன செய்கிறது, சகோதரன் பிரான்ஹாம்? என்கிறீர்கள். நல்லது, அது மரணத்தினின்று ஜீவனுக்கு மாற்றுகிறது. நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தும் போது ஒவ்வொரு விஞ்ஞான விதியையும் நீங்கள் உடைக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே.
117.   உங்களுடைய கரங்கள் கீழே தொங்கித்தான் இருக்குமென்று விஞ்ஞானம் கூறுகிறது. புவிஈர்ப்புவிசை அதை கீழே வைத்திருக்கிறது. ஆனால் அங்கே ஒரு ஆவி உங்களைச் சூழ்ந்துள்ளது, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றிலுமிருக்கிற அந்த ஆவியான ஒருவர் பரிசுத்த ஆவியானவரே, மேலும் அவர் உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார், நீ தவறாய் இருக்கிறாய் உங்கள் இருதயத்தில் இந்த எல்லா பொல்லாத காரியத்துடன் நீங்கள் கிறிஸ்தவனாக இருப்பதாக பறைசாற்றி கொள்கிறீர்கள்.  சகேயுவைப் போல, தான் ஒரு விசுவாசி என அவன் நினைத்தான். நீங்கள் கூட்டங்களை குறை கூறுகிறீர்கள்@ முதலாவதாக நீங்கள் அவைகளை நம்பவேயில்லை. இப்பொழுது, நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், பிள்ளையேஅது நிச்சயமாகவே, நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தின போது.
118.   அது புவி ஈர்ப்பு விதிகளை உடைக்கிறது, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துகிறீர்கள். எனக்கு இயேசு தேவை. அது எனக்கு என்ன விலைக்கிரயமாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. என்னுடைய கௌரவம் மற்றும் எல்லாவற்றையும் நான் இழக்க நேர்ந்தாலும்;, நான் என்னையே இழந்தாலும், நான் அதை உம்மில் கண்டுபிடிப்பேன், கர்த்தாவே.  நான் என் கரங்களை இங்கே உயர்த்துகிறேன்;. தேவனே. நான் ஒரு கிறிஸ்தவனென்று அறிக்கையிடுகிறேன், ஆனால் நான் என்னுடைய இருதயத்தில் கோபம், பொல்லாங்கு மற்றும் எல்லாவற்றையும் கொண்டுள்ளேன். இந்தக் காலையில் அதை என்னை விட்டு எடுத்துப் போடும், கர்த்தாவே. மரத்தின் மேலிருந்த சகேயுக்கு நீர் செய்தது போல, இந்த மேசையில் இங்கே என்னை நீர் கண்டுபிடித்தீர்; என்று உங்களில் உள்ள ஆவி தீர்மானம் செய்துள்ளது. நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா?
       நான்கு தகப்பன்மார்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினர்கள், ஆனபோதிலும் அங்கே ஒருவர் தான் தற்போது இருக்கிறார். இப்பொழுது அப்படியே தேவன் பேசிக் கொண்டிருக்கிறார்.
119.   அவருடைய ஊழியக்காரனென்று நீங்கள் என்னை விசுவாசித்தால்? இருப்பினும் அந்த ஒருவரும் போய் விட்டார். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே. சரி. தீர்மானம் உங்களுடையது. இயேசு மரத்தின் மேலேறி, அவனை வெளியே வலுக்கட்டாயமாக தள்ளவில்லை, அவன் தன்னுடைய சுயமாகவே வெளியே வர வேண்டியதாயிருந்தது.
120.   நாங்கள்  தொடந்து ஜெபித்துக் கொண்டிருக்கிற போது, தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, எல்லா நல்ல வரங்களையும் தருபவரே, உம்முடைய பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்து எங்களுக்கு அனுப்பின வரமாய் இருக்கிறார், நாங்கள் அவரை நேசிக்கிறோம். அவர் எங்களுடைய மேய்ப்பராய் இருக்கிறார். நாங்கள் தாழ்ச்சி அடைவதில்லை. மேலும் அவர் எங்களை அமர்ந்த  தண்ணீரண்டை  வழி நடத்தி எங்கள்   ஆத்துமாக்களை தேற்றுவதற்காக நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்களை நீர்கால்களின் ஓரமாய் நட்டு, இலையுதிராதிருக்கிற மரத்தை போலவும், மரணத்திலும் கூட அந்த இலைகள் காய்ந்து போகாது. இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், ஏற்கனவே காத்துக் கொண்டிருக்கிற ஒன்றை நாம் கொண்டிருக்கிறோம். ஒன்றுமே காய்ந்து போகாது@ நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறோம்;. அந்த அழிந்து போக முடியாத தேவனுடைய சொந்த ஜீவனை ஆவியாக நமக்குள் நிவாசம் பண்ணுகிறது. கிறிஸ்து அதை வாக்குத்தத்தம் செய்தது போல், அது மேலே எழும்பிதான் ஆகவேண்டும்.
121.   தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களையும், அதை உயர்த்தி இருக்கவேண்டியவர்கள், முடிந்தும் அதைச் செய்யாதவர்களையும் நீர் மிக அதிகதிகமாக, அபரிமிதமாக ஆசிர்வதிக்க வேண்டுமென்று இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். சகோதரர்கள் சகோதரிகள்; மத்தியில் உள்ள இந்த அன்பின் ஆவி ஒரு போதும் மரித்துவிடாதிருக்கவும், அது அவர்கள் மத்தியில் எப்போதும் ஜீவனுள்ளதாய் இருக்கவும் நான் ஜெபிக்கிறேன் கர்த்தாவே, வேறுபாடுகள் எல்லாம் இரத்தத்தின் கீழே இருக்கட்டும், இயேசு வரும் மட்டும்  அந்த ஐக்கியம் நிலைப்பதாக! மகத்தான ஒரே சரீரமாக  நாங்கள் ஒன்றர கலந்திருப்போமாக, இதை அளியும், தகப்பனே.
122.   வியாதியஸ்தராய் இங்கே இருப்பவர்களை ஆசிர்வதியும்@ அவர்கள் இப்பொழுது அப்படி இருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். உம்மிடமிருந்து உதவியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியானவர்தான் என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும். எங்களுடைய எல்லா வியாதிகளுக்கும் அவரே சுகமளிப்பவர்;.  உலகத்துக்கு யாத்திரிகர்களும், அந்நியர்களுமான, உம்முடைய சொந்த நேச பிள்ளைகளின் சரீரங்களின் வியாதிகளையும், பெலவீனங்களையும், எடுத்துப்போட்டு எங்கள் மத்தியிலிருக்கும் எல்லா வியாதிகளையும்; அவர் இப்பொழுதே சுகமாக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இதை அளியும், பிதாவே.
123.   இந்தக் காலையில் இங்கேயிருந்து நாங்கள் செல்லும் போது, நலமுடன் சுகமுடன் எங்களுடைய ஆவியிலும், இருதயத்திலும் புதுப்பிக்கப்பட்டவர்களாய், களிகூர்ந்து  சந்தோஷத்துடன், நாங்கள் போவாமாக! நாங்கள் வௌ;வேறு மூலைகளுக்கு சென்று மேலும் எரிவாயு நிரப்பு நிலையங்களிலும், இன்னும் அதிகதிகமான, இடங்களிலும் சாட்சி பகருவோமாக!  இயேசு மாறாத கர்த்தராகவே நிலைத்திருக்கிறார்.  இதை அளியும், கர்த்தாவே!
124.   இந்தக்காலையில் இங்கிருக்கும் ஊழியக்காரர்களை அதிகமாய் ஆசிர்வதியும், வியாபாரிகள் அவர்களுடைய வியாபாரம் செழிப்பதாக. எங்களுடைய பிதாவுக்கடுத்த வேலையே இன்றைய  தேவையும் மிகவும் மகத்தான வியாபாரமுமாய் இருக்கிறதென்பதை நாங்கள் யாவரும் அறிந்து கொள்ளட்டும், தேவனே எங்களைக் கிறிஸ்தவ பண்பாளர்களும், கிறிஸ்தவ சீமாட்டிகளுமாய் நடத்தி கொண்டு, அவருடைய நேசப்பிள்ளைகளாக அவருக்கடுத்த வேலையில் நாங்கள் இருப்போமாக. இதை அருளும், பிதாவே! இதை நாங்கள் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென்.
       நீங்கள் உண்மையாகவே நன்றாக உணருகிறீர்களா? இன்னும் ஐந்து நிமிடங்கள் எனக்குக் கிடைக்குமா? நீங்கள் உண்மையாகவே துரிதப்படுகிறீர்களா? நான் இன்னுமாக உங்களிடம் ஒன்றை பேச விரும்புகிறேன்.
125.   நான் இன்று இருக்கிற இந்த முழு சவிஷேதரப்பட்டியலில் நான் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், அதை நான் விசுவாசிக்கிறேன். நம்முடைய சரீரங்கள் ப+மியின் தூளிலிருந்து வந்ததென நான் விசுவாசிக்கிறேன். நாமெல்லாரும் அதை அறிவோம். முதலாவது வேதாகமமே அதைச் சொல்லுகிறது.விஞ்ஞானம் அதை நிரூபிக்கிறது. ப+மியின் பதினாறு மூலப்பொருட்களினால் நாம் உருவாக்கப் பட்டுள்ளோம்: பெட்ரோலியம், பொட்டாஷ், காஸ்மிக் ஒளி, மற்றும் பல, அணுக்கள். பிறகு அது அப்படியிருந்தால்;, இந்த உலகமானது ஒன்றுமில்லாமல், ஆனால், ஒரு மங்கிய எரிமலையாக இருந்த போது, நம்முடைய சரீரங்கள் இந்த பூமியில் கிடந்தன. உங்களை சிறிது உற்சாகப்படுத்துவகற்காக!.
126.   நான் ஒரு புதிரான நபர் எனவும், ஒரு தனிமை விரும்பி எனவும் ஜனங்கள் எண்ணுகின்றனர். ஆனால் நான் அப்படி இல்லை. நான் உங்களுடைய சகோதரன். ஆம். உண்மையாகவே கொஞ்சம்   மெய்யான ஐக்கியம் கொள்ளும்படி நான் உங்களுடன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன். அங்கே மேல் மாடியில் எனக்காக ஒரு சிறிய அறை காத்துக் கொண்டிருக்கிறது. ஒரே சமயத்தில் நான் தேவனுடைய ஒரு ஊழியக்காரனாகவும் மனிதனுடைய ஒரு ஊழியக்காரனாகவும், இருக்க முடியாதுகாரியத்தை பற்றி  உங்களிடம் அப்படியே பேசுவதற்கு,ஓரளவு எனக்கு நானே தரித்திருந்து ஜெபிக்க வேண்டும். நாம் நினைப்பதைக் காட்டிலும் அது காலதாமதமாகி  இருக்கலாம்.
127.   நாம் பூமியில் விதையை பெற வேண்டும். நான் பின்லாந்தை விட்டபோது, சில நாட்களுக்கு முன்னால் சரியாக முதலாவது யுத்தத்திற்குப் பிறகு, அல்லது கடைசி உலக யுத்தத்திற்கு பிறகு, அங்கே மனிதர்களும், ஸ்தீரிகளும் நுகத்தில் பூட்டப்பட்டவர்களாக கட்டப்பட்டு இருந்தார்கள், இரவில் சிறு பிள்ளைகள் கைவிளக்கு  ஏந்தினவர்களாய் அவர்களுக்கு முன் ஓடிக் கொண்டிருக்க, அவர்கள் தரையை கொத்தி கிளரிக் கொண்டிருந்தார்கள். ஏதோவொரு வழியில் அவர்கள் தரையின் பரப்பை உடைத்து, அங்கே விதையை விதைக்க வில்லையென்றால், அடுத்த வருஷம் அவர்களெல்லாம் பட்டினி கிடப்பார்கள். பனி வருவதற்கு முன் அவர்கள் விதைத்து முடிக்கவேண்டும். அவர்கள் அதை இரவென்றும் பாராமல் விதைத்து ஆக வேண்டும். அவர்கள் ஒருபோதும் நிறுத்தமுடியாது. கைவிளக்குகள். அவர்கள் டிராக்டர்களை பயன்படுத்த முடியவில்லை. அவர்களிடத்தில் அவைகள் ஒன்றுமில்லை, அவர்கள் நிலத்தை கிளரி உழும் அந்த கருவியை இழுப்பதற்கு தங்கள் ஸ்திரிகள் மேல் அந்த நுகத்தை வைத்துப் பூட்டினார்கள். புருஷர்கள் சரியாக பின் இருந்து நடத்தினார்கள்  விதையை விதைத்தாக வேண்டும். அல்லது அங்கே விளைச்சலே இராது.
128.   சகோதர, சகோதரிகளே, நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அது காலதாமதமாகி இருக்கலாம். ஏதோவொரு வழியில் நிலத்தைக் கொத்தி கிளரியாகவேண்டும்.  இரவோ பகலோ நிறுத்த முடியாது. ஜனங்களின் இருதயங்களில் வார்த்தையாகிய விதையை நாம் விதைத்தாக வேண்டும். நாம் அதை செய்யவில்லையெனில், அங்கே ஒரு அறுவடையே இருக்காது.... (ஒலி நாடாவில் இடை வெளி... ஆசி-). மேலும் பூமியிலிருந்து

No comments:

Post a Comment