மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, January 10, 2013

பரிசுத்த ஆவியின் அத்தாட்சி

பரிசுத்த ஆவியின் அத்தாட்சி

47. நீங்கள் ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்; அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து, அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். பாருங்கள்? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, எல்லாமே முன்னைக்காட்டிலும் வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்தாவி.

51. இப்பொழுது கவனியுங்கள். இயேசு, “விசுவாசிக்கிறவர்கை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைத்தார். பாருங்கள்? விசுவாசிக்கிற குழுக்களின் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது. அவர்கள் அன்பினால் நிறைந்தவர்களாய் உள்ளனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அவர்கள் தங்களுக்கு அந்நிய பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். அதற்கு அவசியம் உள்ள போது அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர். ஓ, அது ஒவ்வொரு முறையிம் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது.

55. இப்பொழுது, இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, என்னையும் உங்கள் முன்னிலையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. இன்று காலையில் நான், இக்கூட்டத்தில் யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் 95% உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன்பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால், ஒரே ஒரு வேத அத்தாட்சி, ஒன்றிரண்டு கைகளும் உயர்த்தக்கூடுமா? என்பது எனக்கு சந்தேகம் தான். பாருங்கள், பாருங்கள்? அந்தவிதமான ஓரிடத்தில் உங்களை கட்டி விடுதல். ஆனால் அவ்விதம் செய்யும் போது, உங்கள் சபையோரை நீங்கள் புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களை குழந்தை பருவத்தை விட்டு மனித பருவத்துக்கு கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்?.

69. இப்பொழுது என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு பிரச்சனையை அளிக்க விரும்புகிறேன். நான், “எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டால் நீங்கள் எல்லோருமே கைகளை உயர்த்துவீர்கள். நான், “சரி, நீங்கள் பெற்றீர்களா? என்று பார்க்கப் போகிறேன்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சு விட்டு கதறி அழுதனர் என்று வேதம் உரைக்கிறது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயர்த்தப்படும்? உங்களில் எத்தனைப்பேர் தேவனுடைய வல்லமையினால் நிறைந்து மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும்,பகலும் கதறி அழுகின்றீர்கள்? நீங்கள் செய்வதில்லை…பாருங்கள்? அப்படிப்பட்டவர்கள் நகரதில் யார் இருக்கின்றனர்? அப்படிபட்டவர்கள் எத்தனைப்பேர் சபையில் இருக்கின்றனர்? அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அத்தாட்சி என்று வேதம் உரைக்கிறது.

71. யோசுவா கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடு விடாதீர்கள். அது சிறு குழந்தையாயிருந்தாலும்-சிறு அமலேக்கியன் அல்லது எமோரியனாயிருந்தாலும்-அதைக் கொன்று போடுங்கள். அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அவன் பாளையத்தை அசுசிப்படுத்துவான்” என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு காரியங்கள் வரும்போது, அதை ஒழித்து விடுங்கள். அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை.

72.  நீங்கள், “நல்லது, அவர்கள் நல்லவர்கள்” எனலாம். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக்கவலையில்லை. அவர்கள் வார்த்தைக்கு முரணாயிருப்பார்களானால் அதை உங்களை விட்டு அகற்றி விடுங்கள். அது வளருகின்ற சிறு அமலேக்கியன். காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனை போலவும் இருக்கலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம். ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். அதிலிருந்து விலகியிருங்கள்.

73. “நல்லது, சகோ.பிரான்ஹாமே, அங்கு நான் ஏன் போகிறேன் என்றால்…நல்லது, நான்…”இதை மட்டும் ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும், அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று எத்தனே பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. பாருங்கள்? அதை விட்டு விலகியிருங்கள்!

74. நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்கள்…அதை எங்கு காண்கிறீர்கள்? அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு; உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்ட ஒருவரை மட்டுமே நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்…ஒரு மணி நேரமாவது ஜெபிப்பவர். ஆனால் வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?...நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்று? அதை எத்தனை பேர் படித்திருக்கின்றீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு வருகிற பரிசுத்த ஆவி. அவர் சங்காரத் தூதனிடம், “நீ புறப்பட்டுப் போய், நெற்றிகளில் அடையாளமில்லாத எல்லோரையும் சங்கரித்துக் கொன்று போடு” என்றார். தேவனுடைய அடையாளம் பரிசுத்த ஆவி; அதுதான் தேவனுடைய முத்திரை.

75. இப்பொழுது, அவ்வளவு அக்கரை கொண்டுள்ள ஜனங்கள் இன்று எங்கே? மேலும் கீழும் குதித்து சபையில் அழும் மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்து, அதற்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களையும் என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே?  
செய்தி: கேள்விகளும் பதில்களும் 2:21 64-0830M

No comments:

Post a Comment