மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, May 26, 2011

இயேசு கிறிஸ்து மாறாதவராயிருக்கிறார். பாகம்-3

           

இயேசு கிறிஸ்து மாறாதவராயிருக்கிறார்.
பாகம்-3

12…வேத்தில் ஒருவர்…அது பவுல் என்று நம்புகிறேன்…மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. முதலாம் வானமே இவ்வளவு மகிமை பொருந்தினதாயிருக்கு மானால்,மூன்றாம் வானத்தின் மகிமை எப்படி இருந்திருக்கும்? அதைக் குறித்து பவுலால் பதினாங்கு ஆண்டுகளாக பேச முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. அவன் சரீரத்திலிருந்தானோ,சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ என்று தெரியவில்லையென்று அவன் கூறுகிறான்.அந்த மகத்தான அப்போஸதலனுடன் கூட நானும் சேர்ந்து…அவனுடைய உத்தியோகத்தை பகிர்ந்து கொள்ளவோ அல்லது என்னை அவனுக்கு சமமாக்கிக்கொள்ளவோ நான் முயலவில்லை…நான் சரீரத்திற்க்கு புறம்பேயிருந்தேனோ என்று அறியேன் என்று கூற விரும்புகிறேன்.ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும்.உங்களை எவ்வளவு தத்ரூபமாக அது அமைந்திருந்தது.
14.ஆனால் நான் கொண்டிருந்த கருத்து தவறென்று உணருகிறேன். ஏனெனில், பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், வேறொன்று நமக்காகக் காத்திருக்கிறதுஎன்று வேதம் கூறுகின்றது. காதுகள்,உதடுகள்,சிந்தை இவற்றை கொண்ட வேறொரு, கூடாரம். பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும் பேசக்கூடிய, உணரக்கூடிய மற்றொரு சரீரம்.
செய்தி:- புத்திரசுவிகாரம்-பாகம்-1       மே 15,1960.
65.அன்றொரு நாள் இரவு-இல்லை,காலை 7 மணிக்கு பரிசுத்த ஆவியானவர் தமது நன்மையினாலும் கிருபையினாலும் என்னை இந்த சரீரத்திலிருந்து கொண்டு சென்ற போது;அப்படித்தான் என்று நம்புகிறேன்.அப்படித்தானோ இல்லையோ என்று கூறத் தெரியவில்லை-அந்த தேசத்திற்குள் பிரவேசித்து, அங்கிருந்த ஜனங்களைக் கண்டபோது,அவர்கள் எல்லோரும் வாலிபராயி ருந்தார்கள்.என் வாழ்கையிலேயே நான் கண்டேன்,அவர் என்னிடம், அவர்களில் சிலர் 90 வயது நிரம்பினவர்களா யிருந்தனர்.அவர்கள் உன் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் உன்னைக் கண்ட மாத்திரத்தில், சகோதரனே, சகோதரனே! என்று கூக்குரலிடு வதில் வியப்பொன்று மில்லைஎன்றார்.
66.அது வானத்துக்குரிய சரீரம்.நாம் மரித்த பின்பு ஒரு கட்டுக்கதையாகி (myth) விடுவதில்லை.நாம் ஒரு சரீரத்தில் இருக்கிறோம்.நாம் ஒவ்வொருவரும் மரிக்க நேரிட்டால்,இந்த நிமிடத்தில் அணுகுண்டு நம்மை அழித்து போடுமானால்,இன்னும் ஐந்தே நிமிடங்களில் நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி கட்டித்தழுவி,சத்தமிட்டு தேவனை மகிமைப் படுத்திக் கொண்டிருப்போம்…….
69.இப்பூமிக்குரிய சரீரம் இவ்வுலகிற்கு கொண்டு வரப்படும் போது,அதற்காக ஒரு ஆவிக்குரிய சரீரம் ஆயத்தமாயுள்ளது. உடனே…ஓ,அல்லேலுயா! பூமிக்குரிய கூடாரமாகிய இந்த நம்முடைய வீடு அழிந்து போனாலும்,மேலே ஒன்று காத்திருக்கிறது. இந்த சரீரத்தை விட்டு நாம் வெளியே சென்றதும்,அந்த சரீரத்துக்குள் நாம் நுழைந்து விடுகிறோம்.அந்த சரீரத்திற்கு குளிர்ந்த பானம் அவசியமில்லை.அது உண்பதில்லை. அது பூமியின் மண்ணினால் உண்டாக்கப்படவில்லை. ஆயினும் அது பூமிக்குரிய சரீரத்தைப்போன்றே தத்ரூபமானதாய்,மற்றவர் அதை தொட்டு உணரக்கூடியதாய்,அதனுடன் கைகுலுக்குவதாய் அமைந்திருக்கும் அது மற்றவர்களை நேசிக்கும்.எல்லாமே பரிபூரணமாயிருக்கும். அப்படிப்பட்ட அந்த சரீரம் மேலே காத்துக் கொண்டிருக்கிறது.ஆக மொத்தம் மூன்று சரீரங்கள் உள்ளன. அவைகளில் இது ஒன்று.
83.வாழ்க்கை இதை தான் மேலானதாக உங்களுக்கு தரமுடியும்.நீங்கள் எப்பொழுதாவது கால்கேட் குப்பை மேட்டுக்கு சென்றதுண்டா? இதுவரை நான் சென்றுள்ள இடங்களில் மிகுந்த துர்நாற்றமுள்ள இடம் அதுவே.அங்கு எழும்பும் புகையை நீங்கள் முகரும் போது,ஆமணக்கு எண்ணெய் குடித்தது போல் உங்கள் வயிற்றை குமட்டும்.உங்களை அது மிகவும் கஷ்டப்படுத்தும்.அங்கு எலிகள் உங்கள் மேல் ஓடி,உங்களையும் தின்ன முயலும்.அதுதான் வாழ்க்கை தரக்கூடிய மேலான ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்பொழுது யாரோ ஒருவர் உங்களை அணுகி,அங்கிருந்து தூக்கியெடுக்கிறார்.நீங்கள் மிகவும் வயோதிபராகி சுயமாக ஒன்றுமே செய்ய முடியவில்லை.அப்பொழுது ஒருவர் உங்களை அங்கிருந்து தூக்கியெடுத்து,பதினெட்டு வயது வாலிபனாக மாற்றி, திடகாத்திரமுள்ளவனாக்கி, மலையின் உச்சியில் பருகத்தந்தால்,மறுபடியும் அந்த குப்பை மேட்டுகுச் செல்ல உங்களுக்கு மனமிருக்குமா?இல்லை,சகோதரனே,இல்லவே இல்லை. மறுபடியும் அந்த குப்பை மேட்டுக்ச் செல்ல உங்களுக்கு மனமிராது.       
84.நண்பனே,நான் மறுரூபமடைந்தது,அல்லது தரிசனம் கண்டது எனக்கு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.நான் அதை ‘தரிசனம்’என்று கூறும் காரணம் என்னவெனில்,நான் ‘மறுரூபமடைதல்’ (translation) என்று அதைக் கூறுவேனானால்,அது யாரையாகிலும் புண்படுத்தும் என்று அஞ்சுகிறேன்.ஆனால் உண்மையில் அது மறுரூபமாகுதல் தான்.
219.அன்று காலை எனக்கு என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது.நான் சரீரத்திலிருந்து கொண்டு தரிசனம் கண்டேணோ, அல்லது அந்த இடத்திற்கு நான் எடுத்துக்கொள்ளப்பட்டேனோ என்று எனக்குத் தெரியாது.என்னால் சொல்ல முடியாது.ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும்.எனக்கு எப்பொழுதும் மரணம் என்றால் பயம்.இயேசு என்னைக் கொண்டு செல்ல மாட்டார் என்பதனால் நான் பயப்படவில்லை. உங்களை நான் சந்திக்கும் போது ஒரு மூடுபனியைப் போல் ஆகாயத்தில் பறக்க நேரிடும் என்று நான் நினைத்ததால் தான்.ஆனால் இப்பொழுது நான் கண்டுகொண்டேன். அந்த ஜனங்களை நான் கணெடபோது,அவர்கள் உருவமுள்ள ஜனங்களாக தத்ரூபமாகக் காணப்பட்டனர்.
செய்தி:- புத்திரசுவிகாரம்-பாகம்-2       மே 18,1960.
31. … அவரை ஒரு ஞாபகார்த்தத்திற்காகவோ,வருடத்தில் ஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட ஒரு நாளிலே நாம் இந்த உயிர்த்தெழுதலின் காலையை கொண்டாடுவதற்காகவோ அல்லது நாம் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குடையவர்களாகும் படியாகவோ எதற்காக தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினார்? அவருடைய உயிர்த்தெழுதலினால் உனக்கு என்ன பிரயோஜனம்? அது எனக்கு என்னவாயிருக்கிறது? அது உனக்கு எதுவாயிருக்கிறது? அவரை தேவன் உயிருடன் எழுப்பினார் என்பதை நாம் விசுவாசத்தினால் நம்புகிறோம்.ஆனால் அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டதே.அதனால் எனக்கு என்ன பிரயோஜனம்? இப்பொழுது இந்தப் பொருளைக் காண்போம்.
48.இந்த மகிமையான சூரிய உதயத்தின் போது தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபித்து அதை ஒரு நிரூபணமாக்கி விட்டார். ஜனங்களின் இருதயத்தில் தேங்கிக் கிடந்த எல்லா இருளும், சந்தேகங்களும் அகற்றப்பட்டு விட்டது.ஏனெனில் புசித்தும் குடித்தும் முன்பு ஒருமுறை மனுவர்க்கத்துடன் ஐக்கியம் கொண்டு வாழ்ந்து நான் என்னுடைய ஜீவனை கொடுக்கவும் அதை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கும் எனக்கு அதிகாரமுண்டு என்று வாக்குரைத்த அதே நபர் இங்கே இருக்கிறார்.அவர் அந்த வாக்குறுதியை சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை சத்தியம் என்று வாக்குரைத்த அதே நபர் இங்கே இருக்கிறார்.அவர் அதை நிரூபித்து விட்டார். ஓ! என்னே ஒரு மகிமையான காரியம்
49. அதை விசுவாசிக்கிறவர்களாகிய நாமும் அது எவ்வளவு ஒரு மகிமையான காரியம் என்பதை புரிந்து கொள்ள முடியாதென்பதை இந்த காலை வேளையிலே நிச்சயமாக சொல்கிறேன். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததால் அவருக்குள்ளாக இருந்த நாமும்கூட மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டோம்.
60.சுவிசேஷம் என்கிற வார்த்தையின் சரியான அர்த்தம், நற்செய்தி என்பதே.நற்செய்தி என்றால் என்ன? நமக்காக ஒரு மனிதன் மரித்தால்,அது நற்செய்தி.கிறிஸது பிறந்தார் என்பது நற்செய்தி. ஆனால்,மரணத்திறகும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்கள் தம்முடைய கைகளில் இருக்கிறது என்று வாக்குரைத்தவர் அந்த வாக்குத்தத்தை உறுதிப்படுத்திவிட்டார் என்கிற செய்தியைப் போல வேறொரு செய்தி ஒரு போதும்  இருந்ததில்லை.எல்லா இருளும் மறைந்து விட்டது;அங்கே ஒரு போதும் இருள் காணப்படவுமில்லை.ஏனெனில் குமாரன் கல்லறையிலிருந்து உயிரோடே எழுந்து விட்டார். அவர் வருவார் என்றோ அஙர் வரலாம் என்றோ இல்லை.அவர் உயிரோடே ஏற்கனவே எழுந்து விட்டார் என்பதே சுவிசேஷ நற்செய்தி.
61.கவனியுங்கள்.அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை ஜனங்களுக்கு நிரூபிப்பதே சுவிசேஷத்தின் நற்செய்தியாகும். நான் மரித்தோரிலி ருந்து உயிர்த்தெழுந்து விட்டேன்,அவர்களுக்கு இதை உறுதிப்படுத்துவதற்கு நான் அவர்களை சந்திப்பேன் என்று புறப்பட்டுபோய் என்னுடைய சீஷர்களிடம் சொல்லுங்கள் ஓ,தேவனே இந்த கடைசி நாட்களில் பூமியின் மேல் மீண்டும் வெளிச்சம் உண்டாகும். நான் மரிக்கவில்லை.நான் ஒரு பாரம்பரியம் அல்ல,ஆனால் நான் ஒரு ஜீவிக்கிற கிறிஸ்து என்று புறப்பட்டுப் போய் என்னுடைய சீஷர்களிடம் சொல்லுங்கள்.நான் அவர்களை சந்திப்பேன்;நான் இதை என்னுடைய சீஷர்களுக்கு நிரூபிப்பேன் இதுதான் சுவிசேஷ நற்செய்தி. …
64…….யோவான் 14:12 ஓ! என்னே ஒரு செய்தி! நம்மிடையே உள்ள இருண்ட உலகப் பிரகாரமான மத சாஸ்திரத்தை குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.ஆனால் சாயங்காலத்திலே மீண்டும் வெளிச்சம் உண்டாகும்.சாயங்காலத்திலே ஒரு உயிர்த்தெழுதல் உண்டு.சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.
65.இப்பொழுது,அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குடையவர்காகிய நாம்,அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து ஜீவிக்கிறார் என்பதை நிரூபிப்பதின் மூலமாக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுகிறோம் என்பதுதான் அனுப்பப்பட்ட செய்தியின் முக்கியமான சாரம் (essence of the message). அதை நாம் வெறும் வார்த்தையினால் மாத்திரம் செய்ய முடியாது.அதை நாம் மனிதனின் பாரம்பரியத்தினாலும் செய்ய முடியாது.நாம் அவருக்குள்ளாக பெற்ற ஆசீர்வாதத்தை பிரதிபலித்துக் காட்டுவதின் மூலமே செய்ய முடியும்.
156.ஆகையால்,உங்களுடைய சரீரம் உயிர்பிக்கும் வல்லமையின் ஆலயமாக விளங்குகிறது. ஏன்? ஏனெனில்,ஆதியிலிருந்தே நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக விளங்குகிறீர்கள்! ஓ! (சகோ. பிரன்ஹாம் தன் கரங்களை ஒரு முறை கொட்டுகிறார்-ஆசி) அதுவே உங்களுடைய உயிர்த்தெழுதல் ஆகும்.அதுவே சபை அவருடன் உயிர்த்தெழுதலும் ஆகும்.நம்முடைய சாவுக்கேதுவான சரீரங்கள் இப்பொழுதே உயிர்ப்பிக்கப்படுகிறது! புரிந்து கொண்டீர்களா? நீங்கள் கேள்விப்பட்டீர்கள்;நீங்கள் விசுவாசிகள் கிறீர்கள்;அது ஒரு ஸ்தாபனத்திலிருந்து உங்களை வார்த்தைக்குத் திருப்பியது.புரிந்து கொண்டீர்களா?
242.ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.அவர் உங்களை அவருக்குள் கொண்டவராய் அங்கே சென்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.புரிந்து கொண்டீர்களா? தேவன் மணவாட்டியை இன்று வரை மணவாளனிடமிருந்து பிரிக்கவேயில்லை.ஆகையால்,தேவன் கிறிஸ்துவின் சரீரத்தை நோக்கிப் பார்த்த பொழுது அவரை ஆணும் பெண்ணுமாகவே கண்டார்.எல்லாருமே அவர் ஒருவருடைய சரீரத்திலேயே மீட்கப்பட்டு விட்டோம்.புரிந்து கொண்டீர்களா? அவர்கள் ஒரே சரீரம், ஒரே வார்த்தை,மணவாளனிடமிருந்து வெளிப்பட்ட அதே வார்த்தை.மணவாளனிடமிருந்து வெளிப்பட்ட அதே வார்த்தை மணவாட்டியின் மூலம் வெளிப்படுகிறது.
314….தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்று சொல்லுகிற தேவனுடைய தீர்க்கதரிசனமும், வார்த்தையும்,நாமும் அவரோடே உயிர்த்தெழுந்து விட்டோம் என்று சொல்லுகிறது. பயப்படாதிருங்கள் என்று அவர் சொன்னதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. ….
செய்தி:- இது சூரிய உதயம். ஏப்ரல் 18,1965.
354.இப்பொழுது,அந்த தரிசனங்களை குறித்து நீங்கள் அறிவீர்கள். அவைகள் உங்களுக்குப் பழக்கமானதே.இதை நான் தரிசனமென்று கூறத் தலைப்பட்டால்,இத்தகைய ஒரு தரிசனத்தை நான் என் சிறு வயது முதல் கண்டதேயில்லை.பாருங்கள்?
355.சடுதியாக இச்சரீரத்தை விட்டுப்போகும் உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. ‘ஊம்-ஓ’ என்று நான் நினைத்தேன். நான் ஏற்கனவே மரித்து விட்டேன்,பாருங்கள், என்றே எண்ணிணேன்.பாருங்கள்? என் ஆவி என் சரீரத்தை விட்டுப் பிரிந்தது.
356.நான் ஒரு ஸ்தலத்திற்கு வந்தேன்.அப்பொழுது, நான் திரும்பி பார்க்க விரும்புகிறேன் என்று எண்ணினேன்.நண்பர்களே,நான் உங்களுக்கு முன்பு நிற்பது போலவே,அது மிக உண்மையாகவே இருந்தது.பாருங்கள்? நான் திரும்பி பார்த்தபோது,என் சரீரம் மாத்திரம் என் மனைவியின் பக்கத்தில் படுத்திருப்பதைக் கண்டேன்.
357.இருதய அதிர்ச்சியின் காரணமாக நான் சடுதியாக இறந்து விட்டதாக எண்ணிக்கொண்டேன். பாருங்கள்?இவ்விதமாக சடுதியாய் மரிப்பதுதான் அருமையானது என்று எண்ணினேன். இருதய அதிர்ச்சியினால் மரித்துவிட்டேன்.நான் துன்பப்பட வில்லை என்று நினைத்தேன்.நான் நோக்கிப் பார்த்து, நல்லது,இப்பொழுது இது விநோதமாயுள்ளதே.அங்கே நான் படுக்கையில் படுத்திருக்கிறேன்;இங்கே நிற்கிறேன் என்று எண்ணினேன்.
358.ஆகவே,நான் திரும்பினேன்.என் ஆவி சென்ற ஸ்தலத்தில் ஒரு மகத்தான,பெரிய வயல் வெளியைக் கண்டேன்.அங்கே ஊதா நிறப் புற்கள் பரவியிருந்தன.இது என்னவென்று நான் அதிசயப்பட்டேன்.
359.நான் பார்க்கையில்,சடுதியாக,லட்சக்கணக்கான வாலிபப் பெண்கள் வெள்ளையங்கி தரித்தவர்களாய்,தலைமுடி இடுப்பு வரைக்கும் வளர்ந்து,காலில் ஒன்றும் அணியாமல் என்னை நோக்கி ஓடிவருவதைக் கண்டேன்.நான் இது என்ன என்று நினைத்தேன்.அவர்கள் மிகவும் அழகாயிருந்தனர்.
360.நான் திரும்பி அங்கே நோக்கினேன்.நான் அங்குதான் (படுக்கையில்-ஆசி) இருந்தேன்.நான் இந்த வழியாய் மேலே நோக்கிப் பார்த்தேன்.அதோ அவர்கள் வந்தார்கள்.நான் என் நகத்தைக் கடித்துக் கொண்டேன். நான் நித்திரையில் இல்லையே,அது சரி ஆனால் என்னால் உணர முடிந்தது.ஆகவே, நல்லது,ஏதோவொன்று,புதிராய் இருக்கின்றது என்று எண்ணினேன்.
361.அந்த வாலிப பெண்கள் என்னை நோக்கி ஓடிவந்தனர்.இவ்வித அழகான பெண்களை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தனர்.அவர்கள் என்னிடம் ஓடி வந்தபோது…
363.இந்தப் பெண்கள் என்னருகில் வந்து,தங்கள் கரங்களினால் என்னைச் சுற்ற ஆரம்பித்தனர்.இப்பொழுது,இது அசாதாரண ஒன்றாகும்.நான் அதற்கு ஒப்புதல் அளிப்பவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.ஆகவே,அவர்கள்… இது ஆண்களும் பெண்களுமாக ஒன்றாய் அமர்ந்துள்ள ஒரு கூட்டம்.ஆகவே நான் இதை இவ்வழியில் கூறவேண்டியவனாய் இருக்கிறேன்.அவர்கள் பெண்கள்.அவர்கள் பெண்கள்.அவர்கள் அருமை சகோதரனே என்றனர்.என்னை ஒரு பெண் கட்டித் தழுவின பின்பு,வேறொரு பெண் என்னைக் கட்டித் தழுவினாள்.
364.நான் அங்கு நின்று,பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லது,இப்பொழுது,இது என்ன? என்று நினைத்தேன்.அவர்கள் அங்கே நின்றிருந்தனர். என்ன சம்பவித்து என்று எண்ணினேன்.நான் திரும்பி கீழே பார்த்தேன்,அங்கே நான் கட்டிலில் படுத்திருந்தேன்.ஆனால் இங்கே நான் நின்றிருந்தேன்.இந்த விசித்திரமான காட்சியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
365.அந்தப் பெண்கள்,எங்கள் அருமை சகோதரனே, என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
382.நான் அவ்விதமாக அங்கே நின்று கொண்டிருந்தேன்.நான் இழந்து போயிருந்த தலைமயிரும் மறுபடியும் அடர்த்தியாக முளைத்து விட்டது போன்று தோன்றியது.என்னே! நான் ஒரு வாலிபனைப் போலிருந்தேன்.அந்தப் பெண்களும் அனைவரும் வாலிபமாயிருந்தனர்.இது என்ன விசித்திரமாயிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.அவர்கள் என்னை நோக்கி ஓடி..
383.அவர்கள் ஓடிவருவதைக் காண்கையில்,என் மனைவி ஹோப் (hope) வருவதைக் கண்டேன்.அவள் பார்த்தாள்…அவள் இருபத்தி ரெண்டு வயதில் மரணமடைந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும்.அவள் முன்பிருந்தது போல அழகாக காணப்பட்டாள்……… இப்பொழுது,அவள் இங்கே வந்து,அவள் என்னை, பில்லி என்று கூப்பிடிவாள் என்று நினைத்தேன்.அவள் அவ்விதம் அழைப்பாள் என்று அறிவேன்.அவள் இங்கே வந்து ‘பில்லி’ என்று கூப்பிடுவாள் என்று நான் அறிவேன்.
385.அவள் என்னிடத்தில் வரும்போது, அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாத்திரம் நான் பார்க்கப்போகிறேன் என்று நான் நினைத்தேன்.
386.அவள் என்னை நோக்கிப் பார்த்து, ‘எங்கள் அருமை சகோதரனே’ என்றழைத்தாள்.அவள் என்னைக் கட்டி தழுவிவிட்டு,பேசாமல் சென்றாள்.மற்ற பெண்களும் என்னிடம் வந்து,என்னை கட்டித் தழுவி சென்று விட்டனர்.
387.ஒரு சத்தம் கேட்டது.நான் இவ்விதம் பார்த்தபோது,வாலிபர்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் ஏறக்குறைய இருபது வயது நிரம்பியதுபோல் காணப்பட்டனர். அவர்களும் கறுப்பு,பொன்நிறம் என்று வித்தியாசமான தலைமயிர் உடையவராய் இருந்தனர்.அவர்களும் வெள்ளையங்கி தரித்து,காலணிகளின்றி என்னை அணுகி,கட்டித் தழுவி, எங்கள் அருமை சகோதரனே என்றனர்.
388.நான் கீழே நோக்கியபோது,என் உடல் அங்கு இருப்பதைக் கண்டேன். என்னே அதிசயம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
389.ஆகவே,அப்பொழுது ஒரு சத்தம் என்னிடம் பேச ஆரம்பித்தது. ‘உன் ஜனங்களிடம் நீ சேர்க்கப்பட்டிருக்கிறாய்’ என்று சொன்னது. அந்த சத்தத்தை நான் காணமுடியவில்லை. அப்பொழுது ஒருவர் என்னை இதைப் போன்ற ஒரு உயர்ந்த பீடத்தின்மேல் நிறுத்தினார். ஏன் அவ்வாறு செய்கின்றீர்? என்று நான் கேட்டேன்.
அவர், பூமியில் எங்களுக்கு வழிக்காட்டியாய் இருந்தீர் (Leader) என்றார்.
ஆகவே நான், நல்லது என்னால் – என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்றேன்.
390.அந்த சத்தம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தது.ஆனால் நான் அந்த சத்ததைக் காண முடியவில்லை.இப்பொழுது அது எனக்கு மேலாக இருந்தது,என்னுடன் பேசிக்கொண்டிருந்தது.
391. நல்லது,நான் கடந்து வந்திருப்பேனாகில்,நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்.அவரே என் ஜீவன்,நான் அவரைக் காண விரும்புகிறேன் என்று கூறினேன்.
அதற்கு அவர், அவரை நீ இப்பொழுது காண முடியாது.அவர் இன்னும் உயர்ந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்றார்.
394.அப்பொழுது அந்தச் சத்தம், யாக்கோபு தன் ஜனங்களோடு சேர்க்கப்பட்டதுபோல,நீயும் உன் ஜனங்களுடன் சேர்க்கப்பட்டி ருக்கிறாய் என்று கூறிற்று.
இவர்களெல்லாம் என் ஜனங்களா? இவர்கள் பிரன்ஹாம் குடும்பத்தைச் சார்ந்தவர்களா? என்று கேட்டேன்.
அவர் இல்லை,அவர்களெல்லாம் உன் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள்என்று பதில் கூறினார்.
410.இது மிகவும் அற்புதமாயிருக்கிறதல்லவா? ஓ,என்னே! நான் ஏன் மரணத்திற்குப் பயந்திருந்தேன்? நான் இங்கு வருவதற்கு,நான் ஏன் மரணத்தைக் குறித்து பயந்தேன்? நல்லது.இது பரிபூரணமான, இன்னும் மிகுதிப்படியான பரிபூரணம், இன்னும் மிகுதிப்படியான பரிபூரணமாயிருக்கிறது.ஓ,இது அற்புதமானதாகும்.
419.அதைக் கண்டபோது,என்னால் அழமுடியவில்லை.அங்கு எவரும் அழவே முடியாது.அங்கு எல்லோரும் மகிச்சியுற்றிருக்க வேண்டும்.விசனம் என்பது அங்கு காணப்பட முடியாது.அங்கு எவரும் மரிக்கவும் முடியாது.ஏனெனில் அங்கு எல்லாம் ஜீவனாகவே அமைந்திருந்தது.பாருங்கள்? பாருங்கள்? அவ்வாறே எவரும் வயோதிப பிராயத்தை அடைய முடியாது.எல்லோரும் வாலிபராகவே இருந்தனர்.அது மிகவும் பரிபூரணமாயிருந்தது. ‘ஓ,இது மிகவும் அற்புதமல்லவா!’ என்று நான் நினைத்தேன்.இத்தகைய லட்சக்கணக்கானவர் மத்தியில் நானும் இருந்தேன்,பாருங்கள்.
420.அப்பொழுது அங்கு ஒரு சத்தம் கேட்டது.அது, ‘நீ சிநேகித்த அனைவரையும்,உன்னை மனப்பூர்வமாக சிநேகித்த அனைவரையும்,தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றது.இது நான் செய்த ஊழியத்திற்கு தேவன் அளித்த பலன்.ஆனால் எனக்கு எவ்வித பலனும் வேண்டாம்.
நான் ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்றேன்.
421.எனக்கு ஒரு விசித்திரமான உணர்ச்சி அப்பொழுது ஏற்பட்டது.அப்பொழுது நான் காரியம் என்ன? விசித்திரமாக உணர்கிறேன் என்று நினைத்தேன்.நான் திரும்பிப் பார்த்தபோது கட்டிலின் மேல் கிடந்திருந்த என் உடல் அசையத் தொடங்கினது.அப்பொழுது நான், ‘ஓ,எனக்கு இங்கிருந்து போவதற்கு மனதில்லை.என்னைப் போகவிட வேண்டாம்’ என்றேன்.
422.ஆனால் சுவிசேஷம் மக்களுக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டும்.ஒரு நொடிப்பொழுதில் நான் மறுபடியும் கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருந்தேன்.
450.ஆகவே, நாமெல்லாரும் தேவனால் இப்பொழுது ஜெநிப்பிக்கப் பட்டிருக்கிறோம் என்று வேதம் கூறுகின்றது.நாம் பரிசுத்த ஆவியால் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோமென வேதம் கூறுகின்றது. தேவகுமாரனாகிய கிறிஸ்து நமக்குள் உருவாகிக் கொண்டிருக்கிறார்.பூமிக்குரிய நம் சரீரம் அழிந்துபோகும்போது ,(கரைந்து போகும் போது -Dissolved—ஆசி) நமக்குள் இருக்கும் ஆவிக்குரிய சரீரத்தைப் பெற்றுக்கொள்ள வேறொரு சரீரம் அங்கு காத்துக்கொண்டிருக்கிறது.இந்த பூமிக்குரிய கூடாரம் கீழே விழும்போது,அதை ஏற்றுக் கொள்ள வேறொரு சரீரம் காத்திருக்கிறது.அழிவுள்ள சரீரம் அப்பொழுது அழியாமையைத் தரித்துக் கொள்ளகிறது.பூமிக்குரியது பரலோகத்துக்குறியதை தரித்துக் கொள்ளவும்.நான் சொல்லுகிறது உங்களுக்குப் புரிகின்றதா?மாம்சத்துக்குரிய சரீரம் பாவமுள்ளது.ஆனால் அது போன்ற வேறொரு சரீரத்துக்குள் நாம் அங்கு பிரவேசிக்கிறோம்.
451.அந்த சரீரத்தில் அவர்களைக் காணவும்,அவர்களை என் கைகளால் தொடவும் கிடைத்த சிலாக்கியத்திற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.உங்கள் போதகனும் சகோதரனும் என்ற ரீதியில் அவர்களை நான் அச்சரீரத்தில் கண்டேன் என்று உறுதி கூறுகிறேஏன்.அது உண்மை.கவனியுங்கள்.
செய்தி:- ஐந்தாம் முத்திரை. மார்ச்சு 22,1963.
381.சென்ற இரவு நான் உங்களிடம் கூறினவாறு…நான் உண்மையை உங்களிடம் கூறினேன் என்பதை கர்த்தர் அறிவார்.பவுல், நான் பொய்யுரைக்கவில்லை என்று சொன்னது போல் நானும் உங்களிடம் சொல்கிறேன்.நான் உங்கள் முன்பாக நிற்பது எவ்வளவு உண்மையோ அதே போல நான் கண்ட அத்தரிசனத்தில்,மரித்து அங்கு சென்றவர்களை நான் கண்டேன்,அவர்களைத் தொடவும் செய்தேன் என்பதும் உண்மையாகும்.சகோதரனே,சகோதரியே,அதை இழந்து போகவேண்டாம்.நீங்கள் அதைச் செய்யவேண்டாம்.இதைக் குறித்து இதை,அதை மற்றும் அநேக கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள்.அது உண்மையென்பது எனக்குத் தெரியும்.பாருங்கள் அதை இன்னும் தெளிவாக எடுத்துரைக்க என்னால் முடியவில்லை.அதை நழுவவிட வேண்டாம்.அவை யாவும் உங்களுக்கே.
செய்தி:- ஆறாம் முத்திரை. மார்ச்சு 21,1963.
97.அதன்காரணமாகவே,ஜீவபுஸ்தகத்தில் முன்குறிக்கப்பட்ட மணவாட்டியானவள் அழைக்கப்படும் போது,வானத்திலிருந்து ஓர் சத்தம் பிறந்து,அது மணவாட்டிக்குள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அபரிமிதமாக நிரப்பி,பூமியிலிருந்து அவள் எடுக்கப்படுவதற்கேற்ற கிருபையையுண்டாக்கும் என்று நான் விசுவாசிக்கிறேனெ.தேவன் அதை வாக்குத்தம் செய்திருக்கிறார்.விஞ்ஞானமும்,விண்வெளி வீரர்களும் அநேக கோடி மைல்கள் தூரம் விண்வெளியில் சென்று ஆராய்ந்து பரலோகம் என்ற ஒன்று இல்லையென்று கூறி உறுதிப்பத்திரமாக வெளியிட்டாலும்,அதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை.பரலோகம் என்று ஒன்றுண்டு.அங்கே உண்மைத்துவமாக இயேசு கிறிஸ்து என்பவரும் உண்டு.அவர் அங்கிருந்து ஒரு சரீரத்தில் தம்முடைய மணவாட்டியாகிய சபையை பெற்றுக் கொள்ள வருவார்! எவ்வளவு பழையக் கதையாக அது தோன்றினாலும் அது ஒரு காரியமல்ல,ஏனெனில் அதை தேவன் கூறினதினால் அது சத்தியமாயிருக்கிறது.அதை தான் விசுவாசிகள் விசுவாசிக்கின்றனர்.
154.நம்முடைய சிந்தனைகள் அல்ல,அவர் என்ன கூறினாரோ அதுவே காரியமாயிருக்க வேண்டும்.உன்னுடைய சொந்த எண்ணங்களை நீ மறந்து விட்டு,அவர் என்ன கூறுகிறாரோ அதையே நீயும் கூறுவாயாக.அதுதான் உண்மையான ஏற்றுக் கொள்ளுதலாகும். ஒப்புக்கொள்வது அல்லது ஏற்றுக்கொளவ தென்பது அந்த காரியத்தையே அறிக்கையிடுவ தென்பதாகும்.ஒரு காரியம் நடைபெற்றது என்று நான் அறிக்கை செய்வேனானால், நடந்த காரியம் அதுவே என்று தான் நான் கூற முடியும்.அதுதான் உண்மையான அறிக்கையும்கூட.நம்முடைய அறிக்கையின் பிரதான ஆசாரியர் இயேசுவே.கவனிக்கிறீர்களா? தேவன் கூறினதையே திரும்பவும் கூறுவது அதை உறுதிப்படுத்து வதாயிருக்கிறது. ஏனெனில் தேவனுடைய வார்த்தையையே நீ திரும்ப கூறுகிறாய்.
158. … இந்தக் காலத்தைக் குறித்து முன்னுரைத்த தேவன்,தாம் எதை செய்யப் போவதாக கூறினாரோ அதையே சரியாக செய்து கொண்டிருக்கிறார்.ஆனால் அதைப் பார்க்க கூடாமல் அவர்கள் குருடாயிருக்கிறார்கள்! அவர்கள் தாம் அவிசுவாசிகள். ஓ,அத்தகைய காரியத்தை என் ஜீவியத்தில் நான் கேள்விப்பட்டதேயில்லை.அதையென்னால் விசுவாசிக்க முடியாது என்று அவர்கள் கூறி புறம்பே சென்று விடுவார்கள்.அது அவ்விதமாகதான் இருக்கும் என்று வேதம் கூறினதால் அதை அவர்கள் கேட்டாலும் எந்தவித வித்தியாசத்தையும் அவர்களுக்கு அது உண்டாக்காது.
169. …தானியேல் தேவனுடைய மகத்தான கிரியைகளை செய்வதைப் பார்த்து (தானியேலை அவனுடைய கடவுளின் நாமமாகிய பெல்தெஷாத்சார் என்று நேபுகாத்நேச்சார் அழைத்தான்) அவனுக்கு ஒரு சிலையை செய்வித்து அங்கே நிறுவி,அதை எல்லாரும் தொழுதுகொள்ள வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தான். புறஜாதியின் ராஜாங்கமானது ஒரு பரிசுத்த மனிதனின் சிலையை தொழுதுகொள்வதற்கென்று வல்லமையோடு ஆரம்பிப்பதை கவனியுங்கள். அதேவிதமாக புறஜாதியின் ராஜாங்கமானது முடிவடையும் போது ஒரு பரிசுத்த மனிதனின் சிலையை தொழுவதற்கென்று வல்லமையாய் கிரியைச் செய்யும்.
185.சாயங்கால நேரத்து வெளிச்சமானது பிரகாசித்துக் கொண்டிருக்க,இந்த காலத்துக்குரிய பின்மாரியின் தேவ பிரசன்னத்தை நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கையில்,இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டு இது சத்தியம் என்று வார்த்தையினால் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது! தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் வார்த்தையின்படியும், விஞ்ஞானப்பிரகாரமாகவும் நிரூபிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில்,ஒரு மனிதன் அதற்கு புறமுதுகு காண்பித்து ஓடுவானானால் அது எவ்விதமாயிருக்கிறது? அப்படிப்பட்டவன் ஒரு அவிசுவாசியாயிருக்கிறான்.அவனை இரட்சிக்க நம்பிக்கை ஏதுமில்லை.சாத்தானின் வல்லமையினால் அவன் உணர்ச்சியற்று,மரத்துப்போன நிலையை அடைகிறான். அவன் இரட்சிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையே இல்லை.அவனுடைய நிலைமை நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதா யிருக்கிறது.
187. … சகோதரனே,இந்த பாவனை விசுவாசிகள் கடைசி மட்டும் கூடவேயிருந்துகொண்டு ஏதாகிலும் ஒரு குற்றத்தை அதிலே கண்டுபிடிப்பார்கள்.ஏதாவது தவறு நேருகிறதா,அல்லது இது ஏதாவது தந்திரமா,என்றெல்லாம் ஒவ்வொரு நேமும் உற்று நோக்கிக் கொண்டேயிருப்பார்கள். இவர்கள் தங்களை விற்றுப் போடுவதற் கென்றே காத்துக் கொண்டிருக்கிறவர்களாயிருக்கின்றனர்.
188.அவிசுவாசியானவன் அவ்விதமாக்க காத்திருக்கிறதில்லை.அது சரியில்லை என்று கூறி கண்டனம் செய்து அவன் வெளியேறி விடுவான்.
189.விசுவாசியானவன்,என்ன நேர்ந்தாலும் அதில் நிலைத்திருக் கிறான்.ஏனெனில் அது வார்த்தையென்று அவன் விசுவாசிக்கிறான்! இவ்விதமாகத்தான் இந்த மூன்று வகையினரும் தங்கள் தங்கள் நிறத்தைக் காட்டுகிறார்கள்.
191.ஆனால் உண்மையான விசுவாசிகளோ அவ்விதம் சர்ச்சை செய்வதில்லை;ஏனெனில் அவர்கள் எழுதப்பட்ட வார்த்தையை விசுவாசித்து மேலும் முன்னேறிச் செல்கின்றனர்.அதுதான் காரியம்.அவ்விதம் எழுதப்படாமலிருக்குமானால் அதினின்று அவர்கள் விலகி விடுவார்கள்.நான் இன்று காலை கூறினது போல விசுவாசிகள்,காலத்தையும்,அதன் மணி நேரத்தையும்,செய்தியையும் தேவன் தம்முடைய வார்த்தையில் அசைவாடுவதையும் கண்டு அதிலே நடக்கிறார்கள்.
196.இது எவ்வளவு கடினமான காரியம்! ஒரு நிமிடம் ஆழமாய் சிந்தித்துப் பாருங்கள். சகோதரனே என்று அழைத்து தம்முடன் கூட நடந்தது கொண்டிருக்கிற ஒருவன் ஆதி முதலாய் ஏமாற்றுக்காரன் என்றும்,முப்பது வெள்ளிக் காசுக்காக தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்று அறிந்திருந்தும்,அந்த உணர்வுகளை தம் மடியில் சுமந்திருந்தாரே அது எவ்வளவு கடினமான காரியம், சிநேகிதனே என்று இயேசு யூதாஸை அழைத்தார்.தம்மை அவன் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.
197.அங்கேதான் அந்த பாவனை விசுவாசி காணப்படுகிறான்.அவன் நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவேன்,நம்பிடுவேன்என்று பாடிக்கொண்டே,பின்புரளி செய்வதில் முற்படுவான்.மற்றவர்கள் பேசுவதை கேட்க அவனுக்கு பெரிய காதுகள் உண்டாயிருக்கும்.
198.ஒரு உண்மையான விசுவாசி தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறொன்றையும் காதால் கேட்க மாட்டான்.வார்த்தையையே அவன் எப்பொழுதும் கவனித்துக்கொண்டிருப்பான்.பிழை கண்டுபிடிக்கும்படியான வாய்ப்புக்காக அவன் காத்திராமல்,தேவனை விசுவாசித்து அதிலே அவன் தொடர்ந்து நடக்கிறான்.பாருங்கள்? அவனே  விசுவாசிக்குறிய லட்சணமாயி ருக்கிறான்.
199.அவிசுவாசி பத்து நிமிடங்கள் கூட செய்தியை கவனித்துக் கேட்காதவனாய் அங்கிருந்து வெளியே சென்று விடுகிறான். ஏனெனில் அது அவனுடைய மதக் கோட்பாடுக்கு விரோதமாயி ருக்கின்றது.
200.இந்த பாவனை விசுவாசியோ (யூதாஸ்) ஒரு ஏமாற்றுக்காரன், சண்டாளன்,கூடவே இருந்தது குழிபறிப்பவன். சிலசமயங்களில் இந்த பாவனை விசுவாசிகள் ஜனங்கள் மத்தியில் பிரபலமானவர் களாயிருக்கின்றனர். என்பதை கவனியுங்கள்.அது உண்மை. இவர்கள் சாத்தானின் குமாரர்களைப் போல அதிக படிப்புள்ளவர் களாகவும்,வேத பாண்டியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்களாயும், மருத்துவர்களாயும்,ஞானம் பெற்றவர்களாயும்அதிக வருமானம் உடையவர்களாயும்,எந்தக் குறைவுமின்றி இருக்கின்றனர். கவனியுங்கள்.
220.தங்களை கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்று உரிமைக் கொண்டாடுகின்ற அநேகர்,இந்த நாளுக்குரிய வார்த்தையானது முற்றிலுமாக அடையாளம் காட்டப்பட்டு,இந்த நேரத்தின் செய்தி இதுதான் என்று நிரூபிக்கப்பட்டாலும்,தங்களின் புகழுக்கா அதை ஸதாபனத்திற்கு விற்று விடுகின்றனர்.யூதாஸ் இயேசுவை பரிசேயர் சதுசேயருக்கு காட்டிக் கொடுத்தது போல இவர்களும் செய்கின்றனர்.அந்த ஆவியானது ஒருபோதும் மரிப்பதில்லை.அது விசுவாசிகள்,பவனை விசுவாசிகள்,அவிசுவாசிகள் மத்தியில் உள்ளது.பாருங்கள்.அதே ஆவி சரியாக இறங்கி வந்து இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டது;அநேக மனிதர்கள் ஜீவனத்திற்காகவும், சாப்பாட்டுச் சீட்டுக்காகவும் வாரத்திற்கு உபரியாக கிடைக்கும் நூறு டாலர் சம்பளத்திற்காகவும் இயேசுவை விற்று விடுகின்றனர்.தங்களுக்கு முழு வார்த்தையையும், ஜீவனையும் கொண்டு வந்து,தங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கிற தேவனை அவர்கள் மறுதலிக்கின்றனர்.
232.பரிசேயரும்,சதுசேயரும் இதையேதான் செய்தார்கள், தேவனுடைய முழு வார்த்தையானது சரியாக நிரூபிக்கப்பட்ட போதிலும்,அவர்கள் அவையெல்லாவற்றையும் புறம்பாக்கி மறுதலித்துப் போட்டார்கள்.
233.இன்று அவர்கள் ஏதோ ஒன்றை உருவாக்க முயற்சித்து அதை போலி என்று எண்ணுகிறார்கள்.அவர்கள் தங்கள் சிந்தனையில் இளைப்பாறுதலை பெறாததால் அதை விசுவாசிக்க முடியவில்லை.நீ ஏதாகிலும் சொல்லக் கூடுமானால் அவர்கள் உனக்கு எதிர்த்து வருவார்கள்.நீ அவர்களுக்குள் ஆழமாக அதை பதிக்க முடியாது.அவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்து அதில் ஏதாவது தவறுக்கான வாய்ப்பு தோன்றுமா என்ற நேரத்திற்காக காத்திருப்பார்கள்.அவர்கள் வேண்டுவதும் அதுதான்.
234.தேவனுடைய கிருபை மட்டும் இல்லாதிருந்தால்,என்னிடத்தில் தவறுகள் இருந்திருப்பின், அவைகள் யாவும் வெளியாக்கப் பட்டிருக்கும்.பாருங்கள்? அது தேவனுடைய கிருபை.ஏன்? தேவனுடைய வார்த்தையில் பிழையில்லை.அது நேர்மையான சுவிசேஷமாயிருக்கின்றது.
நான் போதிக்கிற காரியம் தேவனுடைய வார்த்தையில் சரியாக பொருந்தாமலிருக்குமானால்,யார் வேண்டுமானாலும் என்னிடம் வந்து அதை சுட்டிக் காண்பியுங்கள் என்று நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்.இங்கு காணப்படும் காரியங்க ளெல்லாம்,நீங்கள் எங்கும் காண முயற்சிக்கிற தவறுகளை மூடத்தக்கவைகளாயிருக்கின்றன.உங்கள் கண்களை சரியாக அதில் வைத்துப் பாருங்கள்.அப்பொழுது அதில் தவற்க்கான வாய்ப்புகளை காணமாட்டீர்கள்.
244.இப்பொழுது கவனியுங்கள் – கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். இந்தக் கூட்டமானது தொடந்து நம்முடனே கூட வருகிறதாயிருக்கிறது. சகோதரனே, அல்லேலுயா! தேவனுக்கு மகிமை என்று அவர்கள் கூறினாலும் எதற்காக அதைக் கூறுகிறார்கள் என்பதை நீ உன் உள்ளத்தில் அறிந்திருப்பாய்.ஒரு கூட்ட ஜனங்களிடமிருந்து எல்லா பணத்தையும் பிழிந்து எடுப்பதற்காக அவர்கள் அவ்விதம் கூறுவார்கள்.அத்தகைய காரியம் எனக்குத் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது எனக்குத் தெரியும் என்று ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.ஆனால் அதை நான்றிந்திருக்கிறேன்.
252. இச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே,நீங்களும் இந்த மூன்று வகையில் ஒன்றினை சேர்ந்தவர்களாயி ருக்கின்றீர்கள்.அது உண்மை.நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன்.இங்கு வீற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒலிநாடாக்களின் மூலமாய் இதை கேட்டுக் கொண்டிருக்கிற அல்லது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிற உங்களுக்கு நான் கூறுவது யாதெனில்,என்றோ ஒரு நாளில் நான் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனாலும் இந்த செய்தியானது மரிக்காமல் ஜீவனுள்ளதாயிருக்கும்.அது உண்மை.பாருங்கள்?இந்த மூன்று வகையினரில் நீங்கள் ஏதாகிலுமொன்றில் இருந்துதான் ஆக வேண்டும்;அதனின்று தப்ப முடியாது.
267.ஞாபகம் கொள்ளுங்கள்.இன்றிருப்பது போலவே ஒவ்வொரு காலங்களிலும் காணப்பட்டது. ஜனங்களின் மத்தியில் காணப்படும் புகழ்ச்சியான நம்பிக்கை எப்பொழுதும் உண்மையான வார்த்தைக்கு முரணாகவே இருக்கின்றன.அந்தி கிறிஸ்து வார்த்தையை மறுப்பதில்லை.நிச்சயமாக அவ்விதம் செய்யாமல் அவனும் அதை விசுவாசிக்கின்றான்.ஆனால் இதில் எழுதப்பட்ட விதமாய் எல்லாவற்றையும் அவன் விசுவாசிக்கிறதில்லை.
275.இப்பொழுது கவனியுங்கள்.இச்செய்தியாகிய கண்ணாடியில் உங்களை நோக்கிப் பாருங்கள்.இதில் நீங்கள் யாரை பிரதிபலிக்கிறீர்கள்? நீங்கள் அந்த மூன்று வகையில் ஒருவராக இருக்கிறீர்களல்லவா?
279.இப்பொழுது கவனியுங்கள்.இப்பொழுது இது ஒரு ஆழமான காரியம்.தற்பொழுது நீங்கள் வகிக்கிற நிலைமையானது,அந்த நாட்களில் (நோவா,மோசே,இயேசு வாழ்ந்த காலத்தில்) நீங்கள் எந்த நிலைமையில் வாழ்ந்திருப்பீர்கள் என்பதை நிரூபிக்கிறதாயி ருக்கின்றது. உங்களுக்கு நீங்களே நியாதிபதிகளாயிருந்து இதற்கு தீர்ப்பு சொல்லுங்கள்.
செய்தி:- மூவகை விசுவாசிகள். நவம்பர் 24,1963.
85.நீங்கள் உலகத்தைப் போலவும் மற்றவர்களைப் போலவும் நடந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கிறிஸ்துவை முத்தமிட்டு குட்-பை விடை பெற்று திரும்பிச் செல்லுங்கள்.
ஆனால் நீங்கள் நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலரின் வழியில் செல்ல விரும்பினால்,தேவனின் மாறாத கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.உலகத்திலுள்ள மற்றவர் என்ன கூறின போதிலும்,நீங்கள் அங்கேயே நிலைத்திருந்து, தேவன் அவ்வாறு கூறியுள்ளார்.அது உண்மையென்று விசுவாசிக்கிறேன்.என் வாழ்க்கையில் அதை என்னால் வெளிப்படுத்த முடியாமல் போனாலும்,தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அதை நான் விசுவாசிக்கிறேன். அதில் நான் நிலைத்திருக்கிறேன் என்று கூறுங்கள்.
92.கிறிஸ்தவ வாழ்க்கை மலர் படுக்கையைப் போல் மென்மையானது என்று உங்களிடம் கூறும் போதகர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர்,அல்லது அவர்களே அந்த அனுபவத்தைப் பெறாமல் இருக்கின்றனர்.உலகம் உங்களைப் பகைக்கும்.ஜனங்கள் உங்களைப் பகைப்பார்கள்.நீங்கள் நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் உங்கள் வழியைத் தெரிந்துக் கொண்டு,இகழப்பட்டு பரியாசம் செய்யப்பட வேண்டும்.நீங்கள் வித்தியாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.நீங்கள் வேறொரு நாட்டிலிருந்து பிறந்தவர்கள்.
101.நீங்கள் கிறிஸ்தவரான பிறகு,உங்களுக்கும் வாழ்க்கை கடினமாயிருக்கும்.ஏனெனில் உலக உல்லாசங்களும்,இன்பங்களும் அனுபவித்த வாழ்க்கையிலிருந்து தேவனுக்கு பிரதிஷ்டை செய்யும் வேறொரு வாழ்க்கைக்கு உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியவர்களாயி ருக்கிறீர்கள்.இந்த பக்கத்துக்கு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
135.நீ செய்தியை விசுவாசித்தால்,அதை அப்படியே விடாது ஒட்டிக் கொண்டிரு. பாருங்கள்? கிரயம் என்னவானாலும் அதிலே தங்கியிருந்து,தொடர்ந்து செல், இதை,அதை,அல்லது மற்றதை நான் தியாகம் செய்ய வேண்டுமென்றாலும்,நான் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டியதாயிருந்தாலும், நான் திருடுவதை விட்டு விட வேண்டியதாயிருந்தாலும், நான் அதிலே திலைத்திருப்பேன். பாருங்கள்?
செய்தி:- இனத்தான் மீட்பர். அக்டோபர் 2,1960.
62.மூன்று காரியங்கள் எனக்கு சம்பவிக்க வகையுண்டு.இது என் பாதையின் முடிவாக இருந்தது,மற்ற ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும்.அவர் அதைப் பெற்றுக் கொள்ள,நான் அவருக்காக பாதையை திறந்து விட்டேன்.பிரசங்கம் செய்யப் வரப்போகிறவர் வார்த்தையில் உறுதியாக நின்று, பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கு திருப்புவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அது என்பாதையின் முடிவாக இருக்கலாம்.அல்லது அவர் என் ஊழியத்தை வெளிநாடுகளில் நடத்தும் சுவிசேஷ ஊழியமாக மீண்டுமாக மாற்றலாம்.அல்லது,அவர் என்னை சுவிசேஷகனாக இனி ஒருபோதும் அழைக்காமல்,என்னை எங்காவது வனாந்திரத்துக்குக் கொண்டு சென்று என்னை அபிஷேகித்து,வரவிருக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த ஒருவராகஅனுப்பலாம் என்று நான் நினைக்கிறேன்.
105. …இந்த செய்தி ஒலிநாடாக்களின் மூலம் உலகம் முழுவதும் செல்லும்,அங்கு ஜனங்கள் வீடுகளில் உட்கார்ந்து கொண்டு….இந்த ஒலிநாடாக்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கைகளில் சரியாக போய் விழும்.தேவன் வார்த்தையை அவர்களிடம் நடத்த முடியும்.ஆகையால் தான் அவர் என்னை இதை செய்யும்படி இங்கு அன்ப்பி, ஆகாரத்தை சேமித்து வை என்றார்.நான் வெளிநாடுகளுக்குச் செல்ல அவர் என்னை அனுமதிக்கவில்லை.
133.யாரோ ஒருவருக்கு எதிராக உங்களுக்கு ஏதாவது இருக்குமானால் – உங்கள் சகோதரனுக்கு எதிராக – அவர் செய்த தவறை வேறு யாரிடமாவது கூற வேண்டாம்.அவரிடமே சென்று கூறுங்கள்.அவர் உங்களிடம் தர்க்கம் பண்ணினால்,வேறொருவரை உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள்.வேதம் கூறும் விதமாக அதைச் செய்யுங்கள்.
134.ஜனங்களின் பார்வையில் இயேசுவை சிறுமைப்படுத்த, அவர்களால் கண்டுபிடிக்க முடிந்த ஒவ்வொரு சிறு தவறையும் அவர்கள் தேடிக் கண்டு பிடிக்க முயன்றனர்.அது தான் பிசாசுக்கு வேண்டும்.உங்களுக்கு ஜனங்களிடமுள்ள செல்வாக்கை அவர்கள் கெடுக்க விரும்புகின்றனர். எனவே தான் நீங்கள் செய்யும் காரியங்களில் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உண்மையுள்ள தேவனுடைய மனிதனைப் போல நடவுங்கள், தேவனுடைய மனிதனைப் போல் பேசுங்கள்.பாருங்கள்? தேவனுடைய மனிதனைப்போல் நடந்தது கொள்ளுங்கள்; தேவனுடைய மனிதனைப் போல் வாழுங்கள்.ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல அவனால் முடிந்தவைகளை விழுங்க வகை தேடிச் சுற்றித் திரிகிறான்.
141.யாரோ ஒருவர், ஓ,இந்த மனிதன் அளவு கடந்து வெகுதூரம் சென்று விட்டார் என்றார்.அவர் அவ்விதம் செய்திருக்கக்கூடும். அவர் தன்னை சேதப்படுத்திக் கொண்டார்;அவர் அளவு கடந்து வெகு தூரம் சென்று விட்டார்;இப்பொழுது அவர் மதவெறி கொண்டிருக்கிறார் ஒருக்கால் அவர் அவ்வாறு செய்திருக்கக்கூடும். எத்தனை பேர்  அவ்விதம் அளவு கடந்து வெகு தாரம் சென்று விட்டனர் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகையில்,அளவு கடந்து செல்லாத இட்சக்கணக்கானவர்கள்களைக் குறித்து என்ன? அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர்.நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா?
199.அநேக சமயங்களில் நான் வீடுகளுக்கு செல்வதுண்டு,அங்கே பெண்கள் நின்று கொண்டிருப்பார்கள்.நான் ஒரு வீட்டை அடைந்து கதவை தட்டும் போது,ஒரு சகோதரி வந்து, உள்ளே வாருங்கள்,சகோ.பிரன்ஹாம் என்று அழைத்தால்,அவளுடைய கணவர் அங்கு இல்லாமல் போனால், அது வியாதிப்பட்ட விஷயமாகவும், என்னோடு கூட ஒருவர் இருந்தாலொழிய நான் உள்ளே போக மாட்டேன்.அவள் என்னை மருத்துவமனைக்கு அல்லது அறைக்கு அழைத்து சகோ.பிரன்ஹாமே,இங்கே வாருங்கள்.நான் சகோதரி இன்னார்,இன்னார் தான் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறேன்.நான் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.என் தாயாரை அழைத்து வந்திருக்கிறேன்;அவர்கள் வியாதியாயிருக் கிறார்கள் என்று சொன்னால்,என் மனைவியை நான் கூட்டிக் கொண்டு செல்வேன்.இல்லையென்றால்,ஏதாவதொரு சகோதரனை கூடக் கொண்டு செல்வேன்.
200.பாருங்கள்,நான் எண்ணவில்லை….அங்கு நான் செல்வதில் தவறொன்றுமில்லை என்பது என் கருத்து.ஆனால் நான் அங்கு செல்வதை யாராகிலும் கண்டால்? பாருங்கள்? முதலாவதாக என்ன தெரியுமா?,அவர்கள்,அந்த பெண் இருந்த அறைக்குள் சென்றார்,அவர் பெண்களின் பின்னால் நடக்கிறார் என்று மோசமாக பேசுவார்கள். அது…பாருங்கள், அந்த காரியத்தை செய்யக்கூடாது. பாருங்கள்? அப்படிபட்ட ஒன்றை நீங்கள் செய்யக்கூடாது.ஏனெனில் யாராவது ஒருவருடைய வழிகளில் நீங்கள் இடறலைப் போடுகிறவர்களாயிருப்பீர்கள்.பாருங்கள்? அவ்விதம் செல்வதனால் நான் தவறொன்றும் செய்வதில்லை என்று நினைக்கிறேன்.நான் உள்ளே போகும் போது தேவனை நம்பியே செல்கிறேன்.அந்த காரியம் என்னவாயிருந்தாலும்,நான் தேவனையே நம்பி எல்லாவற்றையும் செய்கிறேன்.இருப்பினும்,பாருங்கள்…நான் கர்த்தரை போதுமான அளவுக்கு நேசிப்பதனால் அதை செய்யமாட்டேன்.
218…..தேவனுடைய வார்த்தையின் ஆவியும் வல்லமையும் இந்தக் கடைசி நாட்களில்,அவர்களுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அம்பலப்படுத்துகிறது (அவ்வளவுதான்), அவர்கள் இவைகளின் மூலம் ஜனங்களை குருடாக்கி வந்தனர்.எனவே என் இளம் சகோதரரே,இந்த சபைகளிலிருந்து இங்கு வந்துள்ளாரே,தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள்.அசையாதீர்கள்.உங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போனால்,வேறு யாருடைய வழியிலும் குறுக்கே நிற்காதீர்கள்.அங்கு நின்று கொண்டு,கதவைத் தட்டிக் கொண்டு, அதை சுட்டிக் காட்டுங்கள்.அங்கேயே நிலைத்திலுங்கள். மதவெறியை தொடங்கி விடாதீர்கள்.ஏனெனில் அது உங்களை காட்டிக் கொடுத்து விடும்.நீங்கள் உண்மையும் பரிசுத்தமுள்ளவர் களாய் அந்த வார்த்தையில் நிலைத்திருப்பீர்களானால்,தேவன் உங்களை உறுதிப்படுத்துவார்.அது உண்மை.
219.அவருடைய ஊழியம் அவர்களுடைய உபதேசங்களையும், கொள்கைகளையும் அம்பலப்படுத்தினது. எனவே அவர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்தி அவரை ஒழிக்கப் பார்த்தார்கள்.அவரை ஒழிக்கக் கூடிய ஒவ்வொரு உபாயத்தையும் அவர்கள் கையாண்டார்கள்……..
செய்தி:- இயேசுவின் பட்சம் சேர்ந்திருத்தல். ஜூன் 1,1962.

No comments:

Post a Comment