மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Monday, February 13, 2012

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.





53-0212

  நன்றி சகோதரன் பேக்ஸ்டர். மாலை வணக்கம் நண்பர்களே. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஊழியம்   செய்யும்படியாக இன்று இரவு உங்கள் மத்தியில் இருப்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். கடந்த இரவு நாங்கள் வருவதற்கு சற்று காலதாமதம் ஆனதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.  ஒரு தவறான துவக்கம் ஒரு நல்ல முடிவை கொண்டு வரும் என்ற ஒரு பழைய பழமொழியை போல, இந்த சம்பவத்திலும் அவ்விதமாக நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
2. இந்த பட்டணத்திலும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும் வியாதியஸ்தர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஜெபிக்கும்படியாக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செய்யும்படியாய் நான் இங்கே வந்திருக்கிறேன். இதை என்னுடைய பெலத்தினாலேயோ, என்னுடைய நாமத்தினாலேயோ அல்லது என்னுடைய திறமையினாலேயோ செய்யும்படியாக நான் இங்கு வரவில்லை. ஏனென்றால் இவைகளில் ஒன்றும் என்னிடத்தில் இல்லை. ஜனங்கள் மத்தியில் ஊழியம் செய்யும்படியாக அவருடைய நாமத்தினாலே அவருடைய பணியாளனாக மாத்திரமே நான் வந்திருக்கிறேன். நாங்கள் உங்கள் மத்தியில் இங்கே இருப்பது உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பது மட்டுமல்ல, அது எங்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்கும் என்று நம்பகிறோம். நீங்கள் எனக்காக ஜெபிக்கிற வேளையில் நானும் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, வேலையாட்களாக அவருடைய திராட்சை தோட்டத்தில் இருந்து கொண்டிருப்போம்.
3. இந்த பகுதியான பிரதேசத்தில், ஃப்லோரிடா என்னும் இந்த பகுதியில் இருப்பது இதுவே என்னுடைய முதல் முறையாக இருக்கிறது. டெல்லஸீ என்னும் இடத்திற்கு வருவதென்பது எப்பொழுதுமே என்னுடைய ஆவலாய் இருந்தது.
4. இன்றைக்கு மேலாளரும், நானும் என்னுடைய மனைவியும் தெருவில் ஒரு சிறிய மதிய உணவு அருந்தி விட்டு வெளியே வந்தோம். ஜன்னலின் வழியாக தன்னுடைய கையை அசைத்து என்னை சந்தித்து, என்னை உங்களுக்கு தெரிகிறதா சகோதரன் பிரன்ஹாம் என்றாள்.
5. தெரியும் என்று என்னால் நம்ப முடியவில்லை தேனே என்றேன். ஆறு அல்லது ஏழு வயதுடைய அழகான ஒரு ஜோடு சிறிய நீலநிற கண்களையுடைய பெண் என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை யார் என்று சொல்லி தன்னை வெளிப்படுத்தி கொண்டிருந்தாள். இங்கு எங்கேயோ உங்கள் பட்டணத்தை சுற்றியுள்ள இடத்தில் அந்த சிறுப்பெண் இருக்கிறாள். ஒரு விபத்தில் தன்னுடைய கண் பார்வையை இழந்த நிலையில் அவள் இருந்தாள். அவளுடைய பார்வைக்கான எந்த நம்பிக்கையும் இல்லை. அவளுடைய கண்பார்வைக்கு இனி எந்த நம்பிக்கையும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இருக்கப்போவதில்லை என்பதாக வைத்தியர்கள் கூறிவிட்டார்கள். நண்பர்களே உத்தமமான அந்த தகப்பன் நிச்சயமாக இருக்கிறது என்றார். அவளை ஒரு கம்பளத்தில் சுற்றி ஜெஃபர்ஸன்வில்லுக்கு விரைந்தார். அன்று மாலை நான் சபையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். பெட்ரோல் போடுவதற்கு தவிர மற்ற எங்கும் நிறுத்தாமல் வழியில் எல்லாவற்றையும் கடந்து சற்று காலதாமதமாக இந்த இரவு நேரத்தை போன்று ஒரு இரவில் வந்து சேர்ந்தார். நான் சுற்றியுள்ள அந்த இடத்தில் அந்த பெண்ணிற்காக நான் ஜெபித்தேன். இப்பொழுது அது எந்த கண் என்று அவளால் சரியாக சொல்ல முடியாது. இரண்டு கண்களும் அவ்வளவு குறைவற்றதாய் இருந்தது. தேவன் அவ்விதமாக சுகப்படுத்தியிருந்தார்.
6. அவள் எனக்கு ஒரு சிறிய பரிசு தந்தாள். அது ஒரு சிறிய கடித உறையாய் இருந்தது. அந்த மகளிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, அதை குறித்து நான் அதிகமாய் நினைக்கவில்லை. அதை என்னுடைய பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். நான் வீட்டிற்கு சென்றபோது, அது ஒரு வேலன்டைன் நாளாக இருந்தது. ஒரு சிறிய பெண், அவ்வளவு அன்பு நிறைந்த வார்த்தைகள். அது எவ்வளவு இனிமையானது என்று நான் நினைத்தேன். அவள் ஒரு வேளை இந்த கூட்டத்தின் மத்தியில் இருப்பாளானால், இனிமையான இருதயமுள்ளவளே நான் உறுதியுள்ளவனாக நன்றி கூறுகிறேன். ஆதை அறிந்தபோது பெருமளவு முழுமையானதாய் அது எனக்கு இருந்தது. அது நண்பர்களுக்கான காரியமாய் இருந்தது. பார்வைக்குரிய நரம்பு துண்டிக்கப்பட்ட நிலையிலிருந்த பிறகு இயேசு அவளுக்கு அவளுடைய பார்வையை தந்ததை அறிந்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். அது பின்பாக ஒன்றாக வளர்ந்திருந்தது. மகத்தான சுகமளிப்பவராகிய தேவன் அவளை சுகப்படுத்தினார். அவர் அந்த தகப்பனுடைய விசுவாசத்தையும்; அந்த பிள்ளையினுடைய விசுவாசத்தையும் கௌரவப்படுத்தி இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆராதனை முடிந்த பிறகு கர்த்தராகிய இயேசுவை மகிமைப்படுத்தும்படியாக இதை போன்ற அனேக சாட்சிகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
7. இப்பொழுதும், கிறிஸ்தவ நண்பர், செய்தித்தாள்கள், உரைநடைப்பகுதிஇ பத்திரிக்கைகள் இன்னும் சில என்னை பலமுறை தெய்வீக சுகமளிப்பவன் என்பதாக குறிப்பிடும்படி கேட்கப்பட்டது. நல்லது, அதுதவறு. நான் தெய்வீக சுகமளிப்பவனல்ல. நான் உங்கள் சகோதரன்இ தேவனுடைய இராஜ்ஜியத்தில் மற்ற ஊழியர்களோடு நான் உடன் ஊழியனாய் இருக்கிறேன். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க மாத்திரம் செய்கிறேன். நான் யாரையும் சுகப்படுத்துவது இல்லை.
8. வேதவாக்கியங்களை என்னுடைய தாழ்மையான வழியில் பார்க்கும்போது உங்களை சுகப்படுத்துவதற்கு ஒருவர் கூட  இல்லை. உங்களுடைய இரட்சிப்பு எவ்விதமோ,அவ்விதமாகவே உங்களுடைய சுகத்திற்காகவும் ஏற்கனவே இயேசு கல்வாரியில் கிரயம் செலுத்திவிட்டார். பாருங்கள் நீங்கள் கடந்த வருடத்திலோ அல்லது பத்துவருடத்திற்கு முன்போ இரட்சிக்கப் படவில்லை, நீங்கள் ஆயிரத்து தொளாயிரம் வருடத்தித்திற்கு முன்பே இரட்சிக்கப்பட்டீர்கள். அதை நீங்கள் கடந்த வருடத்திலோ அல்லது பத்து வருடத்திற்கு முன்போ அதை ஏற்றுக் கொண்டீர்கள். பாருங்கள், நீங்கள் ஆயிரத்து தொளாயிரம் வருடத்திற்கு முன்பே சுகத்தை பெற்றுக் கொண்டீர்கள். இயேசு நமக்காக எதை செய்தார் என்பதை மாத்திரமே நம்மால் சுட்டிக்காண்பிக்க முடியும். பாருங்கள்?
9. ஒரு ஊழியன், உங்கள் மேய்ப்பன் அதை வேத வாக்கியத்திலிருந்து அதை வாசித்துக் காண்பிக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால் அதைத்தான் அது எடுத்துக் கொள்கிறது. உங்களுடைய தனிப்பட்ட விசுவாசமே, உங்களுடைய சரீர சுகத்தையும், உங்களுடைய ஆத்தும இரட்சிப்பையும், அவருடைய சிறப்பும் முக்கியமானதாய் இருக்கிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் சுகமானோமென்று தீர்க்கதரிசி கூறுகிறார்.
10. இப்பொழுது, விசுவாசம் கேள்வியினால் வருகிறது, கேள்வி தேவனுடைய வார்த்தையை கேட்பதினால், முதலில் நீங்கள் அதை நீங்கள் கேட்க வேண்டும். அது எங்கிருந்து வருகிறது, அது அதனுடைய ஆதாரத்திலிருந்து வருகிறது, அதன் பிறகு உங்களுடைய விசுவாசத்தை அதன் மேல் அஸ்திபாரப்படுத்தி, அது உங்களுடைய விசுவாசத்தின் அடிப்படையில், அது உங்களுக்கு செய்யப்படுகிறது.
11. இப்பொழுது அது, பலப்பல வருடங்களாக சபையினுடைய ஒழுங்காய்  இருக்கிறது. வியாதியஸ் தருக்காக ஜெபிக்கும் இந்த காரியம் எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் ஆயிரத்து தொளாயிரம் வருடங்களாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆதி அப்போஸதல சபை வியாதியஸ்தருக்காக ஜெபித்தது. தொடர்ந்து காலங்களின் வழியாக, இருளின் காலங்களின் ஊடாக அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்தார்கள். லூத்தரின் சீர்திருத்த காலத்தில் அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்தார்கள், வெஸ்லியின் காலங்களில் அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்தார்கள். கால்வின், நாக்ஸ், மூடி, சாங்கி, தொடர்ந்து வந்த காலங்களில் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபித்து வந்தோம்.
12. உலகத்தின் முடிவுக்கு சமீபமாய் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது என்னுடைய தாழ்மையான நம்பிக்கை, அல்லது அதை தனிப்பட்ட முறையில் இன்னும் சற்று அதிகமாக கூற வேண்டுமானால் நாம் கடைசி நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். கடைசி நாட்களில் சபையின் திரும்ப அளிக்கப்படுதலை நான் அனுப்புவேன் என்று தேவன் வாக்களித்திருக்கிறபடி, இது அந்த நேரமாய் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையானது இவ்வளவு அதிகமாய் பிரசங்கிக்கப்பட்டது இந்த நாட்களில் தான் என்று நான் நம்புகிறேன். நாட்களானது இடுகண்களுக்குள்ளாகவும், பொல்லாங்குகளுக்குள்ளாகவும் தேவனுடைய வார்த்தையின்படியாக சென்று கொண்டிருக்கிறது. வெட்டுக்கிளி விட்டதை, பச்சைப்புழு தின்றதை அவர் மறுபடியும் அளிக்க வேண்டும். மறுபடியும் அவைகள் அளிக்கப்படவேண்டும். சபைக்குள்ளாக ஆவிக்குரிய வரங்கள் மறுபடியும் அளிக்கப்பட்ட நாளாய் இது இருக்கிறது.
13. இப்பொழுது அதனூடாக தவறான காரியங்கள் எதுவென்று கண்டறியவும் கடமைப்பட்டிருக்கிறோம். சாத்தான், அவன் மிகவும் புத்தி கூர்மையுள்ளவன். கீழ்படியாமையின் பிள்ளைகளின்; மத்தியில் இரவும் பகலும் அவன் கிரியை செய்து கொண்டிருக்கிறான். அவன் தத்ரூபமாக காரியங்களை செய்யக்கூடியவன். ஆனால் உண்மையான தேவனுடைய ஆவியோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு துதியையும், கனத்தையும் செலுத்திக்கொண்டே இருக்கும்.
14. இப்பொழுது இவைகளில் நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியான பொருப்பு எனக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. உலக முழுவதிலும், பத்திரிக்கைகளிலும், உரைநடைகளிலும் இதை கண்டிருப்பீர்கள்.
15. இப்பொழுது வேதாகமத்திலிருந்து சில வேத வாக்கியங்களை வாசிக்க விரும்புகிறேன். வேத வாசிப்பில்லாமல் எந்த ஆராதனையும் முழுமை பெறாது என்று நான் நினைக்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மனிதனுடையவைகள். அவைகள் தவறிப்போகும். ஆனால் தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தவறிப்போகாது. அதனால் யோவான் 4- ஆம் அதிகாரம், 14- ஆம் வசனத்திலிருந்து நாம் துவங்குவோம். இயேசு எவ்விதமானவராய் இருக்கிறார் என்று நாம் வாசிப்போம். இப்பொழுது அவர் பேசுகிறார். அவர் கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீயோடு,ஒரு பாவியான ஸ்திரீயோடு ஒரு கூட்ட ஜனத்தை உடையவராய் இருந்தார், அவர்கள் தண்ணீர் சம்பந்தமான காரியத்தை குறித்து விவரமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான் கொடுக்கும் தண்ணீரை குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்கு கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி ஆண்டவரே, எனக்கு தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டு கொள்ள வராமலிருக்கும்படி அந்த தண்ணீரை எனக்கு தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ எனக்கு புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி எனக்கு புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில் ஐந்து புருஷர்கள் உனக்கு இருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல, அதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எபிரேயர் 13 : 8 – ல் இவ்விதமாய் எழுதியிருக்கிறது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.
16. இயேசு சொன்னார் இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னை காணாது, ஆனால் நீங்கள் என்னை காண்பீர்கள்”. நீங்கள் என்பது அவருடைய சபை, உங்களை. அவிசுவாசிகள் அவரை காணமுடியாது. விசுவாசிகள் தான் அவரை காண்பார்கள். இன்னும் கொஞசம் காலத்தில் உலகம் என்னை காணாது, ஆனால் நீங்கள் என்னை காண்பீர்கள்”. நான் உங்களுக்குள்ளே இருந்து, உங்களுடனே வாசம் பண்ணுவதால் நீங்கள் என்னை காண்பீர்கள். அது சரிதானே ? ஆக அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் நேற்று என்ன செய்தார் என்பதை நம்மால் பார்க்க முடிந்தால், இன்றைக்கும் அவர் அதையே செய்கிறார். என்றைக்கும் அவர் அதையே செய்கிறார். அது சரிதானே?
17. இப்பொழுது,அவர் அறிந்திருக்கிறார்….சுகமாக்குகிறவர் என்று அவர் தம்மை சொல்லிக்கொள்ளவில்லை. உங்களுக்கு அது தெரியுமா? யாரையும் சுகமாக்க முடியும் என்று இயேசு ஒரு போதும் உரிமை கொள்ளவில்லை. அது நானல்ல. அது எனக்குள் வாசமாயிருக்கிறவர். அவரே சுகமாக்குதலை செய்கிறார் என்று சொன்னார். பாருங்கள், தன்னை தெய்வீக சுகமளிப்பவர் என்று எப்பொழுதுமே அவர் உரிமை கொள்ளவில்லை.
18. பரி.யோவான் 5:19 – ல் பெதஸ்தா என்னும் குளத்தின் அருகே அவர் கடந்து சென்றபோது,தாங்களாகவே எதையும் செய்துக் கொள்ள முடியாதவர்களும், அங்கே அநேகமான ஜனங்கள் முடமானவர்களுமாய் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அவர் அந்த ஜனக்கூட்டதினூடாக சென்று படுக்கையில் படுத்திருந்த ஒரு மனிதனை அவர் சுகமாக்கினார். இன்றைக்கு நாம் அதை அழைக்க வேண்டுமானால் தரையின் மீது இருக்கும் ஒரு வைக்கோலிலான சிறு படுக்கை. ஸ்திரீகளின் தொடைப்பகுதி என்று சொல்லப்படுகின்ற அதன் மீது அந்த ஸ்திரீ படுத்திருக்கும் வண்ணமாக அது இருந்திருக்கலாம். அவர் அவர்களை சுகப்படுத்தினார் அல்லது அவனை சுகப்படுத்தினார்.
19. இங்கே அபூர்வமான காரியம் என்னவென்றால், அவர் அங்கே முடமானவர்  தங்குமிடம், குருடர் இன்னும் அழிவுறுகிற இவர்கள் யாவரையும் கடந்து சரியாக படுக்கையிலிருக்கும் அந்த மனிதனிடம் வந்து அவனை சுகப்படுத்தி விட்டு கடந்து சென்று விட்டார். இந்த கேள்வியை பாருங்கள். அதை அறிந்திருக்கிறேன் என்று அவர் சொன்ன போது,அவன் அநேக வருடங்களாக அந்த நிலையில் அங்கே படுத்திருக்கறான் என்று இயேசு அறிந்திருந்தார், ஏனென்றால் அவன் அந்த வியாதியை உடையவனாய் இருக்கிறான், ஒரு வேளை சிறுநீரக கோளாறு அல்லது நீரிழிவு, எலும்புறுக்கி. அது ஒரு செயலாற்றும் வல்லமையிழந்த வியாதியாய் இருந்தது, ஏனென்றால் முப்பத்தெட்டு வருடமாய் அவனுக்கு அது இருந்தது, அது எதுவாயிருந்தாலும் ஆபத்தான புற்று நோய் அல்லது ஏதோ ஒன்று, அவனை அது கொன்று போட்டிருக்கும். ஆகவே அது அவ்விதமாக இருந்தது, ஏதோ ஒன்று அநேக வருடங்களாக காலம் தாழ்ந்த நிலையில் இருந்தது. அவர் அங்கே கடந்து சென்று அவனை சுகப்படுத்தின போது, ஏன், முடவர், குருடர் தங்குமிடம் இன்னும் அழிவுறுகிறவர்களாகிய ஜனக்கூட்டம் நிறைந்த அவர்கள் மத்தியில் இருந்து அவர் கடந்து சென்று விட்டார்.
20. இன்றைக்கு அவ்விதமான ஒரு காரியத்தோடு இருக்ககூடிய நிலையை யோசித்துப் பார்க்கிறீர்களா? ஏன் அவர் அவனை சுகப்படுத்தவில்லை? இவனை அவர் சுகப்படுத்தட்டும். அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம் என்று அன்றைக்கு அதை செய்தபோது அவர்கள் சொன்ன வண்ணமாக சொல்வார்கள். பார்த்தீர்களா?” சிலுவையை விட்டு இறங்கி வா, நாங்கள் உன்னை விசுவாசிப்போம். அவருடைய முகத்தில் ஒரு துணியைச் சுற்றி  அவர் தலையில் குட்டிநீ ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தால், உன்னை குட்டினது யார் என்று சொல், அப்பொழுது நாங்கள் உன்னை விசுவாசிப்போம் என்றார்கள்.ஆனால் அவர் தம்முடைய வாயை திறக்கவில்லை. அவர் ஜனங்களுக்கு வேடிக்கைக் காட்டவில்லை. அவர் தேவனுடைய சித்தத்தை செய்தார். நாமும் கூட அதையே தான் செய்கிறோம்.
21. பின்பு அவர்கள் அவரிடத்தில் கேள்வியை கேட்டார்கள். 19- ஆம் வசனமும்  20- ஆம் வசனமும். 5- ஆம் அதிகாரத்தில் 19- ஆம் வசனமும் 20- ஆம் வசனமும். நீங்கள் வீட்டிற்கு செல்லும் போது முழு அதிகாரத்தையும் வாசித்து பாருங்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன் பிதா எதை காண்பிக்கிறாறோ அதை மாத்திரமேயன்றி நானாக எதையும் செய்கிறதில்லை என்று அவர் சொன்னார். நீரிழிவை சுகப்படுத்துவதை பார்க்கிலும் மேலானவைகளை உங்களுக்கு காண்பிப்பார். (அவர் எப்பொழுதும் என்னவாயிருந்தாரோ) அதை குறித்து வியப்படைகிறீர்கள். அது சரிதானே? { பிதா எனக்கு காண்பிப்பதை தவிர நானாக எதையும் செய்கிறதில்லை என்று அவர் சொன்னார். பிதா கிரியை செய்கிற விதமாக நானும் கிரியை செய்கிறேன். பார்த்தீர்களா? வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்,அவர் தமக்கு தாமே மகிமையை எடுத்துக் கொள்ளுகிறதில்லை. நான் எதை செய்ய வேண்டுமென்று பிதா எனக்கு காண்பிக்கிறாரோ அதையே நானும் செய்கிறேன். நான் எதை செய்ய வேண்டுமென்று அவர் எனக்கு காண்பிக்கிறார். அவர் எனக்கு அவைகளை காண்பிக்கும்வரை நானாக எதையும் செய்கிறதில்லை. ஆனால் அவர் எதை காண்பிக்கிறாரோ, அதை நான் செய்கிறேன்.
22. இப்பொழுது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரானால், அவர் வெளிப்படுத்துகிறதும் அவ்விதமாகவே இருக்கிறது. நாம் ஜெபிப்போமா, எங்கள் பரலோக பிதாவேஇ உம்முடைய நேசக்குமாரன் இயேசுவின் நாமத்தினாலே உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவேயன்றி வேறொரு காரணத்திற்கும் அல்லாமல் இன்று இரவு நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். உம்முடைய இரக்கமானது எங்கள் எல்லார் மேலும் நீடித்திருக்கும்படியாக நான் கேட்கிறேன். அன்பு நிறைந்தவராய் இந்த பூமிக்கு கடந்து வந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஏழை புறஜாதியாராகிய எங்களுக்காக வந்தவருக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். துண்டிக்கப்பட்டவர்களாய், எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களாய், இந்த உலகத்தில் இரக்கம் பெறாதவர்களாய், பாவத்தில் மரித்தவர்களாய், வரம்பு மீறிச் சென்றவர்களாய், தேவன் இல்லாதவர்களாய், கிறிஸ்து இல்லாதவர்களாய், பாவிகளின் கல்லரைக்கு போகிறவர்களாய், பிசாசின் நரகத்திற்கு போகிறவர்களாய் இருந்தோம். ஆனால் கிறிஸ்து வந்து எங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, மனிதனுடைய சாயலை அவர் பெற்றுக்கொண்டு, எங்களுடைய தீயச் செயல்களுக்காக பாடுபட்டு,எங்களுடைய நேர்மையின்மைக்காக அவர் நசுக்கப்பட்டார். எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமானோம்.
23. விடுதலையையும், சுதந்திரத்தையும் அளிக்கும் இந்த சுவிசேஷத்தை உலகமெங்கும் போய் பிரசங்கியுங்கள் என்று ஜனங்களுக்கு அவர் கட்டளை கொடுத்தார். இருளுக்குள்ளாக அடைந்து கிடந்ததான புறஜாதிக்கு, ஒரு பெரிய இளவேனிற்கால வெளிச்சமாய் இருந்து கொண்டிருக்கிறார். இன்னும் சுவிசேஷமானது முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறபடியால் நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உலகமெங்கும் அவருடைய வார்த்தை அறிவிக்கப்படும்படியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த சுவிசேஷமானது பிரசங்கிக்கப் பட்டுக்கொண்டிருக்கும்போது, உலகத்திற்கு ஒரு முடிவு வரும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அது முழுமையாக பிரசங்கிக்கப்பட்டு முடியாத நிலையில், இன்னுமாய் அவை பிரசங்கிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த இனிமையான ஒருவருக்கு பிரதிநிதியாக இருக்கும்படியான சிலாக்கியத்தை பெற்றிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
24. கர்த்தாவே கூடாரமானது கிழிந்த நிலையில் இருக்கும் காரணத்தினால் இந்த பள்ளியின் அரங்கத்தை எங்களுக்கு தந்து உதவுகிற அந்த மனிதர்களை ஆசீர்வதிக்கும் படியாக இந்த ஆராதனையின் துவக்கத்திலே விசேஷமாக அவர்களுக்காக ஜெபிக்கிறேன். இந்த பள்ளியை ஆசீர்வதியும் கர்த்தாவே. அது இன்னுமாய் செழிக்கட்டும். சுவிசேஷத்தின் பக்கமாக திறந்த மனதுடைய மனிதர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தங்களுடைய சபை அங்கத்தினர்கள் இந்த கூட்டத்தில் பங்குபெறும்படியாக இந்த இரவிலே தங்களுடைய சபை ஆராதனைகளை நிறுத்திய ஊழியக்காரர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த எல்லா காரியங்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். பிதாவே இப்பொழுது அவர்களுக்கு அதற்கான பலனை தாரும். அதை தந்தருளும் கர்த்தாவே.
25. இப்பொழுது இந்த இரவிலே இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கிற வேளையில் உம்முடைய சபையின் மத்தியிலே கிரியை செய்துகொண்டு, நீர் இன்னும் அதே இனிமையான இயேசுவாய் இருக்கிறீர் என்பதை சொல்லிக் கொள்ளுகிறேன். எம்மாவுக்கு போன சீஷர்களோடு நாள் முழுவதும் நடந்து சென்ற போதிலும் அவர்களால் உம்மை அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. அந்த எம்மா ஊரிலே அங்கு நீர் எதையோ செய்தீர். அப்பத்தை பிட்க மாத்திரமே செய்தீர், ஆனால் அந்த நாளின் கடைசியிலே சில அப்பங்களை பிட்டீர். நீர் பிட்கிற விதத்தைப் பார்த்து, அது நீர் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அன்று எம்மாவுக்கு போன சீஷர்கள் எவ்விதமாய் அன்று உம்மை கண்டுக் கொண்டார்களோ, அவ்விதமாகவே இன்று இரவு இந்த இந்த சபையானது உம்மை பெற்றுக்கொள்ளட்டும்.
26. இப்பொழுதும் கர்த்தாவே இங்கு சுகவீனமாய் இருக்கிற அநேக கிறிஸ்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிற வேளையில், இம்மானுவேலாக மாம்ச சரீரத்தில் நடமாடின போது எவ்விதமாக கிரியை செய்தீரோ அவ்விதமாகவே இன்று எங்கள் மத்தியிலும் கிரியை செய்ய வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். அவ்விதமாகவே இன்று இரவிலும் கிரியை செய்யமாட்டீரா, கர்த்தாவே. அதன் மூலம் நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர் என்பதை ஜனங்கள் அறிந்துக் கொள்ளட்டும். இப்பொழுதும் கர்த்தாவே என்னை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவ்விதமாகவே சபையை சமர்ப்பிக்கிறேன். உம்முடைய சேவைக்காக என்னுடைய உதடுகளையும், இருதயத்தையும் விருத்தசேதனம் செய்தருளும். ஜனங்களுடைய கண்களையும், காதுகளையும் விருத்தசேதனம் செய்தருளும். அவ்விதம் செய்யும்போது அவர்களுடைய கண்களிலுள்ள செதில்கள் கீழே விழுந்து போகவும்,அவர்கள் பார்க்கவும், கேட்கவும் செய்தருளும். நாங்கள் இந்த இடத்தைவிட்டு எங்களுடைய தனிப்பட்ட வீடுகளுக்கு செல்லும்போது, எம்மாவுக்கு சென்றவர்கள் சொன்ன வண்ணமாக, அவர் நம்மோடு நடந்து வந்தார். நம்மோடு பேசினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவறாயிருக்கிறார் சொல்லத்தக்கதாக கிரியை செய்யும். அவருடைய நாமத்தின் மகிமைக்காகவும்,அவருடைய நாமத்தினாலேயும் இதை கேட்கிறோம். ஆமென்.
27. நீங்கள் கலந்துக் கொண்டீர்களா? நல்லது, அவருடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. தேவையுள்ளவர்களுக்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதென்பது கூட்டங்களில் நம்முடைய வழக்கமாயிக்கிறது. நாம் எடுக்கிறதான இந்த முயற்சியை அதாவது மற்றவர்களுக்கு முன்பாக வைக்கிறதான காரியங்களை, இந்த சுகவீனமாயிருப்பவர்களுக்கும், தேவையுள்ளவர் களுக்கும் நாம் எடுக்கிற பெலவீனமான முயற்சிகளை எடுக்கிற உங்களை தேவன் இன்று இரவு உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன்.
28. இப்பொழுது ஜனங்களை மேடையின் மீது கொண்டு வந்து அவர்களை வரிசைப்படுத்தி, ஒருவர்பின் ஒருவராக அவர்களை கொண்டுவருவோம். நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறபடி, என்னால் ஒருவரையும் சுகப்படுத்த முடியாது. ஏனென்றால் சுகப்படுத்துவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை, ஆனால் இயேசு ஏற்கனவே உங்களுக்காக என்ன செய்து முடித்தார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் விசுவாசம் உயர்ந்து நிற்கக்கூடிய இடத்தை நீங்கள் கண்டுக்கொள்ள ஒரு வேளை நாங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கலாம். பார்த்தீர்களா? இப்பொழுது எல்லா சுகப்படுத்தலும் நடக்கும். இந்த அளவு மட்டும்தானா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல், தேவன் அனுமதிப்பாரானால் இந்த கூட்டத்தில் எல்லா சுகமாகுதலும் நடந்தேறும். அது தேவனுடைய பார்வையிலே ஏற்கனவே நடந்து முடிந்த காரியமாயிருக்கிறது. அவரால் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், அதற்கான காரணத்தை உங்களுக்கு காண்பித்துஇ சில காரியங்களை உங்களுக்கு சொல்லிக்காண்பித்து, நீங்கள் அதை கவனமாய் பார்த்து,இயேசு உங்களுக்காக என்ன செய்து முடித்தார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக செய்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
29. இப்பொழுது பில்லி அது என்ன….ஹெச்? நாங்கள் ஒவ்வொரு நாளும் புதிய ஜெப அட்டைகளை கொடுக்கிறோம். சகோ. பேக்ஸ்டர் அதற்குள்ளாக சென்று உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிக் காண்பித்திருக்கிறார். மத்தியான ஆராதனையில் கற்பிக்கப்படும்படியாக பங்கு பெறுவதற்கு நிச்சயமுடையவர்களாய் இருங்கள். உங்களுடைய ஜெப அட்டைகளை பெற்றுக் கொள்ளுங்கள். வேறொருவருக்கு கொடுப்பதற்காகவோ, மாற்றுவதற்காகவோ நீங்கள் ஜெப அட்டை பெற்றுக்கொள்ள முடியாது. இதில் சட்ட திட்டத்திற்குள்ளாக இருங்கள். பார்த்தீர்களா? நீங்கள் இங்கு வந்துஇ சுவிசேஷத்தைக் கேட்டு, பின்பு கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து நீங்கள் வரிசையில் வரவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் ஜெப அட்டையை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.?
30. ஆகையால் இப்பொழுது நம்முடைய ஜெப வரிசையை ஆரம்பிப்போம். இந்த வழியாக வரிசையை அமைத்து,இந்த பகுதிக்குள்ளாக அவர்களை கொண்டு வருவோம். முதல் 15- வரை வரவழைப்போம். முதலாவது 1- 15 வரை வரிசையில் வைப்போம். அது சரியாக அவ்வளவு மாத்திரமே நம்மால் அங்கு நிற்க முடியும் என்று எண்ணுகிறேன். அது ஹெச், அது தானே மகனே? ஹெச் 1-15- வரை. யாரிடத்தில் ஹெச் - 1 ஜெப அட்டை இருக்கிறது? அதில் உங்களுடைய பெயரும் , விலாசமும் ஒரு பக்கம் இருக்கக்கூடியது. அடுத்த பக்கத்தில் ஒரு எண்ணும், ஒரு எழுத்தும் இருக்கக்கூடியது. ஹெச்- 1.
31. இப்பொழுது உங்கள் ஜெப அட்டையை திருப்புங்கள். உங்கள் அருகாமையிலிருக்கும் யாரையாவது பாருங்கள். (பார்த்தீர்களா?) ஒருவேளை அவர்களால் பார்க்க முடியாது அல்லது கேட்க முடியாது. நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அல்லது எந்த எண்ணை அழைக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியாது. ஹெச் 1- லிருந்து 15. அந்த எண்கள் முதலில் நிற்கட்டும். அதற்கு பிறகு ஒரு வேளை நாம் அவ்விதமாக இன்னும் சிலரை நாம் அழைப்போம். சரி,இப்பொழுது அவ்விதமாக செய்வோம். ஜெப அட்டை ஹெச்- 1, 2,3, 4, 5, 6,7  யார் வைத்திருப்பது? உங்கள் எண் வரிசையின்படி அவ்விடத்தில் நீங்கள் நில்லுங்கள். என்னுடைய மகனும் உங்களை நடத்திச் செல்கிறவர்களும் நீங்கள் வரிசையில் நிற்பதற்கானவைகளை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். இப்பொழுது ஒரு வேளை அவர்கள் அங்கு இல்லாத பட்சத்தில், சகோ.பேக்ஸ்டர் பதினைந்து வரை உங்களால் எண்ண முடியவில்லையென்றால், நான் அதை அறிந்துக் கொள்ளட்டும். ஒரு வேளை யாராவது குருடாயிருக்கலாம் அல்லது சக்கர நாற்காலியில் இருக்கலாம் அல்லது வேறெதாவதொன்று, நகர்ந்து செல்ல முடியாதவர்கள். உங்களுடைய எண்கள் அழைக்கப்படும் போது உங்களுக்கு உதவக்கூடியவர்கள் அங்கு இல்லாவிட்டால், உங்கள் கையை உயர்த்துவீர்களானால் நாங்கள் அதற்கான காரியங்களை செய்வதற்கு யாராவது உங்களுக்கு உதவுவார்கள்.
32. சரி இப்பொழுது விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள”; உங்களால் கூடுமானால், சிறிய சகோதரியே, உங்களால் கூடுமானால். இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் பயபக்தியுள்ளவர்களாய் இருப்போம்…. இப்பொழுது உண்மையாகவே பயபக்தியுள்ளவர்களாய் இருந்து இந்த அற்புதமான பழைய பாடலை நினைத்து பார்ப்போம். நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும்நாம் பாடலை பாடுகிற இந்த வேளையில். சரி. நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும்…..
33. இப்பொழுது, அவர்கள் பாடிக் கொண்டிருக்கிறதான வேளையில், ஒரு நாள் காலையில் இயேசு மலையிலிருந்து இறங்கி வந்ததை சிந்தனையில் பார்ப்போம். வலிப்புவாத வியாதியில் மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கும் ஒரு பையனோடு ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். சீஷர்களால் அந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் இயேசுவினிடத்தில் வந்து, எனக்கு உதவும் கர்த்தாவேஎன்றார். நீ விசுவாசித்தால் என்னால் கூடும்என்றார்.
34. அந்த ஸ்திரீயினுடைய ஜெப அட்டையின் எண் என்னவென்று பாருங்கள். அவளுடைய எண் என்ன? 14 சரி சகோதரனே, இந்த வழியாக அவளை நிறுத்துங்கள். பிறகு அவளை அணுகுவதற்கு சரியாக இருக்கும். இந்த வழியாக சென்று அவள் நிறுத்தி வைக்கப்படட்டும். அது சரி, அப்பொழுது நான் அவளை பார்க்க முடியும். சரி.
35. சகோதரனே, சகோதரியே, இப்பொழுது நான் இதை உங்களிடம் கேட்கப்போகிறேன். இவை தரிசனங்களாய் இருக்கிறபடியால் உங்களை அதிக நேரம் வைத்திருக்கப் போவதில்லை. உங்களை சேதப்படுத்துவதற்கு அது அதிகமான தரிசனங்களை எடுத்துக் கொள்ளாது. நான் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆதலால் பின்பு அவ்விதமாக நான் இருக்க வேண்டியதாய் இருக்காது.
36. ஒரு தரிசனத்தை பார்த்து அநேக நாட்களாக தன்னுடைய சிந்தையில் கலக்கமுற்றிருந்த தானியேல் தீர்க்கதரிசியை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? பாருங்கள்? உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்த மேடையில் பரிசுத்த ஆவியானவர் ஜனங்களோடு இடைபடுகிறதான வேளையின் போதுஇ பின்பு அதை உங்களுக்கென்று எடுத்துக்கொள்ளுகிறீர்கள். இப்பொழுது முழுமையாக பயபக்தியாயிருங்கள். இங்குமங்குமாய் நகராதிருங்கள், சற்றே பயபக்தியாயிருங்கள்.
37. இப்பொழுதும் பில்லி, அது சரியாய் இருக்குமானால், நான் ஒலிப்பெருக்கியை நகர்த்தப் போகிறேன், சில நேரங்களில் தரிசனங்கள் கடந்துபோய்க் கொண்டிருக்கிறதான நேரங்களில் நான் எவ்வளவு சத்தமாக பேசுகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியாது, நீங்கள் என்னை கவனித்துக் கொள்ளுங்கள். சகோதரன் பேக்ஸ்டர், நான் ஒலிப்பெருக்கியை நகர்த்துவதற்கு அது தான் காரணம்.
38. இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் ஒவ்வொருவரும் விசுவாசிக்கின்ற வேளையில், இந்த வேளையில் இப்பொழுது எங்களால் ஜெபிக்க முடியும், இப்பொழுது, என் முன்னே ஒரு மனிதர் இங்கு நின்றுக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை அந்த மனிதரை நான் பார்த்திருக்க முடியாது. நான் சந்திப்பது இது தான் முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். அது சரி தானே ஐயா? உங்களுடைய பெயர் என்ன? அது அருமையானது. நான் உங்கள் முன்னிலையில் இருக்கிறேன் ஐயா. உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் அதை பெற முயற்சிக்கிறேன். அது கிரியை செய்யாது என்று நான் அஞ்சுகிறேன். இவ்விடத்தில் வந்து சற்று இடமாற்றம் செய்து கொள்ளுங்கள். சரி.
39. இப்பொழுது, நாம் அந்நியராயிருந்து, வாழ்க்கையில் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. எவ்வித சந்தேகமுமின்றி உதவிக்காக வந்திருக்கிறீர்கள்;. அப்படியானால் நல்லது. அத்தேவைகள் உமக்கிருக்குமானால் தேவன் அதை உமக்கு தருவார் என்று நம்புகிறேன். இப்பொழுதும், சகோதரனே எனக்குள்ளாக ஏதோ ஒன்றிருந்து என்னால் உங்களுக்கு உதவி செய்யக்கூடுமானால், சரி, நான் இதை செய்வேனென்று மகிழ்ச்சியோடு நான் சொல்ல முடியும். மருத்துவர், மருந்து சம்பந்தமானவைகள் அல்லது உங்களுக்குள் உள்ள கோளாறு என்னவென்று சொல்லக்கூடுமானால், நல்லது, அதை செய்வதற்கு நான் மகிழ்ச்சியுருவேன். நான் ஜனங்களை நேசிக்கிறேன். ஆனால் உதவி செய்யக்கூடிய எந்த காரியமும் என்னிடத்தில இல்லை, பாருங்கள்? நீங்கள் எப்பொழுதும் உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை மாத்திரமே நான் பிரதிநிதிப்படுத்தும் அவரிடத்தில் மாத்திரமே எல்லா விதமான உதவிகளும் இருக்கிறது. அவரித்திலிருந்து மாத்திரமே உதவிகள் வரமுடியும். அவருடைய பிரதிநிதியாக மாத்திரமே நான் இங்கு நின்றுக் கொண்டிருக்கிறேன்.
40. இந்த இரவிலே நான் நினைக்கிறேன். சில காலத்திற்கு முன்பு ஒரு தூதன் என்னை சந்தித்து இவைகளைக் குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பவைகளைப்பற்றி நான் கூறினவைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சகோதரன் பேக்ஸ்டர். நல்லது, அது உண்மை ஐயா. வியாதியாய் இருக்கிற ஜனங்களுக்காக நான் ஜெபிக்க வேண்டுமென்று சொன்னார். என்னுடைய ஜீவியத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதென்பது என்னுடைய பணியாயிருக்கிறது. அப்பொழுது நான் அவரிடத்தில் இதை சொல்லி கேட்டேன். நான் கல்வியறிவு இல்லாதவன். ஆதலால் ஜனங்கள்.....ஆனால் சிறு வயது முதற்கொண்டே நான் அந்த வேலைக்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். நீஙகள் அதை விசுவாசிக்கிறீர்களா ?
41. இப்பொழுது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயிடம் பேசினபோது, சற்று நேரம் அவர் அவளிடத்தில் பேசவில்லை. பின்பு அவளிடம் பேசி சென்று எனக்கு தண்ணீர் கொண்டு வா என்று சொன்னார்.
42. அதற்கு அவள் நான்”….கிணற்றை குறித்து பேசினாள். இப்பொழுது என்னஇ அவர் அவளுடைய ஆவியோடு தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது இந்த இரவில் மேடையில் முதல் நோயாளி நீங்கள் தான், ஆதலால் உங்களுடைய ஆவியோடு நான் தொடர்பு கொள்ள வேண்டும். பார்த்தீர்களா? பாருங்கள். நாமிருவரும் ஆண்களாயிருக் கிறோம். ஒரு நாள் தேவனை சந்திக்க வேண்டியவர்களாய் நாம் இங்கு நின்று கொண்டிருக்கிறோம். பாருங்கள்? ஆனால் நீங்களும் கூட இயற்கைக்கு மேம்பட்டவராய் இருக்கிறீர்கள். எங்கோ என்றென்றும் ஜீவிக்கும்படியான ஆவி உங்களுக்குள் இருக்கிறது. ஏன்இ இங்கேயும் கூட. நல்லது, உங்களுக்கு ஒரு வியாதி இருக்குமானால், அது சாத்தான் செய்தது. இந்த இரண்டு ஆவிகளும் ஒருமித்து வரும்படியாக, வியாதியஸ்தருக்கு ஜெபிக்கும்படியாக அவர் என்னை அனுப்பினார். இதன் பிறகு அவருடைய ஆவி இதை செய்யுமானால்….எந்த ஒன்றுக்கு நீங்கள் விட்டு கொடுக்கிறீர்களோ அது அதை சார்ந்தது. (பார்த்தீர்களா?) இந்த இரண்டில்…. நீங்கள் சொன்ன காரியத்தை விசுவாசிப்பீர்களானால், அது சரியாகிவிடும், நீங்கள் சுகத்தை பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால், அதினிமித்தமாக அது ஒன்றும் செய்ய இயலாது. பாருங்கள்? இது ஒரு மெய்ப்படுத்திக் காட்டுவது.
43. நான் உங்களுக்கு அந்நியனாய் இருந்து உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். இதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் அதை இயேசுவினிடத்தில் செய்த வண்ணமாக, அவர் அந்த ஸ்திரீயைப் பார்த்து, சரியாக அவளுடைய தவறு எங்கிருக்கிறதென்றும், அவள் சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்றும் அவர் சொன்ன வண்ணமாக, இப்பொழுது ஆவியானவர் அதை எனக்கு வெளிப்படுத்தி தருவாரானால். பார்த்தீர்களா? அவளுடைய தவறு எங்கிருக்கிறதென்று சொல்லி, அது தெளிவாக்கப்பட்டு, அது சரியாக இருந்தது. இப்பொழுது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரானால், உங்களுடைய கோளாறு எங்கிருக்கிறதென்று அவர் அறிந்துக் கொள்வார். எனக்கு அதை அவர் வெளிப்படுத்தி தரமுடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி, அதை நீஙகள் அறிந்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். உங்களுடைய கோளாறு ஆஸ்துமா, அது சரிதானே? சற்று முன்பு நீங்கள் இரும்பினீர்கள். அதை வைத்து உங்களுக்கு ஆஸ்துமா என்று நான் அறிந்துக் கொள்ளவில்லை. ஒரு காலையில் உண்மையாகவே மிகவும் மோசமான நிலையில் நீங்கள் இருந்தீர்கள். இப்பொழுது ஒருபுறம் அதை எறிந்து போடுங்கள். உங்களுடைய கோளாறு என்னவென்று அறிந்த பிறகு, நான் மறுபடியும் உங்களிடம் பேசப்போகிறேன். நீர் நரம்பு தளர்வுள்ளவராய் இருக்கிறீர். அது சுரப்பி சார்ந்த நிலைக்கு சென்றுவிட்டதே அதற்கு காரணமாயிருக்கிறது. அது சரிதானே? இரவு நேரத்தில் நீங்கள் எழுந்திருக்கும் போதும் மற்ற காரியங்களை செய்யும் போதும் அவ்விதமாக இருக்கிறது. அது சரிதானே? உங்களுக்கு ஒரு பழக்கமிருக்கிறது. புகைப்படிப்பது,அது சரியே.
44. இப்படியாக சொல்ல வேண்டுமானால் ஆரம்பத்தில் நீங்கள் கிறிஸ்தவராகவும், ஆவியை பெற்றவராகவுமில்லை. அது உங்களுக்கு தேவையாய் இருக்கிறது. உங்களுக்கு இரட்சகராக இயேசு கிறிஸ்து தேவையாயிருக்கிறது. அது சரிதானே? அந்த காரியங்கள் உண்மைதானே? அது அப்படியாய் இருந்தால் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? எனக்கு உங்களை தெரியாது…. இன்னமும் கூட உங்களை எனக்கு தெரியாது. நான் என்ன பேசுகிறேன் என்பதை நீங்கள் கேட்கிறீர்களே, அது நானல்ல ஐயா,அவர் கர்த்தருடைய தூதனாயிருக்கிறார். அதோ அங்கே அது இருக்கிறது. அது உண்மைதானே? அப்படியானால் அது நல்லது. அது உண்மையானால் இங்கே வாருங்கள். இயேசு கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா…. இன்னும் ஜீவிக்க இருக்கும் வாழ்க்கையில் கிறிஸ்தவராக ஜீவிக்கும்படியாக, அவர் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிக்கும்படியாக அவரிடம் கேளுங்கள். அவ்விதம் செய்வீர்களா?
45. உங்கள் தலையை தாழ்த்துங்கள். சர்வ வல்ல தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, எல்லா நல்ல ஈவுகளையும் தருபவரே, இந்த வெறுக்கத்தக்க பாவியான மனிதனிடம் இரக்கமாயிரும். கர்த்தாவே, தேவனுக்கு புறம்பானவராகவும், துண்டிக்கப்பட்டவராகவும், இழக்கப்பட்ட வராகவும் இங்கே நின்றுக் கொன்டிருக்கிறார். உம்முடைய பிரசன்னத்தில் அவர் நின்றுக் கொண்டிருக்கிறார். கர்த்தாவே, ஏதோ காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது  என்பதை உணர்ந்தவராக, இந்த உலகத்திலிருந்து இப்படிப்பட்ட நாட்களில், தன்னுடைய ஆத்துமாவை தன்னுடைய கரங்களில் எடுத்துக்கொள்ளக்கூடிய, பரலோகத்தின் தேவனுடைய பிரசன்னத்தில் நிற்க வேண்டும் என்பதை அறிந்தவராயிருக்கிறார். இன்று இரவு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக அவர் ஏற்றுக் கொள்ளுகிறார் கர்த்தாவே. வியாதி, பரிதாபமிக்கவர், மன ஊக்கமில்லாதவர், இழக்கப்பட்டவர், என்ன ஒரு நிலை, தேவனே இப்பொழுது இரக்கமாயிரும். இந்த மேடையின் மீது நின்றுக் கொண்டு இந்த ஜனங்களுக்கு முன்பாக உம்மை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் என்று அறிக்கை செய்திருக்கிற வேளையில், இந்த இரவை எப்பொழுதும் மறவாத வண்ணமாக அவருடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பீராக. அவருடைய சரீரத்திலிருக்கும் இந்த வியாதியை அகற்றிப் போடும்படியாய் நான் ஜெபிக்கிறேன். உமக்கு நல்ல ஒரு சேவையை செய்கிறவராக, நீடித்து அவர் ஜீவிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை  அளிக்கிறேன்,நான் அதை கேட்கிறேன். ஆமென்.
46. இப்பொழுது உங்களுடைய இரட்சகராக அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் சென்று இனி பாவம் செய்யாதிருங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
47. தேவனுக்கு நன்றி உறித்தாகுக என்று நாம் சொல்லுவோம். வாருங்கள் ஸ்திரீயே. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். சிறிய ஸ்திரீயே? உங்களுடைய ஜெப அட்டையை வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஜெப அட்டையை வைத்திருக்கிறீர்கள், ஒரு வேளை உங்களை வழி நடத்துகிறவர்களிடத்தில் கொடுத்திருப்பீர்கள் என்று நினைத்தேன், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவ்விதமான வெளிப்புற ஆடைகளோடு கர்த்தராகிய இயேசு இங்கு நின்றுக் கொண்டிருப்பாரானால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? உங்களுடைய வாழ்கையை வெளிப்படுத்தி காண்பிப்பதை காட்டிலும் அதிகமாக அவரால் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவரால் உங்களை சுகப்படுத்த முடியாது. அவர் ஏற்கனவே அதை செய்து முடித்து விட்டார். பாருங்கள்? அவர் ஏற்கனவே செய்து முடித்திருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக அவர் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும். அது சரிதானே? அவரால் ஒரு காரியத்தை மாத்திரமே செய்ய முடியும். அவர் இரண்டுமுறை உங்களை சுகப்படுத்த முடியாது. அவர் ஒரு முறை மாத்திரமே உங்களை சுகப்படுத்த முடியும். அநேக வருடங்களுக்கு முன்பு அவர் மரித்தபோது, அவருடைய தழும்புகள் உங்களை சுகப்படுத்தினது.
48. ஏதோ நடந்துக் கொண்டிருப்பதை குறித்து நீங்கள் உணர்வு உள்ளவராக இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களை அது காயப்படுத்தாது. அது கர்த்தருடைய தூதனாய் இருக்கிறது. நீங்கள் இங்கு மிகவும் அறிமுகமானவர்களாநீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா.. ஏதோ நடந்துக் கொண்டிருப்பதை குறித்து நீங்கள் உணருகிறீர்கள். அப்படிதானே? அது கர்த்தருடைய தூதன், அவருடைய பிரசன்னம். ஆம் நீங்கள் சற்றுமுன்பு பரிசோதிக்கப் பட்டீர்கள், நீங்கள் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்கு ஒரு கட்டி இருக்கிறது. நீங்கள் எதையோ குறித்தும் கவலையுற்றிருக்கிறீர்கள். அது ஒரு சிறியப் பெண் ,ஒரு சிறியப் பிள்ளை. அது சரி தானே. அது சரி என்றால்இ உங்கள் கரத்தை உயர்த்துங்கள், எல்லாம் சரி. அவளுடைய கோளாறு என்னவென்று பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் நான் சொல்வேனானால், தேவன் அவளை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? அவளுக்கு சிறுநீரக கோளாறு இருக்கிறது. அது சரிதானே? இப்பொழுது பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரன் கிறிஸ்து இயேசுவை அனுப்பினாரென்றும், தீர்க்கதரியாகிய என்னை அனுப்பினாரென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் தேவனிடத்தில் கேட்பேனானால், நீங்கள் சுகத்தை பெற்றுக் கொள்வீர்களா? உங்கள் குழந்தை சுகமடைவாளாஇங்கே வாருங்கள்.
49. நம்முடைய தலைகளை வணங்குவோமா. இந்த சிறிய ஏழை தாயார் இங்கு அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு தாயார் இல்லாத நிலையில் சாத்தான் அந்த குழந்தையை விட்டு செல்ல துவங்கியிருக்கிறதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஓ, சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த பெண்ணிடத்தில் இரக்கமாயிரும். அவளுக்கு சுகத்தை தரும்படியாக நான் ஜெபிக்கிறேன். அவளுடைய சிறு குழந்தையும் கூட கர்த்தாவே, அது சுகமாகட்டும். அவளை அவளுடைய பிள்ளையினிடத்தில் அனுப்புகிறேன். உம்முடைய நாமத்தின் மகிமைக்காக தாயும், மகளுமாக சுகமடைய செய்யும் கர்த்தாவே. இந்த ஆசீர்வாதத்தை தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஸ்திரீயே.
50. இப்பொழுது பாருங்கள், உங்கள் பிள்ளையினிடத்திற்கு போகும்போதுஇ உங்களுடைய கரத்தை உங்களுடைய பிள்ளையின் மீது வைத்து, என்னையும் என்னுடைய குழந்தையையும் சுகப்படுத்தினதற்காக நன்றி என்று சொல்லிசென்று விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசித்தபடி, அந்த விதமாகவே அது உங்களிடத்தில் சம்பவிக்கும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
51. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப் படாதீர்கள். விசுவாசியுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், சகோதரியே? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒரு நபராக இங்கு இருப்பாரானால் (அவர் இருக்கிறார்) நீங்கள் என்னை பார்க்கிறது போல,அவரை பார்ப்பீர்களானால், இன்னும் கொஞ்சம் காலத்தில் உலகம் என்னை காணாது, ஆனால் நீங்களோ என்னை காண்பீர்கள். நான் உங்களோடிருந்து, உலக முடிவு பரியந்தம் நான் உங்களுக்குள்ளும் இருப்பேன் என்று அவர் சொன்னார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா ? நான் அவருடைய பிரதிநிதி என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை வீசுவாசிப்பீர்களானால், பின்பு அந்த கட்டி உங்களை விட்டுப் போய்விடும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு கட்டி, சுரப்பி இருக்கிறது,கர்ப்பப்பையில் பெண்களுக்கான கோளாறு, அது சரிதானே?
52. இப்பொழுது, இங்கே வாருங்கள். பரலோகப் பிதாவே, இந்த இரவிலே எங்களுடைய சகோதரிக்காக நான் ஜெபிக்கிறேன். அவள் மீது உம்முடைய இரக்கங்கள் இருப்பதாக, உம்முடைய மகிமை அவள் மீது இருப்பதாக. நோய்க்கட்டி என்று அழைக்கப்படும் அவளுக்குள் மறைந்திருக்கும் சாத்தான் அவளுடைய விசுவாசத்தின் மூலமாக உம்முடைய சுகமாக்கும் வல்லமையினால் அவளை விட்டு நீங்கிப் போவதாக. தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் இந்த விசுவாசியின் மீது உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறேன். சாத்தானே, தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே சகோதரியை விட்டு விலகு. அவளை விட்டு வெளியே வா.
53. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. இப்பொழுது விசுவாசத்தோடு இருங்கள். இப்பொழுது விசுவாசத்தோடு செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் அது உங்களைவிட்டுப் போய்விடும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
54. எப்படி இருக்கிறீர்கள் மணமாகாதவரே, நீங்கள் இந்த மாநகரத்தில் வசிக்கிறீர்களா? இந்த பட்டணத்திற்கு வெளியே இருக்கிறீர்கள். உங்களை தொடர்பு கொள்ளும் படியாக இந்த கேள்விகளை உங்களிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பாருங்கள்இ அது அந்த விதமாக….?....நாம் அந்நியர். எனக்கு உங்களை தெரியாது. ஆனால் உங்களைத் தெரிந்தவர் ஒருவர் இங்கிருக்கிறார். நீங்கள் பிறந்த போதே அவர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் உட்கொண்ட ஒவ்வொரு வாய் ஆகாரமும், தண்ணீரும், அவர் அதை உங்களுக்கு கொடுத்தார். என்னுடையவைகளையும் அவர் எனக்கு கொடுத்தார். அவர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கறீர்களென்றும், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். உங்களுக்கு தேவனிடத்திலிருந்து உதவி தேவையாய் இருக்கிறது, இல்லாவிட்டால், சீக்கிரத்தில் நீங்கள் மரித்துப்போவீர்கள். ஒரு கிறிஸ்தவ விசுவாசி என்ற முறையில் உங்களுடைய ஆத்துமா அவரை சந்திக்கும்படியாக செல்ல அதை ஆயத்தமாய் வைத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் புற்று நோயால் அவதிப்படுகிறீர்கள். அந்த புற்று நோய் உங்கள் சரீர முழுவதுமாய்  இருக்கிறது. அது உங்கள் பக்க வாட்டில் இருக்கிறது. அது பெருங்குடலில் இருக்கிறது. அது சரி தானே? தேவன் அதை சுகப்படுத்துவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
55. இப்பொழுது சிறிது நேரம் சகோதரியே. அங்கே சில காரியங்களை நான் சரிப்படுத்தட்டும். இப்பொழுது, அவரால் முடியும்இ அவரிடத்தில் இருக்கிறது. அதை நான் அறிந்திருக்கிறேன், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்”. பாருங்கள், சிறிது நேரம். பார்த்தீர்களா? உங்களுடைய விசுவாசம் அதற்குள்ளாக கடந்து செல்ல வேண்டும். நீங்கள் பாருங்கள்? பார்த்தீர்களா? அது தான் அது. பார்த்தீர்களா? நீங்கள் மரிக்க வேண்டும், பாருங்கள்? உங்களுக்கு ஏதாவது செய்யப்படாவிட்டால், இந்த உலகத்தைவிட்டு நீங்கள் கடந்து போக வேண்டும், உங்களுக்கு உதவி செய்யும்படியாக நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, அது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டாயிற்று. உங்கள் விசுவாசம் மேல் நோக்கி வரும்படியாக நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். (பாருங்கள்?) உங்களுடைய நிலையை நீங்கள் அறிந்திருக்கிற வேளையில், விசுவாசமானது நீங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படியான எல்லைக்கு கடந்து வரும்படியாக நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நிச்சயமாக உதவி அவசியமாய் இருக்கிறது. பார்த்தீர்களா?
56. அவராலே கூடும் என்று நினைக்கிறேன் என்பதாக நீங்கள் காரியத்தை வைப்பீர்களானால்….அது நீங்கள் என்னிடத்தில வந்து சகோதரன்  பிரன்ஹாம் நீங்கள் எனக்கு ஐந்து டாலர்கள் கடனாக கொடுக்க முடியும். நான் ஒரு பெரிய தேவையோடு இருக்கிறேன், உங்களால் எனக்கு ஐந்து டாலர்கள் கொடுக்க முடியும்….அதற்கான வசதி உங்களுக்கிருக்கிறது. உங்களால் ஐந்து டாலர்கள் கொடுக்க முடியும், நீங்கள் அப்படி செய்வீர்களானால் ”. அது என்னை நல்லதாக உணரச்செய்யாது. கேள்வி கேட்பதற்குக்கூட அது அவருடைய திறமை இல்லை. நாம் அவருடைய திறமையை குறித்துக் கேள்வி கேட்பதில்லை. அது ஏற்கனவே முடிக்கப்பட்ட ஒன்றாகவும், அதை வைத்து உங்களுக்கு உதவி செய்யவும் வாஞ்சையாய் இருக்கிறார். அவர் என்ன செய்து முடித்தார் என்பதை பாருங்கள். சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படியான காரியத்தை அவர் அனுப்பினார். அது சரியாக இல்லையா? அது சரி தான்.
57. இங்கே ஒரு எடுத்துக்காட்டாக, உங்களுடைய வாழ்க்கை மலர் படுக்கையைப் போல அவ்வளவு மென்மையானதல்ல. அது அநேக துக்கங்களும் அநேக தொல்லைகளும் நிறைந்தது. ஒரு நாள் நீங்கள் இவ்விதமான காரியத்திற்காய் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அப்படி அது வருமானால், தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கும்படி நீங்கள் வந்து அதை அடைய நீங்கள் வருவதற்கு ஒரு இடம் இருக்கிறது. அது உண்மை தானே? அது தான் உங்கள் ஜெபமாயிருந்தது. அது சரி தானே? இப்பொழுது அது சரிதான். தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவே, மரித்துக் கொண்டிருக்கும் இந்த பெண் மணியின் மீது இருக்கமாயிரும். பிதாவே உம்முடைய பிரதிநிதியாக நின்று கொண்டு அவளுடைய சுகத்தை கேட்கிறேன். இப்பொழுதும் அவர்கள் மீது கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று நீர் சொன்னீர். கர்த்தாவே மருத்துவர்கள் அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்று அறிந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவன் மருத்துவரின் கண்களுக்கு மறைந்திருக்கறான். ஆனால் உமக்கு மறைவாய் அவன் இருக்க முடியாது . நீர் தேவனாய் இருக்கிறீர். இந்த மேடையின் மீது அவனை நீர் திரை நீக்கி காண்பிக்கிறீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த பெண்ணிடமிருந்து வெளியே வந்து அவளைவிட்டு போய்விடு . அவள் இயேசுவின் நாமத்தில் சுகமடைந்து தேவனுக்காய் உழைப்பாளாக. ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே, சந்தோஷமாய்ச் சென்று மனமகிழ்ச்சியாயிருங்கள். தேவனுக்கு நன்றியை செலுத்திக் கொண்டிருங்கள். சரி .
58. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறர்களா? உங்கள் முழு இருதயத்தோடு. ஓ, என்னே . நீங்கள் விசுவாசிக்கத்தான் வேண்டும். ஒரு கருத்த நிழல் உங்களருகே வந்துக்கொண்டிருக்கிறது, புற்று நோய் . அது சரிதானே? தேவன் உங்களுக்கு உதவி செய்யாவிட்டால்  உங்களால் அதிக நாள் நீடித்திருக்க முடியாது . இப்பொழுது உங்கள் விசுவாசம் அந்த நிலையில் இருக்கிறதா? நீங்கள் இப்பொழுதே விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது பாருங்கள். அது தேவனுடைய ஆவி என்று விசுவாசிப்பீர்களானால், நீங்கள் எதை கேட்கிறீர்களோ, அதை நீங்கள் பெற்றுகொள்ள முடியும். அதை தான் நீங்கள் இப்பொழுது உணருகிறீர்கள் . நீங்கள் அதை செய்வீர்களா ?
59. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த பெண்மணியின் மீது என்னுடைய கைகளை வைக்கும் போது,  தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவளுடைய சுகத்தைக் கேட்கும்போது, உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும் . ஆமென். இந்த பெண்மணியின் சரீரத்தை கட்டி வைத்திருக்கும் புற்று நோய் சபிக்கப்பட்டு போவதாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரதிநிதியாக இருக்கும் தேவனுடைய சபை என்ற முறையிலும்இ அவருடைய விசுவாசப் பிள்ளைகள் என்ற முறையிலும் சாத்தானே இவை எல்லாவற்றையும் குறித்து உனக்கு தெரியும். தெய்வீக சுகத்தை சாட்சியிடுகிற முறையில் பிறப்புக்கு பிறகு சற்று முன்பாக ஒரு தூதனுடைய ஊழியத்தின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சொல்லுகிறேன்இ இந்த பெண்மணியை விட்டு விலகு. ஆமென்இ கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. மனமகிழ்ச்சியோடு செல்லுங்கள். சந்தோஷமாக செல்லுங்கள், சந்தோஷமாக இருங்கள்.
60. எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே,உங்களுக்கா அல்லது குழந்தைக்கா? ஊஹ்….அது ஒரு சிறிய இனிமையான காரியம். எதையாவது பெற்றுக் கொள்வதற்கு மிகவும் இனிமையாய் இருக்கிறது. இப்பொழுது எனக்கு தேவை….காரணம் குழந்தையால் பேச முடியாது. நீங்கள் என்னை கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஆம் ஒரே ஒருவரால் மாத்திரம் அவ்விதம் சொல்ல முடியும். இருளின் அதிகமான நேரங்களினூடாக இந்நாளிலே இவையெல்லாம் சம்பவித்துக் கொண்டிருக்கிறதென்று விசுவாசிக்கிறீர்கள்…. அவர் இங்கிருக்கிறார். இந்த பூமியின் மீது இங்கே அவர் இருக்கிறார் என்பதை மெய்ப்படுத்தி காட்டுகிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது அவருடைய ஆவி நம்மோடு கூட இருக்கிறது. பாருங்கள்? அவருடைய மனிதனை அவர் எடுத்துக்கொள்கிறார். ஆனால் அவருடைய ஆவியை அல்ல. பாருங்கள்? அவர் எலியாவை எடுத்துக்கொண்டார். எலிசா அவருடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். எண்ணூறு வருடங்களுக்கு பிறகு சரியாக வனாந்திரத்திலிருந்து எலியாவின் ஆவியையுடைய யோவான் ஸ்நானகன் வந்தார். பார்த்தீர்களா? நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்பதை பார்த்தீர்களா? சாத்தானே அவர் அவருடையவரை எடுத்துக் கொண்டார்இ அவருடைய ஆவியை அல்லஇ அது சரியாக மதரீதியான நிராகரித்தலின் வழியாக கடந்து வருகிறது. அது சரியாகத்தானே இருக்கிறது.
61. உங்களுடைய குழந்தைக்கு ஆஸ்துமா இருக்கிறது. அது சரிதானே? அது உண்மைதானே? இந்த எல்லா கிறிஸ்தவர்களும் ஜெபித்துக் கொண்டிருக்கிறதான வேளையில் தேவனுடைய ஊழியக்காரன் என்ற வகையில், இந்தக் குழந்தையின் மீது என்னுடைய கரங்களை வைப்பேனானால், நான் சொல்வது உண்மையாயிருக்குமானால் தேவன் தம்முடைய உண்மையை சாட்சியிட்டுக் கொண்டிருக்கிறார். நான் இந்தக் குழந்தையைப் பார்த்தேன். அது அச்சம் தருகிற நிலையில் இருக்கிறது. இந்தக் குழந்தை சுகமாகிவிடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. மூச்சு திணரலின் விளைவு இருந்தபோது உங்களுடையக் குழந்தையை நீங்கள் பற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
62. சர்வ வல்ல தேவனேஇ நீர் உம்முடைய கரங்களை வைத்து அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக தங்களுடைய சிறு குழந்தைகளை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வந்திருக்கிறார்கள். சென்ற நாட்களில் நீர் நடமாடினது போல,நீர் இந்த டெல்லஸியில் மாம்ச சரீரத்தில் இந்த இரவில் இங்கு இருப்பீரானால் தாய்மார்களின் விசுவாசம் அந்த குழந்தையை சரியாக உம்மிடத்தில் கொண்டு வரும் என்று நான் விசுவாசிக்கிறேன். கடந்த நாட்களைப்போல நீர் நின்றுக்கொண்டு குழந்தையினுடைய  நிலை என்னவென்று சொல்வீரானால்இ உம்முடைய பரிசுத்தமான கரங்களை பிள்ளையின் மீது வைப்பீரானால், அது சுகத்தைப் பெற்றுக்கொள்ளும். அவளுடைய வாழ்க்கையை முழுமையாய் ஆராய்ந்துஇ அவளுடைய பாவங்கள் அறிக்கையிடப்பட்டு, இரத்தத்தின் கீழாய் இருக்கிற வேளையில், நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். தேவனே அவளுடைய குழந்தையின் மீது இரக்கமாயிரும்.
63. என்னுடைய எளிமையான கரங்கள் உமக்கு பிரதிநிதியாக இருக்கிறது என்பதை உணருகிறேன், ஆனாலும், தேவனே இரக்கமாயிரும். விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும் என்று நீர் பூமியை விட்டு கடந்து சென்ற போது கடைசியாக சொன்ன உம்முடைய வார்த்தையின்படியாக, என்னுடைய கரங்களை குழந்தையின் மீது வைக்கிறேன். அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்தவனாக, விசுவாசம் என்பது இருக்கமுடியாத,  ஒன்றும் அறியாத இந்த குழந்தையின் மீது என்னுடைய கரங்களை வைக்கிறேன். சாத்தானே ஆஸ்துமா நிலைக்கு கொண்டுவந்து, அதினிமித்தமாக இந்த சிறு குழந்தை அதனுடைய மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு இரும்பவும், மூச்சு திணரவும் வைத்திருப்பதினால்இ பயங்கரமான, கோரமான சாத்தானே,முடிவில்லாத நரகத்தில் ஒரு நாளில் நீ செய்த இந்த பொல்லாங்கான காரியத்திற்காக தண்டனை அடையப் போகிறாய். இப்பொழுது நான் சொல்வதைக்கேள், நான் என்னுடைய கர்த்தரையும் அவருடைய கல்வாரி மரணத்தையும் பிரதிநிதியாக வைக்கிறேன். இந்தக் குழந்தையை விட்டுப் போய்விடு. அது ஜீவிக்கவும், சுகமாயிருக்கவும், அதை விட்டு வெளியே வந்துவிடு. உன்னுடைய எல்லா வல்லமையையும் அழித்து உன்னிடத்திலிருந்து எல்லாவற்றையும் தம்முடைய கரங்களில் வைத்திருக்கிற, கல்வாரி சிலுவையில் தம்முடைய இரத்தத்தை சிந்திய தேவனுடைய குமாரனாகிய இயேசுவை முன் வைத்து உன்னை சத்தியத்திற்கு கட்டுப்படுத்தி சொல்கிறேன். இனியும் இந்த குழந்தையை பிடித்து வைத்திருப்பதற்கு உனக்கு எவ்வித சட்ட ரீதியான உரிமையும் கிடையாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெளியே வா.
64. இப்பொழுதும் சகோதரியே, உங்கள் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள்இ விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள்…?....
65. அங்கே நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இங்கே ஒரு தரிசனமானது நடந்துக் கொண்டிருக்கும்போது, அங்கு நீங்கள் எதையோ செய்கிறீர்கள். அது தொடர்ச்சியை தடை செய்கிறது. சிறிது நீங்கள் அதிகமாக அசைவது வேண்டாம். (பார்த்தீர்களா?) அது இங்கே அதை தடை செய்கிறது. நீங்கள் பார்த்தீர்களா? இங்கே அது அதை கடினமாக்குகிறது. பாருங்கள்? அவருடைய ஆவி அசைவாடிக் கொண்டிருக்கிறது, நீங்கள் களிகூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கு முன்பாக நீங்கள் தேவனை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன், அவரை விசுவாசியுங்கள். நீங்கள் சுகமாக்கப்பட்டப் பிறகு சந்தோஷமாய் இருங்கள். நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்பதை பாருங்கள்?
66. அந்த தலையணையின் மீது படுத்திருக்கும் சகோதரியே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? என்னை அவருடைய ஊழியக்காரனென்றும், அவருடைய தீர்க்கதரிசி என்றும் விசுவாசிக்கிறீர்களா. நீங்கள் வரிசையில் நின்றுக் கொள்வதற்கு உங்களுக்கு ஜெப அட்டை அவசியமில்லை. ஆனால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம், விசவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நான் உங்களை சுகப்படுத்த முடியாது. ஆனால் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எனக்கு மறைக்க முடியாது. பாருங்கள்? உங்களுடைய கோளாறு என்னவென்று தேவன் இங்கே எனக்கு வெளிப்படுத்தி தருவாரானால் உங்களுடைய சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அவருடைய தீர்க்கதரிசி என்ற முறையில் எனக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்களா? உங்களாலே கூடும், நீங்கள் சொல்வீர்கள். உத்தமமாக உங்களை எனக்கு தெரியாது, நான் உங்களை பார்த்ததும் கிடையாது, ஆனால் நீங்கள் கீல்வாத ஜூரத்தினால் அவதிப்படுகிறீர்கள். அது சரி தானே, அது சரி என்றால்,உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்கள் வீட்டிற்கு சென்று சுகமாயிருங்கள்…?....
67. ஐயாஇ அங்கே உட்கார்ந்திருப்பவரே, சிறு நீரகக் கோளாறு உங்களை விட்டு போக வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களால் முடியுமானால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால் அது உங்களை விட்டுப் போய்விடும். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். அது சரி.
68. உங்களுடைய இருதய கோளாறு நீங்கி போக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா ஐயா? நீங்கள் வீட்டிற்கு சென்று சுகமாயிருக்க விரும்புகிறீர்களா? இப்பொழுது அது உங்களை விட்டு நீங்கிப் போய்விடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சற்று நேரத்திற்கு முன்பாக அது இருந்தது. அது சரிதானே? அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? சரி, இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் இப்பபொழுது சுகமானீர்கள் என்று விசுவாசிக்கிறர்;களா? செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்கள் மீது இருப்பதாக.
69. சுற்றி எங்குமுள்ளவர்களே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே கூட்டத்தில நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இங்கே நீங்கள் கூட்டத்தில் நீங்கள் இசைவாய் அதை விசுவாசிக்கிறீர்களா? எங்கள் பரலோக பிதாவே, கூட்டத்தின் ஊடாக அசைவாடிக் கொண்டிருப்பவரே, இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் சுகமாக வேண்டுமென்று விரும்புவீர்கானால், நீங்கள் சுகமடையலாம். அது உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள், நல்லது, ஏன் எல்லாருமாக சுகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. ஒரே நேரத்தில் எல்லாருமாக?
70. இதை எனக்காக செய்வீர்களா? இப்பொழுது என்னை விசுவாசிக்கிறீர்களா? கர்த்தருடைய தூதனானவர் உங்களுக்காக ஜெபிக்கும்படியாக என்னை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, எத்தனை பேர் சுகவீனமாயிருக்கிறர்கள்,உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கட்டிடத்தில் உள்ள யாவருமாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்போழுது எல்லாருமாக தங்களுடைய கரத்தை உயர்த்தியிருக்கும் உங்களுக்கு பக்கத்திலுள்ள சுகவீனமாயிருக்கிறவரை பாருங்கள். இப்பொழுது உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். அது சரியே, இப்பொழுது அது சரியே. அப்படியே மூட்டு வீக்கமுள்ள சகோதரியின் மீது உங்களுடைய கரங்களை வையுங்கள்.
71. இந்த குழந்தையின் மீது உங்கள் கரங்களை வையுங்கள். கிறிஸ்தவ விசுவாசிகளாகிய உங்களுக்குள் யாராவது முடமாக படுக்கையிலிருக்கும் வாலிபன் மீது உங்கள் கரங்களை வையுங்கள். நீங்கள் செய்வீர்களா? சரி. இப்பொழுது எல்லாருமாக பயபக்தியுள்ளவர்களாய் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். உண்மையான பயபக்தியுள்ளவர்களாய் இருங்கள். உங்களுடைய சிந்தையிலே நீங்கள் இதை சிந்திக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த ஜெபத்தை மறுபடியுமாய் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் ஜெபியுங்கள்,நான் மறுபடியுமாக அதையே ஜெபிப்பேன். நீங்கள் ஜெபியுங்கள். சாத்தானை தோற்க்கடிக்கும்படியாக அதை அவனிடமாக மாற்றிவிடுவேன். சரியாக உங்களுடைய உதடுகளிலிருந்து. அதன் பின்பு உங்களுடைய அறிக்கையை விசுவாசியுங்கள். சுகவீனமாயிருக்கிறவர்களே நான் சொல்வதை மறுபடியுமாகச் சொல்லுங்கள்.
72. சர்வ வல்மையுள்ள தேவனே, வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, எல்லா நல்ல வெகுமதிகளையும் கொடுப்பவரே, உம்முடைய ஊழியக்காரனாகிய நான் என்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறேன். என்னுடைய பாவங்களிலிருந்து நான் மன்னிக்கப் பட்டேனென்று உம்முடைய குமாரனாகிய இயேசுவினுடைய தகுதியின் மூலமாய் நான் விசுவாசிக்கிறேன். எனக்கு உம்முடைய உதவி அவசியமாய் இருக்கிறது. நேற்று அது எவ்விதமாய் இருந்ததோ அதே விதமாக இன்றும் மறுபடியுமாக உம்முடைய ஜீவன் பிரதி உற்பத்தி செய்யப்படுவதை இந்த இரவிலே நான் பார்த்த காரியங்களால் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கும்படியான விசுவாசத்தை எனக்கு தாரும். இப்பொழுதும் கர்த்தாவே இந்த அறிக்கையின் மீது, என்னுடைய சுகத்தை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் சுகமாயிருப்பேனென்று இந்த இரவிலிருந்தும் இனிமேலும் விசுவாசிப்பேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என்னை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன்.
73. இப்பொழுது ஒவ்வொருவரும் மிகவும் அமைதலாய் இருங்கள். உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்டவாறு இருக்கட்டும். ஜெபத்தில் இருங்கள். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் அருகில் இருக்கிறார். எல்லாவற்றையும் அறிந்திருக்கிற கர்த்தருடைய தூதனானவர் இந்த நேரத்தில் இந்த கூட்டத்தின் மீது இருக்கிறார். ஒரு மேகத்தை போல உங்கள் மீது அவர் தொங்கிக் கொண்டிருக்கிறார். அது விசுவாசிக்க துவங்குகிறது. இப்பொழுதும் கர்த்தாவே என்னுடைய சுகத்தை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். இப்பொழுது நீர் என்னை சுகப்படுத்திக் கொண்டிருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் நீர் அதை வாக்குதத்தம் செய்திருக்கிறீர். உம்முடைய வாக்குதத்தத்தின் மீதாக நான் அதை விசுவாசிக்கிறேன்.
74. நீங்கள் சந்தேகிக்கும்படியாகவும், குழம்பிப் போகும்படியாகவும் செய்யக்கூடிய பொல்லாங்கின் ஆவியை, அந்த மூட நம்பிக்கையை உங்களைவிட்டு எடுத்துப் போடும்படியாகவும், நீங்கள் தேவனுடைய மகிமையை காணும்படியாகவும் செய்ய தேவன் எனக்கு பெலத்தை தந்தருளும்படியாக நான் அவரிடத்தில் கேட்கப்போகிறேன். சரியாக இப்பொழுதே அது உங்களைவிட்டு செல்லும்படியாக நான் கேட்கப் போகிறேன். அது உங்களைவிட்டு போகும் போது, உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். பாருங்கள் இது என்னுடைய பகுதியாய் இருக்கிறது. நீங்கள் உங்கள் அறிக்கையை செய்திருக்கிறீர்கள். அது உங்களுடைய உதடுகளிலிருக்கிறது. இப்பொழுது உங்களுடைய அறிக்கையின்படியாக உங்களுக்கு நன்மையாக மாற்றி தருவார். அவரை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். பாருங்கள்? உங்களை மீட்கக்கூடியதாய் அது இருக்கிறது. உங்களை சுகமாக்குகிறவராக அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுது அதை விசுவாசியுங்கள். இந்தக் கட்டிடத்தின் மீதிருக்கும் அந்த சந்தேகத்தின் ஆவிக்காக ஜெபித்து அதை தகர்த்து போட விரும்புகிறேன். அதனால் இந்த இரவு முதற்கொண்டு நமக்கு ஒரு பழைய பாணியிலான கூட்டங்கள் இருக்கக்கூடும்.
75. பரலோகப் பிதாவே இந்த கட்டிடத்தின் ஊடாக இருக்கும் இந்த அன்பான ஜனங்களுக்காக நான் உம்மிடத்தில் வருகிறேன். நீர் இந்த பூமியில் எம்மாவுக்கு போகிற பாதையில் நடந்து சென்றவைகளை நாங்கள் கண்டோம். ஒரு மீனுடைய வாயில் நாணயம் இருப்பதை நீர் அறிந்திருந்தீர். அந்த மீனின் வாயிலிருக்கும் நாணயத்தை எடுத்து வரும்படியாக உம்முடைய அப்போஸ்தலர்களை நீர் அனுப்பினீர். ஒரு மனிதனும் ஒருக்காலும் ஏறியிராத இரண்டு கழுதைகள் கட்டப்பட்டிருந்ததை நீர் அறிந்திருந்தீர். தேவனே ஐந்து புருஷர்களை உடைய ஸ்திரீ எங்கிருப்பாள் என்பதை நீர் அறிந்திருந்தீர். பிலிப்பு வந்து நாத்தான்வேலை கண்டபோது, கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அவன் எங்கிருந்தான் என்பதை நீர் அவனிடம் சொன்னீர். அவன் ஒரு அத்திமரத்தின் கீழாக இருந்தான். அதன் பின்பு நீர் என்ன செய்தீர் என்று சொன்னீர். நாங்களும் அவ்விதம் செய்யட்டும். கர்த்தாவே நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். அது அந்த நாளாய் இருக்கிறது.
76. ஆதி சபையிலிருந்த ஆசீர்வாதங்கள், பின் வந்த சபையிலும் இருக்கும்படியாக நீர் அவைகளை அற்புதமாகவும், ஆசீர்வதிக்கப்பட்ட விதத்திலும் கொண்டு வந்தீர். அந்த அற்புதமான காரியங்களுக்காக அன்பான தேவனே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஒருவர் மீது இன்னொருவருடைய கரத்தை வைத்த வண்ணமாக இந்த இரவில் இங்கு அமர்ந்திருக்கும் உம்முடைய பிள்ளைகள், பரிசுத்த ஆவியானவர் ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பாலுள்ளவைகளை அறிந்திருக்கிற வேளையில்…. 
அட்டவணை:-
1.     ஜெபவரிசை-53-1127
2.     என் மீட்பர் உயிரோடிருக்கிறார்-55-0410
3.     ஐக்கியம்-47-1100, தனிப்பட்டபேட்டி-64-0705,விசுவாசிக்க மாத்திரம் செய்-53-0207.
4.     ஆவியை பகுத்தறிதல் - 60-0308
5.     இயேசு கிறிஸ்து ............. மாறாதவராயிருக்கிறார்.  53-0212
அடுத்த வெளியீடுகள்:-
6.     திடீரென்று இரகசியமாக சபை மறைந்து போதல்
7.     வைத்தியனாகிய மோசே
8.     அந்த நேரம் வந்தது

தொடர்புக்கு; - 9884595250, 9791163520.

No comments:

Post a Comment