மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Friday, July 8, 2011

அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?



(அப்போஸ்தலர் 19:3)
       ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவ சபையின் ஒரு பாகமாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வந்த யோவான்ஸ்நானகன் முதற் கொண்டு இருந்து வருகின்றது.
       யோவான் மனந்திரும்புதலுக்கென்று யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான் (மத்தேயு 3). அவனுடைய செய்தியானது இயேசுகிறிஸ்துவை கர்த்தரென்று மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அவர்களுடைய இருதயத்தை ஆயத்தப்படுத்து வதாக இருந்தது. (ஏசாயா 40:3). இயேசு தாமே யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் (மத்தேயு 3: 13-15). ஆதலால் அவரே நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
       இயேசுகிறிஸ்துவை இன்று தங்கள் சொந்த இரட்சகராகவும், கர்த்தராகவும் அறிக்கையிடும் அநேகர், தங்கள் சபைகளில் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின்படி பட்டப் பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறார்கள். ""ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து...'' (மத். 28:19).
       தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று ஆமோதிக்கின்ற இதே மக்கள், அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் 38ம் வசனத்தை மறுதலிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ செய்கின்றனர். ""பேதுரு அவர்கùள நோக்கி நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' (அப்.2:38). ஏனென்றால் தங்கள் சபைகளின் போதகமானது அப்போஸ்தலர் 2:38க் குறித்த வெளிப்பாடின்றி இருப்பதால், பேதுருவினுடைய வார்த்தையை நம்முடைய கர்த்தருடைய வார்த்தைக்கு இரண்டாம் பட்சமாக கருதுகின்றனர்.
       இயேசுதாமே மத்தேயு 4:4ல் ""மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்,'' என்று கூறுகின்றார். ஆதலால் பேதுரு அப்போஸ்தலர் 2:38ல் கூறிய வார்த்தைகள், இயேசு மத்தேயு 28:19ல் கூறினதிலிருந்து முரண்பட்டதாயுள்ளதா என்று கேள்வி எழுகின்றது?
       தேவனுடைய வார்த்தையானது எப்போதுமே தனக்குள்ளாகவே முரண்பாடானதாய் இருப்பதில்லை, ஆனாலும் மனிதனுடைய புரிந்து கொள்ளுதலின்படி பார்த்தால் தேவனுடைய தவறாத வார்த்தையானது எதிர்மாறான கருத்துக்களை உடையதாக தென்படும்.
       தயவு கூர்ந்து இவ்வெண்ணங்கùள ஆழ்ந்து யோசிக்கவும். இதற் கெல்லாம் ஒரு பதில் இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது சத்தியமாய் இருக்கின்றது (யோவான் 17:17). இச்சத்தியமானது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வெளிப்பட்டால்தான் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து கொள்ளவும், அவரைக் குறித்து தெரிந்துக் கொள்ளவும் இயலும், தமது சபைக்காக வருகிற அவரது வருகை வெகு அருகாமையிலுள்ளது.
       நேர்மையான மக்கள் பலர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர், அல்லது சில சூழல்களில் குழப்பமுற்று இருக்கின்றனர். காரணம் என்ன? ஸ்தாபன சபைகள், தேவனுடைய வார்த்தையைக் குறித்து பரிசுத்த ஆவி தரும் வெளிப்பாட்டைத் தள்ளி வேத சாஸ்திரத்தை வைத்திருப்பதுதான்.
       பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினுடைய நாமம் என்ன? இக்கைப்பிரதியைப் படிக்கும் அநேகர் மத்தேயு 28:19ன்படி ஏற்கனவே ஒரு ஸ்தாபன சபையில் முழுக்கு ஞானஸ்நானமோ அல்லது தெளிப்பு ஞானஸ்நானமோ பண்ணப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் அந்த நாமம் என்னவென்பதை அவர்கள் இன்னமும் அறியாமல் இருக்கின்றனர். மற்றவர்களோ தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள எண்ணிக்கொண்டிருப்பர், ஆதலால் அந்த நாமம் என்னவென்பதை ஞானஸ்நானம் பண்ணப்படும் முன்னர் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
       பிதா ஒரு நாமமல்ல, குமாரன் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி ஒரு நாமமல்ல.
       உங்களுடைய வங்கி காசோலையில் பிதா, குமாரன் அல்லது தாத்தா என்ற வார்த்தையை நீங்கள் கையொப்பமிட்டால், அது ஒரு விசித்திரமான செயலாக இருக்கும் அல்லவா? இப்படி கையொப்பமிடப்படுகின்ற காசோலை செல்லாது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பின்னர் ஏன் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயரில் ஞானஸ்நானம் எடுக்கின்றீர்கள்?
       "இயேசு இவ்விதமாக ஞானஸ்நானம் எடுக்கச் சொன்னார். அதுவே எனக்கு போதுமானது' என்று நீங்கள் சொல்லலாம். இயேசு இவ்விதமான கட்டளையைக் கொடுத்தார் என்பது உண்மை தான், மேலும் இக்கட்டளை போதிக்கப்பட்டுக் கைகொள்ளப்பட்டால் சகல நாட்களிலும் நம்முடனே கூட இருப்பார் என்று மத்தேயு 28ம் அதிகாரம் 20ம் வசனத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
       பவுல் தமஸ்கு செல்லும் வழியில் அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் சந்தித்தவர் அதே இயேசுதானே? அல்லது பெந்தே கொஸ்தே நாளிலே மேலறையிலே கூடி இருந்த பேதுருவையும், மற்ற 119 ஆண்களையும், பெண்களையும் அபிஷேகித்து நிறைத்தது அதே பரிசுத்த ஆவிதானே? (அப் 2: 14). இயேசுவும், யோ. 14: 16,18 வசனங்களில் ""நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காtமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்,'' என்று கூறுகின்றார். சிலுவையிலறையப்பட்டு, மரித்து, பின்பு உயிரோடெழுந்த நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் 14ம் வசனம் தொடங்கி 36ம் வசனம் வரைக்கும் பேதுருவின் மூலம் பேசுகின்றார். பேசப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த, இயேசுவை சிலுவையிலறைந்த இம்மக்கள் தங்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டதைக் கண்டு, கதறி அழுது, குத்தப்பட்டவர்களாய், ""சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்'' (அப். 2:37). பிறகு 38ம் வசனத்தில் பேதுருவின் மூலம் பேசிக் கொண்டிருந்த கர்த்தராகிய இயேசு, ""நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'', என்று கூறினார்.
       மத்தேயு 28:19ல் இயேசு தாமே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும் எனக் கூறின போது, அவர்தாமே தம்மைக் குறித்தும் தம்முடைய நாமத்தைக் குறித்த வெளிப்பாட்டின் உண்மையைக் குறித்தும் பேசுகின்றார், மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் தன் பரலோகப் பிதாவின் நாமத்தை அறிந்து, அந்த நாமத்திலே தண்ணீர் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று அறிவான். இயேசு தாமே பிதாவின் நாமத்தை வெளிப்படுத்தினார் (யோவான் 17:6).
       பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, ஒரு கிறிஸ்தவ விசுவாசி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும். தெளிப்பு ஞானஸ்நானம் அல்ல, இயேசு ஞானஸ்நானம் எடுத்தபடி முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும். அதுவும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, இந்த வெளிப்பாட்டை பெற்ற ஒருவர் மூலமே ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும்.
       நீங்கள் பட்டப் பெயர்களிàல் ஞானஸ்நானம் பண்ணப் பட்டிருந்தால், மறுபடியுமாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அப்போஸ்தலர் 2:38ன்படியே ஞானஸ்நானம் பெறவேண்டும். அதுவே பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவதற்கு தேவன் கொடுத்துள்ள ஒரே வழியாகும். ""வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்'' என்று கொலோசேயர் 3:17 கூறுகின்றது. ஞானஸ்நானம் என்கிற வார்த்தையானது நிச்சயமாகவே அறிக்கையும் கிரியையுமாயுள்ளது.
       மூன்று பேரைக் கொண்ட திரித்துவ தேவனைக் குறித்து எந்த ஒரு குறிப்பும் தேவனுடைய வார்த்தையில் கிடையாது. திரித்துவ உபதேசமானது வேதாகமத்திற்கு மாறுபாடுள்ள ஒன்றாகவும் பிழையானதாகவும் இருக்கிறது. ""தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மை யோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்'' (யோவான் 4:24). மாற்கு 12:29. ""இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்'' ""ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார் மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக் குள்ளும் இருக்கிறவர்'' (எபே.4: 56).
       முதல் ஸ்தாபன சபையும், மற்ற ஸ்தாபிக்கப்பட்ட சபைகள் ஏற்பட அடிப்படைக் காரணமாயிருந்த திரித்துவ உபதேசமும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களினால் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானம் கி.பி. 325 ஆம் வருடத்தில் கூடின நிசாயா ஆலோசனைச் சங்கத்தில்  சபை போதகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த போதகம், இந்த நிசாயா ஆலோசனை சங்கக் கூட்டம் இவைகளைக் குறித்து உங்கள் நூலகங்களிலுள்ள குறிப்பேடுகளிலிருந்து நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
       கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு என்னும் கல்லின் மேல் கட்டப் பட்டுள்ளது (மத்தேயு 16: 16,18). ஆனால், மனித அறிவாராய்ச்சித் திறமை, மூவரையுடைய திரித்துவ உபதேசம், பட்டப் பெயர்களைக் கொண்டு கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானம் இவைகள் யாவும், இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலுக்கு பதிலாக இணையாக்கப்பட்டு  இன்றைய தினம் வரைக்கும் இருக்கின்ற ஸ்தாபன முறைமைகள் தோன்றும் படி ஆயிற்று.
       ""தேவன் ஆவியாயிருக்கிறார்'' (யோவான் 4:24), ஆனால் அவர் மூன்று அலுவல்களில் தம்மை வெளிப்படுத்துகின்றார்; எல்லாவற்றையும் சிருஷ்டித்த பிதாவாகவும், தம்முடைய குமாரனும் நம்முடைய இரட்சகரும், மாம்சத்தையும் இரத்தத்தையும் உடைய சரீரத்தின் வெளிப்பாடாகிய இயேசுவாகவும், இப்பொழுது இதை வாசிக்கின்ற உமக்கு தம்முடைய வார்த்தையின் மூலமாக தம்மையே வெளிப்படுத்துகின்ற பரிசுத்த ஆவியாகவும் இருக்கின்றார்.
       தேவன் ஆவியாயிருக்கிறார், அவர் இழந்து போனவர்களை மீட்கவும், அவர்கùள தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் மாம்சமும் இரத்தமும் உடைய தம்முடைய குமாரனின் சரீரத்திற்குள்ளாக வந்தார். (எபிரேயர் 10:5). ஏதேன் தோட்டத்தில் நடந்த மூலபாவத்தை தவிர்க்க, சரீரமாகிய குமாரன் ஒரு கன்னியின் வயிற்றிலே பரிசுத்த ஆவியினாலே நிழலிடப்பட்டதால் (லூக்கா 1:35) அவதரித்தார். அப்படியென்றால், இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். இயேசுவாகிய குமாரனுக்கு இரண்டு பிதாக்களா?
       திரித்துவம், ஒருத்துவம், ஆகிய இரண்டு போதகங்களும் பிழையானதாய் உள்ளன. தேவனுடைய வார்த்தையானது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைக் குறித்து வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதாயுள்ளது. எல்லா கிறிஸ்தவரும் இயேசுவே தேவனுடைய குமாரன் என்று அறிக்கை பண்ண வேண்டும் (1 யோவான் 4:15)
       இயேசுவாகிய குமாரன், பரிசுத்த ஆவியாகிய பிதா தங்கிய அல்லது வெளிப்பட்ட சரீரமாகவும், மாம்சத்தையும் இரத்தத் தையும் உடைய கூடாரமாகவும் இருந்தார். ஆனால் இது குமாரனாகிய இயேசுவை மூவரைக் குறித்த திரித்துவத்தின் இரண்டாம் பாகமாக ஆக்கிவிடாமல், தேவன் தம்மைத் தாமே வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. (யோவான் 1: 1,14). அவருடைய சரீரமாகிய மாம்சமும் இரத்தமும், நாம் தேவனுடைய சமூகத்துக்குள் தைரியமாய் பிரவேசிப்பதற்கும் (எபிரேயர் 10:19) அவரை அறிந்து, அவருக்குள் இருப்பதற்கும் பலியாயிருக்கின்றது. ""அன்றியும் நாம் சத்தியமுள்ளவரை அறிந்து கொள் வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரàகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்'' (1 யோவான் 5:20).
       வேதாகமானது, தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, நம் மத்தியிலே வாசம் பண்ணினார் என்று தெள்ளத்தெளிவாக கூறுகின்றது. குமாரனாகிய இயேசு தமது சீஷர்களிடம் ""என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்'' ன்றார் (யோவான் 14:7).
       அவர்கள் அவரை அறிந்திருந்தால்! அவரை அறிந்துக் கொண்டார்களா? ஆம், அவரை அறிந்திருந்தார்கள், அவரை ஒரு மனிதனாகவே அறிந்திருந்தார்களேயன்றி, ஆவியாயிருக்கிற தேவன் மாம்சத்திலும், இரத்தத்திலும் வெளிப்பட்டிருக்கிறார் என்ற வெளிப்பாடு இல்லாதவர்களாய் காணப்பட்டார்கள். ""என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்'' என்று இயேசு சொன்னப்படியே, பிதாவை அறிந்திருப்பீர்கள். அது மாத்திரம் அல்ல, அவரைக் கண்டும் இருப்பார்கள். ஆவியாயிருக்கிற தேவன் குமாரனுடைய மாம்சத்திலும், இரத்தத்திலும் வந்தார் என்ற வெளிப்பாட்டின் மேல் கிறிஸ்துவினுடைய சபையானது கட்டப்பட்டுள்ளது. ஆதலால் கர்த்தருடைய வருகையில் அவருடன் இருக்க ஒவ்வொரு மறுபடியும் பிறந்த குமாரனும், குமாரத்தியும் இவ்வெளிப்பாட்டை உடையவர்களாய் இருத்தல் அவசியம்.
       யோவான் 14: 16-20ல் இயேசுவானவர் தேற்றரவாளனைக் குறித்து பேசும்போது இதே சத்தியம் உறுதிபடுத்தப்படுகின்றது. தேற்றரவாளன் என்பவர் யார்? நம்மை மீட்பதற்கென்று, குமாரனுடைய மாம்சமும், இரத்தமும் கல்வாரியைக் கடந்த பிறகு, விசுவாசிக்காகவும், விசுவாசிக்குள்ளும் வெளிப்பட்ட தேவனே ஆகும். தேற்றரவாளன் அந்நேரத்தில் வரவில்லை. ஆனால் இயேசு, ""நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள்,'' ன்றார். ஏன்?
       இயேசுவானவர்தான் அந்த பரிசுத்த ஆவி; மாம்சத்திலும் இரத்தத்திலும் வெளிப்பட்ட தேற்றரவாளன்; கல்வாரிக்கு பிறகு அவர் அவர்களிடம் வந்து அவர்களுக்குள்ளும் இருப்பார்.
       இக்கைபிரதியானது இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப் பாட்டின் எல்லா அம்சங்களையும், வேத வசனங்களில் அவர் நாமத்தைக் குறித்து சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விவரிக்க எழுதப்படவில்லை. ஆனால் பிழையுள்ள திரித்துவ போதகத்தைக் குறித்தும், திரித்துவ பட்டப் பெயர்களினால் கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானத்தைக் குறித்தும் உங்களுடைய சிந்தையைத் தூண்டி அதனால் காரியங்கள் இப்படியிருக்கின்றதா என்று நீங்கள் தாமே தேவனுடைய வார்த்தைகùள ஆராய்ந்து பார்க்கவுமே (அப். 17:11) இது எழுதப்பட்டுள்ளது.
       கர்த்தராகிய இயேசுகிறஸ்து தமது சபைக்காக வரும் முன்னர், மறுபடியும் பிறந்த பிள்ளைகளை தேவனுடைய வார்த்தைக்குத் திருப்பத்தக்கதாக எலியாவின் ஆவியும் வல்லமையும் கொண்ட ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவதாக தேவன் தாமே தம்முடைய வார்த்தையில் வாக்குரைத்துள்ளார், இக்கைப்பிரதி களிலுள்ள உண்மைகளும் மற்ற உண்மைகளும் வில்லியம் பிரன்ஹாமின் ஊழியத்தின் மூலம் தேவனால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (மல்கியா 4:5-6).
       எல்லாம் வல்ல கர்த்தர் தாமே தம்மைக் குறித்தும், தம்முடைய நாமமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் உங்களுக்கு வெளிப்படுத்துவாராக.
       ""ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பின வராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்'' என்று யோவான் 17:3 கூறுகின்றது.
       பின்னும் இயேசுவானவர் மத்தேயு 24:44ல் ""நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்'' என்று கூறியுள்ளார். ஆதலால் வேத வார்த்தையின்படியே உள்ள கிறிஸ்தவ ஞானஸ்நானத்தை நீங்கள் இன்னும் பெறாமல் இருந்தால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாயிருக்க விரும்பினால், நீங்கள் தாமே ஜெபத்துடன் கர்த்தரிடத்தில் காத்திருந்து அப்போஸ்தலர் 2:38ன்படியே ஞானஸ்நானம் பெறுங்கள்.


அன்புடன் உங்கள் சகோதரன்கள்,
சகோ.ஜீவகிருபைநீதி,
சகோ.ஜீவஜெயம்.
தொடர்புக்கு:- +919884595250.



No comments:

Post a Comment