மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, May 26, 2011

இயேசு கிறிஸ்து மாறாதவராயிருக்கிறார். பாகம்-2

இயேசு கிறிஸ்து மாறாதவராயிருக்கிறார்
பாகம்-2

…விவாகமும் விவாகரத்தும் என்னும் பொருளைக் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் நம்மிடையே நிலவி வருகின்றன.ஒரு மனிதன்,தன் மனைவி மரித்துப் போனாலொழிய ஒரு முறை தான் விவாகம் செய்து கொள்ளலாம் என்பது ஒரு கருத்து.நீங்கள் அதை பின்பற்றி செல்வீர்களானால்,புறம்பே சென்று விடுவீர்கள்.மற்ற கருத்து, மனைவி அல்லது புருஷன் இருவரில் யாராகிலும் ஒருவர் விபச்சாரம் செய்தால்,விபச்சாரம் செய்தவரை மற்றவர் தள்ளி விட்டு மறுபடியும் விவாகம் செய்து கொள்ளலாம் என்பதே.இதை பின்பற்றினாலும் நீங்கள் புறம்பே சென்று விடுவீர்கள்.
எனவே பாருங்கள்,அது தென் கிழக்குமல்ல,வடகிழக்குமல்ல; நமக்கு நேர் கிழக்கு வேண்டும்.இந்த வழியில் சென்றால் நீங்கள் வேதத்தை விட்டு அகன்று விடுவீர்கள்,அந்த வழியில் சென்றாலும் நீங்கள் வேதத்தை விட்டு அகன்று விடுவீர்கள்.வேதம் வேதத்தை சந்தித்து உண்மை எதுவென்று நாம் அறிய விரும்புகிறோம்,இரண்டும் வெவ்வேறு வழிகளில் சென்று சரியான பதிலை அளிக்க தவறி விடுகின்றன.ஆனால் அதற்கு சரியான பதில் இருந்தாக வேண்டும்.
பக்கம்:-19 செய்தி:- விவாகமும்,விவாகரத்தும் பிப்ரவரி 21,1965.
…நான் இப்பொழுது கூறப்போவது,அந்த நேத்தில் எனக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.எனவே அதைக் கேட்கத் தவறாதீர்கள்,
எங்களைப் பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே-என்னையும் என் செய்தியையும் பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே-இதைக் கூறுகிறேன், வெளியிலுள்ளவர்களுக்கு அல்ல.இது தேவனுக்கு முன்பாக என்னைக்குறித்து சாட்சிக் கொடுக்கும்.இது இந்த குழுவிற்கு மாத்திரமே.
இதை நீங்கள் உண்மையென்று நம்பி,இது தேவனிடத்திலிருந்து வந்ததென்று விசுவாசியுங்கள்,அவருடைய மேகமும்,என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ள அவருடைய செய்தியும் காண்பிக்கும் உறுதிப்படுதலை ஆதாரமாக கொண்டு,மலையின் மேல் தேவன்,என்னை அதே காரியத்தை செய்யவும், நீங்கள் இப்பொழுது இருக்கிறவிதமாகவே இருந்தது,இனிமேல் அப்படி செய்யாதிருக்கும்படி உங்களிடம் கூறுவதற்கு அனுமதிக்க மாட்டாரா என்ன? உங்கள் மனைவிகளுடன் சென்று சமாதானமாயிருங்கள்,ஏனெனில் காலதாமதமாகி விட்டது. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது! உறவுகளை முறித்து போடுவதற்கு நமக்கு நேரமில்லை.அதை மறுபடியும் செய்ய துணிச்சல் கொள்ளாமலிருங்கள்! நான் என் சபைக்கு மாத்திரமே இதை கூறுகிறேன். நீங்கள் விவாகம் செய்து கொண்டிருந்தால்-இதை நான் கூறலாமென்று மலையின் மேல் தேவன் என்னிடம் கூறினதற்கு அவரே சாட்சி (ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டதால் எழுந்து இயற்கைக்கு மேம்பட்ட வெளிப்பாடு. இது தேவனுடைய வார்த்தையில் உள்ள கேள்வி) அவர்கள் இப்பொழுதுள்ள விதமாகவே வாழ்ந்து இனி பாவஞ் செய்யாதிருப்பார்களாக.
ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.அது உண்மை. அப்படியிருக்கவில்லை, முடிவிலும் அப்படியிருக்காது! ஆனால் நவீன சூழ்நிலையில்,தேவனுடைய ஊழியக்காரன் என்னும் முறையில் என்னை அவருடைய தீர்க்கதரிசியென்று அழைத்துக்கொள்ள மாட்டேன்.அதற்கென்று நான் அனுப்பப் படாவிட்டால், தீர்க்கதரிசி வரும்போது,அவருக்கென்று ஒரு அஸ்திபாரம் இருக்கத்தக்கதாக அதைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.எனவே நவீன சூழ்நிலையில்,உங்கள் மனைவிகளுடன் இப்பொழுது வீடு சென்று வாழ்கை நடத்தும்படி உங்களுக்கு கட்டளையிடுகிறேன்.அவளுடன் நீங்கள் மகிழ்சியாயிருந்தால்,அவளுடன் வாழ்ந்து குழந்தைகளை தேவபக்தியில் வளர்ப்பீர்களாக ! ஆனால் நீங்கள் மறுபடியும் அதை செய்வீர்களானால்,தேவன் உங்கள் மேல் இரக்கமாயிருப் பாராக! அப்படிப்பட்ட ஒன்றை செய்யாதிருக்கும் படி உங்கள் பிள்ளைகளுக்கு போதியுங்கள்.அவர்களை தேவபக்தியில் வளர்ப்பீர்களாக! நீங்கள் இந்தவிதமாக இப்பொழுது இருப்பதால்,நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கடைசி சாயங்கால நேம் வரைக்கும் அப்படியே இருந்தது,கிறிஸ்துவில் தேவன் நமக்கு வைத்திருக்கும் பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவோம்.அங்கு எல்லாமே கைகூடும்.
பக்கம்:- 74,75,76 செய்தி:- விவாகமும்,விவாகரத்தும் பிப்ரவரி 21,1965.
அதே எக்காளத்தின் கீழ் ஏழாம் தூதனின் செய்தி எல்லாமே அதே காரியம்,அதே முத்திரை.அது என்ன செய்ய வேண்டும்? மணவாட்டியை பெந்தெகொஸ்தே பார்ம்பரியங்களிலிருந்தும் உலக பாரம்பரியங்களிலிருந்தும் உண்மையான பாவ நிவாரணமாகிய வார்த்தையாகிய கிறிஸ்துவுக்கு,நமது மத்தியில் மாமிசமாகியுள்ள வார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
விஞ்ஞானம் அதை புகைப்படங்களின் மூலம் நிரூபித்து விட்டது.உலகம் முழுவதுமுள்ள சபை அதை அறிந்துள்ளது.நாமும் அதை உறுதியாய் அறிந்துள்ளோம்,ஏனெனில் அவர் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நம்மிடம் கூறினவைகளில் ஒன்றாகிலும் தவறவில்லை.அவர் அந்த நதிக்கரையில், யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல,இதுவும்…..? என்று கூறவில்லையா?
பக்கம்:- 61,62. செய்தி:- எக்காளப்  பண்டிகை  ஜூலை 19,1964
ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளம் (நாம் ஆபிரகாமின் ராஜரீக சந்ததி,மணவாட்டி); வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பாக ஆபிரகாம் கண்ட கடைசி தரிசனம் எது? தேவன் மனித ரூபத்தில்.ஜனங்களின் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிதல் ஒரு மனிதன்……
அது உங்களை திணறச் செய்கிறதென்று நான்றிவேன்;ஆனால் இதை நிச்சயமாக அறிந்து கொள்ள கவனமாயிருங்கள்.நீங்கள் வேதத்தை இப்படி படிக்கக் கூடாது. நீங்கள் ஆழ்ந்து படித்து உள்ளான அர்த்தத்தை அறிந்து,அதன் காட்சியை உருவாக்க வேண்டும்.
தேவன் அவள் சரீரத்தை மாற்றினார்,அவர்கள் இருவரின் சரீரங்களை மாற்றினார். இது இந்நாளில் மனுஷகுமாரனால் (பாருங்கள்) சாயங்கால செய்தியில் வெளிப்பட வேண்டிய இரகசியம்.பாருங்கள்? மாற்றினார்….அவர்கள் கண்ட கடைசி அடையாளம் என்ன? அவர்களுடைய சரீரங்களில் மாறுதல் ஏற்படுவதற்கு முன்பு, சிந்தனைகளைப் பகுத்தறிதலை.நாம் குமாரனை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு என்ன நிகழும்? தேவ எக்காளம் தொனிக்கும்.அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் (புது சரீரத்துடன்).பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாகி (அல்லேலுயா), கர்த்தருக்கு எதிர்கொண்டு போக,மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். இரகசியமானது வெளிப்படையாகி விட்டது;முத்திரைகள் திறக்கப்பட்டு விட்டன.இஸ்ரவேலுக்கு எக்காளம் முழங்கி விட்டது;அவர்களுடைய இரண்டு தீர்க்கதரசிகளும் தோன்றுவதற்கு ஆயத்தமாயுள்ளனர்.அது என்ன? அவர்கள் தோன்றுவதற்காக, சபையானது காட்சியிலிருந்து விலக வேண்டும்.அவர் ஒரே நேரத்தில் இருவருடன் தொடர்பு கொள்வதில்லை,அவர் அப்படி செய்ததேயில்லை.பாருங்கள்?
ஓ,சகோதரனே! கவனி! அவர்களை ஸ்தாபனங்களினின்றும் பாரம்பரியங்களினின்றும் வெளியே அழைக்க….பெந்தெகொஸ்தே காலத்தின் சபை முடிந்து விட்டதை நாம் காண்கிறோம்.மணவாட்டி மேலே செல்வதற்காக வழி விலக வேண்டும்.அப்பொழுது தேவனுடைய இரண்டு ஊழியக்காரர்கள் வெளிப்படுத்தலில் கூறப்பட்டள்ள அந்த இரண்டு தீர்க்கதரிசிகள் தோன்றி,ஏழாம் எக்காளத்தை ஊதி,கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்து வார்கள்.
ஏழாம் தூதன், இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்கிறான். இதோ மெதோடிஸ்டு,இதோ பாப்டிஸ்டு,இதோ பெந்தெகொஸ்தேயினர் என்று அவன் கூறுவதில்லை. இதோ வார்த்தை, தேவனுடைய குமாரன் உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டி.அதைத் தவிர வேறு அஸ்திபாரமே கிடையாது. இன்னும் எவ்வளவு காலம் உள்ளது? என்று அவர்கள் கேட்கின்றனர். யூதர்கள் சொந்த நாட்டில் உள்ளனர். மணவாட்டி அழைக்கப்பட்டு விட்டாள்.வேதப்பிரகாரமாக,அவர் வாக்குத்தத்தம் பண்ணின அனைத்தும் அப்படியே நிறைவேறி வருகின்றது.நாம் ஆயத்தமாயிருக்கிறோம்.அந்த நேம் இங்குள்ளது.
பக்கம்:-66,67,68.செய்தி:-எக்காளப் பண்டிகை  ஜூலை 19,1964.
உண்மையான விசுவாசத்தின் புகலிடம்,இளைப்பாறும் ஸதலம் தேவனுடைய வார்த்தையே.விசுவாசிப்பது காண்பிப்பதல்ல (make- believe) உண்மாயன விசுவாசம்,நம்பிக்கையல்ல விசுவாசம். நம்பிக்கை அகன்று விடும்.ஒருக்கால் இருக்கலாமே என நம்பிக்கை எண்ணி, சில சமயங்களில் வெளியே சென்றுவிடும்.ஆனால் விசுவாசமோ உள்ளே நுழைந்து, அது ஏற்கனவே நிறைவேறி விட்டது என்று கூறும்.அதுதான் விசுவாசம்,அங்குதான் விசுவாசம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.ஏனெனில் சத்துரு மேற்கொள்ள தேவன் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார் என்று அதற்குத் தெரியும்.அவர் ஒரு போதும் அப்படிச் செய்ததில்லை.சூழ்நிலை எவ்வாறு காணப்பட்டாலும்,விசுவாசம் என்பதற்கு அது உறுதியாகத் தெரியும்.
பக்கம்:48 செய்தி:- மூன்றாம் யாத்திரை ஜூன் 30,1963
இன்றைக்கு நமது மத்தியிலுள்ள மகத்தான பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவர்.தேவன் தமது வார்த்தையை நிரூபிக்க,வார்த்தையுடன் நமது மத்தியில் பிரத்தியட்சமாயிருக்கிறார்.அவர் தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு மேலான கிரியைகளைச் செய்து கொண்டு வருகிறார்.

….அக்கினி ஸ்தம்பத்திலுள்ள கர்த்தருடைய தூதனைப் பாருங்கள். விஞ்ஞான ஆராய்ச்சி அதை உலகமெங்கும் கொண்டு சென்றுள்ளது.அதன் மூலமாகவே அவர்கள் நியாயந்தீர்க்கப் படுவார்கள்.

அந்த ஆட்டுக்குட்டியானவர் என்ன செய்தார்? அந்த கர்த்தருடைய தூதனானவர்? அவர்தான் கிறிஸ்து. அதை நீங்கள் நம்புகிறீர்கள். யோவான் 6 ல்…..
அவர்தான் முட்செடியில் காணப்பட்ட எரியும் அக்கினி - அக்கினி ஸ்தம்பம்.அவர் மரித்து,மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த பின்பு, பவுல் அவரைத் தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் சந்தித்தபோது, அவர் அக்கினி ஸ்தம்பத்திற்கு திரும்பிவிட்டார். நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன்,மறுபடியும் பிதாவினிடத் திற்குப் போகிறேன் என்றார் அவர்.பேதுரு சிறைச்சாலையில் இருந்தபோது,அக்கினி ஸ்தம்பம் அதனுள் பிரவேசித்து கதவுகளை திறந்து அவனை வெளியே கொண்டு வந்து.அது உண்மை.

அந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களை எங்கு வழி நடத்தினது? மோசே அந்த அக்கினி ஸ்தம்பம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசியாயிருந்தான்.அவனுடைய செய்தியை அக்கினி ஸ்தம்பம் அற்புதங்களாலும் அடையாளங் களாலும் உறுதிப்படுத்தினது….

வெளியே வாருங்கள்,ஓ,அந்த குழப்பத்தை விட்டு வெளியே வாருங்கள்.ஜீவனுள்ள தேவனிடத்திற்கு வாருங்கள்.தேவனுடைய வார்த்தைக்கு வாருங்கள். வார்த்தை மாம்சமாகி….நமக்குள்ளே வாசம் பண்ணினார்,இப்பொழுது அவர் நமது சரீரத்திற்குள் இருந்துக்கொண்டு,நமது மத்தியில் வாசம் செய்கிறார்.வெளியே வந்து ஜீவனுள்ள தேவனை ஆராதியுங்கள். ….
பக்கம்:66,67,68,69 செய்தி:- மூன்றாம் யாத்திரை ஜூன் 30,1963 67.ஓ கள்ளப் போதகர்களே,இத்தனை ஆண்டு காலமாக நீங்கள் செய்திகளடங்கிய ஒலி நாடாக்களைக் கேட்டு வருகின்றீர்கள்.எதை யெல்லாம் செய்வதாக தேவன் வாக்குத்தத்தம் செய்ந்திருந்தாரோ, அவை அத்தனையும் அவர் நிறைவேற்றி வருவதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றீர்கள்.இதுவே சத்தியம் என்று நீங்கள் அறிந்திருந்தும்.ஸ்தாபன வேறுபாடுகளின் காரணமாக, அளிக்கப்பட்ட செய்தியைக் குறித்து வாக்குவாதம் செய்து,அது தவறென்று உங்கள் சபையாரிடம் கூறுகின்றீர்கள்.உங்களுக்கு ஐயோ! உங்கள் காலம் நெருங்கி விட்டது.
186.தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்களே அந்த வார்த்தை.தேவனுடைய வார்த்தை கூறியிருப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யவோ,கேட்கவோ அவர்களால் இயலாது.அவர்களுக்கு அதைத் தவிர வேறொன்றும் தெரியாது.
190.அக்கிரம செய்கை என்பது என்ன? ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் அறிந்திருந்தும்,அதைச் செய்யாமல் இருத்தலே அக்கிரமச் செய்கையாகும்.அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்திருக்கின்றனர்.அவர்கள் அதைக் கேட்டும் இருக்கின்றனர்.இந்தப் பிரசங்க ஒலிநாடாக்களை நீங்கள் கேட்கின்றீர்கள்,தேவனாகிய கர்த்தர் கூறும் இந்த செய்தியை கேட்கின்றீர்கள்,அது உண்மையென அவர் நிரூபிப்பதையும் காண்கிறீர்கள்.சூரியன் உஷ்ணத்தை அளிப்பது போல்,இது அவ்வளவு வெட்ட வெளிச்சமாய் இருக்கின்றது. ஆயினும், ஸ்தாபனங்களைச் சேர்ந்துக் கொண்டு ,தவறான காரியங்களில் நிலைக் கொண்டிருப்பவர்களே! நீங்கள் தான் அக்கிரமச் செய்கைக்காரர்.
269.என்னைக் குறித்து நான் பேசிக் கொண்டேன் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம்.நான் ஒரு சத்தமாக இருக்க விரும்புகிறேனேயன்றி, அதற்கும் எனக்கும் வேறந்த தொடர்பு மில்லை.நான் மிருகங்கள் பிடிப்பவனாக (trapper)ஆகவே விரும்பினேன்.ஆனால் நான் இவ்விதம் இருக்க வேண்டு மென்று பிதாவானவர் சித்தம் கொண்டார்.எனவே நான் இதைத் தெரிவிக்கிறேன்.இதை அறிவிக்கத் தீர்மானித்து விட்டேன். அந்த நதியினிடத்தில் பரத்தியட்சமானவர் நானல்ல. அவர் பிரத்தியட்ச மாகும் போது நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். இந்த அற்புதங்களையெல்லாம் செய்பவன் நானல்ல.வரப்போகும் காரியங்களைப் பிழையின்றி அறிவிப்பவன் நானல்ல.அவர் இத்தகைய செயல்களைப் புரியும்போது,நான் அவரருகில் இருக்கிறேன்.அவர் என்னைத் தம் சத்தமாக உபயோகித்து வருகின்றார்.என் மூலம் அவர் பேசுவதற்கென என்னை நான் அவருக்கு முற்றிலுமாக அர்பணித்து விட்டேன்.
அது ஏழாம் தூதனல்ல! மனுஷகுமாரன் வெளிப்படுத்தலாகும். அது தூதனல்ல,மறைபொருளாயிருந்த தேவனுடைய இரகசியம் வெளிப்படுதலாகும்.அது மனிதனல்ல.அது தேவன்.தூதன் மனுஷகுமாரனல்ல,ஆனால் அவரால் அனுப்பப்பட்ட தூதன். மனுஷகுமாரன் என்னப்படுவது கிறிஸ்து.அவரைத் தான் நீங்கள் புசித்து வருகின்றீர்கள்.நீங்கள் மனிதனின் வார்த்தையைப் புசிக்கவில்லை. மனிதனின் வார்த்தைகள் தவறுதலாகிப் போக ஏதுவுண்டு. ஆனால் நீங்களோ என்றென்றும் தவறாத மனுஷகுமாரனின் சரீரமாகிய வார்த்தையை புசித்து வருகின்றீர்கள்.
270.இதுவரை நீங்கள் அருடைய வார்த்தையை முற்றிலும் புசியாமல் இருந்தது,உலகத்தின் காரியங்களையும் ஸ்தாபனங் களையும் விட உயரப் பறக்காமலிருந்தால்இப்பொழுதே நாம் ஜெபிக்கையில் அதை செய்ய கோருகிறேன்.நாம் ஜெபிப்போம்.
செய்தி:- கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் ஜூலை 25,1965  
மகா பரிசுத்த ஸ்தலத்தில் மன்னாவை சுவைத்து புசித்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை எப்பொழுதாவது நீங்கள் சந்தித்திருக்கின்றீர்களா? அத்தகைய மனிதனை நீங்கள் திங்கட் கிழமையோ,செவ்வாய்கிழமையோ,புதன்,வியாழன், வெள்ளி, சனிக் கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை,மேகம் சூழ்ந்த நாளிலோ, பிரகாசமான நாளிலோ,இருள் சூழ்ந்த நாளிலோ காரியங்கள் சரியாக இருந்தாலும் தவறாகப் போனோலும் எந்த சூழ்நிலையில் அவனை நீங்கள் சந்தித்தாலும் அவன் இனிமையானவனாகவே யிருப்பான்;தேவ அன்பினால் எப்பொழுதும் நிறைந்தவனாகவும், தவறானதைப்பேசி அல்லது செய்கிறவனாகவோ காணப்படாமல், தேவனுடைய மகிமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பான்.அவன் ஒரு போதும் பசியடைவதில்லை;தன்னுடைய வளர்ச்சிக்காக அவன் ஆலயத்திற்கு செல்ல வேண்டுவதில்லை.ஏனெனில் அவன் எப்பொழுதும் தேவனால் நிறைந்தவனாயிருக்கிறான்.
ஜனங்கள் உன்னோடு ஆலயத்திற்கு வருவார்கள்,அங்கு உன் கையைக் குலுக்கி மகிழ்ச்சியாகப் பேசி உன்னை, சகோதரனே என்று அழைப்பார்கள்.ஆனால் ஆலயத்திற்கு வெளியே ஒரு வியாபார சம்பந்தமான ஒப்பந்தத்தில் தாங்கள் தீர்மானித்தபடி சரிபடவில்லையென்றால்,சுயநன்மையைக் கருதி உன்னோடு வித்தியாசமானவர்களாகி விடுவார்கள்.இந்தக் கூடாரத்தில் அத்தகையோர் இருக்கிறார்கள் என்று நான் கூறவில்லை.ஆனால் அத்தகைய ஜனங்களும் இருக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு சிறிய சம்பவம்,பழைய கோபத்தையும்,சுயநலத்தையும் திரும்ப கொண்டு வந்து விடும்.கேலிப் பரியாசப் பேச்சுகளுக்கு செவி கொடுத்தோ அல்லது அவ்விதமான காரியங்களைச் செய்யவோ உடன்படும் நபர்கள் ஒருபோதும் மகாபரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதில்லை.
பக்கம்:24,25செய்தி:-ஏன் ஜனங்கள் அலைகழிக்கப்படுகிறார்கள்.  ஜனவரி 1,1956.
இதோ நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும்.........ஆமோஸ் 8:11-13 என்று வேதம் கூறுகின்றது. அந்த நேரம் இப்பொழுதே உண்டாயிருக்கின்றது.மனிதர்கள் தங்களை தேவர்களைப் போல் காணப்பித்து தாங்கள் மகிமைப்பட விரும்புகிறார்கள்.அத்தகைய காலம் இதோ இப்பொழுதே உண்டாயிருக்கின்றது.
பக்கம்:42 செய்தி:- ஏன் ஜனங்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். ஜனவரி 1,1956.
33.ஒவ்வொரு காலத்திலும் தேவன் எப்பொழுதுமே திரைக்கு பின்னால் மறைந்து கொண்டிருந்தார்,எல்லா காலங்களிலும்.ஆனால் அவர் எல்லாகாலங்களிலும் தேவனாயிருந்து வந்திருக்கிறார். பாருங்கள்? ஆனால் அவர் தம்மை உலகத்துக்கு மறைத்துக் கொண்டு,தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார்.அக்காலத்தில் அவர் தம்மை அப்போஸ்தலர் களுக்கு வெளிப்படுத்தினது போல.இப்பொழுது அது தேவன் கிறிஸ்துவில் பேசினதாகும்.
34.மனிதன் எப்பொழுதுமே;அந்த தேவனைச் (சரீரப்பிரகாரமாக) காணவே விரும்புகிறான்,அது மனிதனுடைய சுபாவமாக இருந்து வருகின்றது.அதைக் காண வேண்டும் என்று எப்பொழுதுமே அவன் விரும்பினான்.அவரைப் போல் காணப்படும் அநேக சிருஷ்டிகளை மனிதன் உருவாக்கிக் கொண்டான்…..
58.அதுதான் தேவன்.அவர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து மாற்றிக் கொண்டு மனிதனாக ஆனார்.அவர் மனிதனில் வாசம் செய்வதற்கென தம்மை மறுபடியும் ஆவியாக மாற்றிக் கொண்டார். உண்மையாகவே தாம் என்னவாயிருந்தாரோ அவ்வாறே தேவன் மனிதனுக்குள் கிரியை செய்தல்.தேவன் ஒரு மனிதனில் கிரியை செய்ததுதான் இயேசு கிறிஸ்து-ஒரு மனிதனில்.ஒரு மனிதனில். அதுதான் அவர்.அவர் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து தம்மை மாற்றிக் கொண்டு வனாந்தரத்திலுள்ள திரைக்குப் பின்னால் வந்தார்.அந்த திரை தேவனை இஸ்ரவேலரிடமிருந்து மறைத்தது.மோசே அவருடைய சரீரத்தின் உருவத்தைக் கண்டான்.ஆனால் உண்மையில் அவர் எப்பொழுதும் இந்த அக்கினி ஸ்தம்பத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்தார்.அதுதான் தேவனிடத்திலிருந்து சென்ற அந்த லோகாஸ்(logos).
59.இப்பொழுது இங்கு நாம் காண்பது என்னவெனில்,பெந்தெ கொஸ்தே நாளுக்குப் பிறகு தேவன் மனிதனில் கிரியை செய்வதில்லை அல்லது கிரி….இப்பொழுது  அவர் மனிதன் மூலமாக கிரியை செய்கிறார்.பாருங்கள்? அப்பொழுது அவர் இயேசு என்னும் மனிதனில் கிரியை செய்து வந்தார்.இப்பொழுது அவர் இந்நோக்கத்திற்காக அவர் தெரிந்த கொண்ட மனிதனின் மூலம் கிரியை செய்கிறார்.மனித உருவில் தேவன்.அவர் தம்மைத்தாமே தேவனுடைய உருவத்திலிருந்து மனித உருவத்திற்கு மாற்றிக் கொண்டார்.
73…இப்பொழுது அவர் என்ன செய்கிறார்? மனுஷகுமாரனாக திரும்ப வருகிறார்.அதன்பிறகு, அதிலிருந்து, தாவீதின் குமாரன். நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்று பார்த்தீர்களா? மனுஷகுமாரன்,தாவீதின் குமாரன்,தேவனுடைய குமாரன்.அவர் இந்தக் கடைசி நாட்களில் மல்கியா 4ன் படியும்,இன்னும் இந்த நேரத்துக்கான மற்ற தீர்க்கதரிசனங்களின் படியும்,மனுஷகுமாரன் வெளிப்பட்டிருக்கிறார்.சபையானது அவரை வெளியே தள்ளிவிட்ட பிறகு,இனி ஒரு போதும் அவர் சபையுடன் தொடர்பு கொள்ளப் போவதில்லை.அவர் வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.சில முன்குறிக்கப்பட்ட வித்துக்கள் இன்னும் அங்குள்ளன.அவர் அவர்களை அடைந்தாக வேண்டும்.
116.இந்த கடைசி நாட்களில் அவர் திரும்ப வரவேண்டும் மனுஷகுமாரனை வெளிப்படுத்தவும்,பாருங்கள்,வார்த்தையாகிய வெளிச்சத்தைக் காண்பிக்கவும் அக்கினி ஸ்தம்பம் மறுபடியும் வரவேண்டும்.இது வரைக்கும் உண்டாயிருந்த பாரம்பரியங்கள் நீக்கப்படும்.அதை எதையும் தொல்லைப்படுத்த போவதில்லை,அது எப்படியும் நடந்தே தீரும்.தேவன் அந்த ஸ்தாபனங்களையும் பாரம்பரியங்களையும் கிழித்தெறிவார்.
            எந்த விதமான ஆவியால் அவர் அதைச் செய்வார்? அவர் முதலில் செய்து போல்.எலியாவின் நாட்களில்,யோவானின் நாட்களில் அவர் என்ன செய்தாரென்று பாருங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்;தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்.பாருங்கள்? நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன் என்று நினைக்காதீர்கள்.பாருங்கள்? தேவன் தாம் யாரென்பதைக் காண்பிக்க திரையைக் கிழித்து விட்டார்.பாருங்கள்.திரை கிழியும் போது,அதை கவனியுங்கள்….
125.ஓ சபையே,இந்த ஒலிநாடா வெளியே செல்லுமானால், சுவிசேஷத்தின் ஊழியக்காரரே,நீங்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களால் காண முடியவில்லையா? நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் மணி நேரத்தை உங்களால் காண முடியவில்லையா? தேவன் எல்லாவற்றையும் அப்புறம் தள்ளிவிட்டு தம்மை காண்பித்துக் கொண்டிருக்கிறார்…பாருங்கள்,அவர்கள் தேவனை வெளிப்படையான காட்சியில் காண வேண்டும் என்பதற்காக அவர் தேவாலயத்தின் திரைச்சீலையை துண்டுதுண்டாக கிழித்துப் போட்டார்.ஆனால் அவர்களோ அவரைக் காணக் கூடாதவாறு மிகவும் குருடாயிருந்தனர். இன்றைக்கு அவர் அதையே செய்து,அவருடைய வார்த்தையை, அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை முன்னிலையில் வைத்துள்ளார். வார்த்தையிலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் வெளிப்படையான காட்சியில் நமக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது.
126.புறஜாதி சபை என்ன செய்கிறது தெரியுமா?யூத சபை செய்ததையே செய்கிறது.இவர்களும் காணக்கூடாதவாறு மிகவும் குருடாயிருக்கின்றனர்அவ்வளவுதான்.அந்த நாளில் இருந்தது போல,இவர்களுடைய இருதயங்களின் மேலும் முக்காடு இருக்கிறது.
128.ஆகவே இன்றைக்கு பாரம்பரியம் என்னும் திரை மறுபடியும் வார்த்தையை மறைத்து, அது அப்படியல்ல என்கிறது.ஆனால் அது அப்படித்தான்.தேவன் அதைக் குறித்து சாட்சிக் கொடுத்து,எல்லோருக்கும் முன்னால் சூரிய வெளிச்சம் போல பிரகாசமாக தம்மை வேகமாக வெளிப்படுத்தின போதிலும்,அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர்.தேவனே எங்கள் மேல் இரக்கமாயிரும்.
300.அக்கினி ஸ்தம்பம் காணக்கூடிய விதத்தில் நமது மத்தியில் பிரசன்னமாகி,செய்தி சரியென்று அடையாளம் காண்பிக்கிறது – அவர் சீனாய் மலையில் செய்து போல,ஞாபகம் கொள்ளுங்கள்,உண்மையான செய்தி வருவதற்கு முன்பு மோசே பிரசங்கம் செய்து,அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தான்.அங்கு உண்மையான கட்டளைகள் அளிக்கப் படுவதற்கு முன்பு (முத்திரைகள் கொண்டு வரப்படுவதற்கு முன்பு) தேவன் ஜனங்களுக்கு முன்னால் இறங்கி வந்து அவன் அவரால் அனுப்பப்பட்டவன் என்பதை நிரூபித்தார். (அது சரியா?) அவனைக் கண்டு அவனுடன் பேசினதாக மோசே கூறின அதே அக்கினி ஸ்தம்பத்தில் அவர் இறங்கி வந்தார்.
301.ஓ,இந்த கடைசி நாட்களில் நமது மத்தியில் அதே அக்கினி ஸ்தம்பம் காணப்பட்டு அதே வார்த்தையைப் பேசுவது என்பது! அது மாத்திரமல்ல,அதை வெளிப்படுத்துவனால் அதை வியாக்கியானப்படுத்தி,அது சத்தியம் என்று நிரூபிப்பது.
   எனவே அதை அவிசுவாசிக்க ஜனங்களுக்கு எந்த வழியும் இல்லை – அவர்கள் வேண்டுமென்று மனபூர்வமாய் அப்படி செய்தாலொழிய, சத்தியத்தை அறியும் அறவை அடைந்த பின்பு ஒருவன் மனபூர்வமாய் பாவஞ்செய்தால்,பாவங்களினிமித்தம் செலுத்தக்க வேறொரு பலி இனியில்லை.
செய்தி:- தேவன் திரைநீக்கப்படுதல்  ஜூன் 14,1964.
95.கட்டப்பட்ட சித்தமுள்ளவர்களுக்காக தேவன் நோக்கிக் கொண்டிருக்கிறார்.அவர் எப்பொழுதுமே அதை செய்து வருகிறார். ஒரு மனிதன் எல்லாவற்றிற்கும் எதிராக கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவனாக ஆகவேண்டும்…எனவே கிறிஸ்துவைத் தவிர வேறு யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது.அது உங்கள் தகப்பன்,தாய்,சகோதரன்,சகோதரி,கணவன்,மனைவி யாராயிருந் தாலும்,நீங்கள் கிறிஸ்துவுடன் மாத்திரமே தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.அப்பொழுது மாத்திரமே தேவன் உங்களை உபயோகிக்க முடியும்.அது வரைக்கும் அவர் உங்களை உபயோகிக்க முடியாது.
97. … நல்லது,நீங்கள் எங்காவது ஓரிடத்தில் தொடங்க வேண்டும். எனவே நீங்கள் சிறு காரியங்களில் தொடங்கி, உலகப்பிரகாரமான பார்வைகளை அறுத்தெறிந்து,கிறிஸ்துவுக்கு கட்டப்பட்டவர்களாகி, அதன் பிறகு ஒவ்வொன்றாக அறுத்தெறிந்து முடிவில் கடைசியான காரியத்தை அறுத்தெறியுங்கள்.அப்பொழுது நீங்கள் முற்றிலும் கட்டப்பட்டவர்களாகிவிடுவீர்கள்.அவருடைய பிடியில் நீங்கள் வந்து விடுவீர்கள்.அவர் உங்களைத் தமது பிடியில் கொண்டிருப்பார்.
செய்தி:- கிறிஸ்துவினால் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுல். ஜூலை 17,1963.
231.ஆவியின் கனி என்பது என்ன? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது வெளிப்படுதலேயாகும்.அவர்கள் மட்டும் பார்க்க சற்று நின்றிருப்பார்களானால்,அவர்கள் கொண்டிருந்த ஆவியின் கனிகள்,அல்லது இவைகளைப் போன்ற ஏதோ ஒன்றை அவர் உடையவராயிருக்கவில்லை.ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது, சரியாக அம்மணி நேரத்திற்குரிய வெளிச்சம் அதுவேயாகும். அதுவேதான்.பாருங்கள்.
232.எவ்விதமான, எப்பேற்பட்ட ஒரு கல்வியாயிருந்தாலும் பரவாயில்லை.நீ எவ்வளவு அன்பாய்,மிருதுவாய் அல்லது, எல்லாவற்றுமாய் நீ இருந்தாலும் ஒரு பொருட்டல்ல;உனக்கு முன்பாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற அம்மணி நேரத்திற்கான வார்த்தையை நீ ஏற்றுக்கொள்ளவில்லையெனில் நீ இன்னுமாக அதே போன்ற கஷ்ட நிலைமைக்குள்ளாகத்தான் இருக்கின்றாய்.
233.அவ்விதம் கூறுவது கடினமாக ஒலிக்கலாம்.நான் அவ்விதமாக இருக்க வேண்டும் என நோக்கம் கொள்ளவில்லை.ஆனால் அது சத்தியமாயிருக்கின்றது.அதை அப்படியே – அப்படியே விசுவாசியுங்கள்.பாருங்கள்? அது சரி.இப்பொழுது,தேவன் என்னை மன்னிப்பாராக.நான் என்ன கூற விழைகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்களா?
செய்தி:- நம்ப முடியாது, ஆனாலும் உண்மை.  ஜூன் 2,1964.
434.அது எவ்வளவாக உங்களைப் பாதிக்கும் என்பதை நீங்கள் உணருவதில்லை! இப்பொழுது இதை நான் கூற விரும்புகிறேன்.ஒலிநாடாக்களில் இதை நீங்கள் பதிவு செய்யப்போவதில்லை என்று எண்ணுகிறேன்.ஏனெனில் ஒலிநாடாக்களில் கேட்பவர்கள் இங்குமங்குமாக சிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு,தங்கள் சொந்த அர்த்ததை உண்டாக்கிக் கொள்கின்றனர்.அநேகர் என்னிடம் வந்து, ‘சகோ.பிரன்ஹாமே,இத்தகைய ஊழியம் எங்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்கும்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஓ, என்னே! சகோதர,சகோதரியே,ஆனால் அவ்வூழியத்தினால் உண்டாகும் உத்திரவாதத்தின் தன்மையை உணராமல் நீங்கள் இவ்விதம் பேசுகின்றீர்கள்.நீங்கள் சொல்லுவதை ஜனங்கள்அப்படியே நம்புகின்றனர்.தவறான ஒன்றை நீங்கள் கூறி அதை ஜனங்கள் விசுவாசித்துப் பின்தொடர்ந்தால்,தேவன் அவர்கள் இரத்தப்பழியை உங்களிடம் கேட்பார்.அப்படியானால் அதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.அது மிகவும் பயங்கரமான ஒரு செயலாகும்.
435.ஆகவே,எல்லாரிடத்திலும் அன்பாயிருங்கள்.இயேசுவினிடம் உங்கள் முழு இருதயத்தோடும் அன்பு கூறுங்கள்.சாதரண வாழ்க்கையை கடைபிடியுங்கள்.எதையும் ஆலோசனை செய்து,அதன் அர்த்தத்தையறிய விழையாதேயுங்கள்.தேவனுக்கு முன்பாக எளியவர்களாயிருங்கள்.நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஆலோசிக்கின்றீர்களோ,அவ்வளவாக தேவனைவிட்டு புறம்பே செல்வீர்கள்.பாருங்கள்? அவர் கூறுவதையே அப்படியே விசுவாசியுங்கள்.

‘அவர் எப்பொழுது வருவார்?’ என்று அநேகர் ஆலோசித்து தங்களை குழப்பிக்கொள்கின்றனர்.                               
செய்தி:- ஆறாம் முத்திரை  
23.இப்பொழுது கவனியுங்கள்.ஏதோவொன்றை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும்.பாருங்கள் இதே நேரத்தில் இந்த அறையில் பத்தாயிரக்கணக்கான ஓசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? (சபையார் ஆமென் என்கின்றனர்) மக்களின் உண்மையான ஓசைகள் மின் அலைகளாக வந்து கொண்டிருக்கின்றன.நீங்கள் ஏன் அவைகளை கேட்க முடிவதில்லை? அவைகள் ஓசைகள்.அது சரிதானே? (ஆமென்).இதே நேரத்தில் அவைகள் இங்கே அலைகளாக மிதந்துக் கொண்டிருக்கின்றன.இப்பொழுது இந்த அறையில் மனித உருவங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன.அது சரிதானே? (ஆமென்).அப்படியென்றால் நீங்கள் ஏன் அவைகளைப் பார்க்க முடியவில்லை? பாருங்கள்? என்னுடைய சத்தத்தைப் போலவே அவைகளும் உண்மையான சத்தங்கள்.நல்லது, அப்படியன்றால் நீங்கள் ஏன் அவ்வோசைகளைக் கேட்க முடியவில்லை? பாருங்கள்? அவைகள் வெளிப்படுவதற்கு முன்பு அவ்வொலியின் அலைகள் ஏதோ ஒன்றின் மீது படவேண்டியதாய் இருக்கிறது.பாருங்கள்?.இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா? (ஆமென்).
24.இப்பொழுது ஒன்றுக்கும் வியாக்கியானம் கூறவேண்டாம்.நீங்கள் எதையாகிலும் அறிந்து கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புவரானால் அதை உங்களுக்கு அனுப்புவார்.பாருங்கள்? ஆகவே,இப்பொழுது நீங்கள் உண்மையாக…நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? (சபையார் ஆமென் என்கின்றனர்) நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்க உன்னை ஒரு வித்தியாசமானவனாக்கிக் கொள்ள முயலாதே. ஏனென்றால்,உன்னையே நீ தேவனை விட்டு புறம்பாக கொண்டு போய்விடுவாய்.ஆகவே,நீங்கள்,நீங்கள்,நீங்கள்…..
25.நீங்கள் புரிந்துக் கொள்ளக் கூடுமானால்,இதுதான் மூன்றாவது இழுப்பு.பாருங்கள்? நீங்கள் – நீங்கள் இதை அந்நாளிலேயே கண்டு பிடித்திருக்க வேண்டும்.பாருங்கள்? மற்ற இரண்டு இழுப்புகளினால் போலியான காரியங்கள் உண்டானது போல் இதில் இருக்காது என்பதை நினைவுகூறுங்கள்.பாருங்கள் அதுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
26.இந்த அறையிலே இப்பொழுது ஏதோ ஒன்று நடந்தது கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும்.இந்த அறையில் ஏதோ ஒன்றுள்ளது.இந்த அறையில் உண்மையிலேயே தேவதூதர்களும்,தேவனுடைய சத்தமும் இருக்கின்றன.பாருங்கள்?ஆனால் நீங்கள் எப்படி… உங்களால் முடியாது…இயற்கையான சத்தத்தை ஒரு கருவியின் மூலமாக அனுப்பினாலன்றி அதை நீங்கள் கேட்க முடியாமலிருக்க, ஆவிக்குரிய சத்தத்தை எப்படிக் கேட்க முடியும்.?
286.சரி, கர்த்தருடைய சரீரம் என்பது இன்னதென்று நிதானித்து அறியாததினால்,அநேகர் வியாதியுள்ளவர்களும் பலவீனருமாயிருக்கிறார்கள் என்று வேதவாக்கியம் கூறுகின்றது. அது முற்றிலும் சரி.ஏனெனில்,கர்த்தருடைய சரீரம் என்பது மணவாட்டியாகும்,பாருங்கள்?அநேகர் வழிதவறிச் சென்று விடுகின்றனர்.அதனுடன் அவர்கள் செல்வதில்லை. அது உண்மை. பாருங்கள்,எவ்விதம் நடந்தது கொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை.அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ்ந்துவிட்டு,இராப்போஜனத்தில் பங்கு கொள்கின்றனர் – அது சரியல்ல,பாருங்கள்? பொய் சொல்பவரும்,களவு செய்பவரும்,மது அருந்துபவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளவும் போது…அது மிகவும் பயங்கரம்.நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது,பாருங்கள்?   
 செய்தி:- முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும்.
88.எபிரெயர் 11ல், அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்தார்கள். இவைகளையெல்லாம் அவர்கள் செய்தும், நம்மையல்லாமல் அவர்கள் பூரணமாக முடியவில்லை என்று கூறுகின்றது.
89.இந்த நாளின் சபை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்னும் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு,இரத்தம் சிந்தப்பட்டதென்றும் பரிசுத்த ஆவியானவர் சபையின்மேல் இருக்கிறார் என்பதையும் காண்பிக்கிறது.நம்மையல்லாமல் அவர்கள் உயிரோடெழுந்திருக்க முடியாது.அவர்கள் நம்மேல் சார்ந்துள்ளனர்.அவர் அதை அளிக்கப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்…….
91.அவ்வாறே லூத்தரும் அறிந்திருந்தார்,வெஸ்லியும் அறிந்திருந்தார்; ஃபின்னி,நாக்ஸ்,கால்வின் அறிந்திருந்தனர்.
அக்கினி ஸ்தம்பம் ஒரு காலத்தில் சபைக்குத் திரும்பவும் வரும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.இக்காரியங்கள் நடை பெறப்போகும் சமயம் ஒன்று வரும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.அதைக் காண அவர்கள் உயிர் வாழவில்லை. ஆனால் அவர்கள் அதை எதிர்நோக்கியிருந்தனர்.
139.இக்காலத்தில் நமது மத்தியில் தம்மை நம்முடன் ஒன்றுபடுத்திக்கொண்டு,இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரீபித்து வருகின்ற மணிநேரம் இதுவே.அவர் சரியாக வார்த்தையுடன் இருக்கின்றார்.அந்த அடையாளம் இப்பொழுது நம்மேல் வைக்கப்பட வேண்டும்.ஒரு மனிதன் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டதாக கூறிக்கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலித்தால்,அது என்ன?நீங்கள் அவ்விதம் செய்யவே முடியாது.உங்கள் மேல் அடையாளம் இருக்கவேண்டும். இரத்தம் உங்களுக்கு அடையாளமாக இருக்கவேண்டும்.இப்பொழுது பரிசுத்த ஆவி, இயேசுவின் இரத்தத்திலிருந்த ஜீவன் – உங்களுக்கு அடையாளமாயிருக்கின்றது....பரிசுத்த ஆவியே அந்த அடையாளம். வழக்கு தள்ளப்பட்டு விட்டது.ஆம் ஐயா.
செய்தி:-அடையாளம். செப்டம்பர் 1,1963        

No comments:

Post a Comment